என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சிலைகள் பறிமுதல்"

    • ஒரு வீட்டில் ஐம்பொன் சாமி சிலைகள் பதுக்கி வைத்து இருப்பதாக ஆற்காடு டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் விநாயக மூர்த்திக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
    • மேலும் ஐம்பொன் சிலைகள் கடத்தி வைக்கப்பட்டுள்ளதா, இதில் யார் யாருக்கு தொடர்பு உள்ளது என பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஆற்காடு:

    ராணிப்பேட்டை மாவட்டம், தாஜ் புரா, சத்யா நகர், திருதாமாந்தர் தெருவில் உள்ள ஒரு வீட்டில் ஐம்பொன் சாமி சிலைகள் பதுக்கி வைத்து இருப்பதாக ஆற்காடு டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் விநாயக மூர்த்திக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் இன்று காலை சம்பந்தப்பட்ட வீட்டிற்கு சென்று சோதனை நடத்தினர்.

    அப்போது வீட்டின் அறையில் ஐம்பொன்னால் செய்யப்பட்ட முக்கால் அடி உயர முருகர் சிலை, கால் அடியில் 3 மாரியம்மன் சிலைகள் மற்றும் 2 பெரிய வெள்ளி சிலைகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

    இதையடுத்து சிலையை பறிமுதல் செய்து சாமி சிலைகளை கடத்தி பதுக்கி வைத்திருந்ததாக பாலாஜி வயது 39 காட்பாடி பாலாஜி நகரை சேர்ந்த தினேஷ்குமார் ஆற்காடு கன்னி கோவில் தெருவை சேர்ந்த முரளி கிருஷ்ணன் ஆகிய 3 பேரை கைது செய்தனர்.

    மேலும் அவர்களிடம் ஐம்பொன் சிலைகள் எங்கிருந்து எப்போது கடத்தி வரப்பட்டது.

    இதேபோல் மேலும் ஐம்பொன் சிலைகள் கடத்தி வைக்கப்பட்டுள்ளதா இதில் யார் யாருக்கு தொடர்பு உள்ளது என பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பறிமுதல் செய்யப்பட்ட ஐம்பொன் சாமி சிலைகளின் மதிப்பு எவ்வளவு என்பது குறித்து உடனடியாக தெரியவில்லை.

    • ஐம்பொன் சிலைகளை பறிமுதல் செய்த போலீசார், இது தொடர்பாக சுதாகரை கைது செய்தனர்.
    • கைதான சுதாகரிடம் தொடர்ந்து விசாரித்து வரும் போலீசார், தப்பி ஓடிய அவரது கூட்டாளி தினேசையும் தேடி வருகின்றனர்.

    கோயம்பேடு:

    சென்னை கோயம்பேடு பஸ் நிலைய வளாகத்தில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது அங்கிருந்த 2 பேர் போலீசாரை கண்டதும் தப்பி ஓடினர். அவர்களை போலீசார் மடக்கி பிடிக்க முயன்றனர். அதில் ஒருவர் தப்பி ஓடிவிட்டார். மற்றொருவர் போலீசாரிடம் சிக்கினார். அவரிடம் இருந்த பையை போலீசார் சோதனை செய்தனர். அதற்குள் 1½ கிலோ எடை கொண்ட சுமார் முக்கால் அடி உயரம் கொண்ட ஐம்பொன்னால் ஆன பொன்மணி விளக்கு ஏந்திய சிலையும், சுமார் 300 கிராம் எடை கொண்ட 3 அங்குலம் உயரம் உள்ள சிறிய பெருமாள் சிலையும் இருந்தது.

    அவரை போலீஸ் நிலையம் அழைத்துச்சென்று விசாரித்தனர். அதில் அவர், கும்பகோணத்தை சேர்ந்த சுதாகர் (வயது 32) என்பதும், சென்டரிங் வேலை செய்து வருவதும் தெரிந்தது. இவருடன் வந்து தப்பி ஓடியவர், அதே பகுதியை சேர்ந்த தினேஷ் (30) என்பதும் தெரிந்தது.

    பிடிபட்ட சுதாகரிடம் போலீசார் மேலும் விசாரணை நடத்தினர். அதில் திருச்சி, லால்குடியை சேர்ந்த பெண்மணி ஒருவர், அந்த 2 சிலைகளையும் கொடுத்து அனுப்பியதாக கூறினார். மேலும் அவரிடம் பழைய 2 ருபாய் நோட்டும், ஒரு துண்டு சீட்டும் இருந்தது. அதில், "சென்னையில் உங்களை சந்திக்க வரும் நபரிடம் இந்த 2 ரூபாய் நோட்டை காண்பித்தால் அவர்கள் ஐம்பொன் சிலைகளை வாங்கி கொண்டு ரூ.3 லட்சம் கொடுப்பார்கள். அதனை வாங்கி வரவேண்டும்" என கூறப்பட்டு இருந்ததாக போலீசார் தெரிவித்தனர்.

    அந்த ஐம்பொன் சிலைகளை பறிமுதல் செய்த போலீசார், இது தொடர்பாக சுதாகரை கைது செய்தனர். மேலும் அந்த ஐம்பொன் சிலைகளை எங்காவது கோவிலில் இருந்து திருடி வந்தார்களா?. இந்த சிலைகளை இவர்களிடம் கொடுத்து அனுப்பிய பெண் யார்? என்பது குறித்து கோயம்பேடு போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    அந்த சிலைகளை கைமாற்றப்படுவதற்கு அடையாளமாக அந்த பழைய 2 ரூபாய் நோட்டை பயன்படுத்த இருந்ததும் விசாரணையில் தெரியவந்தது. கைதான சுதாகரிடம் தொடர்ந்து விசாரித்து வரும் போலீசார், தப்பி ஓடிய அவரது கூட்டாளி தினேசையும் தேடி வருகின்றனர்.

    ×