search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வாசுதேவநல்லூர்"

    • ஊராட்சி ஒன்றிய குழு கூட்டத்திற்கு பொன் முத்தையா பாண்டியன் தலைமை தாங்கினார்.
    • கூட்டத்தில் ஒன்றிய கவுன்சிலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    சிவகிரி:

    வாசுதேவநல்லூர் யூனியன் அலுவலக கூட்டரங்கில் ஊராட்சி ஒன்றிய குழு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு யூனியன் சேர்மனும், வாசுதேவநல்லூர் வடக்கு ஒன்றிய தி.மு.க. செயலாளருமான பொன் முத்தையா பாண்டியன் தலைமை தாங்கினார். துணைத்தலைவர் சந்திரமோகன், வட்டார வளர்ச்சி அலுவலர் கருப்பசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    இக்கூட்டத்தில் ஒன்றிய கவுன்சிலர்கள் பாண்டியம்மாள் நீராத்திலிங்கம், கனகராஜ், முனியராஜ், செல்வி ஏசுதாஸ், ஜெயராம், பரமேஸ்வரி, அருணாதேவி பாலசுப்ரமணியன், விஜயபாண்டியன், விமலா மகேந்திரன், மகாலட்சுமி, லில்லி புஷ்பம், ஓவர்சீஸ் ராமசாமி, முத்துமாரி, அலுவலர்கள், பணியாளர்கள், சிலம்பரசன், உள்ளார் மணிகண்டன், விக்கி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • தேர்வு செய்யப்பட்ட மாணவர்களுக்கு பணிநியமன ஆணை வழங்கும் விழா மாலையில் நடைபெற்றது.
    • மாணவர்களுக்கு ஜியோ இன்போ மீடியா நிறுவன நிர்வாக இயக்குனர் சொக்கலிங்கம் பணிநியமன ஆணையை வழங்கினார்.

    சிவகிரி:

    வாசுதேவநல்லூர் எஸ்.தங்கப்பழம் பாலிடெக்னிக் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு பயிலும் சிவில் மாணவர்களுக்கு நேற்று கல்லூரியில் வளாகத் தேர்வு நடத்தப்பட்டது. சென்னையிலுள்ள ஜியோ இன்போ மீடியா கம்பெனி கலந்துகொண்டு தேர்வை நடத்தியது. வளாகத் தேர்வில் தேர்வு செய்யப்பட்ட மாணவர்களுக்கு பணிநியமன ஆணை வழங்கும் விழா மாலையில் நடைபெற்றது.

    விழாவிற்கு எஸ்.தங்கப்பழம் கல்வி குழும நிறுவனர் எஸ்.தங்கப்பழம், தாளாளர் எஸ்.டி.முருகேசன் ஆகியோர் தலைமை தாங்கினர். கல்லூரி குழுமத்தின் முதல்வர் ராமநாதன் வரவேற்று பேசினார். ஜியோ இன்போ மீடியா நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் சொக்கலிங்கம் மாணவர்களுக்கு பணிநியமன ஆணையை வழங்கினார். வளாகத்தேர்வு ஏற்பாடுகளை வேலைவாய்ப்பு அலுவலர் மற்றும் அனைத்துதுறை தலைவர்கள் செய்திருந்தனர்.

    • வாசுதேவநல்லூர் பகுதியில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.
    • 4 பேரையும் மடக்கி பிடித்த போலீசார் அவர்களை சோதனை செய்தனர்.

    சிவகிரி:

    வாசுதேவநல்லூர் பகுதியில் சிலர் கஞ்சா விற்பனை செய்து வருவதாக வந்த ரகசிய தகவலின் பேரில் இன்ஸ்பெக்டர் சண்முக சுந்தரம் தலைமையில் போலீசார் அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.

    அப்போது மாரியம்மன் கோவில் அருகே கலைஞர் காலனியை சேர்ந்த சுடலை ராஜ் (வயது 42) மற்றும் அவரது மனைவி மகாலட்சுமி (30), அதே பகுதியை சேர்ந்த மகேந்திரன் (21), கடையநல்லூர் மலையம்பேட்டை பகுதியைச் சேர்ந்த சல்மான் பாரிஸ் ஆகிய 4 பேர் போலீசாரை கண்டதும் தப்பியோட முயன்றனர்.

    கைது

    போலீசார் அவர்களை மடக்கி பிடித்து சோதனை நடத்தியதில் அவர்களிடம் 600 கிராம் கஞ்சா இருப்பது தெரிய வந்தது. இதையடுத்து கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார் அவர்கள் 4 பேரையும் கைது செய்தனர்.

    • சர்க்கரை ஆலையை திறக்கக்கோரி தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
    • ஆர்ப்பாட்டத்தில் பல்வேறு கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டது.

    சிவகிரி:

    வாசுதேவநல்லூர் அருகே உள்ள தரணி சர்க்கரை ஆலையை திறக்கக்கோரி ஆலையின் முன்பு தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    கரும்பு விவசாயிகளின் நலன் கருதி ஆலையை உடனடியாக திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். விவசாயிகளுக்கு கொடுக்க வேண்டிய நிலுவைத் தொகையை உடனடியாக வட்டியுடன் வழங்கிட வேண்டும், மத்திய மாநில அரசுகள் கரும்பு டன் ஒன்றுக்கு ரூ.4000 வீதம் வழங்க வேண்டும், சர்க்கரை ஆலை நிர்வாகத்தில் ஆலையில் பணிபுரிந்த பணியாளர்களுக்கு வேலை வழங்க வேண்டும், சம்பள பாக்கியை உடனடியாக வழங்க வேண்டும் உள்பட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து தரணி சர்க்கரை ஆலையின் முன்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    விவசாய சங்கத்தின் வட்டார தலைவர் ராஜேந்திரன் தலைமை தாங்கினார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றிய செயலாளர் வேலு, ராயகிரி நகர செயலாளர் சின்ன வேலுச்சாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    ஆர்ப்பாட்டத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தென்காசி மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் இசக்கிதுரை, விவசாய சங்க மாவட்ட செயலாளர் வேலாயுதம், ஏ.ஐ.டி.யு.சி. தென்காசி மாவட்ட செயலாளர் சுப்பையா, மாவட்ட நிர்வாக குழு உறுப்பினர் சமுத்திரக்கனி, விவசாய சங்க வட்டார செயலாளர் கருப்பையா, விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட பொருளாளர் முருகன், ராமநாதபுரம் ரவிக்குமார், சண்முக வடிவு மற்றும் நிர்வாகிகள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    • பட்டக்குறிச்சி உள்ளிட்ட பகுதிகளில் புதிய தார்சாலை அமைக்க பூமிபூஜை நடைபெற்றது.
    • தார்சாலை அமைக்கும் பணியினை பொன் முத்தையாபாண்டியன் தலைமை தாங்கி தொடங்கி வைத்தார்.

    சிவகிரி:

    வாசுதேவநல்லூர் யூனியன் பட்டக்குறிச்சி, அரியூர், பாறைப்பட்டி ஆகிய பகுதிகளில் ரூ.1.18 கோடியில் புதிதாக தார்சாலை அமைப்பதற்கு பூமிபூஜை நடைபெற்றது. யூனியன் சேர்மனும் வடக்கு ஒன்றிய தி.மு.க. செயலாளருமான பொன் முத்தையாபாண்டியன் தலைமை தாங்கி பணியை தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் பொறியாளர் அருள்நாரயணன், ஊராட்சி மன்ற தலைவர் கலா ஜெயக்குமார், ஒன்றிய கவுன்சிலர் லில்லிபுஷ்பம், கிளை செயலாளர்கள் அரியூர் முருகையா, பட்டக்குறிச்சி சத்தியராஜ், உள்ளார் விக்கி, மணிகண்டன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

    • அய்யாபுரம் கிராமத்தில் விவசாயிகளுக்கு வேளாண்மை கல்லூரி மாணவிகள் செயல் விளக்கம் அளித்தனர்.
    • மண் மாதிரி எடுத்தல், அதன் பயன்கள் குறித்து மாணவிகள் விளக்கினர்.

    சிவகிரி:

    வாசுதேவநல்லூர் அருகே அய்யாபுரம் கிராமத்தில் தனியார் விவசாய தோட்டத்தில் எஸ்.தங்கப்பழம் வேளாண்மை கல்லூரி இறுதி ஆண்டு படிக்கும் மாணவிகள் விவசாயிகளுக்கு செயல் விளக்கம் அளித்தனர்.

    இதில் 9 பேர் கொண்ட குழு மாணவிகள் அம்ரிஷா, பிபினி, காவியா கிருஷ்ணா, கிருஷ்ண பிரியா, மனிஷா குளோரா, நஸ்ரின் பாத்திமா, ரோஷினி, சவுமியா, தங்ககீதா ஆகியோர் இணைந்து மண் மாதிரி எடுத்தல் குறித்தும், அதன் பயன்கள் குறித்தும் அப்பகுதியில் உள்ள விவசாயிகளுக்கு செயல் விளக்கம் அளித்தனர்.

    • சமத்துவ பொங்கல் விழாவை எஸ்.தங்கப்பழம் கல்வி குழுமத்தின் தலைவர் எஸ்.தங்கப்பழம் மற்றும் தாளாளர் எஸ்.டி.முருகேசன் ஆகியோர் குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்தனர்.
    • விழாவில் மாணவ- மாணவிகள் பொங்கலினை இறைவனுக்குப் படைத்து வழிபட்டனர்.

    சிவகிரி:

    வாசுதேவநல்லூர் எஸ்.தங்கப்பழம் கல்விக்குழுமத்தில் சமத்துவ பொங்கல் விழா நடைபெற்றது. இவ்விழாவில் எஸ்.தங்கப்பழம் கல்வி குழுமத்தின் தலைவர் எஸ்.தங்கப்பழம் மற்றும் தாளாளர் எஸ்.டி.முருகேசன் ஆகியோர் கலந்து கொண்டு குத்துவிளக்கு ஏற்றி விழாவை தொடங்கி வைத்தனர்.

    மருத்துவக் கல்லூரியின் முதல்வர் (பொறுப்பு) மருத்துவர் பாரதி, எஸ்.தங்கப்பழம் பாலிடெக்னிக் கல்லூரி முதல்வர் இராமநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில் சமத்துவ பொங்கல் விழா கொண்டாடுவதற்கான நோக்கம் பற்றி மாணவிகள் எடுத்துரைத்தனர். இவ்விழாவை முன்னிட்டு மருத்துவக் கல்லூரியைச் சார்ந்த மாணவ- மாணவிகள் சிறப்பு ரங்கோலி கோலமிட்டு, இனிய பொங்கலினை இறைவனுக்குப் படைத்து வழிபட்டனர். தொடர்ந்து பாலிடெக்னிக் கல்லூரி, மருத்துவக்கல்லூரி மாணவ-மாணவிகளின் தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டு போட்டிகள் மற்றும் கலைநிகழ்ச்சி நடைபெற்றது.

    விழாவிற்கான ஏற்பாடுகளை பாலிடெக்னிக் கல்லூரியின் துறைத்தலைவர்கள், ஆசிரியர்கள் மற்றும் மருத்துவக்கல்லூரியின் மருத்துவர்கள், ஆசிரியர்கள், அலுவலர்கள் செய்திருந்தனர். மாணவ- மாணவிகள் அனைவரும் கலந்து கொண்டனர். அனைத்து மாணவ மாணவிகளுக்கும் கரும்பு மற்றும் பொங்கல் வழங்கப்பட்டது.

    • வாசுதேவநல்லூர் பத்மஸ்ரீ டாக்டர் சிவந்தி ஆதித்தனார் மனவளர்ச்சி குன்றியோர் சிறப்புப் பள்ளியில் சமத்துவ பொங்கல் விழா நடைபெற்றது.
    • விழாவில் மாணவர்கள் அனைவருக்கும் பொங்கல் மற்றும் கரும்பு வழங்கப்பட்டது.

    சிவகிரி:

    வாசுதேவநல்லூர் மகாத்மா காந்திஜி சேவா சங்கத்தின் கீழ் இயங்கும் பத்மஸ்ரீ டாக்டர் சிவந்தி ஆதித்தனார் மனவளர்ச்சி குன்றியோர் சிறப்புப் பள்ளியில் சமத்துவ பொங்கல் விழா நடைபெற்றது. விழாவிற்கு அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர் மயில்வாகனன் தலைமை தாங்கினார். பள்ளியின் தாளாளர் தவமணி, தலைமைஆசிரியர் சங்கரசுப்பிரமணியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    விழாவில் சேவா சங்கத்தின் செயலாளர் குருசாமி பாண்டியன், சாந்தி, ஹெலன் இவாஞ்சலின், இயன்முறை மருத்துவர் புனிதா, உதவி ஆசிரியர் மகேஸ்வரி, அருண்குமார், கவிதா, குருவம்மாள் மற்றும் மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். மாணவர்கள் அனைவருக்கும் பொங்கல் மற்றும் கரும்பு வழங்கப்பட்டது.

    • கூட்டத்திற்கு யூனியன் சேர்மனும், வாசுதேவநல்லூர் வடக்கு ஒன்றிய தி.மு.க. செயலாளருமான பொன் முத்தையா பாண்டியன் தலைமை தாங்கினார்.
    • ஊராட்சி ஒன்றிய குழு கூட்டத்தில் ஒன்றிய கவுன்சிலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    சிவகிரி:

    வாசுதேவநல்லூர் ஊராட்சி ஒன்றிய குழு கூட்டம் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்றது. கூட்டத்திற்கு யூனியன் சேர்மனும், வாசுதேவநல்லூர் வடக்கு ஒன்றிய தி.மு.க. செயலாளருமான பொன் முத்தையா பாண்டியன் தலைமை தாங்கினார். துணை சேர்மன் சந்திரமோகன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் கருப்பசாமி, ஜெயராமன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    இக்கூட்டத்தில் யூனியன் சேர்மன் பொன் முத்தையா பாண்டியன் அனைத்து கவுன்சிலர்களின் வார்டுகளிலும் உள்ள அடிப்படை மற்றும் அவசர பணிகளை பூர்த்தி செய்யும் பொருட்டு, தீர்மானத்தில் ஏற்றப்பட்டு நிவர்த்தி செய்யப்படும் என்று பேசினார்.

    இதில் ஒன்றிய கவுன்சிலர்கள் பாண்டியம்மாள் நீராத்திலிங்கம், கனகராஜ், முனியராஜ், செல்வி ஏசுதாஸ், ஜெயராம், பரமேஸ்வரி, அருணா தேவி பாலசுப்பிரமணியன், விஜய பாண்டியன், விமலா மகேந்திரன், மகாலட்சுமி, லில்லி புஷ்பம், உதவி பொறியாளர் அருள் நாராயணன், மேலாளர் கருத்தப்பாண்டியன், அலுவலர் சிலம்பரசன், அரசு ஒப்பந்ததாரர் கதிர், உள்ளார் மணிகண்டன், விக்கி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • தென்காசி மாவட்ட கலெக்டர் ஆகாஷ் வாசுதேவநல்லூர் அரசு புறம்போக்கு ஆகிய இடங்களை பார்வையிட்டு விலைமதிப்பு மிக்க அரசு புறம்போக்கு நிலங்களில் முள்வேலி அமைத்து பாதுகாப்பது தொடர்பாக ஆய்வு செய்தார்
    • விஸ்வநாதப்பேரி ஊராட்சி பூவானி குளம் சாலை முதல் சுப்பிரமணியபுரம் சாலை வரை ரூ.16.15 லட்சம் மதிப்பீட்டில் போடப்பட்டுள்ள தார் சாலை ஆகியவற்றை பார்வையிட்டார்.

    சிவகிரி:

    தென்காசி மாவட்ட கலெக்டர் ஆகாஷ் வாசுதேவநல்லூர், நாரணபுரம், திருமலாபுரம், விஸ்வநாதப்பேரி ஆகிய இடங்களில் உள்ள பவுண்டு தொழு, களம் புறம்போக்கு, அரசு புறம்போக்கு ஆகிய இடங்களை பார்வையிட்டு விலைமதிப்பு மிக்க அரசு புறம்போக்கு நிலங்களில் முள்வேலி அமைத்து பாதுகாப்பது தொடர்பாக ஆய்வு செய்தார். மேலும் வாசுதேவநல்லூர் ஆரம்ப சுகாதார நிலையம், யூனியன் அலுவலகம் ஆகியவற்றை பார்வையிட்டு அடிப்படை தேவைகள் குறித்து கேட்டறிந்தார்.

    தொடர்ந்து விஸ்வநாதப்பேரியில் உள்ள அங்கன்வாடி கட்டிடம், பஞ்சாயத்து அலுவலகத்திற்காக கட்டப்பட்டு வரும் புதிய கட்டிடம், ரேசன் கடை, சுகாதார வளாகம், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை 14 -வது நிதிக்குழு விஸ்வநாதப்பேரி ஊராட்சி பூவானி குளம் சாலை முதல் சுப்பிரமணியபுரம் சாலை வரை ரூ.16.15 லட்சம் மதிப்பீட்டில் போடப்பட்டுள்ள தார் சாலை ஆகியவற்றை பார்வையிட்டார். உடன் சிவகிரி தாசில்தார் செல்வக்குமார், வருவாய் ஆய்வாளர் வள்ளி, கிராம நிர்வாக அலுவலர் பாலகணேஷ், வாசு வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் சாந்தி சரவணபாய், யூனியன் சேர்மன் பொன் முத்தையா பாண்டியன், துணை சேர்மன் சந்திரமோகன், ஒன்றிய கவுன்சிலர் முனியராஜ், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் கருப்பசாமி, ஜெயராமன், யூனியன் பொறியாளர் அருள் நாராயணன், ஒன்றிய பணி மேற்பார்வையாளர் ராமசாமி, விஸ்வை ஊராட்சி மன்ற தலைவர் ஜோதி மணிகண்டன், செயலர் உமாமகேஸ்வரி, மக்கள் நல பணியாளர் முருகன் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

    • வாசுதேவநல்லூர் ஊராட்சி ஒன்றியம் அருளாட்சி என்ற திருமலாபுரம் ஊராட்சியில் தேசிய ஊட்டச்சத்து மாத விழா நடைபெற்றது.
    • இயற்கை காய்கறிகள், முளைகட்டிய தானிய வகைகள் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன.

    சிவகிரி:

    வாசுதேவநல்லூர் ஊராட்சி ஒன்றியம் அருளாட்சி என்ற திருமலாபுரம் ஊராட்சியில் தேசிய ஊட்டச்சத்து மாத விழா நடைபெற்றது. யூனியன் சேர்மனும், வடக்கு ஒன்றிய தி.மு.க. செயலாளருமான பொன் முத்தையா பாண்டியன் நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கி குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்தார். துணை சேர்மன் சந்திரமோகன், திருமலாபுரம் ஊராட்சி மன்ற தலைவர் மாப்பிள்ளைதுரை ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் இயற்கை காய்கறிகள், முளைகட்டிய தானிய வகைகள் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன. அதுகுறித்து விளக்க கையேடுகள் வைக்கப்பட்டிருந்தது. இயற்கை காய்கறிகள் மற்றும் முளைகட்டிய தானியங்கள் உட்கொள்வதால் ஏற்படும் நன்மைகள் குறித்து விளக்கம் அளித்தனர்.

    நிகழ்ச்சியில் கிளை செயலாளர் சமுத்திரகனி, சத்துணவு அமைப்பாளர்கள், தென்மலை கவுன்சிலர் முனியராஜ், அங்கன்வாடி பணியாளர்கள், உள்ளார் மணிகண்டன், விக்கி மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    • வாசுதேவநல்லூர் யூனியனுக்கு உட்பட்ட நான்கு ஊராட்சி குளங்களை ஆழப்படுத்த ரூபாய் 50 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
    • யூனியன் சேர்மனும், வடக்கு ஒன்றிய தி.மு.க. செயலாளருமான பொன் முத்தையா பாண்டியன் தலைமை தாங்கி பணிகளை தொடங்கி வைத்தார்.

    சிவகிரி:

    அம்ரித் சரோவர் திட்டத்தின் கீழ் கிராமப்புறங்களில் உள்ள நீர்நிலைகளை மேம்படுத்தும் நோக்கில் தென்காசி மாவட்டத்தில் மொத்தம் 81 குளங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளது.

    அதில் வாசுதேவநல்லூர் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள தென்மலை, உள்ளார் தளவாய்புரம், திருமலாபுரம் என்ற அருளாட்சி, சுப்பிரமணியபுரம் ஆகிய ஊராட்சி குளங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளது.

    இத்திட்டத்தின் நோக்கம் தூய்மையான குடிநீர் வழங்குவதாகும். வாசுதேவநல்லூர் யூனியனுக்கு உட்பட்ட நான்கு ஊராட்சி குளங்களை ஆழப்படுத்த ரூபாய் 50 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. குளங்களை ஆழப்படுத்தும் பணிகளுக்கான பூமி பூஜை நடைபெற்றது.

    நிகழ்ச்சிக்கு யூனியன் சேர்மனும், வடக்கு ஒன்றிய தி.மு.க. செயலாளருமான பொன் முத்தையா பாண்டியன் தலைமை தாங்கி பணிகளை தொடங்கி வைத்தார்.

    வட்டார வளர்ச்சி அலுவலர்கள் கருப்பசாமி, ஜெயராமன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    நிகழ்ச்சியில் உதவி பொறியாளர்கள் மார்கோனி, அருள் நாராயணன், மாவட்ட விவசாய அணி துணை அமைப்பாளர் மனோகரன், ஊராட்சி மன்ற தலைவர்கள், துணை தலைவர்கள், ஒன்றிய கவுன்சிலர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    இதுபோன்று வாசுதேவநல்லூர் ஒன்றியம் திருமலாபுரம் என்ற அருளாட்சியில் ரூ. 2.78 லட்சம் மதிப்பீட்டில் இந்திரா காலனி மயானத்தில் நடைபெற்று வரும் தண்ணீர் வசதி, ஆழ்துளை கிணறுடன் கூடிய தொட்டி பணி மற்றும் மின்மோட்டார் அமைக்கும் பணிகளையும் மற்றும் அப்பகுதியில் நடைபெற்று வரும் வாறுகால் பணிகளையும் வாசுதேவநல்லூர் யூனியன் சேர்மனும், வடக்கு ஒன்றிய தி.மு.க. செயலாளருமான பொன் முத்தையா பாண்டியன் ஆய்வு செய்தார். இதில் ஒன்றிய கவுன்சிலர் முனியராஜ், உள்ளார் மணிகண்டன், விக்கி ஆகியோர் கலந்து கொண்டனர்.

    ×