search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வாசுதேவநல்லூர் எஸ்.தங்கப்பழம் கல்விக்குழுமத்தில் சமத்துவ பொங்கல் விழா
    X

    சமத்துவ பொங்கல் விழாவில் கலந்து கொண்டவர்களை படத்தில் காணலாம்.

    வாசுதேவநல்லூர் எஸ்.தங்கப்பழம் கல்விக்குழுமத்தில் சமத்துவ பொங்கல் விழா

    • சமத்துவ பொங்கல் விழாவை எஸ்.தங்கப்பழம் கல்வி குழுமத்தின் தலைவர் எஸ்.தங்கப்பழம் மற்றும் தாளாளர் எஸ்.டி.முருகேசன் ஆகியோர் குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்தனர்.
    • விழாவில் மாணவ- மாணவிகள் பொங்கலினை இறைவனுக்குப் படைத்து வழிபட்டனர்.

    சிவகிரி:

    வாசுதேவநல்லூர் எஸ்.தங்கப்பழம் கல்விக்குழுமத்தில் சமத்துவ பொங்கல் விழா நடைபெற்றது. இவ்விழாவில் எஸ்.தங்கப்பழம் கல்வி குழுமத்தின் தலைவர் எஸ்.தங்கப்பழம் மற்றும் தாளாளர் எஸ்.டி.முருகேசன் ஆகியோர் கலந்து கொண்டு குத்துவிளக்கு ஏற்றி விழாவை தொடங்கி வைத்தனர்.

    மருத்துவக் கல்லூரியின் முதல்வர் (பொறுப்பு) மருத்துவர் பாரதி, எஸ்.தங்கப்பழம் பாலிடெக்னிக் கல்லூரி முதல்வர் இராமநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில் சமத்துவ பொங்கல் விழா கொண்டாடுவதற்கான நோக்கம் பற்றி மாணவிகள் எடுத்துரைத்தனர். இவ்விழாவை முன்னிட்டு மருத்துவக் கல்லூரியைச் சார்ந்த மாணவ- மாணவிகள் சிறப்பு ரங்கோலி கோலமிட்டு, இனிய பொங்கலினை இறைவனுக்குப் படைத்து வழிபட்டனர். தொடர்ந்து பாலிடெக்னிக் கல்லூரி, மருத்துவக்கல்லூரி மாணவ-மாணவிகளின் தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டு போட்டிகள் மற்றும் கலைநிகழ்ச்சி நடைபெற்றது.

    விழாவிற்கான ஏற்பாடுகளை பாலிடெக்னிக் கல்லூரியின் துறைத்தலைவர்கள், ஆசிரியர்கள் மற்றும் மருத்துவக்கல்லூரியின் மருத்துவர்கள், ஆசிரியர்கள், அலுவலர்கள் செய்திருந்தனர். மாணவ- மாணவிகள் அனைவரும் கலந்து கொண்டனர். அனைத்து மாணவ மாணவிகளுக்கும் கரும்பு மற்றும் பொங்கல் வழங்கப்பட்டது.

    Next Story
    ×