search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வாசுதேவநல்லூர்  பத்மஸ்ரீ டாக்டர் சிவந்தி ஆதித்தனார்  சிறப்புப் பள்ளியில் சமத்துவ பொங்கல் விழா
    X

    சமத்துவ பொங்கல் விழாவில் கலந்து கொண்டவர்களை படத்தில் காணலாம்.

    வாசுதேவநல்லூர் பத்மஸ்ரீ டாக்டர் சிவந்தி ஆதித்தனார் சிறப்புப் பள்ளியில் சமத்துவ பொங்கல் விழா

    • வாசுதேவநல்லூர் பத்மஸ்ரீ டாக்டர் சிவந்தி ஆதித்தனார் மனவளர்ச்சி குன்றியோர் சிறப்புப் பள்ளியில் சமத்துவ பொங்கல் விழா நடைபெற்றது.
    • விழாவில் மாணவர்கள் அனைவருக்கும் பொங்கல் மற்றும் கரும்பு வழங்கப்பட்டது.

    சிவகிரி:

    வாசுதேவநல்லூர் மகாத்மா காந்திஜி சேவா சங்கத்தின் கீழ் இயங்கும் பத்மஸ்ரீ டாக்டர் சிவந்தி ஆதித்தனார் மனவளர்ச்சி குன்றியோர் சிறப்புப் பள்ளியில் சமத்துவ பொங்கல் விழா நடைபெற்றது. விழாவிற்கு அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர் மயில்வாகனன் தலைமை தாங்கினார். பள்ளியின் தாளாளர் தவமணி, தலைமைஆசிரியர் சங்கரசுப்பிரமணியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    விழாவில் சேவா சங்கத்தின் செயலாளர் குருசாமி பாண்டியன், சாந்தி, ஹெலன் இவாஞ்சலின், இயன்முறை மருத்துவர் புனிதா, உதவி ஆசிரியர் மகேஸ்வரி, அருண்குமார், கவிதா, குருவம்மாள் மற்றும் மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். மாணவர்கள் அனைவருக்கும் பொங்கல் மற்றும் கரும்பு வழங்கப்பட்டது.

    Next Story
    ×