search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஊட்டசத்து"

    • வாசுதேவநல்லூர் ஊராட்சி ஒன்றியம் அருளாட்சி என்ற திருமலாபுரம் ஊராட்சியில் தேசிய ஊட்டச்சத்து மாத விழா நடைபெற்றது.
    • இயற்கை காய்கறிகள், முளைகட்டிய தானிய வகைகள் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன.

    சிவகிரி:

    வாசுதேவநல்லூர் ஊராட்சி ஒன்றியம் அருளாட்சி என்ற திருமலாபுரம் ஊராட்சியில் தேசிய ஊட்டச்சத்து மாத விழா நடைபெற்றது. யூனியன் சேர்மனும், வடக்கு ஒன்றிய தி.மு.க. செயலாளருமான பொன் முத்தையா பாண்டியன் நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கி குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்தார். துணை சேர்மன் சந்திரமோகன், திருமலாபுரம் ஊராட்சி மன்ற தலைவர் மாப்பிள்ளைதுரை ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் இயற்கை காய்கறிகள், முளைகட்டிய தானிய வகைகள் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன. அதுகுறித்து விளக்க கையேடுகள் வைக்கப்பட்டிருந்தது. இயற்கை காய்கறிகள் மற்றும் முளைகட்டிய தானியங்கள் உட்கொள்வதால் ஏற்படும் நன்மைகள் குறித்து விளக்கம் அளித்தனர்.

    நிகழ்ச்சியில் கிளை செயலாளர் சமுத்திரகனி, சத்துணவு அமைப்பாளர்கள், தென்மலை கவுன்சிலர் முனியராஜ், அங்கன்வாடி பணியாளர்கள், உள்ளார் மணிகண்டன், விக்கி மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    ×