என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
வாசுதேவநல்லூர் அருகே தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டம்
- சர்க்கரை ஆலையை திறக்கக்கோரி தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
- ஆர்ப்பாட்டத்தில் பல்வேறு கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டது.
சிவகிரி:
வாசுதேவநல்லூர் அருகே உள்ள தரணி சர்க்கரை ஆலையை திறக்கக்கோரி ஆலையின் முன்பு தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
கரும்பு விவசாயிகளின் நலன் கருதி ஆலையை உடனடியாக திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். விவசாயிகளுக்கு கொடுக்க வேண்டிய நிலுவைத் தொகையை உடனடியாக வட்டியுடன் வழங்கிட வேண்டும், மத்திய மாநில அரசுகள் கரும்பு டன் ஒன்றுக்கு ரூ.4000 வீதம் வழங்க வேண்டும், சர்க்கரை ஆலை நிர்வாகத்தில் ஆலையில் பணிபுரிந்த பணியாளர்களுக்கு வேலை வழங்க வேண்டும், சம்பள பாக்கியை உடனடியாக வழங்க வேண்டும் உள்பட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து தரணி சர்க்கரை ஆலையின் முன்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
விவசாய சங்கத்தின் வட்டார தலைவர் ராஜேந்திரன் தலைமை தாங்கினார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றிய செயலாளர் வேலு, ராயகிரி நகர செயலாளர் சின்ன வேலுச்சாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
ஆர்ப்பாட்டத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தென்காசி மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் இசக்கிதுரை, விவசாய சங்க மாவட்ட செயலாளர் வேலாயுதம், ஏ.ஐ.டி.யு.சி. தென்காசி மாவட்ட செயலாளர் சுப்பையா, மாவட்ட நிர்வாக குழு உறுப்பினர் சமுத்திரக்கனி, விவசாய சங்க வட்டார செயலாளர் கருப்பையா, விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட பொருளாளர் முருகன், ராமநாதபுரம் ரவிக்குமார், சண்முக வடிவு மற்றும் நிர்வாகிகள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்