search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வருஷாபிஷேகம்"

    • ஒவ்வொரு ஆண்டும் கும்பாபிஷேகம் நடைபெற்ற தினத்தன்று வருஷாபிஷேகம் நடைபெறுவது வழக்கம்.
    • யாக சாலைகள் அமைக்கப்பட்டு சிறப்பு யாக வேள்விகள் நடைபெற்றது.

    நெல்லை:

    தமிழகத்தில் பிரசித்தி பெற்ற சிவாலயங்களில் ஒன்றான சுவாமி நெல்லை யப்பர்-காந்திமதி அம்பாள் கோவிலில் மகா கும்பாபிஷேகம் கடந்த 2018-ம் ஆண்டு நடைபெற்றது. ஒவ்வொரு ஆண்டும் கும்பாபிஷேகம் நடைபெற்ற தினத்தன்று வருஷாபிஷேகம் நடைபெறுவது வழக்கம்.

    அதன்படி இந்த ஆண்டுக்கான வருஷாபிஷேக விழா இன்று வெகுவிமரிசையாக கொண்டா டப்பட்டது. இதனை யொட்டி சுவாமி நெல்லை யப்பர், காந்திமதி அம்பாள் கோவில் நடை இன்று அதிகாலையில் திறக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டது.

    தொடர்ந்து சுவாமி சன்னதி மற்றும் அம்பாள் சன்னதியில் தனி தனியாக யாக சாலைகள் அமைக்கப்பட்டு சிறப்பு யாக வேள்விகளும், மகா தீபாராதனையும் நடைபெற்றது. தொடர்ந்து யாகசாலையில் சிறப்பு பூஜை செய்யப்பட்ட மகா கும்பம் ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு மூல விமா னங்களுக்கு தனித்தனியாக மகா கும்பாபிஷேகம் நடத்தப்பட்டு தீபாராதனை நடை பெற்றது.

    இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து இன்று மாலையில் சுவாமி நெல்லையப்பர்- காந்திமதி அம்பாள் வெள்ளி ரிஷப வாகனத்தில் எழுந்தருள, பஞ்சமூர்த்திகளுடன் திருவீதி உலாவும் நடைபெற உள்ளது.

    • குங்குமம், மஞ்சள்பொடி, மாப்பொடி, பஞ்சாமிர்தம், தேன் உள்பட 16 வகையான ஷோடசா அபிஷேகம்
    • கோவிலின் உள்பிரகாரத்தை சுற்றி மேள தாளம் முழங்க 3 முறை வலம் வர செய்யும் நிகழ்ச்சியும் நடக்கிறது.

    கன்னியாகுமரி :

    கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் கடந்த 2013-ம் ஆண்டு பிப்ரவரி மாதம்27-ந்தேதி கும்பாபிஷேகம் நடந்தது. இந்த கும்பாபிஷேகம் நடந்து 9ஆண்டுகள் நிறைவு பெறுவதை யொட்டி 10-வது ஆண்டு வருஷாபிஷேம் வருகிற 8-ந்தேதி நடத்த முடிவு செய்ய ப்பட்டுள்ளது.

    அதன்படி அன்று அதி காலை 4 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு நிர்மால்ய பூஜையும், விஸ்வரூப தரிசனமும் நடக்கிறது. பின்னர் கணபதி ஹோமமும், நவகலச பூஜையும் நடக்கிறது. அதை த்தொடர்ந்து காலை 10 மணிக்கு அம்மனுக்கு எண்ணெய், பால், பன்னீர், தயிர், இளநீர், பன்னீர், களபம், சந்தனம், குங்குமம், மஞ்சள்பொடி, மாப்பொடி, பஞ்சாமிர்தம், தேன் உள்பட 16 வகையான ஷோடசா அபிஷேகம் நடக்கிறது.

    அதன்பிறகு கலசா பிஷேகமும் நடக்கிறது. இந்த கலசாபிஷேகத்தை கோவில் மேல்சாந்திகள் நடத்துகிறார்கள். வருஷாபி ஷேகத்தையொட்டி வைர கிரீடம் மற்றும் வைரக்கல் மூக்குத்தி அணிவிக்கப்பட்டு சந்தனகாப்பு அலங்காரத்து டன் அம்மன் பக்தர்களுக்கு அருள்பாலிக்கும் நிகழ்ச்சி நடக்கிறது. பின்னர் உச்சிகால பூஜையும், உச்சி கால தீபாராதனையும் நடக்கிறது.

    அதனைத்தொடர்ந்து மதியம் அன்னதானம் நடக்கிறது. மாலை யில் சாயரட்சை தீபாராத னையும், இரவு அம்மனை வெள்ளி பல்லக்கில் எழுந்தருள செய்து கோவிலின் உள்பிரகாரத்தை சுற்றி மேள தாளம் முழங்க 3 முறை வலம் வர செய்யும் நிகழ்ச்சியும் நடக்கிறது.

    தொடர்ந்து வெள்ளி சிம்மாசனத்தில் அம்மனுக்கு ஆராட்டு நிகழ்ச்சியும் அத்தாழபூஜையும் ஏகாந்த தீபாராதனையும் நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை குமரி மாவட்ட கோவில்களின் இணை ஆணையர் ஞானசேகர், நாகர்கோவில் தேவசம் தொகுதி கோவில்களின் கண்காணிப்பாளரும் கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில் மேலாளருமான ஆனந்த், பொருளாளர் ரமேஷ் மற்றும் கோவில் நிர்வாகத்தி னர் செய்து வருகின்றனர்.

    • அஷ்டோத்திர சத கலாபிஷேகம், மகா தீபாராதனை நடந்தது.
    • பூஜையில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    வடபழனி முருகன் கோவிலில் கடந்த ஆண்டு மகா கும்பாபிஷேகம் நடந்தது. கும்பாபிஷேகம் நடந்து ஓராண்டு நிறைவு பெற்றதை தொடர்ந்து வருஷாபிஷேகம் நேற்று நடந்தது. இதையொட்டி கடந்த சில நாட்களாக கோவிலில் யாகசாலை வளர்க்கப்பட்டு, ஹோமங்கள், கால பூஜைகள் நடத்தப்பட்டன.

    கும்பாபிஷேகம் ஓராண்டு நிறைவு நாளான நேற்று காலை முதல் கணபதி பூஜை, புண்யாக வாசனம், இரண்டாம் கால பூஜை, வேத திருமுறை பாராயணம், விசேஷ திரவிய ஹோமம் நடந்தது. அதனை தொடர்ந்து மகா பூர்ணாஹுதி, யாத்ரா தானம், எஜமான சங்கல்பம், மகா தீபாராதனை நடந்தது.

    யாக சாலையில் இருந்து கடப்புறப்பாடு, அனைத்து பரிவார மூர்த்திகளுக்கு கலசாபிஷேகமும் நடைபெற்றது. முருகனுக்கு 108 எண்ணிக்கை கொண்ட அஷ்டோத்திர சத கலாபிஷேகம், மகா தீபாராதனை நடந்தது.

    இந்த நிகழ்வில் கோவில் தக்கார் ஆதிமூலம், ஓராண்டு நிறைவு விழா உபயதாரர் மோகன்குமார், நகரத்தார் குழுவை சேர்ந்த வெங்கடாச்சலம், கோவில் துணைக் கமிஷனர் முல்லை உள்ளிட்டோர் பங்கேற்றனர். பூஜையில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    • மாலை 4 மணிக்கு சாயரட்சை தீபாராதனை நடக்கிறது.
    • இரவு மூலவருக்கு புஷ்பாஞ்சலி நடக்கிறது.

    திருச்செந்தூா் சுப்பிர மணிய சுவாமி கோவிலில் தை உத்திர வருசாபிஷேகம் இன்று நடைபெற்றது. இதை முன்னிட்டு இன்று அதிகாலை 4 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டது.

    4.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனை, 5 மணிக்கு உதயமாா்த்தாண்ட அபிஷேகம், காலை 9 மணிக்கு மூலவர், சண்முகர், பெருமாள் மற்றும் வள்ளி-தெய்வானை ஆகிய விமான கலசங்களுக்கு புனித நீர் ஊற்ற மேல் தளத்திற்கு புனித நீர் எடுத்துவரப்பட்டு 9.15 மணிக்கு ஊற்றப்பட்டது.

    தொடர்ந்து 10 மணிக்கு உச்சிகால அபிஷேகம் நடந்தது. இதில் திரளான பக்தர் திரளாக கலந்து கொண்டனர்.

    மாலை 4 மணிக்கு சாயரட்சை தீபாராதனைக்குப் பின்னர் சுவாமி குமரவிடங்கபெருமான், தெய்வானை அம்மன் தனித்தனி தங்க மயில் வாகனத்தில் எழுந்தருளி வீதி உலா சென்று பக்தர்களுக்கு காட்சி அளிக்கின்றனர். இரவு மூலவருக்கு புஷ்பாஞ்சலி நடக்கிறது.

    நிகழ்ச்சியில் அறங்காவலர் குழு தலைவர் அருள்முருகன், நேர்முக உதவியாளர் செந்தமிழ் பாண்டியன், இணை ஆணையர் கார்த்திக், கண்காணிப்பாளர் ஆனந்தராஜ், நகராட்சி துணைத்தலைவர் ரமேஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    மாலை 4 மணிக்கு சாயரட்சை தீபாராதனை நடக்கிறது.

    • நாளை இரவு மூலவருக்கு புஷ்பாஞ்சலி நடக்கிறது.
    • குமரவிடங்கபெருமான், தெய்வானை தனித்தனி தங்க மயில் வாகனத்தில் வீதி உலா வருகிறார்.

    திருச்செந்தூா் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் தை உத்திர வருசாபிஷேகத்தை முன்னிட்டு நாளை அதிகாலை 4 மணிக்கு நடை திறக்கப்படுகிறது. காலை 4.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனையும், 5 மணிக்கு உதயமாா்த்தாண்ட அபிஷேகமும், காலை 8.30 மணிக்கு மூலவர், சண்முகர், பெருமாள், வள்ளி, தெய்வானை ஆகிய விமான கலசங்களுக்கு வருசாபிஷேகம் நடக்கிறது.

    தொடா்ந்து காலை 10 மணிக்கு உச்சிகால அபிஷேகமும், மாலை 4 மணிக்கு சாயரட்சை தீபாராதனை நடக்கிறது. பின்னர் சுவாமி குமரவிடங்கபெருமான், தெய்வானை அம்மாள் தனித்தனி தங்க மயில் வாகனத்தில் எழுந்தருளி வீதி உலா சென்று பக்தர்களுக்கு காட்சி கொடுக்கின்றனர். இரவு மூலவருக்கு அபிஷேகம் நடைபெறாமல் புஷ்பாஞ்சலி நடக்கிறது.

    கோவிலில் இரவு நடைபெறும் புஷ்பாஞ்சலிக்கு பக்தா்கள் தங்களால் இயன்ற அளவு அழகும், மணமும் மிக்க நன்மலா்களை (கேந்திப் பூக்கள் தவிர) நாளை பிற்பகல் 2 மணிக்கு முன்னதாக உள்துறை கண்காணிப்பாளரிடம் ஒப்படைக்க வேண்டும் என கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

    • 24-ந் தேதி காலை 7 மணிக்கு விக்னேஸ்வர பூஜை, மகாகணபதி ஹோமம் நடக்கிறது.
    • மதியம் 12 மணிக்கு அலங்கார தீபாராதனை, அன்னதானம் நடக்கிறது.

    ஆரல்வாய்மொழி பரகோடி கண்டன் சாஸ்தா, மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவிலில் 13-ம் ஆண்டு வருஷாபிஷேக விழா வருகிற 24-ந் தேதி (புதன்கிழமை) நடக்கிறது.

    அன்று காலை 7 மணிக்கு விக்னேஸ்வர பூஜை, புண்யாகவாஜனம், பஞ்சகவ்ய பூஜை, கும்பபூஜை, மகாகணபதி ஹோமம், மூலமந்திரம், மாலாமந்திரம் ஹோமம், தீபாராதனை, 9 மணிக்கு மகா அபிஷேகம், மதியம் 12 மணிக்கு அலங்கார தீபாராதனை, 12.30 மணிக்கு அன்னதானம் போன்றவை நடைபெறும்.

    இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகம் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்துள்ளனர்.

    • மூலஸ்தானம் மற்றும் பரிவார மூா்த்திகளுக்கு அபிஷேகம் நடைபெற்றது.
    • மூலஸ்தானம் மற்றும் பரிவார மூா்த்திகளுக்கு அபிஷேகம் நடைபெற்றது.

    நெல்லை பாளையங்கோட்டை மேலவாசல் பிரசன்ன விநாயகா் மற்றும் சுப்பிரமணிய சுவாமி கோவில் அமைந்துள்ளது. ஆங்கிலேயர் காலத்தில் இந்த இடம் கோட்டையாக அமையப்பெற்று காவல் நிலையமாக செயல்பட்டு வந்தது. கோட்டையின் கீழே விநாயகா் மற்றும் முருகப்பெருமான் சன்னதிகள் அமைந்துள்ளது.

    காலப்போக்கில் கோட்டை சிதிலம் அடைந்தாலும் இக்கோவில்களில் பக்தர்கள் வழிபாடு நடத்தி வருகிறார்கள்.

    சிறப்பு வாய்ந்த இந்த சன்னதியில் 10-ம் ஆண்டு வருசாபிஷேக விழா நேற்று நடைபெற்றது. 3 நாட்கள் விழாவில் முதல்நாள் ஷண்முகா அர்ச்சனையும், 2-வது நாள் அருணகிரிநாதா் குருபூஜையும் நடைபெற்றது. விழாவின் முக்கிய நிகழ்வான வருசாபிஷேக விழா நேற்று உத்திராட நட்சத்திரத்தில் நடைபெற்றது.

    இதற்காக காலை விக்னேஷ்வர பூஜை, பஞ்சகவ்ய பூஜை, மகா கணபதி ஹோமம், பூா்ணாகுதி தீபாராதனை நடந்தது. தொடர்ந்து கடம் புறப்பாடு நடைபெற்று பிரசன்ன விநாயகா் மற்றும் சுப்பிரமணியசுவாமி விமான கோபுரங்கள், மூலஸ்தானம் மற்றும் பரிவார மூா்த்திகளுக்கு அபிஷேகம் நடைபெற்றது. தொடா்ந்து மூர்த்திகளுக்கு அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை நடந்தது. இரவில் பிரசன்ன விநாயகா், வள்ளி- தேவவேனா சமேத சுப்பிரமணிய சுவாமி திருவீதி உலா நடைபெற்றது.

    • இந்நிகழ்ச்சியில் வெள்ளூர் ஊர் பொதுமக்கள் சீர்வரிசை உடன் வந்து சாமி தரிசனம் செய்தனர்.
    • இதனை தொடர்ந்து அம்பாள் - சுவாமி விதி உலா நடைபெற்றது.

    ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள வெள்ளூர் சிவகாமி அம்பாள் உடனுறை மத்தியபதி ஈஸ்வரர் நடுநக்கர் கோவில் வருஷாபிஷேக விழாவை முன்னிட்டு நேற்று காலை மணி 9.30 மணிக்கு கோபுர கலசங்களுக்கு கும்பாபிஷேகமும், காலை மணி 11.45 மணிக்கு கணபதி, முருகன், அம்பாள் சுவாமிக்கு கும்பாபிஷேகமும், தீபாராதனையும் நடைபெற்றது.

    மதியம் 12 மணி அளவில் ஊர் பொதுமக்களுக்கு அன்னதானம் நிகழ்ச்சி நடந்தது. இரவு 7 மணிக்கு சிவபெருமானுக்கும் சிவகாமி அம்மனுக்கும் திருக்கல்யாணம் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் வெள்ளூர் ஊர் பொதுமக்கள் சீர்வரிசை உடன் வந்து சாமி தரிசனம் செய்தனர்.

    இதனை தொடர்ந்து இரவு 8.30 மணிக்கு அம்பாள் - சுவாமி விதி உலா நடைபெற்றது. இதில் சுற்றுவட்டாரத்திலிருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    • இன்று முதல் 3 நாட்கள் நடக்கிறது
    • கோவில் திருவிழா ஏற்பாடுகள் தீவிரம்.

    கன்னியாகுமரி:

    மார்த்தாண்டம் அருகே வெள்ளிவிளாகம் அரச மூடு அம்மன் கோவிலில் வருஷாபிஷேகம் மற்றும் திருவிழா இன்று (8-ஆம் தேதி) தொடங்கி 10ஆம் தேதி வரை மூன்று நாட்கள் நடக்கிறது.

    1-ம் நாள் திருவிழாவான இன்று காலை 5 மணிக்கு கணபதி ஹோமம் மற்றும் 6 மணிக்கு நிர்மால்ய பூஜை, 8.15 மணிக்கு வருஷாபிஷேகம் மற்றும் கலச பூஜை, 10.30 மணிக்கு சிறப்பு ஆராதனை, அதனை தொடர்ந்து ஸ்ரீ லலிதா ஸஹஸ்ர நாம அர்ச்சனை, மதியம் 12 மணிக்கு உச்ச பூஜை, சிறப்பு தீபாராதனை மற்றும் அன்னதானம் நடைபெற்றது. மாலை 3 மணிக்கு அபிராமி அந்தாதி பாராயணம், 6 மணிக்கு திருவிளக்கு பூஜை, இரவு 8 மணிக்கு சிறப்பு தீபாராதனை, 8.30 மணிக்கு சமய மாநாடு நடைபெறும்.

    2-ம் நாள் திருவிழாவான 9-ம் தேதி சனிக்கிழமை காலை 5 மணிக்கு திருப்பள்ளி எழுச்சி, நிர்மால்ய பூஜை, சிறப்பு அபிஷேகம், 7 மணிக்கு சிறப்பு அலங்கார தீபாராதனை அதனை தொடர்ந்து கீதா பாராயணம், மதியம் 12 மணிக்கு சிறப்பு தீபாராதனை அடுத்து அன்னதானம் நடைபெறும். மாலை 4 மணிக்கு பஜனை, 6 மணிக்கு திருவிளக்கு பூஜை, 7 மணிக்கு சிறப்பு பூஜை, இரவு 8 மணிக்கு பரிசு வழங்குதல் நடைபெறும்.

    3-ம் நாள் திருவிழாவான (10-ம் தேதி) காலை 5 மணிக்கு திருப்பள்ளி எழுச்சி, நிர்மால்ய பூஜை, சிறப்பு அபிஷேகம், சிறப்பு அலங்கார தீபாராதனை, பஜனை, வில்லிசை, மதியம் 12 மணிக்கு உச்ச பூஜை, சிறப்பு தீபாராதனை அடுத்து அன்னதானம் நடைபெறும். அதனைத் தொடர்ந்து வெள்ளி விளாகம் மறைந்த அப்பாவு நாடார் கொச்சிப்பிள்ளை நினைவாக வழங்கும் மாபெரும் வில்லிசை நடைபெறும். மாலை 3 மணிக்கு கூட்டு பொங்கல் வழிபாடு, 4 மணிக்கு பூப்படை, 5 மணிக்கு சிறப்பு அலங்கார தீபாராதனை ஆகியவை நடைபெறும்.

    கோவில் திருவிழா ஏற்பாடுகளைகோவில் திருவிழா ஏற்பாடுகளை அரசமூடு அம்மன் திருக்கோவில் அறக்கட்டளை ஆலய நிர்வாக குழுவின் தலைவர் பேபி ராஜேந்திரன், செயலாளர் வின்சிலி, நிர்வாக குழு உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் அனைவரும் சேர்ந்து செய்து வருகின்றனர்.

    • இன்று மாலை 4 மணிக்கு சாயரட்சை தீபாராதனை நடக்கிறது.
    • இன்று இரவு மூலவருக்கு அபிஷேகம் நடைபெறாது.

    திருச்செந்தூர் சுப்பிர மணியசாமி கோவிலில் இன்று ஆனி வருசாபிஷேக விழா நடைபெற்றது.

    இதையொட்டி கோவில் நடை அதிகாலை 4 மணிக்கு திறக்கப்பட்டது. 4.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனை, 5 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகம் நடைபெற்றது. பின்னர் கோவில் மகா மண்டபத்தில் மூலவர், வள்ளி, தெய்வானை அம்பாள் கும்பங்களுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.

    பின்னர் குமரவிடங்க பெருமான் சன்னதியில் சண்முகம் கும்பத்திற்கும், பெருமாள் சன்னதியில் பெருமாள் கும்பத்திற்கும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.

    தொடர்ந்து பூஜையில் வைக்கப்பட்ட கும்ப கலசங்கள் கோவில் விமான தளத்திற்கு கொண்டு வரப்பட்டு காலை 9 மணிக்கு மூலவர், சண்முகர், பெருமாள் ஆகிய விமான கலசத்திற்கு புனித நீர் ஊற்றப்பட்டது. அதனைத் தொடர்ந்து வள்ளி, தெய்வானை அம்பாள் விமான கலசங்களுக்கு புனித நீர் ஊற்றப்பட்டு வருஷாபிசேகம் நடைபெற்றது.


    வருசாபிஷேக விழாவில், திருச்செந்தூர் கோவில் தக்கார் இரா. கண்ணன் ஆதித்தன், கோவில் இணை ஆணையர் கார்த்திக், கோவில் உள்துறை சூப்பிரண்டு ராஜேந்தின், தக்கார் பிரதிநிதி டாக்டர் பாலசுப்பிரமணிய ஆதித்தன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    மாலை 4 மணிக்கு சாயரட்சை தீபாராதனை நடக்கிறது. பின்னர் சுவாமி குமரவிடங்க பெருமானும் வள்ளி அம்பாளும் தனித்தனி தங்கமயில் வாகனத்தில் எழுந்தருளி வீதி உலா நடக்கிறது.

    இன்று இரவு மூலவருக்கு அபிஷேகம் நடைபெறாது. விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொள்கிறார்கள்.

    • நாளை அதிகாலை 4 மணிக்கு கோவில் நடைதிறக்கப்படும்.
    • மூலவர், வள்ளி, தெய்வானை அம்மாள் கும்பங்களுக்கு சிறப்பு பூஜைகள் நடக்கிறது.

    திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் இணை ஆணையர் கார்த்திக் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நாளை (வெள்ளிக்கிழமை) ஆனி வருசாபிஷேகம் நடக்கிறது. இதையொட்டி நாளை அதிகாலை 4 மணிக்கு கோவில் நடைதிறக்கப்படும். 4.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனையும், 5 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகமும் தீபாராதனையும் நடக்கிறது.

    பின்னர் கோவில் மகாமண்டபத்தில் மூலவர், வள்ளி, தெய்வானை அம்மாள் கும்பங்களுக்கு சிறப்பு பூஜைகள் நடக்கிறது. குமரவிடங்கபெருமான் சன்னதியில் சண்முகர் கும்பத்திற்கும், பெருமாள் சன்னதியில் பெருமாள் கும்பத்திற்கும் சிறப்பு பூஜைகள் நடக்கிறது. பின்னர் பூஜையில் வைக்கப்பட்ட கும்பங்கள் கோவில் விமான தளத்திற்கு கொண்டுவரப்பட்டு காலை 8.30 மணிக்கு மேல் 9 மணிக்குள் மூலவர், சண்முகர், பெருமாள் ஆகிய விமான கலசத்திற்கு வருசாபிஷேகம் நடக்கிறது.

    தொடர்ந்து வள்ளி, தெய்வானை அம்பாள் விமான கலசத்திற்கு வருஷாபிஷேகம் நடக்கிறது. மாலை 4 மணிக்கு சாயரட்சை தீபாராதனை நடக்கிறது. பின்னர் சுவாமி குமரவிடங்கபெருமானும், வள்ளி அம்பாளும் தனித்தனி தங்கமயில் வாகனத்தில் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சி கொடுக்கின்றனர். இரவு மூலவருக்கு அபிஷேகம் நடைபெறாது.

    இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

    • மூலவர் மற்றும் பரிவார தேவதைகளுக்கு மஹா அபிஷேகம், தீபாராதனை நடைபெற்றது.
    • சிவாச்சார்யார்கள் மந்திரங்கள் ஒலிக்க விமான கலசங்களுக்கு அபிஷேகம் செய்தனர்.

    ஆத்தூர்:

    சேர்ந்தபூமங்கலம் சைவ வேளாளர் சமுதாயத்திற்கு பாத்தியப்பட்ட ஆரியநாச்சி அம்பாள் கோவில் வருஷாபிஷேகம் நடைபெற்றது.

    முன்னதாக கணபதி ஹோமத்துடன் விழா தொடங்கியது. யாகசாலை பூஜைகள் மற்றும் வாஸ்து சாந்தி நடைபெற்றது. பின்னர் ஈஸ்வரமுத்துசாமி பட்டர் தலைமையிலான சிவாச்சார்யார்கள் வேத மந்திரங்கள் ஒலிக்க கும்ப நீரை விமான கலசங்களுக்கு அபிஷேகம் செய்தனர்.

    தொடர்ந்து மூலவர் மற்றும் பரிவார தேவதைகளுக்கு மஹா அபிஷேகமும், உச்சிகால தீபாராதனையும் நடைபெற்றது. மாலையில் அம்பாள் திருவீதி உலா, சிறப்பு அலங்கார தீபாராதனை நடைபெற்றது.

    இதற்கான ஏற்பாடுகளை சேர்ந்தபூமங்கலம் ஆரியநாச்சி அம்பாள் கோவில் தர்ம கர்த்தா பிரமநாயகம் தலைமையில் அறங்காவலர் குழு உறுப்பினர்கள் மற்றும் உபயதாரர்கள் செய்திருந்தனர்.

    ×