search icon
என் மலர்tooltip icon

    வழிபாடு

    ஆரல்வாய்மொழி மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவிலில் வருஷாபிஷேக விழா 24-ந் தேதி நடக்கிறது
    X

    ஆரல்வாய்மொழி மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவிலில் வருஷாபிஷேக விழா 24-ந் தேதி நடக்கிறது

    • 24-ந் தேதி காலை 7 மணிக்கு விக்னேஸ்வர பூஜை, மகாகணபதி ஹோமம் நடக்கிறது.
    • மதியம் 12 மணிக்கு அலங்கார தீபாராதனை, அன்னதானம் நடக்கிறது.

    ஆரல்வாய்மொழி பரகோடி கண்டன் சாஸ்தா, மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவிலில் 13-ம் ஆண்டு வருஷாபிஷேக விழா வருகிற 24-ந் தேதி (புதன்கிழமை) நடக்கிறது.

    அன்று காலை 7 மணிக்கு விக்னேஸ்வர பூஜை, புண்யாகவாஜனம், பஞ்சகவ்ய பூஜை, கும்பபூஜை, மகாகணபதி ஹோமம், மூலமந்திரம், மாலாமந்திரம் ஹோமம், தீபாராதனை, 9 மணிக்கு மகா அபிஷேகம், மதியம் 12 மணிக்கு அலங்கார தீபாராதனை, 12.30 மணிக்கு அன்னதானம் போன்றவை நடைபெறும்.

    இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகம் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்துள்ளனர்.

    Next Story
    ×