search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் வருஷாபிஷேக விழா வருகிற 8-ந் தேதி நடக்கிறது
    X

    கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் வருஷாபிஷேக விழா வருகிற 8-ந் தேதி நடக்கிறது

    • குங்குமம், மஞ்சள்பொடி, மாப்பொடி, பஞ்சாமிர்தம், தேன் உள்பட 16 வகையான ஷோடசா அபிஷேகம்
    • கோவிலின் உள்பிரகாரத்தை சுற்றி மேள தாளம் முழங்க 3 முறை வலம் வர செய்யும் நிகழ்ச்சியும் நடக்கிறது.

    கன்னியாகுமரி :

    கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் கடந்த 2013-ம் ஆண்டு பிப்ரவரி மாதம்27-ந்தேதி கும்பாபிஷேகம் நடந்தது. இந்த கும்பாபிஷேகம் நடந்து 9ஆண்டுகள் நிறைவு பெறுவதை யொட்டி 10-வது ஆண்டு வருஷாபிஷேம் வருகிற 8-ந்தேதி நடத்த முடிவு செய்ய ப்பட்டுள்ளது.

    அதன்படி அன்று அதி காலை 4 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு நிர்மால்ய பூஜையும், விஸ்வரூப தரிசனமும் நடக்கிறது. பின்னர் கணபதி ஹோமமும், நவகலச பூஜையும் நடக்கிறது. அதை த்தொடர்ந்து காலை 10 மணிக்கு அம்மனுக்கு எண்ணெய், பால், பன்னீர், தயிர், இளநீர், பன்னீர், களபம், சந்தனம், குங்குமம், மஞ்சள்பொடி, மாப்பொடி, பஞ்சாமிர்தம், தேன் உள்பட 16 வகையான ஷோடசா அபிஷேகம் நடக்கிறது.

    அதன்பிறகு கலசா பிஷேகமும் நடக்கிறது. இந்த கலசாபிஷேகத்தை கோவில் மேல்சாந்திகள் நடத்துகிறார்கள். வருஷாபி ஷேகத்தையொட்டி வைர கிரீடம் மற்றும் வைரக்கல் மூக்குத்தி அணிவிக்கப்பட்டு சந்தனகாப்பு அலங்காரத்து டன் அம்மன் பக்தர்களுக்கு அருள்பாலிக்கும் நிகழ்ச்சி நடக்கிறது. பின்னர் உச்சிகால பூஜையும், உச்சி கால தீபாராதனையும் நடக்கிறது.

    அதனைத்தொடர்ந்து மதியம் அன்னதானம் நடக்கிறது. மாலை யில் சாயரட்சை தீபாராத னையும், இரவு அம்மனை வெள்ளி பல்லக்கில் எழுந்தருள செய்து கோவிலின் உள்பிரகாரத்தை சுற்றி மேள தாளம் முழங்க 3 முறை வலம் வர செய்யும் நிகழ்ச்சியும் நடக்கிறது.

    தொடர்ந்து வெள்ளி சிம்மாசனத்தில் அம்மனுக்கு ஆராட்டு நிகழ்ச்சியும் அத்தாழபூஜையும் ஏகாந்த தீபாராதனையும் நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை குமரி மாவட்ட கோவில்களின் இணை ஆணையர் ஞானசேகர், நாகர்கோவில் தேவசம் தொகுதி கோவில்களின் கண்காணிப்பாளரும் கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில் மேலாளருமான ஆனந்த், பொருளாளர் ரமேஷ் மற்றும் கோவில் நிர்வாகத்தி னர் செய்து வருகின்றனர்.

    Next Story
    ×