search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சேர்ந்தபூமங்கலம்  ஆரியநாச்சி அம்பாள் கோவில் வருஷாபிஷேக விழா
    X

    கோவில் கோபுர விமான கலசங்களுக்கு அபிஷேகம் நடைபெற்ற காட்சி.

    சேர்ந்தபூமங்கலம் ஆரியநாச்சி அம்பாள் கோவில் வருஷாபிஷேக விழா

    • மூலவர் மற்றும் பரிவார தேவதைகளுக்கு மஹா அபிஷேகம், தீபாராதனை நடைபெற்றது.
    • சிவாச்சார்யார்கள் மந்திரங்கள் ஒலிக்க விமான கலசங்களுக்கு அபிஷேகம் செய்தனர்.

    ஆத்தூர்:

    சேர்ந்தபூமங்கலம் சைவ வேளாளர் சமுதாயத்திற்கு பாத்தியப்பட்ட ஆரியநாச்சி அம்பாள் கோவில் வருஷாபிஷேகம் நடைபெற்றது.

    முன்னதாக கணபதி ஹோமத்துடன் விழா தொடங்கியது. யாகசாலை பூஜைகள் மற்றும் வாஸ்து சாந்தி நடைபெற்றது. பின்னர் ஈஸ்வரமுத்துசாமி பட்டர் தலைமையிலான சிவாச்சார்யார்கள் வேத மந்திரங்கள் ஒலிக்க கும்ப நீரை விமான கலசங்களுக்கு அபிஷேகம் செய்தனர்.

    தொடர்ந்து மூலவர் மற்றும் பரிவார தேவதைகளுக்கு மஹா அபிஷேகமும், உச்சிகால தீபாராதனையும் நடைபெற்றது. மாலையில் அம்பாள் திருவீதி உலா, சிறப்பு அலங்கார தீபாராதனை நடைபெற்றது.

    இதற்கான ஏற்பாடுகளை சேர்ந்தபூமங்கலம் ஆரியநாச்சி அம்பாள் கோவில் தர்ம கர்த்தா பிரமநாயகம் தலைமையில் அறங்காவலர் குழு உறுப்பினர்கள் மற்றும் உபயதாரர்கள் செய்திருந்தனர்.

    Next Story
    ×