search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Varushabishekam"

    • இந்த கோவிலில் கடந்த 2020-ம் ஆண்டு கும்பாபிஷேகம் நடந்தது.
    • சன்னதிகளில் மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டு பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்படும்.

    பஞ்சமுக ஸ்ரீஜெயமாருதி சேவா டிரஸ்ட் தலைவர் மற்றும் நிர்வாக அறங்காவலர் கோதண்டராமன் விடுத்துள்ள ஒரு செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    மத்திய திருப்பதி என்று அழைக்கப்படும் பஞ்சவடியில் உள்ள பஞ்சமுக ஆஞ்சநேயர் கோவிலில் கடந்த 2020-ம் ஆண்டு கும்பாபிஷேகம் நடந்தது. இதையொட்டி வருகிற 7-ந்தேதி வருஷாபிஷேக விழா (கும்பாபிஷேக தினம்) கொண்டாடப்படுகிறது. அன்றைய தினம் காலை சீனிவாச பெருமாள் சன்னதிக்கு பின்புறம் உள்ள யாகசாலையில் காலை 7 மணி முதல் கடம் பிரதிஷ்டை செய்யப்பட்டு விசேஷ ஹோமங்கள் நடக்கிறது.

    காலை 9 மணி அளவில் ஸ்ரீவலம்புரி மகா கணபதி, ஸ்ரீசீதா சமேத பட்டாபிஷேக ராமர், ஸ்ரீவாரி வெங்கடாஜலபதி மற்றும் 36 அடி உயரமுள்ள விஸ்வரூப ஜெய மங்கள பஞ்சமுக ஆஞ்சநேயர் ஆகியோருக்கு பால், பன்னீர், சந்தனம் போன்ற மங்கல திரவியங்களால் விசேஷ திருமஞ்சனம் நடைபெறுகிறது.

    அதைத்தொடர்ந்து கடம் புறப்பாடுடன் அனைத்து சன்னதிகளிலும் புனிதநீர் தெளிக்கப்படும். பகல் 11 மணிக்கு அலங்காரத்துடன் சன்னதிகளில் மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டு பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்படும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • விமான கலசங்களுக்கு புனித நீர் ஊற்றப்பட்டது.
    • இன்று இரவு மூலவருக்கு அபிஷேகம் நடக்காது.

    அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஆனி வருசாபிஷேகம் இன்று நடைபெற்றது.

    வருசாபிஷேகத்தை முன்னிட்டு அதிகாலை 4 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டது. 4.30 மணிக்கு விஸ்வரூபம், 6 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகம் நடைபெற்றது. இதைத்தொடர்ந்து விமான கலசங்களுக்கு கும்பம் எடுத்து வரப்பட்டு காலை 9.40 மணிக்கு மேல் தளத்தில் அமைந்துள்ள மூலவர், வள்ளி, தெய்வானை அம்பாள் சந்நிதிகளின் விமான கலசங்களுக்கு புனித நீர் ஊற்றப்பட்டது.

    இன்று மாலை 4 மணிக்கு சாயரட்சை தீபாராதனையும், தொடர்ந்து சுவாமி குமரவிடங்க பெருமான் மற்றும் வள்ளி, தெய்வானை அம்மாள் தனித்தனி தங்க மயில் வாகனத்தில் எழுந்தருளி வீதியுலா நடக்கிறது. இரவு மூலவருக்கு அபிசேகம் நடக்காது என கோவில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    ஏற்பாடுகளை கோவில் அறங்காவலர் குழு தலைவர் அருள் முருகன், இணை ஆணையர் கார்த்திக், அறங்காவலர் குழு உறுப்பினர்கள் அனிதா குமரன், ராம்தாஸ், கணேசன், செந்தில் முருகன் மற்றும் கோவில் பணியாளர்கள் செய்துள்ளனர்.

    • மூலவர், வள்ளி, தெய்வானை அம்பாள் கும்பங்களுக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்படுகிறது.
    • இரவு மூலவருக்கு அபிஷேகம் நடைபெறாது.

    அறுபடை வீடுகளில் 2-ம் படை வீடாக திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் திகழ்கிறது. இந்த கோவிலில் பல்வேறு திருவிழாக்கள் நடைபெறும். இதில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் கோவிலுக்கு வந்து சாமி தரிசனம் செய்வார்கள்.

    விடுமுறை நாளான நேற்று கோவிலுக்கு காலை முதலே ஏராளமான பக்தர்கள் வந்தனர். அவர்கள் கடலில் புனித நீராடி, நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.

    இ்ந்தநிலையில் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஆனி வருசாபிஷேக விழா வருகிற 29-ந் தேதி நடக்கிறது என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. இதுகுறித்து கோவில் இணை ஆணையர் கார்த்திக் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் வருகிற 29-ந் தேதி (வியாழக்கிழமை) ஆனி வருசாபிஷேகம் நடக்கிறது. இதையொட்டி அன்று அதிகாலை 4 மணிக்கு நடை திறக்கப்படுகிறது. 4.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனை, 6 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகம், தீபாராதனை நடக்கிறது.

    பின்னர் கோவில் மகாமண்டபத்தில் மூலவர், வள்ளி, தெய்வானை அம்பாள் கும்பங்களுக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்படுகிறது. குமரவிடங்கபெருமான் சன்னதியில் சண்முகர் கும்பத்திற்கும், பெருமாள் சன்னதியில் பெருமாள் கும்பத்திற்கும் சிறப்பு பூஜைகள் நடக்கிறது.

    பின்னர் பூஜையில் வைக்கப்பட்ட கும்பங்கள் கோவில் விமான தளத்திற்கு கொண்டு வரப்பட்டு காலை 9.30 மணிக்கு மேல் 10.30 மணிக்குள் மூலவர், சண்முகர், பெருமாள் ஆகிய விமான கலசத்திற்கு வருசாபிஷேகம் நடைபெறுகிறது. தொடர்ந்து வள்ளி, தெய்வானை அம்பாள் விமான கலசத்திற்கும் வருசாபிஷேகம் நடக்கின்றது.

    மாலை 4 மணிக்கு சாயரட்சை தீபாராதனை, தொடர்ந்து சுவாமி, அம்பாள் தனித்தனி தங்கமயில் வாகனத்தில் எழுந்தருளி வீதிஉலா வந்து பக்தர்களுக்கு காட்சி கொடுக்கின்றனர். இரவு மூலவருக்கு அபிஷேகம் நடைபெறாது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

    • மதியம் சிறப்பு அன்னதானம் நடைபெறும்.
    • மாலையில் ‘லட்சதீப விழா’ நடக்கிறது.

    108 வைணவத்தலங்களில் ஒன்றான திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் கோவிலில் 418 ஆண்டுகளுக்கு பின்பு கடந்த ஆண்டு ஜூலை மாதம் 6-ந் தேதி கும்பாபிஷேகம் நடந்தது. தமிழ் மாதமான ஆனி மாத உத்தரம் நட்சத்திரத்தில் கும்பாபிஷேகம் நடந்ததால் அதை கணக்கில் கொண்டு, ஆனிமாத உத்தரம் நட்சத்திர நாளான இன்று (திங்கட்கிழமை) வருஷாபிஷேகம் நடக்கிறது.

    இதையொட்டி நேற்று 'சாக்கியார் கூத்து' எனப்படும் நகைச்சுவை நாட்டிய நாடக நிகழ்ச்சி நடந்தது. இந்தநிகழ்ச்சி கேரளாவுடன் குமரி இணைந்திருந்த போது நடைபெற்று வந்தது. பின்னர் குமரி மாவட்டம் தமிழ்நாட்டுடன் இணைந்த பின்னர் இந்த நிகழ்ச்சி நடைபெறவில்லை. பாரம்பரியம் மிக்க இந்த கலையை தற்போது 67 ஆண்டுகளுக்கு பின்னர் திருச்சூரை சேர்ந்த கலா மண்டலம் சங்கீத் சாக்கியார் நிகழ்த்தினார்.

    மேலும், வருஷாபிஷேக விழாவையொட்டி நேற்று ஏராளமான பக்தர்கள் கோவிலுக்கு வந்தனர். அவர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர்.

    விழாவில் இன்று அதிகாலை கோவில் நடை திறக்கப்பட்டு நிர்மால்ய தரிசனம் நடக்கிறது. தொடர்ந்து சாமி கருவறையில் இருந்து ஒற்றைக்கல் மண்டபத்தில் எழுந்தருளல், நவகலச அபிஷேகம், கணபதி ஹோமம் போன்றவை நடக்கிறது. தொடர்ந்து உதயமார்த்தாண்ட மண்டபத்தில் 25 கலசங்களுடன் சிறப்பு பூஜை நடக்கிறது.

    பின்னர் ஆதிகேசவ பெருமாள் மற்றும் பூதேவி, ஸ்ரீதேவிக்கு 25 கலசங்களில் பூஜை செய்யப்பட்ட புனித நீரால் சிறப்பு அபிஷேகம், கிருஷ்ண சாமி, அய்யப்ப சாமி, குலசேகரப்பெருமாள் ஆகியோருக்கு நவ கலச அபிஷேகம், தீபாராதனை ஆகியன நடக்கிறது. மதியம் சிறப்பு அன்னதானம் நடைபெறும். மாலையில் அலங்கார தீபாராதனையை தொடர்ந்து கோவில் பிரகாரத்தில் உள்ள விளக்குகளுக்கு ஒளியேற்றும் 'லட்சதீப விழா' நடக்கிறது. இதில் பக்தர்கள் கலந்து கொண்டு விளக்கேற்றுகின்றனர்.

    வருஷாபிஷேகம் மற்றும் நிகழ்ச்சி ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினரும், பக்தர்களும் செய்துள்ளனர்.

    • கோவிலில் ஜெனரேட்டர் அமைக்கப்படவில்லை.
    • மின்தடை ஏற்படும்போது கோவில் இருளில் மூழ்குகிறது.

    திருவட்டாரில் பிரசித்தி பெற்ற ஆதிகேசவ பெருமாள் கோவில் உள்ளது.

    கடந்த ஆண்டு ஜூலை மாதம் 6-ந்தேதி 418 ஆண்டுகளுக்கு பின்னர் கும்பாபிஷேகம் நடைபெற்றது.

    இந்த கோவிலில் கும்பாபிஷேகம் நடைபெற்ற பிறகு சாமி தரிசனம் செய்யவரும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

    கடந்த ஆண்டு ஆனி மாதம் உத்திரம் நட்சத்திரத்தில் கும்பாபிஷேகம் நடந்ததால், அதை கணக்கில் கொண்டு ஆனி மாத உத்திரம் நட்சத்திர நாளான வருகிற 26-ந்தேதி வருஷாபிஷேகம் நடைபெறுகிறது.

    அன்றைய தினம் அதிகாலை கோவில் நடை திறப்பு, நிர்மால்ய தரிசனம், சாமி கருவறையில் இருந்து ஒற்றைக்கல் மண்டபத்தில் எழுந்தருளல், நவகலச அபிஷேகம், கணபதிஹோமம், சுகிர்த ஹோமம் ஆகியவை நடக்கிறது. தொடர்ந்து ஆதிகேசவபெருமாள் மற்றும் பூதேவி, ஸ்ரீதேவிக்கு 25 கலசங்களில் சிறப்பு அபிஷேகம், கிருஷ்ணசாமி, அய்யப்பசாமி, குலசேகரப்பெருமாள் ஆகியோருக்கு நவகலச அபிஷேகம், சிறப்பு தீபாராதனை, மதியம் அன்னதானம் ஆகியவை நடக்கிறது.

    கோவில் கும்பாபிஷேகம் நடந்து ஒரு ஆண்டு நிறைவடைகிறது. கும்பாபிஷேகத்தின் போது ரூ.17 லட்சத்தில் வெளிப்புறத்தில் மின்விளக்குகள் பொருத்தப்பட்டது. ஆனால், கோவிலில் ஜெனரேட்டர் அமைக்கப்படவில்லை. இதனால் திடீரென மின்தடை ஏற்படும்போது கோவில் இருளில் மூழ்குகிறது. கோவிலில் பூஜைகளின்போது தவில், நாதஸ்வரம் இசைக்காமல் நடைபெறுவது பக்தர்களை வருத்தத்தில் ஆழ்த்தி உள்ளது.

    எனவே தவில், நாதஸ்வரக்கலைஞர்கள் நியமிக்கப்பட வேண்டும். மேலும், 25-க்கும் மேற்பட்ட பூசாரிகள் வேலை பார்த்த இடத்தில் தற்போது 5 பேர் மட்டுமே உள்ளனர். இதனால் பக்தர்கள் வெகுநேரம் வழிபாட்டுக்காக காத்திருக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். கருவறையை சுற்றி மியூரல் ஓவியங்கள் ரூ.75 லட்சத்தில் புதுப்பிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. ஆனால், அதற்கான பணிகள் அரைகுறையாக நடைபெற்று கிடப்பில் போடப்பட்டுள்ளது.

    இதேபோல் ஆதிகேசவப்பெருமாளின் மூலவர் விக்கிரகத்தின் மீது அணிவிக்க புதியதாக தங்க அங்கி செய்து சார்த்தப்படும் என அரசு சார்பில் அறிவிக்கப்பட்டது. ஆனால், இதுவரை அதற்கான ஏற்பாடுகள் எதுவும் நடைபெறவில்லை. எனவே, அறநிலையத்துறை அதிகாரிகள் வருஷாபிஷேகம் நடைபெறுதற்கு முன்பு கிடப்பில் போடப்பட்ட புனரமைப்பு பணிகளை முழமையாக முடித்திட வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • பக்தர்களுக்கு தீர்த்தம், சடாரி, பிரசாதம் வழங்கப்பட்டது.
    • சுவாமி வீதி உலா நடந்தது.

    ஸ்ரீவைகுண்டத்தை சுற்றிலும் ஆன்மீக சிறப்புவாய்ந்த நவதிருப்பதி கோவில்கள் அமைந்துள்ளன. இதில் முதலாவது திருப்பதியான கள்ளபிரான் கோவிலில் சில ஆண்டுகளுக்கு முன்பு வைகாசி மாதம் திருவோண நட்சத்திரத்தில் கும்பாபிசேகம் நடைபெற்றது. அதனை முன்னிட்டு வைகாசி மாத திருவோண நட்சத்திரத்தில் இந்த ஆண்டு கள்ளபிரான் சுவாமி கோவிலில் வருசாபிஷேகம் நடைபெற்றது.

    இவ்விழாவை முன்னிட்டு காலை 6.30 மணிக்கு விஸ்வரூபம் , காலை 8 மணிக்கு கும்ப தீர்த்தம் வைக்கப்பட்டு காலை 9 மணிக்கு ஹோமம், காலை 9.30 மணிக்கு பூர்ணாகுதி, காலை 10 மணிக்கு சிறப்பு திருமஞ்கனம், காலை 11 மணிக்கு தீபாராதனை நாலாயிர திவ்ய கோஷ்டி, பகல் 12 மணிக்கு சாத்துமுறை நடைபெற்றது.

    இதனை தொடர்ந்து பக்தர்களுக்கு தீர்த்தம், சடாரி, பிரசாதம் வழங்கப்பட்டது. மாலை 6 மணிக்கு சாயரட்சை, இரவு 7 மணிக்கு உற்சவர் கள்ளபிரான் சுவாமி வாகனத்துக்கு எழுந்தருளினார். தொடர்ந்து இரவு 8 மணிக்கு கருட வாகனத்தில் கள்ளபிரான் சுவாமி பக்தர்களுக்கு காட்சியளித்தார். பின்பு சுவாமி வீதி உலா நடந்தது. முக்கியவீதிகள் வழியாக சுவாமி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

    இந்நிகழ்ச்சியில் அர்ச்சகர்கள் ரமேஷ், வாசு, நாராயணன், ராமானுசம், சீனு, ஸ்தலத்தார்கள்ராஜப்பாவெங்கடாச்சாரி, சீனிவாசன், தேவராஜன், கண்ணன், நிர்வாக அதிகாரி கோவலமணிகண்டன், ஆய்வாளர் நம்பி, தக்கார் அஜீத் உள்பட திரளான பக்தர்கள் பலர் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    • புளியங்குடி முப்பெரும் தேவியர் பவானி அம்மன் ஆலயத்தில் முப்பெரும் தேவியர் பவானி அம்மனுக்கு 8-ம் ஆண்டு வருசாபிஷேகம் சிறப்பாக நடைபெற்றது.
    • அதனைத் தொடர்ந்து முப்பெரும் பவானி அம்மானுக்கு 21 வகையான நறுமணப் பொருட்களால் அபிஷேகமும் நடைபெற்றது.

    புளியங்குடி:

    புளியங்குடி முப்பெரும் தேவியர் பவானி அம்மன் ஆலயத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள பால விநாயகர், கல்யாண சுப்பிரமணியர் கோவிலுக்கு கும்பாபிஷேக விழா மற்றும் முப்பெரும் தேவியர் பவானி அம்மனுக்கு 8-ம் ஆண்டு வருசாபிஷேகம் சிறப்பாக நடைபெற்றது.

    காலை 7 மணிக்கு முப்பெரும் தேவியர் பவானி அம்மனுக்கு வருசாபி ஷேகத்தை முன்னிட்டு 504 பால்குடம் தமிழ்நாட்டின் பல்வேறு புண்ணிய தீர்த்தங்களிலிருந்து கொண்டு வரப்பட்ட தீர்த்த குடம் குருநாதர் சக்தியம்மா தலைமையில் எடுக்கப்பட்டு விநாயகர் கோவிலில் தொடங்கி நகரின் முக்கிய வீதி வழியாக முப்பெரும் பவானி அம்மன் ஆலயத்தை அடைந்தது.

    அதனைத் தொடர்ந்து காலை 8.30 மணி மங்கள இசை, விக்னேஷ்வர பூஜை, புண்யாகவாசனம், பிம்ப சுத்தி, நாடி சந்தானம், ஸ்பர்சாகுதி, பூர்ணாகுதி, தீபாராதனை, யாத்ராதானம் சிறப்பு பூஜை செய்யப்பட்டது. காலை 9.20 மணிக்கு கடம் புறப்பாடு, 9.30 மணிக்கு விமானம் கோபுர கலசங்கள் மீது இலஞ்சி ஹரிஹர சுப்பிரமணிய பட்டர் தலைமையில் புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடைபெற்றது.

    அதனைத் தொடர்ந்து முப்பெரும் பவானி அம்மானுக்கு மஞ்சள், தயிர், சந்தனம், குங்குமம் 21 வகையான நறுமணப் பொருட்கள் உள்பட பாலாபி ஷேகமும், தமிழ்நாட்டின் புண்ணிய தீர்த்தத்தில் இருந்து கொண்டுவரப்பட்ட புனித நீர் ஊற்றி அபிஷேகமும் நடைபெற்றது. பின்னர் கோவில் வளாகத்தில் உள்ள பால விநாயகர், கல்யாண சுப்பிரமணியர், புற்று காளி, நாகக்காளி, ரத்தக்காளி, சூலக்காளி, பதினெட்டாம்படி கருப்ப சாமி, செங்காளி யம்மன், மகாகாளியம்மன் ஆகிய தெய்வங்களுக்கு அபிஷே கங்கள் நடைபெற்றது.

    அம்மனுக்கும், புதிதாக கும்பாபிஷேகம் நடந்த பரிவார தெய்வங்களான பால விநாயகர், கல்யாண சுப்பிரமணியருக்கும் சந்தன காப்பு அலங்காரம் செய்யப்பட்டு பெரிய தீபா ராதனை காண்பிக்கப்ட்டது.

    மதியம் 1 மணிக்கு அன்னதானம் நடைபெற்றது. மாலை 6 மணிக்கு 108 திருவிளக்கு பூஜை நடந்தது. இதில் திரளான பெண்கள் கலந்துகொண்டு பக்தி பாடல்கள் பாடி திருவிளக்கு வழிபாடு நடைபெற்றது.

    விழாவில் தமிழ்நாடு மற்றும் ஆந்திரா, கேரளா, கர்நாடகா மாநிலங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு முதல் நாள் யாகசாலை பூஜையில் காலை 9 மணிக்கு மங்கள இசை, விக்னேஸ்வர பூஜை, புண்யாக வாசனம், மகா கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம், மகாலட்சுமி ஹோமம், திரவியாகுதி, பூர்ணா குதி, தீபாராதனை மற்றும் பிரசாதம் வழங்குதல் நிகழ்ச்சி நடைபெற்றது.

    மாலை 6 மணிக்கு மங்கள இசை, விக்னேஸ்வர பூஜை, புண்யாக வாசனம், வாஸ்து சாந்தி, பிரவேச பலி, ம்ருத்சங்கரனம், ராபர்பனம், ரக்சா பந்தனம், முதல் கால யாகசாலை பூஜைகள் நடைபெற்றது. பின்பு இரவு 8 மணிக்கு எந்திர ஸ்தாபனம் பூஜைகள் நடைபெற்றது. பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

    விழா ஏற்பாடுகளை குருநாதர் சக்தியம்மா மற்றும் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.

    • அஷ்டோத்திர சத கலாபிஷேகம், மகா தீபாராதனை நடந்தது.
    • பூஜையில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    வடபழனி முருகன் கோவிலில் கடந்த ஆண்டு மகா கும்பாபிஷேகம் நடந்தது. கும்பாபிஷேகம் நடந்து ஓராண்டு நிறைவு பெற்றதை தொடர்ந்து வருஷாபிஷேகம் நேற்று நடந்தது. இதையொட்டி கடந்த சில நாட்களாக கோவிலில் யாகசாலை வளர்க்கப்பட்டு, ஹோமங்கள், கால பூஜைகள் நடத்தப்பட்டன.

    கும்பாபிஷேகம் ஓராண்டு நிறைவு நாளான நேற்று காலை முதல் கணபதி பூஜை, புண்யாக வாசனம், இரண்டாம் கால பூஜை, வேத திருமுறை பாராயணம், விசேஷ திரவிய ஹோமம் நடந்தது. அதனை தொடர்ந்து மகா பூர்ணாஹுதி, யாத்ரா தானம், எஜமான சங்கல்பம், மகா தீபாராதனை நடந்தது.

    யாக சாலையில் இருந்து கடப்புறப்பாடு, அனைத்து பரிவார மூர்த்திகளுக்கு கலசாபிஷேகமும் நடைபெற்றது. முருகனுக்கு 108 எண்ணிக்கை கொண்ட அஷ்டோத்திர சத கலாபிஷேகம், மகா தீபாராதனை நடந்தது.

    இந்த நிகழ்வில் கோவில் தக்கார் ஆதிமூலம், ஓராண்டு நிறைவு விழா உபயதாரர் மோகன்குமார், நகரத்தார் குழுவை சேர்ந்த வெங்கடாச்சலம், கோவில் துணைக் கமிஷனர் முல்லை உள்ளிட்டோர் பங்கேற்றனர். பூஜையில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    • மாலை 4 மணிக்கு சாயரட்சை தீபாராதனை நடக்கிறது.
    • இரவு மூலவருக்கு புஷ்பாஞ்சலி நடக்கிறது.

    திருச்செந்தூா் சுப்பிர மணிய சுவாமி கோவிலில் தை உத்திர வருசாபிஷேகம் இன்று நடைபெற்றது. இதை முன்னிட்டு இன்று அதிகாலை 4 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டது.

    4.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனை, 5 மணிக்கு உதயமாா்த்தாண்ட அபிஷேகம், காலை 9 மணிக்கு மூலவர், சண்முகர், பெருமாள் மற்றும் வள்ளி-தெய்வானை ஆகிய விமான கலசங்களுக்கு புனித நீர் ஊற்ற மேல் தளத்திற்கு புனித நீர் எடுத்துவரப்பட்டு 9.15 மணிக்கு ஊற்றப்பட்டது.

    தொடர்ந்து 10 மணிக்கு உச்சிகால அபிஷேகம் நடந்தது. இதில் திரளான பக்தர் திரளாக கலந்து கொண்டனர்.

    மாலை 4 மணிக்கு சாயரட்சை தீபாராதனைக்குப் பின்னர் சுவாமி குமரவிடங்கபெருமான், தெய்வானை அம்மன் தனித்தனி தங்க மயில் வாகனத்தில் எழுந்தருளி வீதி உலா சென்று பக்தர்களுக்கு காட்சி அளிக்கின்றனர். இரவு மூலவருக்கு புஷ்பாஞ்சலி நடக்கிறது.

    நிகழ்ச்சியில் அறங்காவலர் குழு தலைவர் அருள்முருகன், நேர்முக உதவியாளர் செந்தமிழ் பாண்டியன், இணை ஆணையர் கார்த்திக், கண்காணிப்பாளர் ஆனந்தராஜ், நகராட்சி துணைத்தலைவர் ரமேஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    மாலை 4 மணிக்கு சாயரட்சை தீபாராதனை நடக்கிறது.

    • நாளை இரவு மூலவருக்கு புஷ்பாஞ்சலி நடக்கிறது.
    • குமரவிடங்கபெருமான், தெய்வானை தனித்தனி தங்க மயில் வாகனத்தில் வீதி உலா வருகிறார்.

    திருச்செந்தூா் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் தை உத்திர வருசாபிஷேகத்தை முன்னிட்டு நாளை அதிகாலை 4 மணிக்கு நடை திறக்கப்படுகிறது. காலை 4.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனையும், 5 மணிக்கு உதயமாா்த்தாண்ட அபிஷேகமும், காலை 8.30 மணிக்கு மூலவர், சண்முகர், பெருமாள், வள்ளி, தெய்வானை ஆகிய விமான கலசங்களுக்கு வருசாபிஷேகம் நடக்கிறது.

    தொடா்ந்து காலை 10 மணிக்கு உச்சிகால அபிஷேகமும், மாலை 4 மணிக்கு சாயரட்சை தீபாராதனை நடக்கிறது. பின்னர் சுவாமி குமரவிடங்கபெருமான், தெய்வானை அம்மாள் தனித்தனி தங்க மயில் வாகனத்தில் எழுந்தருளி வீதி உலா சென்று பக்தர்களுக்கு காட்சி கொடுக்கின்றனர். இரவு மூலவருக்கு அபிஷேகம் நடைபெறாமல் புஷ்பாஞ்சலி நடக்கிறது.

    கோவிலில் இரவு நடைபெறும் புஷ்பாஞ்சலிக்கு பக்தா்கள் தங்களால் இயன்ற அளவு அழகும், மணமும் மிக்க நன்மலா்களை (கேந்திப் பூக்கள் தவிர) நாளை பிற்பகல் 2 மணிக்கு முன்னதாக உள்துறை கண்காணிப்பாளரிடம் ஒப்படைக்க வேண்டும் என கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

    • புனித நீர் எடுத்துச் சென்று காலை 11 மணிக்கு விமான அபிஷேகம் நடந்தது
    • வருஷாபிஷேக பூஜையை குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவில் பட்டர் ஹரிஷ் நடத்தினார்.

    உடன்குடி:

    உடன்குடி பண்டாரவிளைதெரு கல்யாண விநாயகர் கோவில் வருஷாபிஷேக விழா நடைபெற்றது. விழாவையொட்டி காலை 10 மணிக்கு கணபதி ஹோமம், யாகசாலை பூஜையும், புனித நீர் எடுத்துச் சென்று காலை 11 மணிக்கு விமான அபிஷேகம், தொடர்ந்து கல்யாண விநாயகருக்கு அபிஷேகம் நடந்தது. பகல் 12 மணிக்கு சிறப்பு அலங்கார பூஜையும், பகல் 1 மணிக்கு புது விருந்து அன்னதானமும் நடந்தது. வருஷாபிஷேக பூஜையை குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவில் பட்டர் ஹரிஷ் நடத்தினார். இதில் மாவட்ட காங்கிரஸ் முன்னாள் பொருளாளர் நடராஜன், தொழிலதிபர் வாசுதேவன், உடன்குடி பஞ்சாயத்து யூனியன் சேர்மன் பாலசிங், உடன்குடி டவுன் பஞ்சாயத்து துணைத் தலைவர் மால் ராஜேஷ், உடன்குடி தெற்கு ஒன்றிய தி.மு.க. அவைத் தலைவர் ஷேக் முகமது, உடன்குடி நகர தி.மு.க. பொருளாளர் திரவியம், முன்னாள் கவுன்சிலர் சலீம் உட்பட ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை ஊர் மக்கள் செய்திருந்தனர்.

    • சித்தி விநாயகர் கோவில் 20‌-வது வருஷாபிஷேக விழா நடைபெற்றது.
    • மகா கணபதி ஹோமம், நவகிரக சாந்தி ஹோமம், விமான கலசத்திற்கு புனித நீர் ஊற்றுதல் நிகழ்வுகள் நடைபெற்றன.

    சாயர்புரம்:

    சாயர்புரம் அருகே உள்ள சுப்பிரமணிய புரம் ஸ்ரீ சித்தி விநாயகர் கோவில் 20‌-வது வருஷாபிஷேக விழா நடைபெற்றது.

    இதில்விக்னேஸ்வர பூஜை, புண்யாகவாஜ நம்,கும்ப பூஜை,மகா கணபதி ஹோமம், நவகிரக சாந்தி ஹோமம்,தீபாராதனை, சிறப்பு அபிஷேகம், விமான கலசத்திற்கு புனித நீர் ஊற்றுதல், பிரசாதம் வழங்குதல், திருவிளக்கு பூஜை மற்றும் அன்னதானம் வழங்கும் நிகழ்வுகள் நடைபெற்றன.

    விழா ஏற்பாடுகளை சித்தி விநாயகர் கோவில் நிர்வாக பொறுப்பாளர் ஜெயக்குமார் மற்றும் நிர்வாகத்தினர் செய்து இருந்தனர்.

    ×