search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோவில்பட்டி அருகே பூமாதேவி ஆலய வருஷாபிஷேக விழா
    X

    அன்னதானத்தை கடம்பூர் ராஜூ எம்.எல்.ஏ. தொடங்கி வைத்த காட்சி.

    கோவில்பட்டி அருகே பூமாதேவி ஆலய வருஷாபிஷேக விழா

    • கோவில்பட்டி அருகே மந்தித்தோப்பு துளசிங்க நகரில் பிரசித்தி பெற்ற அம்மா பூமாதேவி ஆலயம் சித்தர் பீடத்தில் 30-வது ஆண்டு வருஷாபிஷேக விழா
    • சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு மதியம் விஷேட சோடனை தீபாராதனையும் நடைபெற்றது.

    கோவில்பட்டி:

    கோவில்பட்டி அருகே மந்தித்தோப்பு துளசிங்க நகரில் பிரசித்தி பெற்ற அம்மா பூமாதேவி ஆலயம் சித்தர் பீடத்தில் 30-வது ஆண்டு வருஷாபிஷேக விழா மற்றும் செடி வந்தன மஹா கும்பாபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து காலை 4 மணிக்கு நடை திறக்கப்பட்டு திருப்பள்ளியெழுச்சி பூஜை நடைபெற்றது. காலை 8 மணிக்கு மஹா கணபதி பூஜை, சங்கல்பம் கணபதி ஹோமம், அம்பாள் முலமந்திர ஹோமம் நடைபெற்றது. பின்னர் அம்பாள் குரு பரிவார தெய்வங்களுக்கும் மற்றும் உற்சவ அம்பாள் குருவுக்கும் மஞ்சள், மாபொடி, திரவியம், பால், தேன் மற்றும் சந்தனம் பூர்ன கும்பாபிஷேகம் நடைபெற்றது. சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு மதியம் விஷேட சோடனை தீபாராதனையும் நடைபெற்றது.

    பூஜைகளை லட்சுமணன் சுவாமி தலைமையில் ஆலய அர்ச்சகர் செல்வ சுப்பிரமணியன், சங்கரேஷ்வரி ஆலய அர்ச்சகர் சுப்பிரமணியன் முரளிதரன் சுவாமிகள் செய்தனர். அதன்பிறகு முன்னாள் அமைச்சரும், எம்.எல்.ஏ.வுமான கடம்பூர் ராஜூ அன்னதானத்தை தொடங்கி வைத்தார். இதில் தொழில் அதிபர் எஸ்.கே.பி. முருகன் பிரேமா, பூமா டெக்ஸ் நவநீதராஜா, சுப்பையா, ராகவேந்திரா சேவா அறக்கட்டளை நிறுவனர் சீனிவாசன், வார்டு உறுப்பினர் ராமர், யூனியன் துணை தலைவர் பழனிச்சாமி, சுப்பாராஜ், சங்கரேஸ்வரி, மாரியப்பன், ஆறுமுகம் மற்றும் திருவிளக்கு பூஜை குழுவினர் மீனாட்சி, லட்சுமி மற்றும் ஊர் பொதுமக்கள் அனைவரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர். விழா ஏற்பாடுகளை அம்மா பூமாதேவி ஆலய குழுவினர் செய்தனர்.

    Next Story
    ×