search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வராஹி"

    • வாராஹித் தாய் வழிபாடு உங்கள் தலையெழுத்தையே மாற்றி விடும்.
    • மாதுளம் பழத்தை உதிர்த்து வராஹி தாய்க்கும் நிவேதனமாக வையுங்கள்.

    நாளை தேய்பிறை பஞ்சமி திதி. வழக்கம் போல தான். உங்கள் வீட்டில் வராஹி தாயின் திருவுருவப்படம், சிலை இருந்தாலும் சரி, இல்லை என்றாலும் சரி, இந்த வழிபாட்டை நீங்கள் மேற்கொள்ளலாம். ஒரு விளக்கு ஏற்றி வைத்துவிட்டு, அதில் வாராஹி இருக்கின்றாள் என்று நினைத்துக் கொண்டு, நீங்கள் உண்மையான முழு மனதோடு வழிபாடு செய்தாலே வராஹித்தாய் உங்கள் பூஜை அறையில் வந்து அமர்ந்து விடுவாள்.

    நாளைய தினம் சிவப்பு முத்துக்கள் அழகாக இருக்கும் மாதுளம் பழத்தை உதிர்த்து வராஹி தாய்க்கும் நிவேதனமாக வையுங்கள். வெற்றிலை பாக்கு, பூ, பழம், இவைகளை சமர்ப்பணம் செய்யுங்கள். சிவப்பு நிறத்தில் இருக்கும் அரளிப்பூ அல்லது செம்பருத்தி பூ கிடைத்தால் மிகவும் சிறப்பு. இவை எல்லாவற்றையும் விட நாளைக்கு வராஹி அம்மனுக்கு தேங்காய் பூ நிவேதியமாக வைப்பது மிகச் சிறப்பான பலனை கொடுக்கும். எல்லா தேங்காயை உடைக்கும் போதும் தேங்காய் பூ நமக்கு கிடைக்காது. ஆனால் சில இடங்களில் தேங்காய் பூ தனியாக விற்கிறார்கள். அந்த தேங்காய் பூவை வாங்கி வராஹி தாய்க்கு நிவேதனமாக படைக்கலாம்.

    ஒருவேளை உங்களுக்கு தேங்காய் பூ கிடைக்கவில்லை என்றால், தேங்காய் துருவி அதில் நாட்டு சர்க்கரை சேர்த்து அதை வராஹிக்கு நிவேதனமாக வைத்துவிட்டு வராஹி அம்மனின் மந்திரம் தெரிந்தால், அதை சொல்லி உங்களுடைய கஷ்டங்கள் எல்லாம் தீர வேண்டும் என்று மனதார பிரார்த்தனை செய்து கொள்ளுங்கள். செய்யும் தொழிலில் பிரச்சனை, எதிரி தொல்லை, ஏவல், பில்லி, சூனியம், கண் திருஷ்டி, தீராத நோய், கடன் தொல்லை போன்ற அனைத்து விதமான பிரச்சனைக்கும் உடனடியாக ஒரு நல்ல தீர்வினை கொடுக்கக்கூடிய சக்தி இந்த வராஹி வழிபாட்டிற்கு உண்டு.

    உண்மையான வாராஹித் தாய் வழிபாடு உங்கள் தலையெழுத்தையே மாற்றி விடும். உங்கள் தலையில் அந்த பிரம்மன் எவ்வளவு கஷ்டங்களை எழுதி வைத்திருந்தாலும் சரி அதை புரட்டிப் போடக்கூடிய சக்தி இந்த ஒரு வழிபாட்டிற்கு உண்டு. அதிலும் நாளை தேய்பிறை பஞ்சமி திதி என்பதால் கஷ்டங்கள் அனைத்தும் தேய்ந்து போக இந்த வழிபாடு செய்வது சிறப்பு.

    வழிபாடை முடித்துவிட்டு நிவேதனமாக வைத்த பிரசாதத்தை வீட்டில் இருப்பவர்கள் சாப்பிட்டுக் கொள்ளலாம். உங்கள் வீட்டின் அருகில் குழந்தைகள் யாராவது இருந்தால் அவர்களுக்கும் பிரசாதத்தை கொடுப்பது சிறப்பு. கலியுகத்தின் கண்கண்ட தெய்வமாக போற்றப்படும் இந்த வராஹித் தாய் வழிபாட்டை மேற்கொண்ட ஒரு சில நாட்களிலேயே யார் ரூபத்திலாவது வந்து 'நான் இருக்கிறேன் உனக்காக' என்பதை உணர்த்தி விடுவாள் அந்த சக்தி தேவி.

    • சக்திவாய்ந்த தேவதையாக போற்றப்படுகிறாள் வராஹி தேவி.
    • வராஹியை வழிபடும் பக்தர்களிடம் தோல்வி கூட தோற்றே விடும்.

    வராஹி ஆதி பரமேஸ்வரி அல்லது ஆதி பராசக்தியின் சக்தி ஸ்வரூபம். மகிஷனை அழித்த மகிஷாசுர மர்த்தினியின் குதிரைப் படை தலைவி எனவும் கூட சிலர் இவளைச் சொல்வதுண்டு. கோபத்தின் உச்சம் தொடுபவள். ஆனால் அன்பிலே, ஆதரவிலே அன்னைக்கு நிகரானவள். இவள் லலிதையின் படைத்தலைவியாக, சேனாதிபதியாக போருக்கு சென்று வெற்றி வாகை சூடியவள். இந்த தெய்வத்திற்குரிய காயத்ரி மந்திரத்தை ஜெபிப்போருக்கு கேட்ட வரங்களை மிக விரைவில் தரக்கூடியவள்.

    சக்திவாய்ந்த தேவதையாக போற்றப்படுகிறாள் வராஹி தேவி. மகா சக்தியாகத் திகழும் பராசக்தி, தன்னில் இருந்து ஒவ்வொரு சக்தியாக வெளிப்படுத்தினாள் என்றும் அவர்களைக் கொண்டு அசுரக் கூட்டங்களையும் தீய சக்திகளையும் அழித்தாள் என்றும் விவரிக்கிறது புராணம்.

    இந்த சக்திகள் ஏழு என்றும் இவர்களை சப்தமார்கள் என்றும் விவரிக்கிறார்கள் ஸாக்த வழிபாடு செய்பவர்கள். சப்த மாதர்களில் அதீத வீரியமும் தீய சக்திகளை அழிப்பதில் வேகமும் துடிப்பும் கொண்டு ஓடோடி வருபவள் வராஹிதேவி.

    வராஹியை முறையே வழிபடும் பக்தர்களிடம் தோல்வி கூட தோற்றே விடும். குறிப்பாக, பஞ்சமி திதி, அமாவாசை திதி மற்றும் சொந்த ஜாதகத்தில் லக்கினத்திற்கு குரு 6 ஆம் இடத்தில் ஆட்சி அல்லது உச்சம் பெற்று பிறந்தவர்கள் வராஹியின் காயத்திரி மந்திரத்தை வாழ்நாள் முழுவதும் முறைப்படி ஜபித்து வந்தால் மந்திர சித்துக்கள் கூட வசப்பட இடம் உண்டு.

    சப்த கன்னியர்களில் ஒருவரான வராஹி தேவியை பஞ்சமியில் விரதம் இருந்து வழிபடுவது மிகச் சிறப்பு.

    வராஹியை எப்படி முறைப்படி வழிபடுவது?

    நல்லெண்ணெய் தீபம் ஏற்றி வாசனை மலர்கள் சாற்றி வாசனை தூபங்கள் ஏற்றி ஐம்புலன்களும் ஆன்மீகத்தில் ஒடுங்க மேற்கண்ட வராஹி தேவியின் காயத்திரி மந்திரத்தை பஞ்சமி திதி பிரம்ம முகூர்த்தத்தில் ஆரம்பித்து தொடர்ந்து ஜபித்து வர வேண்டும். பசும்பால் அல்லது இனிப்புகளை நிவேதனமாகப் படைக்கலாம். கண்டிப்பாக புளிப்பு இருக்கக்கூடாது. புளிப்பு அந்த அம்பாளுக்கு ஆகாது.

    வழிபடுவதால் கிடைக்கும் பலன்கள்..

    1. வழக்குகள் சாதகம் ஆகி... எதிரிகளின் பலம் குறைந்து உங்களது பலம் அதிகரிக்கும். உடன், வெற்றி உங்கள் வாகை சூடும்.

    2. கல்வி, தொழில் அல்லது உத்யோகம் மேம்படும்.

    3. கண்திருஷ்டி, செய்வினை கோளாறுகள் அகலும்.

    4. புத்தி நல்ல விதத்தில் வேலை செய்யும். இதனால் ஞானம் சித்திக்கும்.

    5. பயம் தெளிந்து மனதில் துணிச்சல் - தைரியம் - தன்னம்பிக்கை அதிகரிக்கும்.

    • அம்மனுக்கு சிறப்பு அபிஷேகமும், ஆராதனைகளும், கூட்டு வழிபாடும் நடைபெற்றது.
    • திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டனர்.

    கும்பகோணம் அருகே உள்ள பிளாஞ்சேரியில் கைலாசநாதர் கோவில் உள்ளது. இங்கு சிம்ஹாருட வராகி அம்மன் தனி கோவில் கொண்டு அருள்பாலிக்கிறார். நேற்று காலை சிம்ஹாருட வராகி அம்மனுக்கு பஞ்சமி சிறப்பு வழிபாடு நடைபெற்றது. தொடர்ந்து அம்மனுக்கு சிறப்பு அபிஷேகமும், ஆராதனைகளும், கூட்டு வழிபாடும் நடைபெற்றது.

    இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டனர். சிறப்பு பூஜைகளை கோவில் அர்ச்சகர் கண்ணன் குருக்கள் செய்தார். இதற்கான ஏற்பாடுகளை கோவில் பரம்பரை அறங்காவலர் சூழினி, உபாசகர் நாகராஜகுருக்கள் மற்றும் கோவில் பணியாளர்கள் செய்திருந்தனர்.

    • ராமநாதபுரம் ஊருணி கரையில் அமைந்துள்ளது சுயம்பு வராஹி அம்மன் கோவில்.
    • ஏராளமான பெண் பக்தர்கள் தீப விளக்கேற்றி தரிசனம் செய்தனர்.

    ராமநாதபுரம் மாவட்டம் திருஉத்தரகோச மங்கை கிராமத்தில் ஊருணி கரையில் அமைந்துள்ளது சுயம்பு வராஹி அம்மன் கோவில். மிகவும் சக்தி வாய்ந்த இந்த சுயம்பு வராஹி அம்மன் கோவிலில் ஆண்டுதோறும் தை மற்றும் ஆடி வெள்ளிக்கிழமைகளில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருக்கும். அதிலும் வராஹி அம்மன் கோவிலுக்கு வரும் பக்தர்கள் நேர்திக்கடன் செலுத்துவதற்காக அம்மியில் மஞ்சள் அரைத்து அம்மனுக்கு அபிஷேகம் செய்ய கொடுத்து விட்டு தரிசனம் செய்வது வழக்கம்.

    இந்த நிலையில் ஆடி மாத முதல் வெள்ளிக்கிழமையான நேற்று உத்தரகோசமங்கை கிராமத்தில் உள்ள சுயம்புவராஹி அம்மன் கோவிலில் ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்ய குவிந்தனர். இவ்வாறு வந்த ஏராளமான பெண் பக்தர்கள் கோவில் முன்பு வரிசையாக வைக்கப்பட்டு இருந்த அம்மியில் மஞ்சள் அரைத்து அதை அம்மனுக்கு அபிஷேகம் செய்ய கொடுத்தனர்.

    பெண் பக்தர்களோடு ஆண் பக்தர்களும் சேர்ந்து அம்மியில் மஞ்சள் அரைத்து நேர்த்திக்கடன் செலுத்தி அம்மனை தரிசனம் செய்தனர். மேலும் கோவிலில் ஏராளமான பெண் பக்தர்கள் தீப விளக்கேற்றி தரிசனம் செய்தனர். ஆடி முதல் வெள்ளிக்கிழமையையொட்டி வராஹிஅம்மனுக்கு நேற்று காலை பால், பன்னீர், திரவியம், மஞ்சளால் அபிஷேகம் நடைபெற்று சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு மகாதீப ஆராதனை பூஜை நடைபெற்றது.

    வராஹிஅம்மன் கோவிலில் நேற்று நடந்த அபிஷேகம் மற்றும் சிறப்பு பூஜையில் ராமநாதபுரம் மாவட்டம் மற்றும் தமிழகத்தின் பல்வேறு ஊர்களில் இருந்து வந்து ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டனர். இதேபோல் ராமேசுவரம் தனுஷ்கோடி செல்லும் சாலையில் உள்ள நம்புநாயகி அம்மன் கோவிலிலும் நம்புநாயகி அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை பூஜை நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டனர்.

    • அம்மன் நான்கு வீதிகளில் திருவீதி உலா நடந்தது.
    • வராகி அம்மனுக்கு மலர் அலங்காரம் செய்யப்பட்டிருந்தது.

    தஞ்சை பெரிய கோவில் உலக பிரசித்தி பெற்ற கோவிலாகும். தமிழர்களின் கட்டிட கலைக்கு எடுத்துக்காட்டாக திகழும் இந்த கோவில் உலக பாரம்பரிய சின்னமாகவும் விளங்கி வருகிறது. இங்கு தமிழகம் மட்டும் அல்லாது இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் பக்தர்கள் வந்த வண்ணம் உள்ளனர். இந்த கோவிலில் பெருவுடையார், பெரியநாயகி அம்மன், விநாயகர், கருவூரார், முருகன், தட்சிணாமூர்த்தி, சண்டீகேஸ்வரர் ஆகிய சன்னதிகள் உள்ளன. மேலும் வராகி அம்மன் தனி சன்னதியில் அமர்ந்து பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார்

    இந்த வராகி அம்மனுக்கு ஒவ்வொரு ஆண்டும் ஆஷாட நவராத்திரி விழா 11 நாட்கள் கொண்டாடப்பட்டு வருகின்றன. அதன்படி இந்த ஆண்டு ஆஷாட நவராத்திரி விழா கடந்த மாதம் 28-ந்தேதி கணபதி ஹோமத்துடன் தொடங்கியது. அதைத்தொடர்ந்து வராகி அம்மனுக்கு இனிப்பு அலங்காரம் செய்யப்பட்டது.

    விழாவையொட்டி ஒவ்வொரு நாளும் வராகி அம்மனுக்கு தினமும் அலங்காரமும், மாலையில் பக்தி இன்னிசை நிகழ்ச்சியும் நடைபெற்றது. இதில் வராகி அம்மன் மஞ்சள், குங்குமம், சந்தனம், தேங்காய்ப்பூ, மாதுளை, நவதானியம், வெண்ணெய், கனிவகைகள், காய்கனி அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

    ஆஷாட நவராத்திரி விழாவின் நிறைவு நாளான நேற்று வராகி அம்மனுக்கு மலர் அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. மாலை 5 மணி அளவில் கோவில் வளாகத்தில் நாதஸ்வரம், கரகாட்டம், ஒயிலாட்டம், சாமி வேடமணிந்த கலைஞர்களின் நடனம் உள்ளிட்ட கலைநிகழ்ச்சிகள் நடந்தது. இதைத்தொடர்ந்து மாலை 6 மணிக்கு அம்மன் நான்கு வீதிகளில் திருவீதி உலா நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமிதரிசனம் செய்தனர்.

    விழாவிற்கான ஏற்பாடுகளை அரண்மனை தேவஸ்தான பரம்பரை அறங்காவலர் பாபாஜி ராஜா போன்ஸ்லே, உதவி ஆணையர் கவிதா, கண்காணிப்பாளர் சண்முகசுந்தரம் மற்றும் அரண்மனை தேவஸ்தான பணியாளர்கள், ஆஷாட நவராத்திரி விழா குழுவினர் செய்திருந்தனர்.

    • எந்த கிழமையில் விரதம் இருந்தால் என்ன பலன் கிடைக்கும் என்று பார்க்கலாம்.
    • பசும்பால் அல்லது இனிப்புகளை நிவேதனமாகப் படைக்கலாம்.

    நல்லெண்ணெய் தீபம் ஏற்றி வாசனை மலர்கள் சாற்றி வாசனை தூபங்கள் ஏற்றி ஐம்புலன்களும் ஆன்மீகத்தில் ஒடுங்க வராஹி தேவியின் காயத்திரி மந்திரத்தை பஞ்சமி திதி பிரம்ம முகூர்த்தத்தில் ஆரம்பித்து தொடர்ந்து ஜபித்து வர வேண்டும். பசும்பால் அல்லது இனிப்புகளை நிவேதனமாகப் படைக்கலாம். பசும்பால் அல்லது இனிப்புகளை நிவேதனமாகப் படைக்கலாம். கண்டிப்பாக புளிப்பு இருக்கக்கூடாது.

    என்னென்ன கிழமைகளில் வழிபட்டால் பலன்

    ஞாயிறு கிழமைகளில் விரதம் இருந்து வராஹியை வழிபட்டால் நோய்கள் தீரும்.

    திங்கட்கிழமைகளில் விரதம் இருந்து வழிபட்டால் மன நல பாதிப்புகள் நீங்கும்.

    வீடு நிலம் தொடர்பான பிரச்சினைகள்தீர செவ்வாய்கிழமைகளில் விரதம் இருந்து வராஹியை வழிபடலாம்.

    கடன் தொல்லைகள் தீர புதன்கிழமை விரதம் இருந்து வழிபடலாம்.

    குழந்தை பேறு கிடைக்க வியாழக்கிழமை விரதம் இருந்து வழிபடலாம்.

    வெள்ளிக்கிழமை விரதம் இருந்து வழிபட நினைத்த காரியம் நிறைவேறும்.

    கல்வி கேள்விகளில் சிறந்து விளங்க சனிக்கிழமை விரதம் இருந்து வழிபடலாம்.

    • வழக்குகளில் சிக்கியவர்கள் வராஹி அம்மனை வழிபட்டு பலனடைகிறார்கள்.
    • வராஹியை வழிபடுகிறவர்களுக்கு எதிரிகளே இல்லை என்ற நிலை ஏற்படும்.

    சப்த கன்னியர்களில் ஒருவரான வராகி தேவியை பஞ்சமியில் வழிபடுவது மிகச் சிறப்பு. சக்திவாய்ந்த தேவதையாக போற்றப்படுகிறாள் வராஹி தேவி. மகா சக்தியாகத் திகழும் பராசக்தி, தன்னில் இருந்து ஒவ்வொரு சக்தியாக வெளிப்படுத்தினாள் என்றும் அவர்களைக் கொண்டு அசுரக் கூட்டங்களையும் தீய சக்திகளையும் அழித்தாள் என்றும் விவரிக்கிறது புராணம். இந்த சக்திகள் ஏழு என்றும் இவர்களை சப்தமார்கள் என்றும் விவரிக்கிறார்கள். சப்த மாதர்களில் அதீத வீரியமும் தீய சக்திகளை அழிப்பதில் வேகமும் துடிப்பும் கொண்டு ஓடோடி வருபவள் வராஹி தேவி.

    வாராஹியை வழிபடும் பக்தர்களிடம் தோல்வி கூட தோற்றே விடும். குறிப்பாக இந்தத் தேவியை பஞ்சமியில் வழிபடுவது மேலும் பல சிறப்புக்களை வழிபடுபவர்களுக்குத் தரும். அதாவது அமாவாசை அல்லது பவுர்ணமி கழிந்து வரும் 5-வது நாளே பஞ்சமி எனப்படும். பஞ்சமி திதியில் வராகி தேவியை வழிபட்டு வர வெற்றி வீட்டின் வாசலை அழைக்காமலேயே வந்தடையும் என்பர். வழக்குகள் சாதகம் ஆகி எதிரிகளின் பலம் குறைந்து உங்களது பலம் அதிகரிக்கும். உடன், வெற்றி உங்கள் வாகை சூடும்.

    கல்வி, தொழில் அல்லது உத்யோகம் மேம்படும். கண்திருஷ்டி, செய்வினை கோளாறுகள் அகலும். புத்தி நல்ல விதத்தில் வேலை செய்யும். இதனால் ஞானம் சித்திக்கும். பயம் தெளிந்து மனதில் துணிச்சல் தைரியம் தன்னம்பிக்கை அதிகரிக்கும். ஆடி மாதம் வளர்பிறை பஞ்சமி திதி ஆயில்யம் நட்சத்திரத்தில் அவதரித்தவர் அன்னை வாராஹி.

    அன்னைக்கு பிடித்த நிறம் நீலம், கருப்பு, பவள நிறம், நீல சங்குப் பூக்களும், கருந்துளசி, வில்வமும் அன்னைக்கு ஏற்றது. பவுர்ணமி நாளில் அன்னையின் வலிமை கூடும். பஞ்சமி, அஷ்டமி, தசமி நாட்களில் அன்னையை வழிபடலாம். இரவு 8 மணிக்கு மேல் 10 மணிக்குள் வீட்டிலேயே வாராஹியை நினைத்து வழிபடலாம். சர்க்கரை வள்ளிக்கிழங்கு, எருமைத்தயிர். தேன் கலந்த மாதுளை, அண்ணாசி, செங்கரும்பு, ஆமை வடை அன்னைக்கு பிடித்தமானது.

    கருப்பு உளுந்த வடை

    வராஹி தேவிக்கு இஞ்சி பூண்டு கலந்து, தோல் நீக்காத உளுந்த வடை நைவேத்தியம் செய்யலாம் நவதானிய வடை, மிளகு சேர்த்த வடை, வெண்ணெய் எடுக்காத தயிர்சாதம் பிடித்தமானது. மிளகும் ஜீரகமும் கலந்த தோசை, குங்குமப்பூவும் சர்க்கரையும் ஏலக்காயும் லவங்கமும் பச்சைக்கற்பூரமும் கலந்த பால், கறுப்பு எள்ளுருண்டை, சர்க்கரை வள்ளிக்கிழங்கு ஆகியவற்றையும் நைவேத்தியமாக படைக்கலாம். சுக்கு அதிகம் சேர்த்து பானகம் செய்து படைக்கலாம்.

    வெள்ளை மொச்சை வராஹி என்றாலே வரம் என்று பொருள். இவள் அதர்வண வேதத்தின் தலைவியாகவும் விளங்குகிறாள். வெள்ளை மொச்சை பருப்பை வேக வைத்து தேன், மற்றும் நெய்யுடன் கலந்து வராகிக்கு படைத்து, பூஜை செய்ய வேண்டும். இதனால் தன வசியம் ஏற்படும் தொழில் விருத்தியாகும் வியாபாரம் செழிக்கும். வழக்குகள் நீங்கும்

    எதிரிகளால் பாதிக்கப்பட்டவர்கள், வழக்குகளில் சிக்கியவர்கள் வராஹி அம்மனை வழிபட்டு பலனடைகிறார்கள். வராகியை வழிபடுகிறவர்களுக்கு எதிரிகளே இல்லை என்ற நிலை ஏற்படும். ஐந்து பஞ்சமி அல்லது ஐந்து ஞாயிற்றுக்கிழமைகளில் தேங்காய் மூடியில் நெய் விளக்கு ஏற்றி வாராஹியை வழிபட, நினைத்தது நிறைவேறும்.

    வராஹி அன்னையை வழிபடுவர்களுக்கு வாக்கு பலிதம் ஏற்படும், எதிரிகள் ஓடி ஒளிவார்கள், விரோதிகள் நண்பர்களாவர், செய்வினை மாந்திரிக தோஷங்கள் அகலும், தொழில், வியாபார வழியில் ஏற்படும் எதிர்ப்புகள், எதிரிகள் என அனைத்தும் ஒழியும்.

    நெடுநாள் நோய்கள் குணமாக தொடங்கும். தைரியம், தன்னம்பிக்கை, பயமின்மை போன்ற குணங்கள் உண்டாகும். எதிர்பாரா விபத்துகள், ஆபத்துகள் ஏற்படாமல் காப்பாள் அன்னை வராஹி. நோய் தொற்று பரவி வரும் இந்த கால கட்டத்தில் நோய்கள் பரவாமல் இருக்க இரவு நேரத்தில் வராகி தேவியை வழிபடலாம்.

    திதி லித்தியா தேவிகள் 15 பேர் உள்ளனர். 5-வது தேவதையாக லத்சிமா வாகினி உள்ளார். வியாதியை போக்க கூடியவர் கணவன், மனைவி ஒற்றுமை, சொத்து தகராறு, பூமியில் உள்ள பிரச்சினைகள் அளவுக்கு அதிகமான கடன் சுமைகள் ஆகியவற்றை தீர்த்து தருவார். பூமியில் இருந்து விளையும் பயிர்களுக்கு அதிபதி யாக உள்ளார். போர்படை தளபதி யான வராஹி தேவி கருத்த மேனியை உடையவர் இரவுக்கு அதிபதி.

    மாலை 6 மணியில் இருந்து காலை 6 மணிவரை வழிபடலாம். சிம்ம வாகனம், எருமை மாட்டு வாக னங்களில் வலம் வருவாள். எமபயத்தை தவிர்க்க கூடிய பலம் உடையவள். எலும்பு சம்பந்தமான நோய், சுண்ணாம்பு சத்து குறைபாடுகளால் வரும் நோய்களை குணப்படுத்துவாள்.

    உலக்கை ஏர்க்கலப்பைகளை ஆயுதங்களாக வைத்திருப்பார். பொய், பித்தலாட்டம் பிடிக்காது. வாழை இலையில் பச்சரிசி நிரப்பி, தேங்காய் உடைத்து, எருமை நெய் அல்லது பசு நெய் தீபம் ஏற்றி வழிபடலாம். வெள்ளை பூசணிக்காயை துண்டாக வெட்டி குங்குமம் பூசி நல்எண்ணெய் அல்லது தேங்காய் எண்ணெய் தீபம் ஏற்றி வழிபட்டால் நினைத்தது நிறைவேறும்.

    மரவள்ளி கிழங்கை வேகவைத்து நெய் தீபம் ஏற்றலாம். இவ்வாறு செய்பவர்களுக்கு பட்டம், பதவி, அரசியல் செல்வாக்கு கிடைக்கும்.

    • வாராஹியை வழிபடும் பக்தர்களிடம் தோல்வி கூட தோற்றே விடும்.
    • சக்திவாய்ந்த தேவதையாக போற்றப்படுகிறாள் வராஹி தேவி.

    சர்வலோக ஸம்ரக்ஷகியான வள் மஹா வராஹி என்னும் ஆதிவராஹி எனப்படுபவள். இவள் மஹா த்ரிபுரஸுந்தரி யான ஸ்ரீராஜராஜேஸ்வரி நால்வகைப் படைகளை நிர்வகிக்கும் தலைமைக் காப்பாளாகிய தண்டநாயகி ஆவாள். ஸ்ரீராஜராஜேஸ்வரியான லோகமாதா நமக்கு எப்படி வேண்டுவனவெல்லாம் அளித்து நம்மை ரக்ஷிப்பாளோ, அதேபோல் அவளுக்கு அடுத்த ஸ்தானத்திலுள்ள இந்த மஹாவராஹி தேவியும் நம்மை ஆதரித்து தனம், தான்யம், கல்வி, புகழ் இப்படி எல்லாவற்றையும் தருவதோடு, நமது வறுமையை விரட்டித் துயரத்தைத் துடைத்து நோய்நொடிகளையும் தீர்த்து சகல வகையிலும் நம்மைக் காத்து அருள்பாலிக்கிறாள்.

    ஜகந்மாதாவான ஸ்ரீ ராஜராஜேஸ்வரியின் உயிர் நிலையைப் போல உயர்நிலை கொண்டவள் மஹாவராஹி தேவி. சப்த கன்னியர்களில் ஒருவரான வராகி தேவியை பஞ்சமியில் வழிபடுவது மிகச் சிறப்பு.

    சக்திவாய்ந்த தேவதையாக போற்றப்படுகிறாள் வராஹி தேவி. மகா சக்தியாகத் திகழும் பராசக்தி, தன்னில் இருந்து ஒவ்வொரு சக்தியாக வெளிப்படுத்தினாள் என்றும் அவர்களைக் கொண்டு அசுரக் கூட்டங்களையும் தீய சக்திகளையும் அழித்தாள் என்றும் விவரிக்கிறது புராணம்.இந்த சக்திகள் ஏழு என்றும் இவர்களை சப்தமார்கள் என்றும் விவரிக்கிறார்கள். சப்த மாதர்க ளில் அதீத வீரியமும் தீய சக்தி களை அழிப்பதில் வேகமும் துடிப்பும் கொண்டு ஓடோடி வருபவள் வராஹி தேவி.

    சப்தமாதர்களுக்கு சந்நிதி என்பது சோழர்கள் காலத்தில் பல ஆலயங்களில் அமைக்கப் பட்டன. யுத்தம் முதலான முக்கிய நிகழ்வுகளின் போது, சப்த மாதர்களுக்கு படையல் போடப்பட்டு, வழிபாடுகள் நடத்தப்பட்டன. சப்தமாதர்களில், கவுமாரி, மகேஸ்வரி என தெய்வங்களுக்கு தனித்தனியே ஆலயங்கள் எழுப்பப்பட்டன. பின்னாளில், அடுத்தடுத்த கட்டங்களில், வராஹிக்கு கோவில்கள் எழுப்பப்பட்டு, பூஜைகளும் வழிபாடுகளும் நடத்தப்பட்டு வருகின்றன.

    இவள் ஆதி பரமேஸ்வரி அல்லது ஆதி பராசக்தியின் சக்தி சொரூபம். மகிஷனை அழித்த மகிஷாசுர மர்த்தினியின் குதிரைப் படை தலைவி எனவும் கூட சிலர் இவளைச் சொல்வதுண்டு. கோபத்தின் உச்சம் தொடுபவள். ஆனால் அன்பிலே, ஆதரவிலே அன்னைக்கு நிகரானவள். இவள் லலிதையின் படைத்தலை வியாக, சேனாதிபதியாக போருக்கு சென்று வெற்றி வாகை சூடியவள்.

    வாராஹியை வழிபடும் பக்தர்களிடம் தோல்வி கூட தோற்றே விடும். குறிப்பாக இந்தத் தேவியை பஞ்சமியில் வழிபடுவது மேலும் பல சிறப்புக்களை வழிபடுபவர்களுக்குத் தரும். சிறப்பான திதிகளில் ஒன்று பஞ்சமி. "பஞ்சம்" என்றால் சமஸ்கிருதத்தில் "ஐந்து" என்று பொருள் படும். ஐந்து என்றாலே விசேஷம் தான்.

    அதாவது அமாவாசை அல்லது பவுர்ணமி கழிந்து வரும் 5-வது நாளே பஞ்சமி எனப்படும். பஞ்சமி திதியில் வராகி தேவியை வழிபட்டு வர வெற்றி வீட்டின் வாசலை அழைக்காமலேயே வந்தடையும் என்பர். வழக்குகள் சாதகம் ஆகி எதிரிகளின் பலம் குறைந்து உங்களது பலம் அதிகரிக்கும். உடன், வெற்றி உங்கள் வாகை சூடும்.

    கல்வி, தொழில் அல்லது உத்யோகம் மேம்படும். கண்திருஷ்டி, செய்வினை கோளாறுகள் அகலும். புத்தி நல்ல விதத்தில் வேலை செய்யும். இதனால் ஞானம் சித்திக்கும். பயம் தெளிந்து மனதில் துணிச்சல் தைரியம் தன்னம்பிக்கை அதிகரிக்கும். ஆடி மாதம் வளர்பிறை பஞ்சமி திதி ஆயில்யம் நட்சத்திரத்தில் அவதரித்தவர் அன்னை வாராஹி.

    அன்னைக்கு பிடித்த நிறம் நீலம், கருப்பு, பவள நிறம், நீல சங்குப் பூக்களும், கருந்துளசி, வில்வமும் அன்னைக்கு ஏற்றது. பவுர்ணமி நாளில் அன்னையின் வலிமை கூடும். பஞ்சமி, அஷ்டமி, தசமி நாட்களில் அன்னையை வழிபடலாம். இரவு 8 மணிக்கு மேல் 10 மணிக்குள் வீட்டிலேயே வாராஹியை நினைத்து வழிபடலாம். சர்க்கரை வள்ளிக்கிழங்கு, எருமைத்தயிர். தேன் கலந்த மாதுளை, அண்ணாசி, செங்கரும்பு, ஆமை வடை அன்னைக்கு பிடித்தமானது.

    கருப்பு உளுந்த வடை

    வராஹி தேவிக்கு இஞ்சி பூண்டு கலந்து, தோல் நீக்காத உளுந்த வடை நைவேத்தியம் செய்யலாம் நவதானிய வடை, மிளகு சேர்த்த வடை, வெண்ணெய் எடுக்காத தயிர்சாதம் பிடித்தமானது. மிளகும் ஜீரகமும் கலந்த தோசை, குங்குமப்பூவும் சர்க்கரையும் ஏலக்காயும் லவங்கமும் பச்சைக்கற்பூரமும் கலந்த பால், கறுப்பு எள்ளுருண்டை, சர்க்கரை வள்ளிக்கிழங்கு ஆகியவற்றையும் நைவேத்தியமாக படைக்கலாம். சுக்கு அதிகம் சேர்த்து பானகம் செய்து படைக்கலாம்.

    வெள்ளை மொச்சை வராஹி என்றாலே வரம் என்று பொருள். இவள் அதர்வண வேதத்தின் தலைவியாகவும் விளங்குகிறாள். வெள்ளை மொச்சை பருப்பை வேக வைத்து தேன், மற்றும் நெய்யுடன் கலந்து வராகிக்கு படைத்து, பூஜை செய்ய வேண்டும். இதனால் தன வசியம் ஏற்படும் தொழில் விருத்தியாகும் வியாபாரம் செழிக்கும். வழக்குகள் நீங்கும்

    மிருகசக்தியும், தேவகுணமும் கொண்ட வாரகி பக்தர்களின் துன்பங்களை தாங்கிக் காப்பவள். உலகை அழிவில் இருந்து மீட்டவளாகக் கருதப்படுகிறாள்.

    பக்தர்கள் கூப்பிட்ட குரலுக்கு வருபவள் வராஹி. எதிரிகளால் பாதிக்கப்பட்டவர்கள், வழக்குகளில் சிக்கியவர்கள் வராஹி அம்மனை வழிபட்டு பலனடைகிறார்கள்.

    வராகியை வழிபடுகிறவர்களுக்கு எதிரிகளே இல்லை என்ற நிலை ஏற்படும். ஐந்து பஞ்சமி அல்லது ஐந்து ஞாயிற்றுக்கிழமைகளில் தேங்காய் மூடியில் நெய் விளக்கு ஏற்றி வாராஹியை வழிபட, நினைத்தது நிறைவேறும்.

    வராஹி அன்னையை வழிபடுவர்களுக்கு வாக்கு பலிதம் ஏற்படும், எதிரிகள் ஓடி ஒளிவார்கள், விரோதிகள் நண்பர்களாவர், செய்வினை மாந்திரிக தோஷங்கள் அகலும், தொழில், வியாபார வழியில் ஏற்படும் எதிர்ப்புகள், எதிரிகள் என அனைத்தும் ஒழியும்.

    நெடுநாள் நோய்கள் குணமாக தொடங்கும். தைரியம், தன்னம்பிக்கை, பயமின்மை போன்ற குணங்கள் உண்டாகும். எதிர்பாரா விபத்துகள், ஆபத்துகள் ஏற்படாமல் காப்பாள் அன்னை வராஹி. நோய் தொற்று பரவி வரும் இந்த கால கட்டத்தில் நோய்கள் பரவாமல் இருக்க இரவு நேரத்தில் வராகி தேவியை வழிபடலாம்.

    திதி லித்தியா தேவிகள் 15 பேர் உள்ளனர். 5-வது தேவதையாக லத்சிமா வாகினி உள்ளார். வியாதியை போக்க கூடியவர் கணவன், மனைவி ஒற்றுமை, சொத்து தகராறு, பூமியில் உள்ள பிரச்சினைகள் அளவுக்கு அதிகமான கடன் சுமைகள் ஆகியவற்றை தீர்த்து தருவார். பூமியில் இருந்து விளையும் பயிர்களுக்கு அதிபதி யாக உள்ளார். போர்படை தளபதி யான வராஹி தேவி கருத்த மேனியை உடையவர் இரவுக்கு அதிபதி.

    மாலை 6 மணியில் இருந்து காலை 6 மணிவரை வழிபடலாம். சிம்ம வாகனம், எருமை மாட்டு வாக னங்களில் வலம் வருவாள். எமபயத்தை தவிர்க்க கூடிய பலம் உடையவள். எலும்பு சம்பந்தமான நோய், சுண்ணாம்பு சத்து குறைபாடுகளால் வரும் நோய்களை குணப்படுத்துவாள்.

    உலக்கை ஏர்க்கலப்பைகளை ஆயுதங்களாக வைத்திருப்பார். பொய், பித்தலாட்டம் பிடிக்காது. வாழை இலையில் பச்சரிசி நிரப்பி, தேங்காய் உடைத்து, எருமை நெய் அல்லது பசு நெய் தீபம் ஏற்றி வழிபடலாம். வெள்ளை பூசணிக்காயை துண்டாக வெட்டி குங்குமம் பூசி நல்எண்ணெய் அல்லது தேங்காய் எண்ணெய் தீபம் ஏற்றி வழிபட்டால் நினைத்தது நிறைவேறும்.

    மரவள்ளி கிழங்கை வேகவைத்து நெய் தீபம் ஏற்றலாம். இவ்வாறு செய்பவர்களுக்கு பட்டம், பதவி, அரசியல் செல்வாக்கு கிடைக்கும்.

    இன்றைய பஞ்சமி உத்ராயண காலத்தில் வரும் கடைசி பஞ்சமி. இந்த பஞ்சமியில் வராஹியை வழிபடுவது அதிக பலன்களை தரும். மாலை 6 மணிமுதல் இரவு 9 மணிக்குள் வழிபட்டால் அதிக பலன்கள் கிடைக்கும். ரிஷபம், கடகம், கன்னி, விருச்சிகம், கும்பம் இந்த ராசி காரர்கள் வழிபட்டால் கூடுதல் பலனை பெறலாம்.

    வளர்பிறை பஞ்சமி திதியில், வராஹி தேவியை மனதார வழிபடுங்கள். வீட்டில் குடும்பமாக அமர்ந்து விளக்கேற்றி மனமுருக பிரார்த்தனை செய்யுங்கள். தீய சக்திகள் அனைத்தையும் விரட்டி, காத்தருள்வாள் வராஹி தேவி!

    ஜோதிடர்.

    கே.என்.சுந்தரராஜன் அய்யர்

    ஆற்காடு.92453 71802

    • ஜாதகப்படி செவ்வாய், ராகு மற்றும் கேது கிரகங்களால் ஏற்படும் தோஷங்கள் விலகும்.
    • வராஹியை வழிபடுபவர்களுக்கு மற்றவர்கள் செய்யும் செய்வினையால் எந்த ஒரு பாதிப்பும் ஏற்படாது.
    • ஸ்ரீமகா வராஹியை வழிபடுபவர்கள், தனது பேச்சை கட்டுப்படுத்திக் கொள்ள வேண்டும்.

    ஸ்ரீலலிதா திரிபுரசுந்தரியின் கையில் உள்ள பஞ்ச பாணங்களில் இருந்து தோன்றியவள்தான் ஸ்ரீ மகாவராஹி எனப்படும் அம்மன்.

    படைகளுக்குத் தலைவியான அன்னையை பாதுகாப்பவளாக விளங்கும் இவள், வராக முகத்துடன் இருப்பதால் வராஹி எனப்படுகிறாள். பிராக்மி, மகேஸ்வரி, கவுமாரி, வைஷ்ணவி, வராஹி, இந்திராணி, சாமுண்டா என்னும் சப்த மாதாக்களில் இவள் 6-வதாக பூஜிக்கப்படுகிறாள். ஒவ்வொரு மனிதனின் உடலிலும் இருக்கும் 6 ஆதார சக்கரங்களில் நெற்றியில் 2 கண் புருவங்களுக்கு இடையில் இருக்கும் ஆக்ஞா சக்கரப் பகுதிக்கு வராஹியே தேவதை ஆவாள்.

    ஆனி மாதம் சுக்லபட்சம் பிரதமை முதல் நவமி வரையில் உள்ள (பத்து) 9 நாட்கள் வராஹி நவராத்திரி எனப்படுகிறது. குறிப்பாக இந்த நவராத்திரியின் நடுவில் நிகழும் பஞ்சமி திதியான 4.7.2022 (திங்கட்கிழமை) ஸ்ரீ வராஹி தேவியை உபாசிக்க சிறப்பான நாளாகும்.

    இந்த நாட்களில் ஸ்ரீ மகா வராஹியை அபிஷேகம், அர்ச்சனை, பூஜை, மந்திரம் செய்து பாராயணம், ஹோமம் நடத்தி வழிபாடு செய்யலாம். இதனால் சிறந்த வாக்குசக்தி கிடைக்கும். ஜாதகப்படி செவ்வாய், ராகு மற்றும் கேது கிரகங்களால் ஏற்படும் தோஷங்கள் விலகும். எங்கும் எதிலும் பாதுகாப்பு கிடைக்கும்.

    மேலும் ஸ்ரீமகாவராஹியை வழிபடுபவர்களுக்கு மற்றவர்கள் செய்யும் தீய மந்திரங்களாலும் மற்றும் செய்வினைகளாலும் எந்த ஒரு பாதிப்பும் ஏற்படாது. இதனால்தான் வராஹிக்காரனோடு வாதாடாதே என்னும் பழமொழி கூறப்படுகிறது.

    ஸ்ரீமகா வராஹியை வழிபடுபவர்கள், தனது பேச்சை கட்டுப்படுத்திக் கொள்ள வேண்டும். ஆத்திரத்தால் உணர்ச்சி வசப்பட்டு யாரையும் திட்டவோ, சபிக்கவோ கூடாது. ஏனென்றால் அது உடனே பலித்து பலனைத் தந்து விடும். பிறகு வருத்தப்பட நேரிடலாம். வராஹி வழிபாட்டுக்கு மட்டும் இந்த சிறப்பு உண்டு.

    வராஹி நவராத்திரியின் 9 நாட்களும் ஸ்ரீ மகாவராஹியின் படத்தை வைத்து அம்மனின் வலது பக்கத்தில் தாமரைத் தண்டு அல்லது வாழைத் தண்டால் திரி செய்து நெய் தீபம் ஏற்றி, மஞ்சள் பட்டுத் துணி சாத்தி வழிபடலாம். அப்போது பஞ்சம்யை நம, தண்டநாதாயை நம, சங்கேதாயை நம, சமயேஸ்வர்யை நம, சமய சங்கேதாயை நம, வராஹியை நம, போத்ரிண்யை நம, ஸ்ரீவாயை நம, வார்த்தாள்யை நம, மகாசேனாயை நம, ஆக்ஞா சக்ரேஸ்வர்யை நம, அரிக்ன்யை நம என்னும் 12 மந்திரங்களைச் சொல்ல வேண்டும். மேலும் வராஹியை சிவப்பு புஷ்பத்தால் பூஜை செய்ய வேண்டும்.

    தோல் உரிக்காத கருப்பு உளுந்தால் செய்த வடையும், மிளகு சேர்த்த தயிர் சாதமும், சக்கரைவள்ளிக் கிழங்கும், சுக்கு சேர்த்த பானகமும், நிவேதனம் செய்ய வேண்டும். பிறகு முதலில் சொல்லிய வந்தே வாராக வக்த்ராம் என்னும் மந்திரத்தைச் சொல்லி பிரார்த்தனை செய்து கொள்ள வேண்டும்.

    இவ்வாறு முறையாக பக்தியுடன் ஸ்ரீ வராஹியை நவராத்திரி 9 நாட்களும் பூஜை செய்பவர்கள் அவர்களது குடும்பத்தில் உள்ளவர்கள் நோய், எதிரி மற்றும் அனைத்து ஆபத்துகளில் இருந்தும் பாதுகாக்கப்படுவார்கள்.

    தினமும் ஒரு அலங்காரம்

    தஞ்சாவூா் பெரியகோவிலில் வராஹி அம்மனுக்கு ஆஷாட நவராத்திரி விழா ஜூன் 28-ம் தேதி தொடங்கியது. தஞ்சாவூா் பெரியகோவிலில் உள்ள வராஹி அம்மனுக்கு ஆண்டுதோறும் 10 நாள்கள் ஆஷாட நவராத்திரி விழா கொண்டாடப்படும்.

    இதில், அம்மனுக்கு நாள்தோறும் அபிஷேகமும், அலங்காரமும் நடைபெறும். இதன்படி, நிகழாண்டு ஆஷாட நவராத்திரி விழா ஜூன் 28-ம் தேதி கணபதி ஹோமத்துடன் தொடங்கியது.

    தொடா்ந்து வராஹி அம்மனுக்கு இனிப்பு அலங்காரமும், 29-ம் தேதி மஞ்சள் அலங்காரமும், 30-ம் தேதி குங்கும அலங்காரமும், ஜூலை 1-ம் தேதி சந்தன அலங்காரமும், 2-ம் தேதி தேங்காய்பூ அலங்காரமும், 3-ம் தேதி மாதுளை அலங்காரமும், 4-ம் தேதி நவதானிய அலங்காரமும், 5-ம் தேதி வெண்ணெய் அலங்காரமும், 6-ம் தேதி கனி அலங்காரமும், 7-ம் தேதி காய்கறி அலங்காரமும் நடைபெற உள்ளன.

    நிறைவு நாளான 8-ம்தேதி அம்மனுக்கு புஷ்ப அலங்காரமும், இரவு நாகசுரம், கரகாட்டம், ஒயிலாட்டம், வாண வேடிக்கையுடன் நான்கு ராஜ வீதிகளிலும் வீதி உலாவும் நடைபெற உள்ளன.

    • மஞ்சள் அரைத்து வராகி அம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்துவதால் மாங்கல்ய பாக்கியம் கிடைக்கும்.
    • 7-ந்தேதி சுயம்பு வராகி அம்மனுக்கு அபிஷேகம், அலங்கார பூஜைகள் நடைபெறுகின்றன.

    ராமநாதபுரம் மாவட்டம் திருஉத்தரகோசமங்கை கிராமத்தில் பிரசித்தி பெற்ற சுயம்பு வராகி அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆடி மற்றும் தை வெள்ளிக்கிழமைகளில் பக்தர்கள் கூட்டம் அலைமோதும். அது போல் ஆண்டுதோறும் ஆஷாட நவராத்திரி திருவிழாவும் சிறப்பாக நடைபெறுவது உண்டு. அதுபோல் இந்த ஆண்டு ஆஷாட நவராத்திரி திருவிழா கடந்த 29-ந்தேதி காப்பு கட்டுதலுடன் தொடங்கியது.

    திருவிழாவின் 4-வது நாளான நேற்று கருவறையில் உள்ள மூலவரான சுயம்பு வராகி அம்மனுக்கு மஞ்சள், பால் உள்ளிட்ட பொருட்களால் சிறப்பு அபிஷேகம் நடந்தது. இதை தொடர்ந்து சிறப்பு மகா தீபாராதனை, பூஜைகளும் நடைபெற்றன. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு வராகி அம்மனை தரிசனம் செய்தனர்.

    தற்போது ஆஷாட நவராத்திரி விழா என்பதால் கோவிலுக்கு தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர். பெண்கள் அம்மியில் மஞ்சளை அரைத்து அதை அம்மனுக்கு கொடுக்கின்றனர். அதை அபிஷேகத்துக்கு பயன்படுகிறார்கள். மஞ்சள் அரைத்து வராகி அம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்துவதால் மாங்கல்ய பாக்கியம் கிடைக்கும். வாழ்வு வளம் பெறும் என்பது பெண்களின் நம்பிக்கையாக உள்ளது.

    திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக வருகின்ற 7-ந்தேதி அன்று சுயம்புவராகி அம்மனுக்கு பல்வேறு திரவியங்களால் அபிஷேகம், அலங்கார பூஜைகள் நடைபெறுகின்றன. திருவிழாவிற்கான ஏற்பாடுகளை ராமநாதபுர சமஸ்தான தேவஸ்தான திவான் பழனிவேல் பாண்டியன் தலைமையில் கோவில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.

    • ஆஷாட நவராத்திரிக்கு உரிய தேவி வாராஹி அம்மன்.
    • வாராஹியை வழிபட உகந்த திதி பஞ்சமி.

    ஆஷாட நவராத்திரியில் வரும் பஞ்சமி திதி, அன்னை வாராஹி வழிபாட்டுக்கு மிகவும் உகந்தது. இந்த நாளில் செய்யும் வேண்டுதல்கள் அனைத்தும் அப்படியே ஸித்திக்கும் என்கிறது பிரமாண்ட புராணம்.

    வசந்த நவராத்திரி, ஆஷாட நவராத்திரி, சாரதா நவராத்திரி, சியாமளா நவராத்திரி என்னும் இந்த நான்கு நவராத்திரிகளில் ஆஷாட நவராத்திரி மிகவும் விசேஷமானதாகக் கருதப்படுகிறது. ஆஷாட மாதம் என்பது சந்திரனை அடிப்படையாகக்கொண்ட மாதங்களில் ஒன்று. இந்த மாதம் ஆனிமாத அமாவாசையோடு தொடங்கி ஆடி மாத அமாவாசை முன் தினத்தோடு முடிவடையும். ஆனிமாத அமாவாசைக்கு மறுதினம் தொடங்கி அடுத்த ஒன்பது நாள்களும் நவராத்திரி விழாவாகக் கொண்டாடப்படும். இந்த நவராத்திரிக்கு உரிய தேவி வாராஹி அம்மன்.

    வாராஹி அம்மன் சப்த மாதர்களுள் ஒருவராகப் போற்றப்படுபவர்.

    வாராஹியை வழிபட உகந்த திதி பஞ்சமி. ஒவ்வொரு மாதமும் வளர்பிறை தேய்பிறை என இருகாலங்களிலும் வாராஹியை வழிபட வேண்டும் என்றாலும் ஆஷாட நவராத்திரியில் வரும் பஞ்சமி திதி மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. வாராஹிக்குரிய அர்ச்சனை மந்திரங்களில், `ஆஷாட பஞ்சமி பூஜன ப்ரியாயை நமஹ' என்று ஒரு வரி வரும். ஆஷாட மாத பஞ்சமியில் செய்யப்படும் பூஜையைப் பிரியமுடன் ஏற்பவள் அன்னை என்பது இதன் பொருள். நவராத்திரியில் பஞ்சமி திதி நடு நாயகமான தினம். அதனாலேயே அவளுக்குப் பஞ்சமி வழிபாடும் ஏற்பட்டது. அன்னைக்கே பஞ்சமி என்ற திருநாமம் உண்டு. அதற்குப் பஞ்சமி திதிக்கு உரியவள் என்றும் பஞ்சம் போக்குபவள் என்றும் பொருள்கொள்ளலாம்.

    வாராஹி தேவிக்கு தானியக் கோலமிட்டு வழிபடுவது சிறப்பு. வீட்டில் பஞ்சமி அன்று பூஜை அறையில் விளக்கேற்றி சிறு கோலமிட்டு அதை தானியங்கள் கொண்டு அலங்கரித்து அன்னை வாராஹியை வழிபட்டால் வீட்டில் எப்போதும் தானியங்கள் நிறைந்திருக்கும் என்பது நம்பிக்கை.

    `சதுரங்க சேனா நாயிகா' என்றொரு திருநாமம் அன்னைக்கு உண்டு. அதாவது லலிதாம்பிகையின் நால்வகைப் படைகளுக்கும் சேனாதிபதியாகத் திகழ்பவள் என்பது இதன் பொருள். எனவே அன்னையை வழிபாடு செய்பவர்களுக்கு எதிரிகளால் உண்டாகும் பயங்களும் பிரச்னைகளும் இல்லாமல் போகும். `வாராஹிகாரனிடம் வாதாடாதே' என்று ஒரு சொல்லாடலே முன்பு இருந்தது. காரணம் வாராஹியை வழிபடுபவர்கள் சகல வித்தைகளிலும் சிறந்து விளங்குவார்கள் என்பது நம்பிக்கை.

    வாராஹியை பன்னிரண்டு நாமங்களைச் சொல்லித் துதித்து வழிபட்டால் சகல காரியங்களும் ஸித்தியடையும் என்கிறது பிரமாண்டபுராணம்.

    1. பஞ்சமி,

    2. தண்டநாதா,

    3. சங்கேதா,

    4. சமயேஸ்வரி,

    5 சமய சங்கேதா,

    6. வாராஹி,

    7. போத்ரினி,

    8. சிவா,

    9. வார்த்தாளி,

    10. மகா சேனா,

    11. ஆக்ஞா சக்ரேஸ்வரி,

    12. அரிக்ஞை என்பன அந்த நாமங்கள்.

    இந்தப் பன்னிரண்டு நாமங்களையும் ஒவ்வொரு பஞ்சமி அன்றும் அன்னையின் சந்நிதியில் அல்லது வீட்டில் அம்பிகையின் படத்துக்கு முன் நின்று சொல்லி வணங்க, தடைப்பட்ட காரியங்கள் அனைத்தும் வெற்றியாகும். பூமி தொடர்பான தீர்க்க முடியாத பிரச்னைகள் இருந்தால் கட்டாயம் வழிபட வேண்டிய தெய்வம் அன்னை வாராஹி. அன்னையை பஞ்சமி தினத்தன்று விரதமிருந்து வழிபட்டால் பூமி தொடர்பான வழக்குகள் அனைத்தும் சாதகமாகும் என்பது நம்பிக்கை.

    ஸ்ரீவாராஹிதேவிக்கு சில நிவேதனங்கள் விசேஷம். பூண்டு கலந்த, தோல் நீக்காத உளுந்து வடை, நவதானிய வடை, மிளகு சேர்த்த, தயிர்சாதம், சுண்டல், சுக்கு அதிகம் சேர்த்த பானகம், மிளகு தோசை, குங்குமப்பூ, சர்க்கரை, ஏலம், லவங்கம், பச்சைக் கற்பூரம் கலந்த பால், கறுப்பு எள் உருண்டை, சர்க்கரைவள்ளிக்கிழங்கு, தேன் இவை அனைத்தும் அன்னைக்குப் பிரியமானவை. இவற்றில் ஏதேனும் ஒன்றையோ, இயன்றால் இவையனைத்தையுமோ படைத்து, மற்றவர்களுக்கும் விநியோகித்து வாராஹியை வழிபட்டால் வேண்டும் வரங்கள் கிடைக்கும் என்கின்றன சாஸ்திரங்கள்.

    இந்த ஆண்டுக்கான ஆஷாட நவராத்திரி நாளில் அனைவரும் வீட்டில் விளக்கேற்றி அன்னைக்குப் பிரியமான பன்னிரு நாமங்களைச் சொல்லி வாராஹி தேவியை வழிபடுவோம். நம்மைப் பிடித்திருக்கும் துன்பங்கள் எல்லாம் நீங்கி இன்பங்கள் பெருகட்டும் என்று மனமார வேண்டிக்கொள்வோம்.

    • ஆஷாட நவராத்திரி விழா வருகிற 8-ந்தேதி வரை நடைபெறுகிறது.
    • ஆஷாட நவராத்திரி விழா வருகிற 8-ந்தேதி வரை நடைபெறுகிறது.

    தஞ்சை பெரிய கோவிலில் பெருவுடையார், பெரியநாயகி அம்மன், விநாயகர், கருவூரார், முருகன், தட்சிணாமூர்த்தி, சண்டீகேஸ்வரர் ஆகிய சன்னதிகள் உள்ளன. மேலும் வராஹி அம்மன் தனி சன்னதியில் அமர்ந்து பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். இந்த வராகி அம்மனுக்கு ஒவ்வொரு ஆண்டும் ஆஷாட நவராத்திரி விழா 11 நாட்கள் கொண்டாடப்பட்டு வருகின்றன. அதன்படி இந்த ஆண்டு ஆஷாட நவராத்திரி விழா நேற்று கணபதி ஹோமத்துடன் தொடங்கியது. இந்த விழா வருகிற 8-ந்தேதி வரை நடைபெறுகிறது. அதைத்தொடர்ந்து கணபதி அபிஷேகம், வராகி அபிஷேகம் நடைபெற்றது.

    பின்னர் வராகி அம்மன் இனிப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். தொடர்ந்து அம்மனுக்கு தினமும் அலங்காரமும், மாலையில் பக்தி இன்னிசை நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.

    8-ந்தேதி (வெள்ளிக்கிழமை) மாலை 5 மணிக்கு அம்மன் நான்கு வீதிகளில் திருவீதி உலா நடைபெறுகிறது. விழா ஏற்பாடுகளை அரண்மனை தேவஸ்தான பரம்பரை அறங்காவலர் பாபாஜி ராஜா போன்ஸ்லே, உதவி ஆணையர் கவிதா, கண்காணிப்பாளர் சண்முகசுந்தரம் மற்றும் அரண்மனை தேவஸ்தான பணியாளர்கள், ஆஷாட நவராத்திரி விழாக்குழுவினர் செய்து வருகின்றனர்.

    ×