search icon
என் மலர்tooltip icon

    வழிபாடு

    பிளாஞ்சேரி கைலாசநாதர் கோவிலில் சிம்ஹாருட வராகி அம்மனுக்கு பஞ்சமி சிறப்பு வழிபாடு
    X

    பிளாஞ்சேரி கைலாசநாதர் கோவிலில் சிம்ஹாருட வராகி அம்மனுக்கு பஞ்சமி சிறப்பு வழிபாடு

    • அம்மனுக்கு சிறப்பு அபிஷேகமும், ஆராதனைகளும், கூட்டு வழிபாடும் நடைபெற்றது.
    • திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டனர்.

    கும்பகோணம் அருகே உள்ள பிளாஞ்சேரியில் கைலாசநாதர் கோவில் உள்ளது. இங்கு சிம்ஹாருட வராகி அம்மன் தனி கோவில் கொண்டு அருள்பாலிக்கிறார். நேற்று காலை சிம்ஹாருட வராகி அம்மனுக்கு பஞ்சமி சிறப்பு வழிபாடு நடைபெற்றது. தொடர்ந்து அம்மனுக்கு சிறப்பு அபிஷேகமும், ஆராதனைகளும், கூட்டு வழிபாடும் நடைபெற்றது.

    இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டனர். சிறப்பு பூஜைகளை கோவில் அர்ச்சகர் கண்ணன் குருக்கள் செய்தார். இதற்கான ஏற்பாடுகளை கோவில் பரம்பரை அறங்காவலர் சூழினி, உபாசகர் நாகராஜகுருக்கள் மற்றும் கோவில் பணியாளர்கள் செய்திருந்தனர்.

    Next Story
    ×