search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வண்டலூர் பூங்கா"

    • கடந்த ஒரு வாரத்தில் சுமார் 2600 பேர் லயன் சபாரியில் சென்று பார்வையிட்டு உள்ளனர்.
    • இன்னும் இரண்டு வாகனங்கள் கூடுதலாக பெறுவதற்கு டெண்டர் விடுக்கப்பட்டு உள்ளது.

    வண்டலூர்:

    வண்டலூர் உயிரியல் பூங்காவில் சுமார் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விலங்குகள் மற்றும் பறவைகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. தினந்தோறும் ஏராளமான பார்வையாளர்கள் குடும்பத்துடன் வந்து விலங்குகளை பார்த்து செல்கிறார்கள்.

    கொரோனோ காலகட்டத்தில் கடந்த 3 ஆண்டு முன்பு வண்டலூர் பூங்காவில் வாகனத்தில் சென்று சிங்கங்களை பார்வையிடும் லயன் சபாரி வசதி நிறுத்தப்பட்டது. இதன்பின்னர் பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று கடந்த 2-ந்தேதி வாகனத்தில் சென்று சிங்கம் மற்றும் மான்களை பார்வையிடும் லயன் சபாரி மீண்டும் தொடங்கப்பட்டது. இதற்காக குளிர்சாதன வசதியுடன் பஸ்கள் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. ஒரே நேரத்தில் ஒரு பஸ்சில் 28 பேர் பயணம் செய்ய முடியும்.

    வண்டலூர் பூங்காவில் 3 ஆண்டுகளுக்கு பின்னர் லயன்சபாரி தொடங்கப்பட்டு இருப்பதால் பூங்காவுக்கு வரும் பார்வையாளர்கள் மத்தியில் இது பெரும் வரவேற்பை பெற்று உள்ளது. லயன்சபாரி தொடங்கப்பட்ட நாள் அன்று மட்டும் 18 முறை வாகனங்கள் இயக்கப்பட்டு சுமார் 500 பேர் சிங்கம், மான்களை பார்த்து ரசித்து உள்ளனர். கடந்த ஒரு வாரத்தில் சுமார் 2600 பேர் லயன் சபாரியில் சென்று பார்வையிட்டு உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    கடந்த 7-ந்தேதி (சனிக்கிழமை) 25 முறையும், ஞாயிற்றுக்கிழமை 32 முறையும் லயன்சபாரிக்கு வாகனங்கள் சென்று உள்ளன. சனிக்கிழமை சுமார் 650 பேரும், ஞாயிற்றுக்கிழமை 850 பேரும் கண்டுகளித்து உள்ளனர்.

    இதுகுறித்து பூங்கா அதிகாரிகள் கூறும்போது, வாகனத்தில் சென்று சிங்கம், மான்களை பார்வையிடும் வசதி பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்து உள்ளது. விடுமுறை நாட்களில் லயன்சபாரி செல்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இப்போது இரண்டு வாகனங்கள் மட்டுமே லயன் சபாரிக்கு பயன்படுத்தப்பட்டு வருகிறது. இன்னும் இரண்டு வாகனங்கள் கூடுதலாக பெறுவதற்கு டெண்டர் விடுக்கப்பட்டு உள்ளது. அடுத்த மாதம் முதல் வாரத்தில் புதிய 2 குளிர்சாதன வசதியுடைய பஸ்கள் பயன்பாட்டிற்கு வரும் என்றார்.

    • ஏ.சி. பஸ்சில் பார்வையாளர்கள் சென்று சிங்கம், மான்களை பார்வையிடலாம்.
    • ஒரு பஸ்சில் ஒரே நேரத்தில் 28 பேர் பயணிக்க முடியும்.

    வண்டலூர்:

    வண்டலூர் உயிரியல் பூங்காவில் சுமார் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விலங்குகள், பறவைகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. ஆண்டுக்கு சுமார் 10 லட்சம் பேர் பூங்காவுக்கு வந்து இதனை பார்த்து ரசித்து செல்கிறார்கள்.

    கொரோனா ஊரடங்கின்போது கடந்த 3 ஆண்டுக்கு முன்பு பூங்காவில் சிங்கங்களை வாகனத்தில் சென்று பார்வையிடும் "லயன்சபாரி" நிறுத்தப்பட்டது. பின்னர் பூங்கா வழக்கமாக திறந்த பின்னரும் சிங்கங்களை வாகனத்தில் சென்று பார்வையிடும் வசதி ஏற்படுத்தப்படவில்லை.

    இதனால் சிங்கங்களை பார்வையிடும் "லயன் சபாரி"யை மீண்டும் தொடங்க வேண்டும் என்று பொதுமக்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர். இதைத் தொடர்ந்து லயன் சபாரியை தொடங்க பூங்கா அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர். இதற்காக தனியார் நிறுவனங்களின் பங்களிப்புடன் ஏ.சி. பஸ்கள் வாங்கப்பட்டது. மேலும் சிங்கங்கள் உலாவும் பகுதியில் நவீனப்படுத்தப்பட்டது.

    இந்த நிலையில் சிங்கங்களை வாகனத்தில் சென்று பார்க்கும் வசதி 3 ஆண்டுகளுக்கு பிறகு இன்று வண்டலூர் பூங்காவில் தொடங்கப்பட்டது. இதனை வனத்துறை அமைச்சர் மதிவேந்தன் பூங்காவில் நடைபெற்ற வனவிலங்கு வார கொண்டாட்டங்கள் நிகழ்ச்சியின்போது தொடங்கி வைத்தார். இதேபோல் மான்களை வாகனத்தில் சென்று பார்வையிடும் வசதியும் தொடங்கி வைக்கப்பட்டது. ஏ.சி. பஸ்சில் பார்வையாளர்கள் சென்று சிங்கம், மான்களை பார்வையிடலாம். ஒரு பஸ்சில் ஒரே நேரத்தில் 28 பேர் பயணிக்க முடியும்.

    இதேபோல் நுழைவுச் சீட்டில் கியூஆர் கோடு ஸ்கேனர் வசதி, நுழைவுச் சீட்டு வழங்க 2 கவுண்டர்கள், உலக தரம் வாய்ந்த உணவகம், முதுமலை வனத்துறை என்ற இணையதளம், வண்டலூர் உயிரியல் பூங்காவில் புதிதாக கட்டப்பட்ட வன உயிரினங்களுக்கு சிகிச்சை அளிக்க பல்வேறு வசதிகளுடன் கூடிய ஆஸ்பத்திரி ஆகியவையும் தொடங்கி வைக்கப்பட்டது.

    வண்டலூர் பூங்காவில் 3 ஆண்டுக்கு பிறகு சிங்கங்களை வாகனத்தில் சென்று பார்வையிடும் வசதி செய்யப்பட்டு உள்ளதால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்து இருக்கிறார்கள். பூங்கா நிர்வாகத்தினரின் ஏற்பாடுகளுக்கு பாராட்டு தெரிவித்து உள்ளனர்.

    • பூங்காவின் நடைபெறும் “வனவிலங்கு வார” கொண்டாட்டத்தின் போது இதற்கான விழா நடைபெற உள்ளன.
    • ஒரு பஸ்சில் 28 பேர் பயணம் செய்ய முடியும்.

    வண்டலூர்:

    வண்டலூர் உயிரியல் பூங்காவில் சுமார் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விலங்குகள், பறவைகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. தினந்தோறும் ஏராளமான சுற்றுலா பயணிகள் இதனை ரசித்து செல்கின்றனர். ஆண்டுக்கு சுமார் 10 லட்சம் பேர் பூங்காவுக்கு வந்து செல்கிறார்கள்.

    கொரோனா ஊரடங்கின் போது கடந்த 3 ஆண்டுக்கு முன்பு பூங்காவில் சிங்கங்களை வாகனத்தில் சென்று பார்வையிடும் லயன்சபாரி நிறுத்தப்பட்டது. கொரோனோ தொற்று பரவல் முடிந்து வழக்கமாக பூங்கா திறக்கப்பட்டதும் வாகனத்தில் சிங்கங்களை பார்வையிடம் வசதியை மீண்டும் தொடங்க வேண்டும் என்று பொதுமக்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர். இதைத் தொடர்ந்து லயன் சபாரியை தொடங்க பூங்கா அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர். இதற்காக தனியார் நிறுவனங்களின் பங்களிப்புடன் 3 ஏ.சி. பஸ்கள் வாங்கப்பட்டது. மேலும் சிங்கங்கள் உலாவும் பகுதியில் நவீனப்படுத்தப்பட்டது.

    இந்நிலையில் சிங்கங்களை வாகனத்தில் சென்று பார்க்கும் வசதி 3 ஆண்டுகளுக்கு பிறகு வருகிற 2-ந்தேதி வண்டலூர் பூங்காவில் தொடங்கப்பட உள்ளது. அன்று பூங்காவின் நடைபெறும் "வனவிலங்கு வார" கொண்டாட்டத்தின் போது இதற்கான விழா நடைபெற உள்ளன. சுற்றுலா பயணிகள் ஏ.சி. பஸ்களில் பயணம் செய்து திறந்த வெளியில் சுற்றும் சிங்கங்களை பார்க்கலாம். ஒரு பஸ்சில் 28 பேர் பயணம் செய்ய முடியும். இதற்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளன.

    இதுகுறித்து வண்டலூர் பூங்கா அதிகாரி ஒருவர் கூறும்போது, வண்டலூர் பூங்காவில் லயன்சபாரி வருகிற 2-ந்தேதி தொடங்கப்பட உள்ளது. இதற்காக 3 ஏ.சி. பஸ்கள் உள்ளன. பேட்டரி மூலம் இயக்கப்படும் இந்த வாகன த்தில் செல்ல ஒருவருக்கு ரூ.150 கட்டணமாக இருக்கும். இதன் மூலம் பூங்காவில் வருவாய் மேலும் அதிகரிக்கும். தற்போது பள்ளிகளுக்கு விடுமுறை என்பதால் தற்போது பூங்காவுக்கு வருபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து உள்ளது. அடுத்த ஆறு மாதங்களுக்குள் வருவாய் இரட்டிப்பாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்றார்.

    • நெருப்புகோழிகள் குஞ்சு பொரிப்பதற்காக அடைகாத்து வருகின்றன.
    • இயற்கையாக இனப்பெருக்கம் செய்ய தனித்துவமான சூழல் மற்றும் குறிப்பிட்ட பராமரிப்பு நடைமுறைகள் தேவை.

    வண்டலூர்:

    வண்டலூர் பூங்காவில் சுமார் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விலங்குகள் மற்றும் பறவைகள் பராமரிக்கப்பட்டு வருகிறது. இதனால் அதிகமான பார்வையாளர்கள் வந்து செல்லும் முக்கியமான சுற்றுலா தளமாக விளங்கி வருகிறது.

    பூங்காவில் மொத்தம் 17 நெருப்புக்கோழிகள் உள்ளன. இதில் 2 ஆண், 5 பெண் நெருப்புக்கோழிகள் ஆகும். மேலும் 10 நெருப்புக்கோழிகள் இன்னும் வளரவேண்டி உள்ளதால் அவற்றின் இனம் இன்னும் அறியப்படாமல் உள்ளது.

    இந்தநிலையில் தற்போது பூங்காவில் உள்ள நெருப்புக்கோழிகள் மொத்தம் 33 முட்டையிட்டுள்ளது. அதனை நெருப்புகோழிகள் குஞ்சு பொரிப்பதற்காக அடைகாத்து வருகின்றன.

    பொதுவாக நெருப்புக்கோழிகளின் முட்டையில் இருந்து குஞ்சு வெளியே வர சுமார் 42 நாட்கள் ஆகும். அதிக அளவில் முட்டைகள் இருந்தாலும் அதில் 6 அல்லது 8 முட்டைகளில் இருந்து மட்டுமே நெருப்புக்கோழி குஞ்சு பொரிக்கும் என்று கூறப்படுகிறது. மீதமுள்ளவை வீணாகிவிடும் என்று பூங்கா ஊழியர்கள் தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து நெருப்புகோழியின் முட்டை மற்றும் நெருப்புகோழிகளின் செயல்பாடுகளை பூங்கா ஊழியர்கள் தீவிரமாக கண்காணித்து வருகிறார்கள்.

    இதுகுறித்து வண்டலூர் பூங்கா உதவி இயக்குனர் மணிகண்டபிரபு கூறும்போது, நெருப்புகோழிகளின் இனப்பெருக்கத்திற்கு சென்னையில் உள்ள தட்பவெப்ப நிலையே முக்கிய காரணம். சென்னையில் ஆண்டின் பெரும்பகுதி நிலவும் வறண்ட தட்பவெப்ப நிலைகள் இவற்றிற்கு மிகவும் ஏற்றது. நெருப்புக்கோழி பராமரிப்புகள் அதிகம் உள்ள ஒரு பறவை. இவை ஈரப்பதத்தை விரும்பாது. இதற்கு நல்ல காய்ந்த மணல் பரப்பைக் கொண்டு இருக்க வேண்டும்.

    இயற்கையாக இனப்பெருக்கம் செய்ய தனித்துவமான சூழல் மற்றும் குறிப்பிட்ட பராமரிப்பு நடைமுறைகள் தேவை. நெருப்புகோழிகள் பறக்க முடியாத பறவை என்பதால் அவை சுதந்திரமாக ஓடுவதற்கு போதுமான இடம் தேவை.

    தற்போது மழையும் குளிருமாய் இருப்பதால் அதன் முட்டைகள் பொரிக்க தாமதம் ஆகிறது. எனவே அதற்கான வெப்பம் குறையாத வகையில் முட்டைகளை பாதுகாத்து வருகிறோம் என்றார்.

    • வண்டலூர் உயிரியல் பூங்காவிற்கு வருகை தரும் பெரியவர்களின் நுழைவு கட்டணம் ரூ.115-ல் இருந்து ரூ.200 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
    • பேட்டரி வாகன கட்டணம் ரூ.100-ல் இருந்து ரூ.150 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

    சென்னை:

    தமிழ்நாடு சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறை அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் சுப்ரியா சாஹூ வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    தமிழ்நாட்டில் வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா, கிண்டி சிறுவர் பூங்கா, சேலம் குரும்பப்பட்டி உயிரியல் பூங்கா, வேலூர் அமிர்தி உயிரியல் பூங்கா ஆகிய 4 உயிரியல் பூங்காக்கள் செயல்பட்டு வருகின்றன. மேற்கண்ட உயிரியல் பூங்கா நிர்வாகத்தை மேம்படுத்துவதற்கும், வளர்ச்சிப்பணிகளுக்காகவும் உயிரியல் பூங்காக்களின் நுழைவு கட்டணம் மாற்றி அமைக்கப்படுகின்றன.

    அதன்படி, 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் மற்றும் மாற்றுத்திறனாளிக்கு இலவச நுழைவு கட்டணம் தொடர்கிறது. 5 முதல் 17 வயது வரை உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கான 2 அடுக்கு கட்டணம் ஒரு குழுவாக நிர்ணயம் செய்யப்பட்டு அவர்களுடன் வரும் ஆசிரியர்களுக்கும் சலுகை கட்டணமாக ரூ.20 மட்டும் வசூலிக்கப்படும்.

    வண்டலூர் உயிரியல் பூங்காவிற்கு வருகை தரும் பெரியவர்களின் நுழைவு கட்டணம் ரூ.115-ல் இருந்து ரூ.200 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பேட்டரி வாகன கட்டணம் ரூ.100-ல் இருந்து ரூ.150 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வீடியோ கேமரா ஒளிப்பதிவு கட்டணம் ரூ.500-ல் இருந்து ரூ.750 ஆக நிர்ணயம் செய்யப்படுகிறது. சக்கர நாற்காலிக்கான ரூ.25 கட்டணம் ரத்து செய்யப்படுகிறது. வாகன கட்டணங்கள் மணிக்கணக்கில் இருந்து நாள் கணக்கில் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

    கிண்டி சிறுவர் பூங்காவில் நுழைவு கட்டணமாக பெரியவர்களுக்கு ரூ.60 ஆகவும், 5 முதல் 12 வயது சிறுவர்களுக்கு ரூ.10 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வீடியோக கேமராவுக்கு ரூ.200 நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

    சேலம் குரும்பப்பட்டி உயிரியல் பூங்காவிற்கு நுழைவு கட்டணமாக பெரியவர்களுக்கு ரூ.50-ம், 5 முதல் 12 வயது சிறுவர்களுக்கு ரூ.10-ம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வீடியோ கேமரா பதிவுக்கு ரூ.150 வசூலிக்கப்படுகிறது.

    வேலூர் அமிர்தி உயிரியல் பூங்கா நுழைவு கட்டணமாக பெரியவர்களுக்கு ரூ.30-ம், 5 முதல் 12 வயது சிறுவர்களுக்கு ரூ.10-ம் வசூலிக்கப்படுகிறது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • சோர்வாக காணப்பட்ட புலிக்கு கால்நடை மருத்துவ குழுவினர் சிகிச்சை அளித்து தொடர்ந்து கண்காணித்து வருகிறார்கள்.
    • வண்டலூர் உயிரியல் பூங்காவில் பணிபுரியும் பணியாளர்கள் பயிற்சி கொடுப்பார்கள்.

    வண்டலூர்:

    கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த 20 நாட்களுக்கு முன்பு சிற்றாறு சிலோன் காலனியில் புலி ஒன்று ஆடுகள், நாய்களை வேட்டையாடி பொதுமக்களை அச்சுறுத்தியது. கடந்த 4 நாட்களுக்கு முன்னர் அந்த புலியை பேச்சிப்பாறை கல்லறை வயல் பகுதியில் வனத்துறை அதிகாரிகள் மயக்க ஊசி செலுத்தி பிடித்தனர். சுமார் 13 வயதுடைய அந்த ஆண் புலி மிகவும் பலவீனமாக காணப்பட்டது. இதைத்தொடர்ந்து புலி வண்டலூர் உயிரியல் பூங்காவுக்கு கடந்த 10-ந்தேதி கொண்டுவரப்பட்டது.

    சோர்வாக காணப்பட்ட புலிக்கு கால்நடை மருத்துவ குழுவினர் சிகிச்சை அளித்து தொடர்ந்து கண்காணித்து வருகிறார்கள். தற்போது அந்த புலி நல்ல உடல் நலத்துடன் இருப்பதாக வண்டலூர் பூங்கா அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர். புலிக்கு உணவாக இறைச்சிகள் வழங்கப்படுகின்றன.

    இதுகுறித்து பூங்கா அதிகாரிகள் கூறும்போது, கன்னியாகுமரியில் இருந்து கொண்டுவரப்பட்ட புலிக்கு மருத்துவர்கள் குழுவினர் சிகிச்சை அளித்து முழு கண்காணிப்பில் உள்ளது. மேலும் அதற்கான உணவுகளும் வழங்கப்பட்டு வருகிறது. விரைவில் இந்த ஆண் புலி பூரண குணமடைந்து விடும். அதற்கு வண்டலூர் உயிரியல் பூங்காவில் பணிபுரியும் பணியாளர்கள் பயிற்சி கொடுப்பார்கள். பின்னர் அந்த புலி பார்வையாளர்கள் காண்பதற்காக விடப்படும் என்றார்.

    • வண்டலூர் பூங்காவை சுற்றிப்பார்க்க டிக்கெட் கட்டணமாக ரூ.100 வசூலிக்கப்படுகிறது.
    • விலங்குகள் பரிமாற்றத்தின் கீழ் சிங்கங்கள் கூடுதலாக சேர்க்கப்பட்டுள்ளது.

    சென்னை:

    வண்டலூர் உயிரியல் பூங்காவுக்கு பார்வையாளர்கள் வருகை அதிகரித்து வருகிறது. பூங்காவை சுற்றி பார்த்து அங்குள்ள அரிய வகை மிருகங்கள் மற்றும் பறவைகளை கண்டு ரசிக்கவும் சுற்றுலா பயணிகள் ஆர்வம் காட்டுகிறார்கள்.

    சராசரியாக தினமும் 2500 முதல் 3000 பேர் வரை செல்கிறார்கள். வார இறுதி நாட்களில் சுமார் 10 ஆயிரம் பேர் செல்கிறார்கள்.

    602 ஹெக்டேர் பரப்பளவில் அமைந்துள்ள இந்த பூங்காவில் 2 ஆயிரத்து 400 மிருகங்கள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. இவற்றில் 42 வகை மிருகங்கள் மாமிச உண்ணிகள் ஆகும்.

    இந்தியாவில் இருக்கும் உயிரியல் பூங்காக்களில் சிறந்த பூங்கா என்ற விருதையும் வண்டலூர் உயிரியல் பூங்கா பெற்றுள்ளது.

    பூங்காவை சுற்றிபார்க்க டிக்கெட் கட்டணமாக ரூ.100 வசூலிக்கப்படுகிறது. இனி இந்த கட்டணம் ரூ.200 ஆக உயர்த்த அரசு திட்டமிட்டுள்ளது. இந்த கட்டண உயர்வு விரைவில் அமலுக்கு வர உள்ளது. 4 ஆண்டுகளுக்கு பிறகு கட்டண உயர்வு அறிவிக்கப்பட்டு உள்ளது.

    இதுதவிர பூங்காவுக்குள் குடும்பத்துடன் பேட்டரி காரில் சுற்றிவர கட்டணம் ரூ.1550. இந்த கட்டண உயர்வின் மூலம் பூங்காவை மேலும் சிறப்பாக பராமரிக்க முடியும் என்கிறார்கள் அதிகாரிகள்.

    இந்த பூங்காவில் ஆண்டுக்கு ரூ.6 கோடிக்கு மேல் விலங்குகளின் உணவுக்காக செலவிடப்படுகிறது. பராமரிப்பு மற்றும் ஊழியர்களின் சம்பளத்துக்கு ரூ.7 கோடி வரை செலவாகிறது.

    விலங்குகள் பரிமாற்றத்தின் கீழ் சிங்கங்கள் கூடுதலாக சேர்க்கப்பட்டுள்ளது. மேலும் காட்டு கழுதைகள், ஒட்டகசிவிங்கி, வரிக்கு திரைகள் ஆகியவையும் அதிகமாக இடம் பெறும்.

    புதுடெல்லி உயிரியல் பூங்காவில் கட்டணம் ரூ.110 ஆகவும், மைசூரு உயிரியல் பூங்காவில் கட்டணம் ரூ.60 ஆகவும் உள்ளது.

    வண்டலூரில் கட்டணம் ரூ.200ஆக உயர்த்தி இருப்பது மிகவும் அதிகம் என்கிறார்கள். இந்த கட்டண உயர்வால் 5 பேர் கொண்ட ஒரு குடும்பம் பூங்காவுக்கு பொழுதுபோக்க சென்றால் குறைந்தபட்சம் ரூ.3 ஆயிரம் வரை செலவாகும் என்கிறார்கள்.

    • வண்டலூர் உயிரியல் பூங்காவில் கடந்த 2019-ம் ஆண்டு சிங்கம் சபாரி நிறுத்தப்பட்டது.
    • வண்டலூர் பூங்காவில் சிங்கம் சபாரியை மீண்டும் தொடங்க அதிகாரிகள் முடிவு செய்தனர்.

    வண்டலூர்:

    வண்டலூரில் உள்ள உயிரியல் பூங்காவில் வெள்ளைப் புலிகள் வங்க புலிகள், சிங்கங்கள், சிறுத்தைகள் உள்ளிட்ட விலங்குகள் மற்றும் ஏராளமான பறவைகள் பராமரிக்கப்பட்டு வருகிறது.

    வண்ணத்துப்பூச்சி பூங்கா, மீன் கண்காட்சியகம், குழந்தைகள் பூங்கா, பாம்புகள் இருப்பிடம் என தனித்தனியாக அமைக்கப்பட்டுள்ளது.

    வண்டலூர் உயிரியல் பூங்காவில் கடந்த 2019-ம் ஆண்டு சிங்கம் சபாரி நிறுத்தப்பட்டது. இதன் பின்னர் கொரோனா கட்டுப்பாடுகள் உள்ளிட்டவற்றால் சிங்கம் சபாரி திறப்பதில் தாமதம் ஏற்பட்டது.

    இதைத்தொடர்ந்து பூங்காவில் சிங்கம் சபாரி, மான் சபாரியை விரைவில் தொடங்க வேண்டும் என்று பார்வையாளர்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர்.

    இதைத்தொடர்ந்து வண்டலூர் பூங்காவில் சிங்கம் சபாரியை மீண்டும் தொடங்க அதிகாரிகள் முடிவு செய்தனர். இதற்கான பணிகள் வேகமாக நடந்து வருகின்றன.

    இதற்கிடையே சிங்கம், மான் சபாரி விரைவில் திறக்கப்படும் நடவடிக்கைக்காக இதற்காக 2 ஏ.சி. சொகுசு பஸ்கள் வாங்கப்பட்டுள்ளது. இவை இந்த மாத இறுதியில் பூங்காவுக்கு வர உள்ளது.

    எனவே விரைவில் வண்டலூர் பூங்காவில் சிங்கம், மான் சபாரியில் பார்வையாளர்கள் செல்லலாம். மேலும் பூங்காவுக்கு கூடுதலாக 10 பேட்டரி வாகனங்களும் வாங்கப்பட்டு உள்ளன.

    இதுகுறித்து பூங்கா அதிகாரி ஒருவர் கூறும்போது, 'வண்டலூர் பூங்காவில் சிங்கம் சபாரியை விரைவில் தொடங்க வேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் எதிர்பார்ப்பில் உள்ளனர். இதற்கான பணிகள் இறுதி கட்டத்தில் உள்ளது. சபாரி செல்வதற்காக 2 ஏ.சி. சொகுசு பஸ்கள் வாங்கப்பட்டு உள்ளன. விரைவில் பூங்காவில் சிங்கம் சபாரி தொடங்கப்படும்' என்றார்.

    • வண்டலூர் பூங்காவில் சிங்கம், புலி உள்ளிட்ட ஏராளமான வனவிலங்குகள், பறவைகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன.
    • வண்டலூர் பூங்காவில் 5 ஆண் சிங்கம், 4 பெண் சிங்கங்கள் என மொத்தம் 9 சிங்கங்கள் உள்ளன.

    வண்டலூர்:

    வண்டலூரில் உள்ள பூங்காவில் சிங்கம், புலி உள்ளிட்ட ஏராளமான வனவிலங்குகள், பறவைகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. இவற்றை கண்டு ரசிக்க தினந்தோறும் ஏராளமான பார்வையாளர்கள் வந்து செல்கிறார்கள்.

    வண்டலூர் பூங்காவில் 5 ஆண் சிங்கம், 4 பெண் சிங்கங்கள் என மொத்தம் 9 சிங்கங்கள் உள்ளன. கொரோனா கட்டுப்பாடுகளுக்கு முன்பு கடந்த 2020-ம் ஆண்டு வண்டலூர் பூங்காவில் லயன்சபாரி நிறுத்தப்பட்டது. இதைத்தொடர்ந்து தற்போது லயன்சபாரியை மீண்டும் தொடங்க திட்டமிடப்பட்டு உள்ளது. இதற்கான பணிகள் ஏற்கனவே தொடங்கப்பட்டு நடந்து வருகின்றன.

    இந்த நிலையில் ஏற்கனவே பெங்களூருவில் உள்ள உயிரியல் பூங்காவில் இருந்து சேரு என்ற ஆண் சிங்கம் வண்டலூர் பூங்காவுக்கு கொண்டு வரப்பட்டது. இதற்கு இணையாக விலங்குகள் பரிமாற்ற திட்டத்தில் 3 ஜோடி நெருப்புக்கோழிகளுக்கு பதிலாக லக்னோவில் உள்ள பூங்காவில் இருந்து உமா என்ற பெண் சிங்கம் வரவழைக்கப்பட்டது. 45 நாட்கள் தனிமைப்படுத்தலுக்கு பின்னர் அவை ஒன்றாக சேர விடுவிக்கப்பட்டன.

    ஆனால் இந்த சிங்கங்கள் ஒன்று சேர்வதில் சிக்கல் நீடித்து வந்ததாக தெரிகிறது. இதனால் இயற்கையான சூழலுக்காக சிங்கங்களை லயன்சபாரி உள்ள இடத்தில் பூங்கா ஊழியர்கள் விடுவித்து உள்ளனர். அவை அங்குள்ள அடைப்புக்குள் விடுவிக்கப்பட்டு இருப்பதாக தெரிகிறது.

    • உயர் அதிகாரிகள் கண்டித்ததால் ரமேஷ் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.
    • ரமேஷ் தற்கொலை செய்வதற்கு முன்பு அவர் எழுதி வைத்திருந்த கடிதத்தை போலீசார் கைப்பற்றியதாக கூறப்படுகிறது.

    வண்டலூர்:

    வண்டலூர் பூங்காவில் எலக்ட்ரீசியனாக வேலை பார்த்து வந்தவர் ரமேஷ் (வயது60). இவர் பூங்கா வளாகத்தில் உள்ள குடியிருப்பு பகுதியில் குடும்பத்துடன் வசித்து வந்தார். ரமேஷ் இன்னும் 4 நாட்களில் ஓய்வு பெற இருந்தார்.

    இந்நிலையில் நேற்று காலை வீட்டில் உள்ள அறையில் ரமேஷ் திடீரென தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். அவரது உடலை ஓட்டேரி போலீசார் கைப்பற்றி விசாரணை நடத்தினர். உயர் அதிகாரிகள் கண்டித்ததால் ரமேஷ் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.

    நேற்று முன்தினம் பூங்கா அதிகாரிகள் ரமேசை அழைத்து பூங்காவில் அதிகமாக மின்சாரம் பயன்பாட்டிற்க்கு நீங்கள் தான் காரணம் என்றும் இன்னும் நான்கு நாட்களில் ஓய்வு பெற உள்ளதால் இது குறித்து சார்ஜ் சீட்டு வழங்கப்படும் என்றும் கூறியதாக கூறப்படுகிறது.

    இதில் மனவேதனை அடைந்த ரமேஷ் தற்கொலை செய்து இருக்கலாம் என்று தெரிகிறது. மேலும் ரமேஷ் தற்கொலை செய்வதற்கு முன்பு அவர் எழுதி வைத்திருந்த கடிதத்தை போலீசார் கைப்பற்றியதாக கூறப்படுகிறது. அதில் தனது தற்கொலை முடிவுக்கான காரணம் குறித்து குறிப்பிட்டு உள்ளதாக தெரிகிறது. இதைத்தொடர்ந்து பூங்கா அதிாகரிகளிடம் விசாரணை நடத்த போலீசார் முடிவு செய்து உள்ளனர்.

    • கோடைகாலம் என்பதால் 2 கரடிகளுக்கும் நீர்ச்சத்து குறையாமல் இருக்க இரவில் பயணம் செய்து கொண்டு வரப்பட்டன.
    • பூங்கா ஊழியர்கள் 2 கரடி குட்டிகளுக்கு காய்கறி, பழங்கள், தேன், ரொட்டி, வேகவைத்த முட்டை, பால் உள்ளிட்டவை வழங்கி உபசரித்து வருகிறார்கள்.

    கூடுவாஞ்சேரி:

    விலங்குகள் பரிமாற்ற திட்டத்தின் கீழ், மைசூரில் இருந்து வண்டலூர் உயிரியல் பூங்காவுக்கு ஒரு ஆண் மற்றும் பெண் என இரண்டு கரடிகள் கொண்டு வரப்பட்டு உள்ளது.

    ஆண் கரடியின் பெயர் அப்பு ஆகும். இதற்கு 2 வயது ஆகிறது. பெண்கரடியின் பெயர் புஷ்பா. இதற்கு ஒன்றரை வயது ஆகிறது. தற்போது கோடைகாலம் என்பதால் 2 கரடிகளுக்கும் நீர்ச்சத்து குறையாமல் இருக்க இரவில் பயணம் செய்து கொண்டு வரப்பட்டன. பூங்கா ஊழியர்கள் 2 கரடி குட்டிகளுக்கு காய்கறி, பழங்கள், தேன், ரொட்டி, வேகவைத்த முட்டை, பால் உள்ளிட்டவை வழங்கி உபசரித்து வருகிறார்கள்.

    இதுகுறித்து பூங்கா அதிகாரி ஒருவர் கூறும்போது, விலங்குகள் பரிமாற்ற திட்டத்தில் மைசூரில் இருந்து 2 கரடிகள் வண்டலூர் பூங்காவுக்கு கொண்டு வரப்பட்டு உள்ளன. பகல் நேர பயணத்தை தவிர்க்க இரவு நேரத்தில் வாகனம் மூலம் கொண்டு வரப்பட்டது. பயணத்தின் போது 2 மணி நேரத்திற்கு ஒரு முறை வாகனம் நிறுத்தப்பட்டது. அதற்கு பழங்கள், தேன் வழங்கப்பட்டன. இது கரடிகளின் மன அழுத்தத்தை தவிர்க்க உதவியது. தற்போது இந்த கரடிகள் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளன. விரைவில் சுற்றுலா பயணிகளின் பார்வைக்கு விடப்படும். இவற்றிற்கு காலை 11 மணிக்கு பழங்கள், காய்கறிகள், மதியம் 1.30 மணிக்கு ரொட்டி, வேகவைத்த முட்டை, மாலையில் கஞ்சியும் பாலும் வழங்கப்படுகிறது என்றார்.

    இதில் ஒரு கரடியின் வயது ஒன்றரை மற்றொரு கரடியின் வயது இரண்டு. இவ்விரண்டு கரடிகளையும் 21 நாள் தனி கூண்டில் வைத்து பராமரித்து பின்னர் மற்ற கரடிகளுடன் பழகிய பிறகு பார்வையாளர்கள் கண்டுகளிக்கும் வகையில், ஏற்பாடுகள் செய்து தரப்படும் என்று பூங்கா நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.

    • வண்ணத்துப்பூச்சி பூங்கா, மீன் கண்காட்சியகம், குழந்தைகள் பூங்கா, இரவு நேர விலங்குகள் பூங்கா, பாம்புகள் இருப்பிடம் என தனித்தனியாக அமைக்கப்பட்டுள்ளது.
    • கோடை வெயிலை சமாளிக்க பூங்காவில் உள்ள விலங்குகளுக்கு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன.

    வண்டலூர்:

    வண்டலூர் பூங்காவில் சுமார் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விலங்குகள் மற்றும் பறவைகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன.

    வண்ணத்துப்பூச்சி பூங்கா, மீன் கண்காட்சியகம், குழந்தைகள் பூங்கா, இரவு நேர விலங்குகள் பூங்கா, பாம்புகள் இருப்பிடம் என தனித்தனியாக அமைக்கப்பட்டுள்ளது. தற்போது பள்ளிகளுக்கு கோடை விடுமுறை என்பதால் பூங்காவுக்கு வரும் பார்வையாளர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. நேற்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாளில் 25 ஆயிரம் பேர் பூங்காவை கண்டு ரசித்தனர்.

    கோடை விடுமுறையையொட்டி பார்வையாளர்களின் வசதிக்காக வண்டலூர் உயிரியல் பூங்கா இந்த மாதம் (மே) முழுவதும் செவ்வாய்கிழமை விடுமுறை நாட்கள் உள்பட அனைத்து நாட்களிலும் திறந்திருக்கும் என்று பூங்கா நிர்வாகம் தெரிவித்துள்ளது.

    கோடை வெயிலை சமாளிக்க பூங்காவில் உள்ள விலங்குகளுக்கு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன. நீர்சத்து அதிகம் உள்ள பழங்கள் உள்ளிட்டவை அதிகம் வழங்கப்படுகிறது.

    யானைகளுக்கு ஷவர் குளியில் ஏற்பாடும் செய்யப்பட்டு உள்ளன. யானைகள் ஷவரில் ஆனந்த குளியல் போடுவது பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.

    ×