search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வண்டலூர் பூங்கா ஊழியர் தற்கொலைக்கு அதிகாரிகள் காரணமா? போலீசார் தீவிர விசாரணை
    X

    வண்டலூர் பூங்கா ஊழியர் தற்கொலைக்கு அதிகாரிகள் காரணமா? போலீசார் தீவிர விசாரணை

    • உயர் அதிகாரிகள் கண்டித்ததால் ரமேஷ் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.
    • ரமேஷ் தற்கொலை செய்வதற்கு முன்பு அவர் எழுதி வைத்திருந்த கடிதத்தை போலீசார் கைப்பற்றியதாக கூறப்படுகிறது.

    வண்டலூர்:

    வண்டலூர் பூங்காவில் எலக்ட்ரீசியனாக வேலை பார்த்து வந்தவர் ரமேஷ் (வயது60). இவர் பூங்கா வளாகத்தில் உள்ள குடியிருப்பு பகுதியில் குடும்பத்துடன் வசித்து வந்தார். ரமேஷ் இன்னும் 4 நாட்களில் ஓய்வு பெற இருந்தார்.

    இந்நிலையில் நேற்று காலை வீட்டில் உள்ள அறையில் ரமேஷ் திடீரென தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். அவரது உடலை ஓட்டேரி போலீசார் கைப்பற்றி விசாரணை நடத்தினர். உயர் அதிகாரிகள் கண்டித்ததால் ரமேஷ் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.

    நேற்று முன்தினம் பூங்கா அதிகாரிகள் ரமேசை அழைத்து பூங்காவில் அதிகமாக மின்சாரம் பயன்பாட்டிற்க்கு நீங்கள் தான் காரணம் என்றும் இன்னும் நான்கு நாட்களில் ஓய்வு பெற உள்ளதால் இது குறித்து சார்ஜ் சீட்டு வழங்கப்படும் என்றும் கூறியதாக கூறப்படுகிறது.

    இதில் மனவேதனை அடைந்த ரமேஷ் தற்கொலை செய்து இருக்கலாம் என்று தெரிகிறது. மேலும் ரமேஷ் தற்கொலை செய்வதற்கு முன்பு அவர் எழுதி வைத்திருந்த கடிதத்தை போலீசார் கைப்பற்றியதாக கூறப்படுகிறது. அதில் தனது தற்கொலை முடிவுக்கான காரணம் குறித்து குறிப்பிட்டு உள்ளதாக தெரிகிறது. இதைத்தொடர்ந்து பூங்கா அதிாகரிகளிடம் விசாரணை நடத்த போலீசார் முடிவு செய்து உள்ளனர்.

    Next Story
    ×