search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    சிங்கம், மான் சபாரிக்கு சொகுசு ஏ.சி. பஸ்கள்- வண்டலூர் பூங்காவில் ஏற்பாடுகள் தீவிரம்
    X

    சிங்கம், மான் சபாரிக்கு சொகுசு ஏ.சி. பஸ்கள்- வண்டலூர் பூங்காவில் ஏற்பாடுகள் தீவிரம்

    • வண்டலூர் உயிரியல் பூங்காவில் கடந்த 2019-ம் ஆண்டு சிங்கம் சபாரி நிறுத்தப்பட்டது.
    • வண்டலூர் பூங்காவில் சிங்கம் சபாரியை மீண்டும் தொடங்க அதிகாரிகள் முடிவு செய்தனர்.

    வண்டலூர்:

    வண்டலூரில் உள்ள உயிரியல் பூங்காவில் வெள்ளைப் புலிகள் வங்க புலிகள், சிங்கங்கள், சிறுத்தைகள் உள்ளிட்ட விலங்குகள் மற்றும் ஏராளமான பறவைகள் பராமரிக்கப்பட்டு வருகிறது.

    வண்ணத்துப்பூச்சி பூங்கா, மீன் கண்காட்சியகம், குழந்தைகள் பூங்கா, பாம்புகள் இருப்பிடம் என தனித்தனியாக அமைக்கப்பட்டுள்ளது.

    வண்டலூர் உயிரியல் பூங்காவில் கடந்த 2019-ம் ஆண்டு சிங்கம் சபாரி நிறுத்தப்பட்டது. இதன் பின்னர் கொரோனா கட்டுப்பாடுகள் உள்ளிட்டவற்றால் சிங்கம் சபாரி திறப்பதில் தாமதம் ஏற்பட்டது.

    இதைத்தொடர்ந்து பூங்காவில் சிங்கம் சபாரி, மான் சபாரியை விரைவில் தொடங்க வேண்டும் என்று பார்வையாளர்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர்.

    இதைத்தொடர்ந்து வண்டலூர் பூங்காவில் சிங்கம் சபாரியை மீண்டும் தொடங்க அதிகாரிகள் முடிவு செய்தனர். இதற்கான பணிகள் வேகமாக நடந்து வருகின்றன.

    இதற்கிடையே சிங்கம், மான் சபாரி விரைவில் திறக்கப்படும் நடவடிக்கைக்காக இதற்காக 2 ஏ.சி. சொகுசு பஸ்கள் வாங்கப்பட்டுள்ளது. இவை இந்த மாத இறுதியில் பூங்காவுக்கு வர உள்ளது.

    எனவே விரைவில் வண்டலூர் பூங்காவில் சிங்கம், மான் சபாரியில் பார்வையாளர்கள் செல்லலாம். மேலும் பூங்காவுக்கு கூடுதலாக 10 பேட்டரி வாகனங்களும் வாங்கப்பட்டு உள்ளன.

    இதுகுறித்து பூங்கா அதிகாரி ஒருவர் கூறும்போது, 'வண்டலூர் பூங்காவில் சிங்கம் சபாரியை விரைவில் தொடங்க வேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் எதிர்பார்ப்பில் உள்ளனர். இதற்கான பணிகள் இறுதி கட்டத்தில் உள்ளது. சபாரி செல்வதற்காக 2 ஏ.சி. சொகுசு பஸ்கள் வாங்கப்பட்டு உள்ளன. விரைவில் பூங்காவில் சிங்கம் சபாரி தொடங்கப்படும்' என்றார்.

    Next Story
    ×