search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வண்டலூர் பூங்காவில் சபாரி இடத்தில் சிங்கம் திறந்து விடப்பட்டது
    X

    வண்டலூர் பூங்காவில் சபாரி இடத்தில் சிங்கம் திறந்து விடப்பட்டது

    • வண்டலூர் பூங்காவில் சிங்கம், புலி உள்ளிட்ட ஏராளமான வனவிலங்குகள், பறவைகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன.
    • வண்டலூர் பூங்காவில் 5 ஆண் சிங்கம், 4 பெண் சிங்கங்கள் என மொத்தம் 9 சிங்கங்கள் உள்ளன.

    வண்டலூர்:

    வண்டலூரில் உள்ள பூங்காவில் சிங்கம், புலி உள்ளிட்ட ஏராளமான வனவிலங்குகள், பறவைகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. இவற்றை கண்டு ரசிக்க தினந்தோறும் ஏராளமான பார்வையாளர்கள் வந்து செல்கிறார்கள்.

    வண்டலூர் பூங்காவில் 5 ஆண் சிங்கம், 4 பெண் சிங்கங்கள் என மொத்தம் 9 சிங்கங்கள் உள்ளன. கொரோனா கட்டுப்பாடுகளுக்கு முன்பு கடந்த 2020-ம் ஆண்டு வண்டலூர் பூங்காவில் லயன்சபாரி நிறுத்தப்பட்டது. இதைத்தொடர்ந்து தற்போது லயன்சபாரியை மீண்டும் தொடங்க திட்டமிடப்பட்டு உள்ளது. இதற்கான பணிகள் ஏற்கனவே தொடங்கப்பட்டு நடந்து வருகின்றன.

    இந்த நிலையில் ஏற்கனவே பெங்களூருவில் உள்ள உயிரியல் பூங்காவில் இருந்து சேரு என்ற ஆண் சிங்கம் வண்டலூர் பூங்காவுக்கு கொண்டு வரப்பட்டது. இதற்கு இணையாக விலங்குகள் பரிமாற்ற திட்டத்தில் 3 ஜோடி நெருப்புக்கோழிகளுக்கு பதிலாக லக்னோவில் உள்ள பூங்காவில் இருந்து உமா என்ற பெண் சிங்கம் வரவழைக்கப்பட்டது. 45 நாட்கள் தனிமைப்படுத்தலுக்கு பின்னர் அவை ஒன்றாக சேர விடுவிக்கப்பட்டன.

    ஆனால் இந்த சிங்கங்கள் ஒன்று சேர்வதில் சிக்கல் நீடித்து வந்ததாக தெரிகிறது. இதனால் இயற்கையான சூழலுக்காக சிங்கங்களை லயன்சபாரி உள்ள இடத்தில் பூங்கா ஊழியர்கள் விடுவித்து உள்ளனர். அவை அங்குள்ள அடைப்புக்குள் விடுவிக்கப்பட்டு இருப்பதாக தெரிகிறது.

    Next Story
    ×