search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ரேசன் அரிசி கடத்தல்"

    • 1,140 கிலோ சிக்கியது
    • போலீசார் விசாரணை

    அரக்கோணம்:

    அரக்கோணம் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளி லிருந்து வெளி மாநிலங்க ளுக்கு ரேஷன் அரிசி கடத்தப்படுவதை தடுக்க குடிமைப் பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வு துறையின் வேலூர் சரக போலீஸ் துணை சூப்பிரண்டு நந்தகுமார் மேற் பார்வையில் இன்ஸ்பெக்டர் ரேகா, சப் -இன்ஸ்பெக்டர் செல்வராஜ் தலைமையில் போலீசார் வின்டர்பேட்டை பகுதியில் ஈடுபட்டனர்.

    அப்போது சுகுமார் என்பவரது மனைவி விஜயா (வயது 50) 40 கிலோ எடை கொண்ட 26 மூட்டைகளில் பதுக்கி வைத்திருந்த 1,140 கிலோ ரேஷன் அரிசியை அவர்கள் பறிமுதல் செய்து அரக்கோணம் நுகர்பொருள் வாணிப கிடங்கில் ஒப்படைத்தனர். இதனிடையே விஜயா தப்பிவிட்டார்.

    அவரை போலீசார் தேடி வருகின்றனர்.

    • சின்னசேலம் அருகே லாரியில் கடத்திய 13.5 டன் ரேசன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது.
    • காட்டுமன்னார்குடி அருகே குமராட்சியை சேர்ந்த முத்துகுமாரசாமி கடத்தி வந்து உள்ளார்.

    கள்ளக்குறிச்சி: 

    கள்ளக்குறிச்சி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பகலவன் உத்தரவுப்படி கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் சமுதாயத்தை சீர்குலைக்கும் கஞ்சா, கள்ளச்சாராயம், லாட்டரி, ரேசன் அரிசி கடத்தல் மற்றும் குட்கா விற்பனை போன்ற சட்டத்திற்கு புறம்பான குற்ற செயல்களில் ஈடுபடுவோரை கட்டுப்படுத்த தனிப்படை அமைக்கப்பட்டு கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதன்படி கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே உள்ள செம்பாக்குறிச்சி டோல்கேட்டில் கீழ்குப்பம் போலீஸ் தனிப்பிரிவுசப்-இன்ஸ்பெக்டர் மியாடிட் மனோ தலைமையில் இன்று அதிகாலை செம்பாக்குறிச்சி டோல்கேட் அருகே வாகன தணிக்கை செய்தனர். அப்போது அந்த வழியாக வந்த லாரியை சோதனை செய்தனர். அந்த லாரியில் 13.5 டன் ரேசன் அரிசியை கடத்தி வந்தது தெரிய வந்தது.

    இந்த ரேசன் அரிசியினை காட்டுமன்னார்குடி அருகே குமராட்சியை சேர்ந்த முத்துகுமாரசாமி கடத்தி வந்து உள்ளார். பின்னர் அவரை கைது செய்து, அரிசி மற்றும் கடத்த பயன்படுத்திய லாரி பறிமுதல் செய்து விழுப்புரம் உணவுப் பொருள் கடத்தல் தடுப்பு பிரிவுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. பின்னர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த விழுப்புரம் உணவு பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரிகளிடம் கடத்தப்பட்ட ரேசன் அரிசியும், கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட லாரியும், ராஜேந்திரனையும் ஒப்படைத்தனர். இச்சம்பவம் குறித்து போலீஸ் சூப்பிரண்டு பகலவன் கூறுகையில் கள்ள க்குறிச்சி மாவட்டத்தில் சட்டவிரோத ரேஷன் அரிசி கடத்தலில் ஈடுபடுபவர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளார்.

    • வேப்பூர் அருகே 3 டன் ரேசன் அரிசி கடத்திய வாலிபர் கைது செய்யப்பட்டனர்.
    • திடீரென ஒருவர் வண்டியில் இருந்து தப்பி ஓடியதால் சந்தேகமடைந்த போலீசார், வண்டியில் இருந்த மற்றொரு நபரை பிடித்து விசாரித்தனர்.

    கடலூர்:

    வேப்பூர் போலீஸ் ஏட்டு ஞானசேகரன் தலைமையிலான போலீசார், சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில், வேப்பூர் கூட்டுரோடு அருகே வாகண தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது, அவ்வழியே வந்த மகேந்திரா பிக்கப் வாகனத்தை மடக்கி சோதனை செய்தனர். திடீரென ஒருவர் வண்டியில் இருந்து தப்பி ஓடியதால் சந்தேகமடைந்த போலீசார், வண்டியில் இருந்த மற்றொரு நபரை பிடித்து விசாரித்தனர்.விசாரணையில் வேப்பூர் அருகே பெரியநெசலூரைச் சேர்ந்தவர் சசிக்குமார், (வயது37) என்பவர் ரேசன் அரிசி கடத்தல் ஏஜெண்டாக இருப்பதும், 3 டன் ரேசன் அரிசியை கடத்தி செல்வதும் தெரிய வந்தது. அதை தொடர்ந்து, இது குறித்து வேப்பூர் போலீசார் வழக்குப் பதிந்து, சசிக்குமாரை கைது செய்தனர். தப்பியோடிய நபரை போலீசார் தேடி வருகின்றனர்.

    • பயனாளிகள் மட்டுமே ரேசன் அரிசி பெறுவதை அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும்.
    • ரேசன் அரிசி கடத்தப்படுவதற்கு முன்பே, தடுப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    தமிழக உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:

    அனைத்துப் பொது விநியோகத் திட்டக் கடைகளிலும் தரமான அரிசி கிடைக்கிறது என்று பொதுமக்களும் மாற்றுக் கட்சியினரும் பாராட்டுகின்ற நிலை உருவாகியுள்ளது. அரிசி கடத்தல் தடுப்பு நடவடிக்கைகள் முடுக்கி விடப்பட்டதன் காரணமாக மூன்று மடங்கு அளவிற்கு அரிசி பறிமுதல் செய்யப்பட்டுள்ளதோடு அதிகமான வழக்குகளும் பதியப்பட்டுள்ளன.

    அரிசி ஆலைகளில் திடீர் சோதனை நடத்தி கடத்தலுக்குத் துணை போன அரிசி ஆலைகளின் உரிமம் ரத்து செய்யப்பட்டதோடு அவர்கள் மீது வழக்கும் பதியப்பட்டுள்ளது. அரிசிக் கடத்தல் எவ்வாறு நடைபெறுகிறது என்பதைப் புலனாய்வு செய்து, கடத்தலுக்கு முன்பே அதை நிறுத்தும் வண்ணம் தடுப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    அத்துடன் வழக்கமாக கடத்தலில் ஈடுபடும் நபர்களைக் கண்டறிந்து அவர்களின் மறுவாழ்வுக்கு வழி செய்து அவர்களைக் கடத்தலில் ஈடுபடுத்தாமல் நல்வழிப்படுத்த நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்றும் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    பயனாளிகள் மட்டுமே அரிசி பெறுவதை உறுதி செய்திட வேண்டும் என்றும், ரேசன் அரிசி வாங்கி தாங்கள் பயன்படுத்தாமல் வெளியில் விற்பவர்கள் யார் என்பதைக் கடைகள் வாரியாகக் கண்டறிந்து அவர்களை எச்சரிக்க வேண்டும் என்றும் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டது.

    பொது விநியோகத் திட்டப் பணிகளில் ஈடுபட்டுள்ள அனைவரும் ஒத்துழைத்தால் தான் அரிசிக் கடத்தலை அறவே தடுக்க முடியும். அரசி கடத்தல் தொடர்பாக தகவல் அளிக்க விரும்புபவர்கள் கட்டணமில்லாத் தொலைபேசி எண்கள் 1967 மற்றும் 1800-425-5901 வழியாகவும் தெரியப்படுத்தலாம்.

    பொதுமக்களுக்குத் தரமான அரிசி வழங்க வேண்டும் என்ற அரசின் எண்ணத்தையும் கருத்தில் கொண்டு, கடத்தலில் வாடிக்கையாக ஈடுபட்டுள்ளோர் தங்கள் செயலை நிறுத்திக் கொள்ள வேண்டும். தமிழ்நாட்டில் அரிசிக் கடத்தலே இல்லை என்ற நிலையை உருவாக்கிட வேண்டும் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • மரக்காணத்தில் மினி லாரியில் கடத்திய 3 டன் ரேசன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது.
    • மினி லாரி ஒன்று நாகவாக்கம் பகுதியில் இருந்து ஈ.சி.ஆர். சாலைக்கு வந்துள்ளது .

    விழுப்புரம்:

    மரக்காணம் அருகே நாகவாக்கம் பகுதியில் இருந்து மினி லாரி மூலம் ரேசன் அரிசி கடத்திச் செல்லப்படுவதாக உணவுத்துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இதனைத் தொடர்ந்து உணவுத்துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு சென்ற பொழுது  இதனைப் பார்த்த அதிகாரிகள் இந்த மினி லாரியை சோதனை செய்துள்ளனர். அப்போது அதில் 50 மூட்டைகளில் 3 டன் ரேசன் அரிசி இருந்துள்ளது. இதனைத் தொடர்ந்து அந்த மினி லாரியை ஓட்டி வந்த டிரைவரை பிடித்து விசாரணை நடத்தினர்.

    விசாரணையில் அவர் திருவள்ளூர் மாவட்டத்தை சேர்ந்த அஜித் (வயது 21) என்பதும் நாறவாக்கம் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் உள்ள வீடுகளில் இருந்து இந்த ரேசன் அரிசியை வாங்கி சென்று திண்டிவனத்திற்கு எடுத்து செல்லப்படுவதாக கூறியுள்ளார். இதனால் உணவுத்துறை அதிகாரிகள் வேன் மற்றும் அரிசி ஆகியவற்றை கைப்பற்றி மரக்காணம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். இதனைத் தொடர்ந்து டிரைவர் அஜித்திடம் போலீசார் மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • உளுந்தூர்பேட்டை அருகே ரேசன் அரிசி கடத்திய வாகனம் பறிமுதல் செய்யப்பட்டது.
    • வாகனத்தில் 2 டன் அரிசிக்கு மேல் உள்ளது என தெரிய வந்தது.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை தாலுக்கா ஆதனூர் கிராமத்தில் இருந்து ரேசன் அரிசி கடத்திக் கொண்டு வருவதாக உளுந்தூர்பேட்டை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. தகவலின் பெயரில் இன்ஸ்பெக்டர் தமிழ்வாணன் இன்ஸ்பெக்டர் அருள்செல்வம் மற்றும்போலீசார் விரைந்துசென்றனர்.

    அப்போது வாகனத்தை மடக்கிப்பிடித்து உளுந்தூர்பேட்டை போலீஸ் நிலையத்தில் கொண்டு வந்து விழுப்புரம் உணவு கடத்தல் தடுப்பு பிரிவில் ஒப்படைக்கப்பட்டது. வாகனத்தை ஓட்டி வந்தவர் பெரம்பலூர் மாவட்டம் கீரனூர் குன்னம் கிராமத்தைச் சேர்ந்த வேல்முருகன் என்பவர் குறிப்பிடத்தக்கதாகும். வாகனத்தில் 2 டன் அரிசிக்கு மேல் உள்ளது என தெரிய வந்தது.

    • சேலத்தில் ரேசன் அரிசி கடத்திய 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
    • அவர்களிடம் இருந்து ரேசன் அரிசி மூட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டன.

    சேலம்:

    சேலம் செவ்வாய்ப்பேட்டை, கொண்டலாம்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து ரேசன் அரிசி கடத்தப்படுவதாக சேலம் மாவட்ட உணவு கடத்தல் தடுப்புப் பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து உணவு கடத்தல் தடுப்புப் பிரிவு போலீசார் செவ்வாய்ப்பேட்டை சந்தை பேட்டை பகுதியில் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.

    அப்போது போலீசாரை கண்டதும், சரக்கு ஆட்டோ ஓட்டி வந்த நபர் வாகனத்தை விட்டு அங்கிருந்து தப்பி ஓட்டம் பிடித்தார். இதை பார்த்த போலீசார், அங்கு சென்று சரக்கு ஆட்டோவை சோதனையிட்டனர். அதில் 400 கிலோ ரேசன் அரிசி கடத்தி வந்தது கண்ட றியப்பட்டது. அதனை போலீசார் பறிமுதல் செய்தனர். அந்த ஆட்டோவை ஓட்டி வந்தது பள்ளப்பட்டி பகுதியை சேர்ந்த சதீஷ்குமார் (வயது 28) என்பது தெரியவந்தது.இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர்.

     அதேபோல் ஆட்டையாம்பட்டி அருகே எஸ்.பாப்பாப்பட்டி ஏரி பகுதியில் உள்ள புதருக்குள் ரேசன் அரிசி பதுக்கி வைத்து விற்பனை செய்யப்படுவதாக உணவு பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் அங்கு சென்று சோதனையிட்டனர்.

    அப்போது ஆட்டை யாம்பட்டி பகுதிைய சேர்ந்த சுப்பிரமணி (49) என்பவர் பொதுமக்களிடம் குறைந்த விலைக்கு ரேசன் அரிசியை வாங்கி ஏரி புதருக்குள் பதுக்கி வைத்து கோழிப்பண்ணைக்கு கடத்தி விற்பது தெரியவந்தது. இதையடுத்து அவரை கைது செய்த போலீசார், அவரிடம் இருந்து 1.1 டன் ரேசன் அரிசி பறிமுதல் செய்தனர்.

    • ஆந்திரா நோக்கி ரேசன் அரிசி கடத்தி சென்ற வேனை போலீசார் மடக்கி பிடித்தனர்.
    • வேனுடன் ரேசன் அரிசி மூட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டது.

    திருத்தணி:

    திருத்தணி அருகே உள்ள கனகம்மாசத்திரம் அடுத்த ஆற்காடு குப்பம் பகுதியில் ஆந்திரா எல்லையில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது ஆந்திரா நோக்கி ரேசன் அரிசி கடத்தி சென்ற வேனை மடக்கி பிடித்தனர். அதில் ஒரு டன் ரேசன் அரிசி மூட்டைகள் கடத்தி வந்திருப்பது தெரிந்தது.

    இதையடுத்து திருவாலங்காடு அடுத்த சின்னம்மா பேட்டை, பூஞ்சோலை நகர் பகுதியை சேர்ந்த பிரசன்ன குமார் (30) என்பவரை போலீசார் கைது செய்தனர். மேலும் வேனுடன் ரேசன் அரிசி மூட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டது.

    • 17 ஆலைகளில் திடீர் சோதனை
    • கடத்தலில் ஈடுபட்ட 23 பேர் கைது

    வேலூர்:

    தமிழகத்தில் இருந்து ஆந்திர மாநிலத்துக்கு ரேசன் அரிசி கடத்துகின்றனர். அங்குள்ள அரசி ஆலைகளில் பாலீஷ் செய்யப்படும் அரிசி மீண்டும் தமிழகத்துக்கு கடத்தி வரப்பட்டு அதிக விலைக்கு விற்கப்படுகிறது.

    இந்த முறைகேட்டை தடுக்க வேண்டும் என சில மாதங்களுக்கு முன்பு ஆந்திர மாநில முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு கடிதம் எழுதினார்.

    இதன் தொடர்ச்சியாக ஆந்திர மாநிலத்தையொட்டிய கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, திருவள்ளூர் மாவட்டங்களில் கண்காணிப்பு மற்றும் வாகன சோதனை அதிகரிக்கப்பட்டது.

    ஒருங்கிணைந்த வேலூர் மாவட்ட உணவுப்பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவு துணை காவல் கண்காணிப்பாளர் நந்தகுமார் தலைமையிலான குழுவினர் ராணிப்பேட்டை மாவட்டத்தில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக அனுமதியுடன் பொது விநியோக திட்டத்துக்காக அரிசி அரவை செய்யும் 17 ஆலைகளில் திடீர் சோதனை மேற்கொண்டனர்.

    காட்பாடி கிறிஸ்டியான்பேட்டை, முத்தரசிகுப்பம் சோதனைச்சாவடிகள் மற்றும் பள்ளிகொண்டா சங்கச்சாவடிகளில் நேற்று முன்தினம் இரவு தொடங்கி நேற்று காலை வரை விடிய, விடிய வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.

    ராணிப்பேட்டை மாவட்டத்தில் விரைவில் முழு வீச்சில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் தொடங்கவுள்ளனர். இதற்கான பணிகளால் விவசாயிகளிடம் இருந்து முறையாக நெல் கொள்முதல் செய்யப்படுகிறதா? அரிசி அரவை ஆலைகளில் நெல் மூட்டைகள் பதுக்கப்படுகிறதா? விவசாயிகள் போர்வையில் வியாபாரிகள் நெல் மூட்டைகளை விற்பனை செய்கிறார்களா? என்றும் கண்காணிக்க உள்ளனர்.

    ''ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் கடந்த மாதத்தில் மட்டும் 32 வழக்குகளில் 23 பேர் கைது செய்யப்பட்டு, 74 டன் ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட 9 லாரிகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. வரும் நாட்களில் கடத்தலை தடுக்க திருப்பத்தூர், ராணிப்பேட்டை மாவட்டங்களுக்கு தலா ஒரு உதவி ஆய்வாளர் மற்றும் 4 காவலர்கள் அடங்கிய குழு நியமிக்கப்பட்டுள்ளனர்.

    அவர்கள் தனித்தனியாக செயல்படும்போது அரிசி கடத்தல் நடவடிக்கை குறையும்.

    ஆந்திர மாநிலத்துக்கான அரிசி கடத்தல் பொதுவாக ஞாயிற்றுக்கிழமைகளில் அதிகம் நடைபெறுவதாக கிடைத்த தகவலின்பேரில் சோதனையில் ஈடுபட்டோம். பல நேரங்களில் நாங்கள் இருப்பதை தெரிந்துகொண்டு அவ் வழியாக கடத்தல் வாகனங்கள் செல்வது தடை செய்யப்படுகிறது.

    இதை முறியடிக்க விரைவில் 'ஸ்பை கேமரா' பயன்படுத்த உள்ளோம். இதை ஏதாவது ஒரு குறிப்பிட்ட இடத்தில் பொருத்திவிட்டு நாங்கள் ரகசியமாக காண்காணிக்க முடியும்'' என தெரிவித்தனர்.

    • உணவு பொருள் கடத்தல் தடுப்புப்பிரிவு போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.
    • அதில் 4.6 டன் ரேசன் அரிசி கடத்தி வந்தது தெரியவந்தது.

    சேலம்:

    சேலம் ரெட்டிப்பட்டியில் கடந்த 9-ந்தேதி உணவு பொருள் கடத்தல் தடுப்புப்பிரிவு போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த 2 மினி லாரிகளை நிறுத்தி சோதனையிட்டனர். அதில் 4.6 டன் ரேசன் அரிசி கடத்தி வந்தது தெரியவந்தது.

    உடனே அந்த 2 மினி லாரியும், 4.6 டன் ரேசன் அரிசியை பறிமுதல் செய்த போலீசார், 2 டிரைவர்களையும் கைது செய்தனர். இதனை தொடர்ந்து ரேசன் அரிசி கடத்தலை தடுக்கும் வகையில் ரெட்டிப்பட்டி பகுதியில் உள்ள ரேசன் கடைகளில் ஆய்வு செய்ய கூட்டுறவு இணைப்பதிவாளர் ரவிக்குமார் உத்தரவிட்டார்.

    இதையடுத்து கூட்டுறவு சார்பதிவாளர்கள் குழுவினர் நேற்று ரெட்டிப்பட்டி பகுதியில் செயல்படும் 10-க்கும் மேற்பட்ட ரேசன் கடைகளில் ஆய்வுபணியில் ஈடுபட்டனர். இதில் 10 கடைகளில் சிறு, சிறு குறைபாடுகள் கண்டறியப்பட்டது.

    இதனை தொடர்ந்து அந்த கடை விற்பனையாளர்களுக்கு ரூ.12 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

    இது குறித்து அதிகாரிகள் கூறுகையில், ரேசன் அரிசி கடத்தலை தடுக்கும் வகையில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ரேசன் கடைகளில் தவறு செய்யும் விற்பனையாளர்கள் சஸ்பெண்டு செய்யப்படு வார்கள் என்றனர்.

    • சரக்கு வேனில் ஆந்திராவுக்கு கடத்த முயன்ற 3 டன் ரேசன் அரிசியை பறிமுதல் செய்தனர்.
    • பேசின் பிரிட்ஜ் ரெயில் நிலையத்தில் ஆந்திராவுக்கு ரெயிலில் கடத்த இருந்த 44 மூட்டைகளில் இருந்த 1100 கிலோ ரேசன் அரிசியை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

    அம்பத்தூர்:

    ஆவடி அருகே உள்ள கரளபாக்கம் பகுதியில் குடிமைப் பொருள் வழங்கல் குற்ற புலனாய்வுத்துறை இன்ஸ்பெக்டர் சசிகலா, சப்-இன்ஸ்பெக்டர் ராதாகிருஷ்ணன் மற்றும் அதிகாரிகள் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது ஒரு சரக்கு வேனில் ஆந்திராவுக்கு கடத்த முயன்ற 3 டன் ரேசன் அரிசியை பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக நந்தீஸ்வரன் என்பவரிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    இதேபோல் பேசின் பிரிட்ஜ் ரெயில் நிலையத்தில் ஆந்திராவுக்கு ரெயிலில் கடத்த இருந்த 44 மூட்டைகளில் இருந்த 1100 கிலோ ரேசன் அரிசியை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக ராஜா என்பவரிடம் விசாரித்து வருகிறார்கள்.

    • மதுரை வன்னி வேலம்பட்டியில் ரேசன் அரிசி கடத்தல் கடப்பதாக அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது.
    • போலீசார் லாரியை சோதனை செய்து பார்த்தபோது 2000 கிலோ ரேசன் அரிசி கடத்துவது தெரிய வந்தது.

    மதுரை:

    மதுரை வன்னி வேலம்பட்டியில் ரேசன் அரிசி கடத்தல் கடப்பதாக அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. இதன் அடிப்படையில் மதுரை மண்டல ரேசன் அரிசி கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரிகள் டி.கல்லுப்பட்டி ரோடு சந்திப்பில் வாகன தணிக்கை சோதனை நடத்தினார்கள்.

    அப்போது அங்கு ஒரு சரக்கு லாரி வந்தது. போலீசாரை கண்டதும் அதில் இருந்த 2 பேர் ஓடினர். உடனே போலீசார் அவர்களை விரட்டினர். இதில் ஒருவர் சிக்கினார். மற்றொருவர் தப்பிவிட்டார்.

    தொடர்ந்து போலீசார் லாரியை சோதனை செய்து பார்த்தபோது 2000 கிலோ ரேசன் அரிசி கடத்துவது தெரிய வந்தது. இதனைத் தொடர்ந்து சரக்கு லாரியுடன், ரேஷன் அரிசியை பறிமுதல் செய்த போலீசார், பிடிபட்ட நபரிடம் விசாரித்தனர்.

    விசாரணையில் அவர் அவர் மதுரை சோலையழகுபுரத்தைச் சேர்ந்த லாரி டிரைவர் ரஞ்சித்குமார் (வயது 30) என்பது தெரிய வந்தது. தப்பி ஓடிய மதுரை மீனாம்பாள்புரத்தைச் சேர்ந்த சுந்தரபாண்டி என்பவரை போலீசார் தேடி வருகின்றனர். இவர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் ரேசன் அரிசியை வாங்கி வெளி யூருக்கு லாரியில் கடத்திச் சென்றது தெரிய வந்தது.

    ×