என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பதுக்கி வைத்த ரேசன் அரிசி பறிமுதல்
    X

    பதுக்கி வைத்த ரேசன் அரிசி பறிமுதல்

    • 1,140 கிலோ சிக்கியது
    • போலீசார் விசாரணை

    அரக்கோணம்:

    அரக்கோணம் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளி லிருந்து வெளி மாநிலங்க ளுக்கு ரேஷன் அரிசி கடத்தப்படுவதை தடுக்க குடிமைப் பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வு துறையின் வேலூர் சரக போலீஸ் துணை சூப்பிரண்டு நந்தகுமார் மேற் பார்வையில் இன்ஸ்பெக்டர் ரேகா, சப் -இன்ஸ்பெக்டர் செல்வராஜ் தலைமையில் போலீசார் வின்டர்பேட்டை பகுதியில் ஈடுபட்டனர்.

    அப்போது சுகுமார் என்பவரது மனைவி விஜயா (வயது 50) 40 கிலோ எடை கொண்ட 26 மூட்டைகளில் பதுக்கி வைத்திருந்த 1,140 கிலோ ரேஷன் அரிசியை அவர்கள் பறிமுதல் செய்து அரக்கோணம் நுகர்பொருள் வாணிப கிடங்கில் ஒப்படைத்தனர். இதனிடையே விஜயா தப்பிவிட்டார்.

    அவரை போலீசார் தேடி வருகின்றனர்.

    Next Story
    ×