search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மரக்காணத்தில் மினி லாரியில் கடத்திய 3 டன் ரேசன் அரிசி பறிமுதல்
    X

    பறிமுதல் செய்யப்பட்ட ரேசன் அரிசியை படத்தில் காணலாம். 

    மரக்காணத்தில் மினி லாரியில் கடத்திய 3 டன் ரேசன் அரிசி பறிமுதல்

    • மரக்காணத்தில் மினி லாரியில் கடத்திய 3 டன் ரேசன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது.
    • மினி லாரி ஒன்று நாகவாக்கம் பகுதியில் இருந்து ஈ.சி.ஆர். சாலைக்கு வந்துள்ளது .

    விழுப்புரம்:

    மரக்காணம் அருகே நாகவாக்கம் பகுதியில் இருந்து மினி லாரி மூலம் ரேசன் அரிசி கடத்திச் செல்லப்படுவதாக உணவுத்துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இதனைத் தொடர்ந்து உணவுத்துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு சென்ற பொழுது இதனைப் பார்த்த அதிகாரிகள் இந்த மினி லாரியை சோதனை செய்துள்ளனர். அப்போது அதில் 50 மூட்டைகளில் 3 டன் ரேசன் அரிசி இருந்துள்ளது. இதனைத் தொடர்ந்து அந்த மினி லாரியை ஓட்டி வந்த டிரைவரை பிடித்து விசாரணை நடத்தினர்.

    விசாரணையில் அவர் திருவள்ளூர் மாவட்டத்தை சேர்ந்த அஜித் (வயது 21) என்பதும் நாறவாக்கம் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் உள்ள வீடுகளில் இருந்து இந்த ரேசன் அரிசியை வாங்கி சென்று திண்டிவனத்திற்கு எடுத்து செல்லப்படுவதாக கூறியுள்ளார். இதனால் உணவுத்துறை அதிகாரிகள் வேன் மற்றும் அரிசி ஆகியவற்றை கைப்பற்றி மரக்காணம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். இதனைத் தொடர்ந்து டிரைவர் அஜித்திடம் போலீசார் மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×