என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
வேப்பூர் அருகே 3 டன் ரேசன் அரிசி கடத்திய வாலிபர் கைது
Byமாலை மலர்17 Nov 2022 7:00 AM GMT
- வேப்பூர் அருகே 3 டன் ரேசன் அரிசி கடத்திய வாலிபர் கைது செய்யப்பட்டனர்.
- திடீரென ஒருவர் வண்டியில் இருந்து தப்பி ஓடியதால் சந்தேகமடைந்த போலீசார், வண்டியில் இருந்த மற்றொரு நபரை பிடித்து விசாரித்தனர்.
கடலூர்:
வேப்பூர் போலீஸ் ஏட்டு ஞானசேகரன் தலைமையிலான போலீசார், சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில், வேப்பூர் கூட்டுரோடு அருகே வாகண தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது, அவ்வழியே வந்த மகேந்திரா பிக்கப் வாகனத்தை மடக்கி சோதனை செய்தனர். திடீரென ஒருவர் வண்டியில் இருந்து தப்பி ஓடியதால் சந்தேகமடைந்த போலீசார், வண்டியில் இருந்த மற்றொரு நபரை பிடித்து விசாரித்தனர்.விசாரணையில் வேப்பூர் அருகே பெரியநெசலூரைச் சேர்ந்தவர் சசிக்குமார், (வயது37) என்பவர் ரேசன் அரிசி கடத்தல் ஏஜெண்டாக இருப்பதும், 3 டன் ரேசன் அரிசியை கடத்தி செல்வதும் தெரிய வந்தது. அதை தொடர்ந்து, இது குறித்து வேப்பூர் போலீசார் வழக்குப் பதிந்து, சசிக்குமாரை கைது செய்தனர். தப்பியோடிய நபரை போலீசார் தேடி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X