search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "போலீசார் பறிமுதல்"

    • போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்ட 113 வாகனங்கள் ஏலம் விடுவதற்காக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
    • பொது ஏலம் வருகிற 3-ந்தேதி (சனிக்கிழமை) காலை 10 மணிக்கு மாவட்ட ஆயுதப்படை மைதான வளாகத்தில் நடைபெற உள்ளது.

    மதுரை

    மதுரை மாவட்டத்தில் மது கடத்தலில் ஈடுபட்டு பறிமுதல் செய்யப்படும் வாகனங்கள் போலீஸ் காவலில் வைக்கப்படுகிறது. இந்த வாகனங்கள் அவ்வப்போது ஏலம் விடப்படுவது வழக்கம். போலீசாரால் கைப்பற்றப் பட்ட வாகனங்களுக்கான பொது ஏலம் வருகிற 3-ந்தேதி (சனிக்கிழமை) காலை 10 மணிக்கு மாவட்ட ஆயுதப்படை மைதான வளாகத்தில் நடைபெற உள்ளது.

    பொது ஏலத்தில் கலந்து கொண்டு வாகனங்களை ஏலத்தில் எடுக்க விருப்பம் உள்ளவர்கள் மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் ஏலம் விடுவதற்காக நிறுத்தி வைக்கப்பட்டுள்ள 113 வாகனங்களை 31 மற்றும் 1-ந்தேதிகளில் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை பார்வையிட்டு முன்பதிவு செய்து கொள்ளலாம். ஏலத்தில் கலந்து கொள்ள விரும்புபவர்கள் இருசக்கர வாகனத்திற்கு முன்பதிவாக ரூ.5ஆயிரமும், நான்கு சக்கர வாகனத்திற்கு ரூ.10ஆயிரமும் செலுத்த வேண்டும். வாகனத்தை ஏலம் எடுத்தவர்கள் அந்த வாகனத்தின் ஏலத்தொகை யை அன்றைய தினமே கட்டி வாகனத்தை பெற்றுக்கொள்ளலாம்.

    வாகனத்தை ஏலம் எடுத்து முழுப்பணம் கட்டி வாகனத்தை எடுக்காத வர்களின் முன்பணம் திருப்பி தரப்பட மாட்டாது. அந்த பணம் அரசு கணக்கில் செலுத்தப்படும். ஏலத்தில் எடுக்கப் படும் வாகனத்திற்கு அரசால் விதிக்கப்படும் ஜி.எஸ்.டி. வரி தனியாக வசூலிக்கப்படும்.

    இந்த தகவல் மாவட்ட காவல்துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • சேலத்தில் ரேசன் அரிசி கடத்திய 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
    • அவர்களிடம் இருந்து ரேசன் அரிசி மூட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டன.

    சேலம்:

    சேலம் செவ்வாய்ப்பேட்டை, கொண்டலாம்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து ரேசன் அரிசி கடத்தப்படுவதாக சேலம் மாவட்ட உணவு கடத்தல் தடுப்புப் பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து உணவு கடத்தல் தடுப்புப் பிரிவு போலீசார் செவ்வாய்ப்பேட்டை சந்தை பேட்டை பகுதியில் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.

    அப்போது போலீசாரை கண்டதும், சரக்கு ஆட்டோ ஓட்டி வந்த நபர் வாகனத்தை விட்டு அங்கிருந்து தப்பி ஓட்டம் பிடித்தார். இதை பார்த்த போலீசார், அங்கு சென்று சரக்கு ஆட்டோவை சோதனையிட்டனர். அதில் 400 கிலோ ரேசன் அரிசி கடத்தி வந்தது கண்ட றியப்பட்டது. அதனை போலீசார் பறிமுதல் செய்தனர். அந்த ஆட்டோவை ஓட்டி வந்தது பள்ளப்பட்டி பகுதியை சேர்ந்த சதீஷ்குமார் (வயது 28) என்பது தெரியவந்தது.இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர்.

     அதேபோல் ஆட்டையாம்பட்டி அருகே எஸ்.பாப்பாப்பட்டி ஏரி பகுதியில் உள்ள புதருக்குள் ரேசன் அரிசி பதுக்கி வைத்து விற்பனை செய்யப்படுவதாக உணவு பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் அங்கு சென்று சோதனையிட்டனர்.

    அப்போது ஆட்டை யாம்பட்டி பகுதிைய சேர்ந்த சுப்பிரமணி (49) என்பவர் பொதுமக்களிடம் குறைந்த விலைக்கு ரேசன் அரிசியை வாங்கி ஏரி புதருக்குள் பதுக்கி வைத்து கோழிப்பண்ணைக்கு கடத்தி விற்பது தெரியவந்தது. இதையடுத்து அவரை கைது செய்த போலீசார், அவரிடம் இருந்து 1.1 டன் ரேசன் அரிசி பறிமுதல் செய்தனர்.

    • கார் சிக்னல் அருகே சற்று மேடாக இருந்ததால் செல்ல முடியாமல் திணறியது.
    • இரும்பை சிறிய துண்டு–களாககாரில் நூதன முறையில் திருடி வந்தது தெரிய வந்தது.

    கடலூர்:

    கடலூர் திருப்பாதி ரிப்பு லியூர் சிக்னல் அருகே டி.எஸ்.பி மற்றும் குற்றப்பிரிவு போலீசார் ரோந்து பணி யில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது சிதம்பரத்தி லிருந்து கடலூர் நோக்கி வந்த கார் சிக்னல் அருகே சற்று மேடாக இருந்ததால் செல்ல முடியாமல் திணறி யது. இதனைப் பார்த்த போலீசார் சந்தேகமடைந்து காரை நிறுத்தி சோதனை செய்தனர். இந்த காரில் பின்பக்கம் சீட் பகுதியில் இரும்பு குவிந்து இருந்த தை பார்த்து சந்தேகம் அடைந்தனர். பின்னர் கடலூர் திருப்பாதி ரிப்புலி–யூர் போலீஸ் நிலையத்தில் கார் மற்றும் 2ேபர்களை பிடித்து சென்று ஒப்படை–த்தனர்.

    போலீசார் விசாரணை நடத்தியதில், காரில் வந்தவர்கள் கடலூர் திருச்சோபுரத்தை சேர்ந்த அண்ணாத்துரை (வயது 62)நடுவீரப்பட்டை சேர்ந்த பிரகாஷ் (வயது 38) என்பது தெரிய வந்தது. இவர்கள் கடலூர் அருகே உள்ள தனியார் கம்பெனி–யில் இருந்து ஒரு டன் இரும்பை சிறிய துண்டு–களாககாரில் நூதன முறையில் திருடி வந்தது தெரிய வந்தது. இது குறித்து கடலூர் திருப்பாதிரிப்புலியூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

    • போலீசாரை பார்த்ததும், வாலிபர் தப்பியோட முயன்றார். தொடர்ந்து, போலீசார் விரைந்து சென்று அந்த வாலிபரை மடக்கி பிடித்தனர்.
    • கஞ்சாவை வாங்கிவந்து, அதை சிறு சிறு பொட்டங்களாக மாற்றி சிறுவர்களுக்கு விற்றதையும் அவர் ஒப்புகொண்டார்.

    புதுச்சேரி:

    காரைக்கால் நகர் பகுதியான பி.எஸ்.ஆர். கோல்டன் நகர் அருகே, சிறுவர்களுக்கு கஞ்சா விற்பதற்காக, காரைக்கால் நகர போலீஸ் நிலையத்திற்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில், போலீஸ் சூப்பிரண்டு சுப்பிரமணியன் உத்தரவின் பேரில், சப்-இன்ஸ்பெக்டர் மோகன் மற்றும் போலீசார், சம்பவ இடத்திற்குச் சென்றனர். போலீசாரை பார்த்ததும், வாலிபர் தப்பியோட முயன்றார். தொடர்ந்து, போலீசார் விரைந்து சென்று அந்த வாலிபரை மடக்கி பிடித்தனர்.

    பின்னர், அவரை சோதனை செய்போது, அவர் பாக்கெட்டில் 70 கிராம் கஞ்சா பொட்டலங்கள் இருப்பது கண்டுபிடிக்கப் பட்டது. அவரிடம் நடத்திய விசார–ணையில், காரைக்கால் லெமேர் வீதியைச்சேர்ந்த அந்துவான் (வயது 22) என்பதும், நாகை மாவட்ட–த்திலிருந்து கஞ்சாவை வாங்கிவந்து, அதை சிறு சிறு பொட்டங்களாக மாற்றி சிறுவர்களுக்கு விற்றதையும் அவர் ஒப்புகொண்டார். தொடர்ந்து, அந்துவானை கைது செய்து, அவரிட–மிருந்து ரூ.8 ஆயிரம் மதிப்பி–லான கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    • திட்டக்குடி அருகே வீட்டில் பதுக்கிய 7 டன் ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது.
    • சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கடலூர்: 

    கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே உள்ள வாகையூர் மூப்பனார் கோவில் பகுதியைச் சேர்ந்தவர் செல்லமுத்து (வயது 80)கூலித் தொழிலாளி. இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளியூரில் உள்ள தனது மகள் வீட்டிற்கு சென்றுள்ளார்.வீட்டில் யாரும் இல்லாததை அறிந்த மர்ம நபர்கள் இவரது வீட்டில் 4-டன் ரேஷன் அரிசியை பதுக்கி வைத்துள்ளனர். இதை வீட்டில் அருகே இருந்தவர்கள் பார்த்து தகவல் தெரிவித்தனர். குடிமை பொருள் மற்றும் ராம்நத்தம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மர்ம நபர்களால் பதுக்கி வைத்திருந்த 4 டன் ரேஷன் அரிசியை பறிமுதல் செய்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் இதே போன்று ராமநத்தம் அருகே உள்ள கண்டமத்தான் கிராமத்தில் ஒரு வீட்டில் 3 டன் ரேஷன் அரிசி இதேபோன்று பதுக்கி வைத்திருந்தது தெரிய வரவே உடனே போலீசார் அதனையும் பறிமுதல் செய்தனர். வீட்டில் யாரும் இல்லாததை நோட்டமிட்டு ரேஷன் அரிசியை பதுக்கி வைத்திருந்த மர்ம நபர்களை போலீசார் தொலைபேசி தேடி வருகின்றனர். 7 டன் ரேஷன் அரிசி பறிமுதல் செய்தது அந்த பகுதியில் பெரும்பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    ×