search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மூதாட்டி தற்கொலை"

    • சிவகாமி வீட்டில் யாரும் இல்லாத போது அவரது உடலில் கடலெண்ணை ஊற்றி தீ வைத்து கொண்டார்.
    • அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் வந்து அவரை மீட்டு கோபிசெட்டிபாளையம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    கோபி:

    கோபிசெட்டிபாளையம் பி.ஆர்.ஆர். நகரை சேர்ந்தவர் கிருஷ்ணசாமி. இவரது மனைவி சிவகாமி (74). இவர் உடல் நிைல சரியில்லாமல் வீட்டில் இருந்து வந்தார்.

    இதனால் அவர் வேதனை அடந்து மனம் உடைந்து வந்தார். இந்த நிலையில் சிவகாமி வீட்டில் யாரும் இல்லாத போது அவரது உடலில் கடலெண்ணை ஊற்றி தீ வைத்து கொண்டார்.

    இதில் அவர் அலறி துடித்தார். அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் வந்து அவரை மீட்டு கோபிசெட்டிபாளையம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    மேல் சிகிச்சைக்காக கோபி மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த சிவகாமி இறந்தார்.

    இது குறித்து கோபிசெட்டிபாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • மூதாட்டி நோய்கொடுமையால் மனமுடைந்த நிலையில் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
    • இதுகுறித்து சின்னமனூர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    தேனி:

    சின்னமனூர் அருகே கன்னிசேர்வைபட்டியை சேர்ந்தவர் சங்கர்ராஜ் மனைவி ராஜாத்தி(70). இவர்களுக்கு 2 மகன்களும், ஒரு மகளும் உள்ளனர். கடந்த சில ஆண்டுகளாக தீராத வயிற்றுவலி இருந்துள்ளது.

    பல்வேறு இடங்களில் சிகிச்சை பெற்றும் குணமாகாததால் விஷமருந்தை குடித்து மயங்கினார்.

    சின்னமனூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்க ப்பட்டு பின்னர் மேல்சிகி ச்சைக்காக தேனி க.விலக்கு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். இதுகுறித்து சின்னமனூர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    • சின்ன பாப்பா சில நாட்களாக உடல்நிலை சரியில்லாமல் அவதிப்பட்டு வந்துள்ளார்.
    • மறைமலைநகர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சின்ன பாப்பாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    வண்டலூர்:

    செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகர் அருகே உள்ள கூடலூர் வீட்டு வசதி குடியிருப்பு பகுதியை சேர்ந்தவர் சின்ன பாப்பா (வயது 60). இவர் சில நாட்களாக உடல்நிலை சரியில்லாமல் அவதிப்பட்டு வந்துள்ளார்.

    இந்த நிலையில் நேற்று வீட்டில் யாரும் இல்லாதபோது வீட்டின் முன்பு உள்ள மரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனைப் பற்றி தகவல் அறிந்த மறைமலைநகர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சின்ன பாப்பாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இதுகுறித்து மறைமலைநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    • ஊட்டி-கோத்தகிரி சாலையில் தொட்டபெட்டா மலைசிகரம் உள்ளது.
    • மலையில் இருந்து குதிக்கும் பரபரப்பு வீடியோ காட்சிகள் வெளியாகின.

    கவுண்டம்பாளையம்:

    நீலகிரி மாவட்டம் ஊட்டி-கோத்தகிரி சாலையில் தொட்டபெட்டா மலைசிகரம் உள்ளது. நேற்றுவிடுமுறை தினம் என்பதால் ஏராளமான சுற்றுலா பயணிகள் அங்கு குவிந்து இருந்தனர்.

    அவர்கள் அங்கிருந்தபடி இயற்கையின் அழகையும், பள்ளத்தாக்கையும் பார்வையிட்டு ரசித்து கொண்டிருந்தனர்.அப்போது மூதாட்டி ஒருவர் காட்சிகோபுரத்திற்கு கீழ் பகுதியில், பாறைகள் நிறைந்த ஆபத்தான சரிவு பகுதியில் நின்றிருந்தார்.

    இதனை பார்த்த சுற்றுலா பயணிகள், சத்தம் போட்டு அவரை அங்கிருந்து வருமாறு கத்தினர். ஆனால் அவர் எதனையும் காதில் வாங்கி கொள்ளாமல், அங்கேயே நின்றிருந்தார்.சிறிது நேரத்தில், மூதாட்டி திடீரென பாறையில் இருந்து 500 அடி பள்ளத்திற்குள் குதித்தார். இதனை அங்கிருந்த சுற்றுலா பயணி ஒருவர் பார்த்து வீடியோ எடுத்துள்ளார்.

    பின்னர் அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவியது. இதை பார்த்த பலரும் அதிர்ச்சியடைந்தனர். இந்த வீடியோவை பார்த்து தேனாடுகம்பை போலீசார், தீயணைப்பு படையினருடன் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.

    பின்னர் வனத்துறையினர் உதவியுடன் பள்ளத்தாக்கு பகுதியில் கயிறு கட்டி இறங்கி உடலை தேடும் பணியில் ஈடுபட்டனர். அப்போது 500அ அடி பள்ளத்தில் அவரது உடல் இருப்பது கண்டறியப்பட்டது. இதையடுத்து கீழே சென்று, மூதாட்டியின் உடலை மேலே கொண்டு வரும் பணிகளில் ஈடுபட்டனர்.

    பின்னர் மாலையில் மூதாட்டியின் உடலை தொட்டில் கட்டி மேலே கொண்டு வந்தனர். தொடர்ந்து உடல் பிரேத பரிசோதனைக்காக ஊட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. மேலும் மூதாட்டி குதித்த இடத்தில் இருந்து ஒரு கைப்பையை கைப்பற்றினர். அதில் ரூ.16,500 மற்றும் ஆதார் கார்டு இருந்தது.

    இதுகுறித்து தேனாடுகம்பை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். முதற்கட்ட விசாரணையில், தற்கொலை செய்து கொண்டது கோவை தடாகம் கணுவாய் ராகவேந்திரா நகர் பகுதியை சேர்ந்த நல்லதம்பி என்பவரின் மனைவி லீலாவதி(62) என்பது தெரியவந்தது.

    தொடர்ந்து அவர் எதற்காக தற்கொலை செய்து கொண்டார் என்பது குறித்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், மூதாட்டி லீலாவதி 2 திருமணம் செய்தவர். அவர் தனது முதல் கணவரை கடந்த 30 வருடங்களுக்கு முன்பு பிரிந்து 2-வதாக நல்லதம்பி என்பவரை திருமணம் செய்து கணுவாய் பகுதியில் வாழ்ந்து வந்தார்.இதற்கிடையே நல்லதம்பியும் இறந்துவிடவே லீலா வதியை, நல்லதம்பியின் அக்கா மகன் தனது வீட்டில் வைத்து பராமரித்து வந்தார்.

    இந்த நிலையில் லீலாவதி தான் தனியாக வசித்து கொள்கிறேன் என்று கூறி, அதே பகுதியில் ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து வசித்தார். ஆனாலும் யாரிடமும் பேசுவதில்லை. கணவர் இறந்த பின்பு யாரிடமும் பேசாமல் தனிமையிலும், மன வருத்தத்திலேயுமே லீலாவதி இருந்ததாக கூறப்படுகிறது.

    சம்பவத்தன்று தனது கணவரின் அக்கா மகனை சந்தித்து, தான் வீட்டை காலி செய்து விட்டேன். இந்த பணத்தை வைத்து கொள் என வீட்டிற்கு கொடுத்த அட்வான்ஸ் பணத்தை கொடுத்துள்ளார்.

    பின்னர் வெளியில் சென்று விட்டு வருவதாக கூறி சென்றுள்ளார். ஆனால் நீண்ட நேரமாக வரவில்லை. தற்போது பாறையில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டதும், போலீசாரின் தெரியவந்துள்ளது. மன அழுத்தத்தில் தற்கொலை செய்து கொண்டிருப்பதாக கூறப்படுகிறது. இருப்பினும் அதுதான் காரணமா? வேறு ஏதாவது என்பது குறித்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • கணவர் கடந்த சில வருடங்களுக்கு முன்பு இறந்துவிட்டார்.
    • வீட்டின் அருகே இருந்த கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார்

    கோவை:

    கோவை சூலூர் வஞ்சிபுரம் பகுதியை சேர்ந்தவர் ரங்கம்மாள் (வயது 73). இவரது கணவர் கடந்த சில வருடங்களுக்கு முன்பு இறந்துவிட்டார். குழந்ைதகள் இல்லை. மேலும் கண் சிகிச்சை பெற்று வந்தார். இந்தநிலையில் ரங்கம்மாள் தனது கணவர் இறந்ததை நினைத்து மன வேதனையுடன் இருந்து வந்தார். சம்பவத்தன்று வாழ்க்கையில் விரக்தி அடைந்த அவர் வீட்டின் அருகே இருந்த கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து சுல்தான்பேட்டை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து ரங்கம்மாளின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • குடும்ப பிரச்சினை காரணமாக மன வேதனையில் இருந்த மூதாட்டி தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.
    • இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கன்னிவாடி:

    திண்டுக்கல் மாவட்டம் ரெட்டியார்சத்திரம் அருகே உள்ள கொண்டம–நாயக்கன்பட்டியைச் சேர்ந்த வரதராஜன் மனைவி பஞ்சம்மாள் (வயது 57).

    இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். இருவருக்கும் திருமணமாகி ஒரே காம்பவுண்டில் தனித்தனியாக வசித்து வருகின்றனர்.

    குடும்ப பிரச்சினை காரணமாக பஞ்சம்மாள் கடந்த சில நாட்களாக வேதனையில் இருந்து வந்தார். இந்நிலையில் இன்று தனது வீட்டிலேயே தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    இது குறித்து தகவல் கிடைத்ததும் ரெட்டியார்சத்திரம் சப்-இன்ஸ்பெக்டர் சரவணன் தலைமையிலான போலீசார் அவரது உடலை கைப்பற்றி திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து விசாரித்து வருகின்றனர்.

    ×