search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கிணற்றில் குதித்து மூதாட்டி தற்கொலை
    X

    கிணற்றில் குதித்து மூதாட்டி தற்கொலை

    • கணவர் கடந்த சில வருடங்களுக்கு முன்பு இறந்துவிட்டார்.
    • வீட்டின் அருகே இருந்த கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார்

    கோவை:

    கோவை சூலூர் வஞ்சிபுரம் பகுதியை சேர்ந்தவர் ரங்கம்மாள் (வயது 73). இவரது கணவர் கடந்த சில வருடங்களுக்கு முன்பு இறந்துவிட்டார். குழந்ைதகள் இல்லை. மேலும் கண் சிகிச்சை பெற்று வந்தார். இந்தநிலையில் ரங்கம்மாள் தனது கணவர் இறந்ததை நினைத்து மன வேதனையுடன் இருந்து வந்தார். சம்பவத்தன்று வாழ்க்கையில் விரக்தி அடைந்த அவர் வீட்டின் அருகே இருந்த கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து சுல்தான்பேட்டை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து ரங்கம்மாளின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×