search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ரெட்டியார்சத்திரத்தில் குடும்ப பிரச்சினையில் மூதாட்டி தற்கொலை
    X

    கோப்பு படம்

    ரெட்டியார்சத்திரத்தில் குடும்ப பிரச்சினையில் மூதாட்டி தற்கொலை

    • குடும்ப பிரச்சினை காரணமாக மன வேதனையில் இருந்த மூதாட்டி தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.
    • இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கன்னிவாடி:

    திண்டுக்கல் மாவட்டம் ரெட்டியார்சத்திரம் அருகே உள்ள கொண்டம–நாயக்கன்பட்டியைச் சேர்ந்த வரதராஜன் மனைவி பஞ்சம்மாள் (வயது 57).

    இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். இருவருக்கும் திருமணமாகி ஒரே காம்பவுண்டில் தனித்தனியாக வசித்து வருகின்றனர்.

    குடும்ப பிரச்சினை காரணமாக பஞ்சம்மாள் கடந்த சில நாட்களாக வேதனையில் இருந்து வந்தார். இந்நிலையில் இன்று தனது வீட்டிலேயே தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    இது குறித்து தகவல் கிடைத்ததும் ரெட்டியார்சத்திரம் சப்-இன்ஸ்பெக்டர் சரவணன் தலைமையிலான போலீசார் அவரது உடலை கைப்பற்றி திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து விசாரித்து வருகின்றனர்.

    Next Story
    ×