search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மூதாட்டி தற்கொலை"

    • வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த தாயாத்தாளை காணவில்லை.
    • ஈரோடுக்கு வந்து கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.

    ஈரோடு:

    திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தை அடுத்துள்ள செஞ்சேரி புதூர் பகுதியை சேர்ந்தவர் பழனிசாமி (68). இவரது மனைவி தாயாத்தாள் (65). இவருக்கு கடந்த சில வருடமாக உடல்நலம் பாதிக்கப்பட்ட சிகிச்சை பெற்று வந்தார்.

    இந்த நிலையில் சம்பவத்தன்று இரவு வீட்டில் தூங்கிக்கொண்டி ருந்த தாயாத்தாளை காணவில்லை. அவரை நண்பர்கள், உறவினர்கள் வீடுகளில் கணவர் பழனிசாமி தேடி வந்துள்ளார்.

    இந்த நிலையில் வீரப்பன்சத்திரம் போலீஸ் நிலையத்துக்கு உள்பட்ட வேலப்பகவுண்டன் வலசு, செம்பாளி தோட்டம் பகுதியில் உள்ள கிணறு ஒன்றில் இருந்து மூதாட்டி உடல் ஒன்று மீட்கப்பட்டு பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளதாக பழனிசாமிக்கு தகவல் கிடைத்தது.

    அதன்பேரில் பழனிசாமி மருத்துவமனைக்கு சென்று உடலை பார்த்தபோது அது தனது மனைவி தாயாத்தாள் தான் என்பது தெரியவந்தது.

    நோய் கொடுமையால் மனமுடைந்த தாயாத்தாள் ஈரோடுக்கு வந்து கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டதும் தெரியவந்தது.

    இதையடுத்து பழனிசாமி அளித்த புகாரின் பேரில் வீரப்பன்சத்திரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • தற்கொலை செய்துகொள்ளும் நோக்கத்தில் திராவகத்தை குடித்து விட்டதாக கூறியுள்ளார்.
    • ஈரோடு தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    ஈரோடு:

    ஈரோடு 46 புதூர், அசோக்நகரை சேர்ந்தவர் வேலுசாமி. இவரது மனைவி வெங்கடத்தம்மாள் (73). இவர் கடந்த சில மாதங்களாக உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வந்தார்.

    இதனால் வயதான காலத்தில் யாருக்கும் தொந்தரவாக இருக்கக்கூடாது என உறவினர்களிடம் அடிக்கடி புலம்பி வந்துள்ளார். இந்த நிலையில் சம்பவத்தன்று மாலை வெங்கடத்தம்மாள் சோர்வாக காணப்பட்டார்.

    அது குறித்து அவரது மகன் தட்சிணாமூர்த்தி கேட்டபோது தான் தற்கொலை செய்துகொள்ளும் நோக்கத்தில் கழிப்பறையை சுத்தப்படுத்த பயன்படுத்தப்படும் திராவகத்தை குடித்து விட்டதாக கூறியுள்ளார்.

    இதனால் அதிர்ச்சி அடைந்த தட்சிணாமூர்த்தி தாய் வெங்கடத்தம்மாளை மீட்டு ஈரோட்டில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றார்.

    அங்கு தீவிர சிகிச்சை பெற்று வந்த வெங்கடத்தம்மாள் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

    இதுகுறித்து ஈரோடு தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    • 10 பிள்ளைகள் இருந்தும் கவனிக்க ஆளில்லாததால் பரிதாபம்
    • உடலை போலீசார் அவரது மகனிடம் ஒப்படைத்தனர்

    ஜோலார்பேட்டை:

    நாட்டறம்பள்ளி அருகே 10 பிள்ளைகள் இருந்தும் கவனிக்க ஆளில்லாததால் தாய் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    முதியோருக்கு இன்றைய சூழலில் ஏற்படும் துன்பங்கள் சமூக பிரச்னையாக உருவெடுத்து உள்ளது. லட்சக்கணக்கான முதியோர், ஆதரவின்றி தவித்து வருகின்றனர்.

    முதியோருக்கு அடிப்படை சுதந்திரத்தை வழங்க வலியுறுத்தி ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 1-ந் தேதி, உலக முதியோர் தினம் கடைபிடிக்கப்படுகிறது.

    இன்றைய பரபரப்பான உலகில் குடும்ப உறவுகள் என்பது பழங்காலம் போல் இல்லை. பெற்ற பிள்ளை களால் கைவிடப்பட்டு, பொருளா தாரத்தாலும் பாதிக்கப்பட்டு, அனாதைகளை போல வாழும் நிலைக்கு முதி யோர்கள் தள்ளப்பட்டுள்ளனர்.

    முதியோர்கள் இல்லாமல் வாழ நினைக்கும் இந்த காலத்தினருக்கு, கூட்டு குடும்பத்துடன் வாழும் சந்தோசமும் மன நிறைவும் கிடைப்பதில்லை.

    எந்திரத்தை போல் மாறிப்போன இன்றைய வாழ்க்கை முறையில், முதியோர்களை கவனிக்கவும் பாதுகாக்கவும் தவறி விடுகின்றனர்.

    பெற்றவர்களை பாதுகாக்க அவரவர் பிள்ளைகள் முன்வர வேண்டும். பிள்ளைகள் நல்ல வசதியோடு இருந்தும், பெற்றோர்களை தாங்களே பார்த்துக்கொள்ளாமல் முதியோர் இல்லங்களில் சேர்க்கும் கொடுமையும் நம் நாட்டில் அதிகரித்து வருகிறது.

    பெற்றவர்களை முதியோர் இல்லத்தில் சேர்ப்பது இன்றைய காலத்தில் பேஷனாக மாறிவிட்டது. கவனித்துக் கொள்ள விரும்பாத நிலையில் பெற்ற பிள்ளைகளை, பெற்றோரை முதியோர் இல்லத்தில் சேர்க்கும் நிலை தமிழ் கலாச்சாரத்தை படிப்படியாக அழித்து வருகிறது.

    பிள்ளைகள் கவனிக்காமல் நடுத்தெருவிலும், முதியோர் இல்லத்திலும் கொண்டு சேர்ப்பதால் பெரும்பாலும் மன உளைச்சலுக்கு ஆளாகி தற்கொலை செய்து கொள்கின்றனர்.

    பெற்ற பிள்ளைகளே கவனிக்கவில்லை என்றால், அவர்களை பாதுகாக்கும் பொறுப்பு யாரை சேரும் என்ற கேள்விகளுக்கு பதில் இல்லை. முதியோர்கள் தற்கொலை செய்து கொள்ளும் சம்பவம், நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

    கர்நாடகா மாநிலம், கே.ஜி.எப். அருகே உள்ள துருளிசி பகுதியைச் சேர்ந்த ராமப்பா மனைவி ஜெயாயம்மாள் (வயது 72). ஜெயம்மாளுக்கு 10 பிள்ளைகள் உள்ளனர். கணவன் இறந்த பிறகு பெற்ற பிள்ளைகளும் சரிவர கவனிக்கவில்லை.

    தள்ளாடும் வயதில் உழைத்து சாப்பிடவும் தெம்பு இல்லை. இதனால் ஜெயம்மாள் உறவினர் வீடுகளுக்கு அழைக்க ப்படாத விருந்தாளியாக சென்று தங்கி வந்துள்ளார்.

    உறவினர் வீடுகளிலும் சரி வர கவனிப்பில்லா ததால், அனாதைப்போல் சாலைகளில் சுற்றி திரிந்து சாப்பிட உணவு இன்றி பரிதவித்துள்ளார்.

    இவர் நாட்டறம்பள்ளி அடுத்த நந்திபெண்டா பகுதியில் உள்ள தனது குல தெய்வம் நந்தீஸ்வரன் கோவிலுக்கு அடிக்கடி சாமி கும்பிட வந்துள்ளார்.

    அதன்படி கர்நாடகாவில் இருந்து ஜெயம்மாள் கடந்த 22-ந் தேதி நந்தி கொண்ட பகுதியில் உள்ள குலதெய்வம் கோவிலுக்கு வந்தார். பெற்ற பிள்ளைகள் கவனிக்காததை கடவுளிடம் கூறி அழுது புலம்பி உள்ளார்.

    இதனை அந்த வழியாக சென்ற மக்கள் பார்த்துள்ளனர். பெற்ற பிள்ளைகள் கைவிட்ட நிலையில், வாழ வழியும் இல்லாததால் வாழ்வில் விரக்தி அடைந்த ஜெயம்மாள் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தார்.

    பையனப்பள்ளி சுடுகாட்டுக்கு சென்று, அங்குள்ள மரத்தில் புடவையை கொண்டு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். போலீசார் உடலை மீட்டு விசாரித்ததில் அவர் யார் என்பது தெரிய வந்தது.

    இதனை அடுத்து பிரேத பரிசோதனை செய்யப்பட்ட ஜெயம்மாள் உடலை, போலீசார் அவரது மகனிடம் ஒப்படைத்தனர். தவமிருந்து பெற்றெடுத்த 10 பிள்ளைகளும் கவனிக்காததால், வாழ்வில் விரக்தி அடைந்து தாய் சுடுகாட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

    • தீயணைப்பு படை வீரர்கள் பிணத்தை மீட்டனர்
    • போலீசார் விசாரணை

    ஜோலார்பேட்டை:

    திருப்பத்தூர் அருகே கொடும்பம்பள்ளி சாமு கவுண்டர் வட்டம் பகுதியைச் சேர்ந்தவர் தருமன் இவரது மனைவி இந்திரா (வயது 55). தருமன் சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார்.

    மேலும் இவரது மகன் தற்போது வெளிநாட்டில் வேலை செய்து வருகிறார் இந்நிலையில் இந்திரா தனது மருமகளுடன் ஜோலார்பேட்டை அருகே உள்ள குடியனகுப்பம் பகுதியில் வசித்து வந்தார்.

    இந்நிலையில் இந்திரா கடந்த 28-ந்தேதி தனது சொந்த ஊருக்கு சென்று வருவதாக கூறி விட்டு வீட்டை விட்டு வெளியே சென்றார்.

    இந்நிலையில் காலை நீண்ட நேரமாகியும் வீடு திரும்பாததால் உறவினர் வீட்டில் அவரை தேடி வந்தனர். குடியானகுப்பம் பகுதியில் உள்ள அண்ணாதுரை என்பவருக்கு சொந்தமான விவசாய கிணற்றில் நேற்று காலை இந்திரா பிணமாக கிடந்தார்.

    இதுகுறித்து தகவலறிந்த ஜோலார்பேட்டை போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் அமுதா மற்றும் நாட்டறம்பள்ளி தீயணைப்புத்துறையினர் சம்பவம் இடத்திற்கு விரைந்து சென்று தீயணைப்பு படைவீரர்கள் கிணற்றில் கயிறு கட்டல் கட்டி இறக்கி பிணத்தை மீட்டனர்.

    இதுகுறித்து ஜோலார்பேட்டை போலிசார் வழக்கு பதிவு செய்து பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மூட்டு வலியால் வேலைக்கு செல்ல முடியாமல் கஷ்டப்பட்டு வந்த நிலையில் சம்பவ த்தன்று வாழ்க்கையில் வெறுப்படைந்து அரளி விதைகளை அரைத்து குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

    கம்பம்:

    கம்பம் 29-வது வார்டு திருவள்ளுவர் காலனியைச் சேர்ந்த குமார் மனைவி மகேஷ்வரி (வயது 65). கணவர் இறந்து விட்ட நிலையில் தனது மகள் விஜயலட்சுமி பராமரிப்பில் இருந்து வந்தார். மகேஸ்வரி தள்ளுவண்டியில் பழ வியாபாரம் பார்த்து வந்தார்.

    மூட்டு வலியால் வேலைக்கு செல்ல முடியாமல் கஷ்டப்பட்டு வந்த நிலையில் சம்பவ த்தன்று வாழ்க்கையில் வெறுப்படைந்து அரளி விதைகளை அரைத்து குடித்து தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து கம்பம் தெற்கு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • சரஸ்வதி திடீரென வீட்டில் இருந்து வெளியே சென்று விட்டார்.
    • வாய்க்காலில் குதித்து தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.

    ஈரோடு:

    ஈரோடு காளிங்கரா யன்பாளையம் சக்தி நகர் 2-வது தெருவை சேர்ந்தவர் குமாரசாமி. இவரது மனைவி சுமதி. இவர்களுக்கு ஒரு மகள் உள்ளார்.

    மேலும் குமாரசாமியின் தாய் சரஸ்வதி (70) இவர்களுடன் வசித்து வந்தார். சுமதி தமிழ்நாடு அரசு வேளாண்மை துறையில் நாமகிரிப்பேட்டையில் வேளாண்மை உதவி இயக்குனராக பணிபுரிந்து கடந்த வருடம் விருப்ப ஓய்வு பெற்று வீட்டில் இருந்து வருகிறார். குமாரசாமி பவானி வேளாண்மை உதவி இயக்குனராக பணிபுரிந்து வந்தார்.

    இந்நிலையில் குமார சாமிக்கு கடந்த 7 மாதங்களுக்கு முன்பு மூளையில் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக சிகிச்சை பெற்று தற்போது வீட்டில் படுத்த படுக்கையாக இருந்து வருகிறார்.

    மகன் குமாரசாமிக்கு உடல்நிலை சரியில்லாததில் இருந்தே சரஸ்வதி மன வேதனையுடன் இருந்துள்ளார். கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு சரஸ்வதி திடீரென வீட்டில் இருந்து வெளியே சென்று விட்டார்.

    பின்னர் உறவினர் வீட்டில் இருந்த அவரை சுமதி சமாதானம் பேசி மீண்டும் வீட்டுக்கு அழைத்து வந்தார்.

    இந்நிலையில் மீண்டும் நேற்று அதிகாலை சரஸ்வதி வீட்டில் யாரிடமும் சொல்லாமல் நகைகளை கழற்றி வைத்துவிட்டு வெளியே சென்று விட்டார்.

    அவரை பல்வேறு இடங்களில் தேடிய போது அதே பகுதியில் உள்ள காளிங்கராயன் வாய்க்காலில் குதித்து தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது.

    இது குறித்து சித்தோடு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்து க்கு விரைந்து வந்து சரஸ்வதி உடலை கைப்பற்றி ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்த போது மகனின் உடல்நிலை சரி யில்லாததால் அந்த துக்கம் தாங்காமல் சரஸ்வதி வாய்க்காலில் குதித்து தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. 

    • தனலட்சுமி எதற்காக தற்கொலை செய்து கொண்டார் என்பது தெரியவில்லை.
    • தனிமையில் வசித்ததால் மனவேதனையில் தற்கொலை செய்தாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்று பொன்னேரி போலீசார் மேலும் விசாரித்து வருகின்றனர்.

    பொன்னேரி:

    பொன்னேரியை அடுத்த என்.ஜி.ஓ. நகர் அண்ணா தெருவை சேர்ந்தவர் தனலட்சுமி (வயது85). இவரது கணவர் ஏற்கனவே இறந்து விட்டார். இவர்களுக்கு 3 மகன்கள், 2 மகள்கள் உள்ளனர். அவர்கள் அனைவரும் திரு மணமாகி தனித்தனியாக குடும்பத்துடன் வசித்து வருகிறார்கள்.

    தனலட்சுமி மட்டும் தனியாக வீட்டில் வசித்து வந்தார். பக்கத்து தெருவில் வசிக்கும் அவரது மகன் ஒருவர் தனலட்சுமியை கவனித்து வந்ததாக தெரிகிறது. இந்த நிலையில் இன்று அதிகாலை தனலட்சுமி தனது வீட்டின் அருகில் வசிப்பவர்களை அழைத்தார். சிறிது நேரம் கழித்து அக்கம்பக்கத்தினர் சென்று பார்த்த போது தனலட்சுமி மாயமாகி இருந்தார்.

    அவர் வீட்டில் உள்ள கிணற்றில் பிணமாக கிடந்தார். கிணற்றின் அருகில் நாற்காலியும் கிடந்தது.

    கிணற்றின் பக்கவாட்டு சுவர் உயரம் என்பதால் தனலட்சுமி நாற்காலி மீது ஏறி கிணற்றுக்குள் குதித்து தற்கொலை செய்து இருப்பது தெரிய வந்தது.

    இதுகுறித்து பொன்னேரி தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. நிலைய அதிகாரி சம்பத் மற்றும் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து கயிறுகட்டி தனலட்சுமியின் உடலை மீட்டனர்.

    பின்னர் பிரேத பரிசோதனைக்காக பொன்னேரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். தனலட்சுமி எதற்காக தற்கொலை செய்து கொண்டார் என்பது தெரியவில்லை. தனிமையில் வசித்ததால் மனவேதனையில் தற்கொலை செய்தாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்று பொன்னேரி போலீசார் மேலும் விசாரித்து வருகின்றனர்.

    • கடந்த ஒரு ஆண்டாக சீதாலட்சுமிக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளன.
    • இதனால் விரக்தியடைந்த சீதாலட்சுமி தான் யாருக்கும் பாரமாக இருக்க விரும்பவில்லை என கூறி வந்துள்ளர்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் கோபிசெட்டி பாளையத்தை அடுத்துள்ள சதுமுகை பகுதியை சேர்ந்தவர் துரைசாமி (65). இவரது மனைவி சீதாலட்சுமி (60). இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். இருவருக்கும் திருமணமாகி விட்டது.

    இந்த நிலையில் கடந்த ஒரு ஆண்டாக சீதாலட்சுமிக்கு நெஞ்சுவலி, மூச்சுத்திணறல் உள்ளிட்ட உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளன. இதனால் விரக்தியடைந்த சீதாலட்சுமி தான் யாருக்கும் பாரமாக இருக்க விரும்பவில்லை என கடந்த சில நாட்களாக கூறி வந்துள்ளர்.

    இந்த நிலையில் சம்பவத்தன்று அதிகாலையில் சீதாலட்சுமி வீட்டில் இருந்து மாயமானார். இதையடுத்து அப்பகுதியில் உள்ள சி.சி.டி.வி. கேமிரா பதிவுகளை ஆய்வு செய்ததில் சீதாலட்சுமி வீட்டில் இருந்து வெளியேறி, கொடிவேரியை நோக்கி நடந்து செல்வது பதிவாகி இருந்தது தெரியவந்தது.

    இதையடுத்து கொடிவேரி-அரக்கன் கோட்டை பகுதியில் தேடியும் சீதாலட்சுமி கிடைக்கவில்லை.

    இந்த நிலையில் அரக்கன் கோட்டை வாய்க்காலில் தண்ணீர் நிறுத்தப்பட்டதையடுத்து டி.ஜி.புதூர் நால்ரோட்டுக்கும், ஏழூருக்கும் இடையில் கந்தப்ப கவுண்டர் என்பவரது நெல் வயல் அருகில் வாய்க்காலில் சாய்ந்திருந்த கருவேல மரத்தில் சீதா லட்சுமியின் உடல் சிக்கி இருப்பது தெரியவந்தது.

    இது குறித்த தகவலின் பேரில் பங்களாபுதூர் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று சீதாலட்சுமியின் உடலை மீட்டு சத்தியமங்கலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    • பவானி ஆற்றில் பாப்பாத்தி தண்ணீரில் மூழ்கிய நிலையில் இறந்து கிடந்தார்.
    • பவானி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் பவானியை அடுத்துள்ள எர நாயக்கனூரைச் சேர்ந்தவர் பாப்பாத்தி (63). இவரது கணவர் பெரியமாரநாயக்கர். இவர்களது மகன் நந்தகோபால் (46).

    பெரிய மார நாயக்கர் கடந்த ஒரு மாதத்துக்கு முன்னர் உடல் நலக் குறைவால் இறந்துவிட்டார். இதனால் பாப்பாத்தி மன முடைந்த நிலையில் காணப்பட்டார்.

    இந்த நிலையில், மகன் நந்தகோபால் காலையில் எழுந்து பார்த்தபோது பாப்பாத்தியை காணவில்லை.

    சுற்றுவட்டாரப்பகுதியில் தேடியதில், பெரிய மோளபாளையம் பகுதியில் உள்ள பவானி ஆற்றில், பெண்கள் குளிக்கும் பகுதியில் பாப்பாத்தி தண்ணீரில் மூழ்கிய நிலையில் இறந்து கிடந்தார்.

    கணவர் இறந்த விரக்தியில் இருந்த பாப்பாத்தி ஆற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.இதுகுறித்து பவானி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    • தனது சொந்த அண்ணன் மகளே தனக்கு மருமகளாக வந்ததால் கவிதா மீது அன்னம் பாசமாக இருந்து வந்துள்ளார்.
    • சமீப காலமாக கவிதாவிற்கு அடிக்கடி உடல் நலக்குறைவு ஏற்பட்டு வந்துள்ளது. இதனால் அன்னம் மனமுடைந்து காணப்பட்டார்.

    கடையம்:

    தென்காசி மாவட்டம் கடையம் அருகே உள்ள ஐந்தாம்கட்டளை வடக்குத் தெருவை சேர்ந்தவர் மணிமுத்து. இவரது மனைவி அன்னம் (வயது 88). இவர்களது மகன் கண்ணன் (55). அன்னம் தனது சகோதரர் மகளான கவிதா என்பவரை கண்ணனுக்கு திருமணம் செய்து வைத்துள்ளார்.

    தனது சொந்த அண்ணன் மகளே தனக்கு மருமகளாக வந்ததால் கவிதா மீது அன்னம் பாசமாக இருந்து வந்துள்ளார். சமீப காலமாக கவிதாவிற்கு அடிக்கடி உடல் நலக்குறைவு ஏற்பட்டு வந்துள்ளது. இதனால் அன்னம் மனமுடைந்து காணப்பட்டார்.

    இதற்கிடையே கடந்த சில நாட்களாக அன்னத்தின் கனவில் அவர் இறந்தால் உனது மருமகள் உடல் நலம் சீராகும் என அசரீரி தோன்றியதாக தனது மகன் கண்ணனிடம் கூறி வந்துள்ளார். இந்நிலையில் வாழ்க்கையில் வெறுப்படைந்த அன்னம் நேற்று தனது உடலில் மண்எண்ணெய் ஊற்றி தீக்குளித்தார். இதில் உடல் கருகி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

    இதுகுறித்து தகவலறிந்த கடையம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தென்காசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மருமகள் உடல்நலம் சீராக வேண்டி மூதாட்டி தற்கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பரிதாபத்தை ஏற்படுத்தி உள்ளது.

    • தாய் சடையம்மாள் மகனுடன் வசித்து வந்தார்.
    • கடந்த ஒரு மாதமாக சடையம்மாளுக்கு அடிக்கடி வயிற்று வலிவந்தது.

    கள்ளக்குறிச்சி:

    சின்னசேலம் அருகே வானகொட்டாய் பகுதியே சேர்ந்தவர் கோவிந்தன். இவரது தாய் சடையம்மாள் (வயது 77). இவர் மகனுடன் வசித்து வந்தார். கடந்த ஒரு மாதமாக சடையம்மாளுக்கு அடிக்கடி வயிற்று வலிவந்தது. இதனால் மனமுடைந்த சடையம்மாள் விஷம் குடித்து தற்கொலை செய்தார்.

    • உடல் நலம் பாதிக்கப்பட்டதால் விரக்தி.
    • ேபாலீசார் விசாரணை

    கலவை:

    ராணிப்பேட்டை மாவட்டம் கலவையை அடுத்த அத்தியா னம் கிராமத்தை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியம். இவரது மனைவி பானுமதி (வயது 70). இவர் தனியாக வசித்து வந்தார். இவரது மகள் உமா அத்தியாயம் ஊராட்சி மன்ற துணைத் தலைவராக உள்ளார். பானுமதி சில நாட்களாக உடல் நலம் பாதிக்கப்பட்டு இருந்துள்ளார்.

    இந்த நிலையில் நேற்று முன் தினம் இரவு 12 மணி அளவில் உடல் மீது மண்எண்ணெய் ஊற்றி தீ வைத்துக் கொண்டுள்ளார். இதில் வலிதாங்க முடி யாமல் வெளியே ஓடி உள்ளார். இதை பார்த்த அக்கம் பக்கத்தினர் தீயை அணைத்து வாலாஜா அரசு மருத்துவமனையில் சேர்த்து, பின்னர் மேல் சிகிச்சைக்காக வேலூர் அடுக் கம்பாறை மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.

    அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று காலை உயிரிழந்தார். இதுகுறித்து ஊராட்சி மன்ற துணைத் தலைவர் உமா கலவை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் சப்- இன்ஸ்பெக்டர் சரவணமூர்த்தி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    ×