search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நாட்டறம்பள்ளியில் மூதாட்டி தற்கொலை
    X

    நாட்டறம்பள்ளியில் மூதாட்டி தற்கொலை

    • 10 பிள்ளைகள் இருந்தும் கவனிக்க ஆளில்லாததால் பரிதாபம்
    • உடலை போலீசார் அவரது மகனிடம் ஒப்படைத்தனர்

    ஜோலார்பேட்டை:

    நாட்டறம்பள்ளி அருகே 10 பிள்ளைகள் இருந்தும் கவனிக்க ஆளில்லாததால் தாய் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    முதியோருக்கு இன்றைய சூழலில் ஏற்படும் துன்பங்கள் சமூக பிரச்னையாக உருவெடுத்து உள்ளது. லட்சக்கணக்கான முதியோர், ஆதரவின்றி தவித்து வருகின்றனர்.

    முதியோருக்கு அடிப்படை சுதந்திரத்தை வழங்க வலியுறுத்தி ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 1-ந் தேதி, உலக முதியோர் தினம் கடைபிடிக்கப்படுகிறது.

    இன்றைய பரபரப்பான உலகில் குடும்ப உறவுகள் என்பது பழங்காலம் போல் இல்லை. பெற்ற பிள்ளை களால் கைவிடப்பட்டு, பொருளா தாரத்தாலும் பாதிக்கப்பட்டு, அனாதைகளை போல வாழும் நிலைக்கு முதி யோர்கள் தள்ளப்பட்டுள்ளனர்.

    முதியோர்கள் இல்லாமல் வாழ நினைக்கும் இந்த காலத்தினருக்கு, கூட்டு குடும்பத்துடன் வாழும் சந்தோசமும் மன நிறைவும் கிடைப்பதில்லை.

    எந்திரத்தை போல் மாறிப்போன இன்றைய வாழ்க்கை முறையில், முதியோர்களை கவனிக்கவும் பாதுகாக்கவும் தவறி விடுகின்றனர்.

    பெற்றவர்களை பாதுகாக்க அவரவர் பிள்ளைகள் முன்வர வேண்டும். பிள்ளைகள் நல்ல வசதியோடு இருந்தும், பெற்றோர்களை தாங்களே பார்த்துக்கொள்ளாமல் முதியோர் இல்லங்களில் சேர்க்கும் கொடுமையும் நம் நாட்டில் அதிகரித்து வருகிறது.

    பெற்றவர்களை முதியோர் இல்லத்தில் சேர்ப்பது இன்றைய காலத்தில் பேஷனாக மாறிவிட்டது. கவனித்துக் கொள்ள விரும்பாத நிலையில் பெற்ற பிள்ளைகளை, பெற்றோரை முதியோர் இல்லத்தில் சேர்க்கும் நிலை தமிழ் கலாச்சாரத்தை படிப்படியாக அழித்து வருகிறது.

    பிள்ளைகள் கவனிக்காமல் நடுத்தெருவிலும், முதியோர் இல்லத்திலும் கொண்டு சேர்ப்பதால் பெரும்பாலும் மன உளைச்சலுக்கு ஆளாகி தற்கொலை செய்து கொள்கின்றனர்.

    பெற்ற பிள்ளைகளே கவனிக்கவில்லை என்றால், அவர்களை பாதுகாக்கும் பொறுப்பு யாரை சேரும் என்ற கேள்விகளுக்கு பதில் இல்லை. முதியோர்கள் தற்கொலை செய்து கொள்ளும் சம்பவம், நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

    கர்நாடகா மாநிலம், கே.ஜி.எப். அருகே உள்ள துருளிசி பகுதியைச் சேர்ந்த ராமப்பா மனைவி ஜெயாயம்மாள் (வயது 72). ஜெயம்மாளுக்கு 10 பிள்ளைகள் உள்ளனர். கணவன் இறந்த பிறகு பெற்ற பிள்ளைகளும் சரிவர கவனிக்கவில்லை.

    தள்ளாடும் வயதில் உழைத்து சாப்பிடவும் தெம்பு இல்லை. இதனால் ஜெயம்மாள் உறவினர் வீடுகளுக்கு அழைக்க ப்படாத விருந்தாளியாக சென்று தங்கி வந்துள்ளார்.

    உறவினர் வீடுகளிலும் சரி வர கவனிப்பில்லா ததால், அனாதைப்போல் சாலைகளில் சுற்றி திரிந்து சாப்பிட உணவு இன்றி பரிதவித்துள்ளார்.

    இவர் நாட்டறம்பள்ளி அடுத்த நந்திபெண்டா பகுதியில் உள்ள தனது குல தெய்வம் நந்தீஸ்வரன் கோவிலுக்கு அடிக்கடி சாமி கும்பிட வந்துள்ளார்.

    அதன்படி கர்நாடகாவில் இருந்து ஜெயம்மாள் கடந்த 22-ந் தேதி நந்தி கொண்ட பகுதியில் உள்ள குலதெய்வம் கோவிலுக்கு வந்தார். பெற்ற பிள்ளைகள் கவனிக்காததை கடவுளிடம் கூறி அழுது புலம்பி உள்ளார்.

    இதனை அந்த வழியாக சென்ற மக்கள் பார்த்துள்ளனர். பெற்ற பிள்ளைகள் கைவிட்ட நிலையில், வாழ வழியும் இல்லாததால் வாழ்வில் விரக்தி அடைந்த ஜெயம்மாள் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தார்.

    பையனப்பள்ளி சுடுகாட்டுக்கு சென்று, அங்குள்ள மரத்தில் புடவையை கொண்டு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். போலீசார் உடலை மீட்டு விசாரித்ததில் அவர் யார் என்பது தெரிய வந்தது.

    இதனை அடுத்து பிரேத பரிசோதனை செய்யப்பட்ட ஜெயம்மாள் உடலை, போலீசார் அவரது மகனிடம் ஒப்படைத்தனர். தவமிருந்து பெற்றெடுத்த 10 பிள்ளைகளும் கவனிக்காததால், வாழ்வில் விரக்தி அடைந்து தாய் சுடுகாட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

    Next Story
    ×