search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Elderly woman commits suicide"

    • ஊட்டி-கோத்தகிரி சாலையில் தொட்டபெட்டா மலைசிகரம் உள்ளது.
    • மலையில் இருந்து குதிக்கும் பரபரப்பு வீடியோ காட்சிகள் வெளியாகின.

    கவுண்டம்பாளையம்:

    நீலகிரி மாவட்டம் ஊட்டி-கோத்தகிரி சாலையில் தொட்டபெட்டா மலைசிகரம் உள்ளது. நேற்றுவிடுமுறை தினம் என்பதால் ஏராளமான சுற்றுலா பயணிகள் அங்கு குவிந்து இருந்தனர்.

    அவர்கள் அங்கிருந்தபடி இயற்கையின் அழகையும், பள்ளத்தாக்கையும் பார்வையிட்டு ரசித்து கொண்டிருந்தனர்.அப்போது மூதாட்டி ஒருவர் காட்சிகோபுரத்திற்கு கீழ் பகுதியில், பாறைகள் நிறைந்த ஆபத்தான சரிவு பகுதியில் நின்றிருந்தார்.

    இதனை பார்த்த சுற்றுலா பயணிகள், சத்தம் போட்டு அவரை அங்கிருந்து வருமாறு கத்தினர். ஆனால் அவர் எதனையும் காதில் வாங்கி கொள்ளாமல், அங்கேயே நின்றிருந்தார்.சிறிது நேரத்தில், மூதாட்டி திடீரென பாறையில் இருந்து 500 அடி பள்ளத்திற்குள் குதித்தார். இதனை அங்கிருந்த சுற்றுலா பயணி ஒருவர் பார்த்து வீடியோ எடுத்துள்ளார்.

    பின்னர் அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவியது. இதை பார்த்த பலரும் அதிர்ச்சியடைந்தனர். இந்த வீடியோவை பார்த்து தேனாடுகம்பை போலீசார், தீயணைப்பு படையினருடன் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.

    பின்னர் வனத்துறையினர் உதவியுடன் பள்ளத்தாக்கு பகுதியில் கயிறு கட்டி இறங்கி உடலை தேடும் பணியில் ஈடுபட்டனர். அப்போது 500அ அடி பள்ளத்தில் அவரது உடல் இருப்பது கண்டறியப்பட்டது. இதையடுத்து கீழே சென்று, மூதாட்டியின் உடலை மேலே கொண்டு வரும் பணிகளில் ஈடுபட்டனர்.

    பின்னர் மாலையில் மூதாட்டியின் உடலை தொட்டில் கட்டி மேலே கொண்டு வந்தனர். தொடர்ந்து உடல் பிரேத பரிசோதனைக்காக ஊட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. மேலும் மூதாட்டி குதித்த இடத்தில் இருந்து ஒரு கைப்பையை கைப்பற்றினர். அதில் ரூ.16,500 மற்றும் ஆதார் கார்டு இருந்தது.

    இதுகுறித்து தேனாடுகம்பை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். முதற்கட்ட விசாரணையில், தற்கொலை செய்து கொண்டது கோவை தடாகம் கணுவாய் ராகவேந்திரா நகர் பகுதியை சேர்ந்த நல்லதம்பி என்பவரின் மனைவி லீலாவதி(62) என்பது தெரியவந்தது.

    தொடர்ந்து அவர் எதற்காக தற்கொலை செய்து கொண்டார் என்பது குறித்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், மூதாட்டி லீலாவதி 2 திருமணம் செய்தவர். அவர் தனது முதல் கணவரை கடந்த 30 வருடங்களுக்கு முன்பு பிரிந்து 2-வதாக நல்லதம்பி என்பவரை திருமணம் செய்து கணுவாய் பகுதியில் வாழ்ந்து வந்தார்.இதற்கிடையே நல்லதம்பியும் இறந்துவிடவே லீலா வதியை, நல்லதம்பியின் அக்கா மகன் தனது வீட்டில் வைத்து பராமரித்து வந்தார்.

    இந்த நிலையில் லீலாவதி தான் தனியாக வசித்து கொள்கிறேன் என்று கூறி, அதே பகுதியில் ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து வசித்தார். ஆனாலும் யாரிடமும் பேசுவதில்லை. கணவர் இறந்த பின்பு யாரிடமும் பேசாமல் தனிமையிலும், மன வருத்தத்திலேயுமே லீலாவதி இருந்ததாக கூறப்படுகிறது.

    சம்பவத்தன்று தனது கணவரின் அக்கா மகனை சந்தித்து, தான் வீட்டை காலி செய்து விட்டேன். இந்த பணத்தை வைத்து கொள் என வீட்டிற்கு கொடுத்த அட்வான்ஸ் பணத்தை கொடுத்துள்ளார்.

    பின்னர் வெளியில் சென்று விட்டு வருவதாக கூறி சென்றுள்ளார். ஆனால் நீண்ட நேரமாக வரவில்லை. தற்போது பாறையில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டதும், போலீசாரின் தெரியவந்துள்ளது. மன அழுத்தத்தில் தற்கொலை செய்து கொண்டிருப்பதாக கூறப்படுகிறது. இருப்பினும் அதுதான் காரணமா? வேறு ஏதாவது என்பது குறித்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    ×