search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மின்சாரம்"

    • சேவூர் மற்றும் வடுகபாளையம் துணை மின் நிலையப்பகுதிகளில் நாளை (புதன்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது
    • நாளை காலை 9 மணிமுதல் மாலை 4 மணிவரை மின் வினியோகம் தடை செய்யப்படும்.

    திருப்பூர்:

    அவினாசி மின்சார வாரிய செயற்பொறியாளர் பரஞ்சோதி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-

    சேவூர் மற்றும் வடுகபாளையம் துணை மின் நிலையப்பகுதிகளில் நாளை (புதன்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. எனவே நாளை காலை 9 மணிமுதல் மாலை 4 மணிவரை சேவூர், அசநல்லிபாளையம், பந்தம்பாளையம், சூரிபாளையம், ராமியம்பாளையம், புலிப்பார், போத்தம்பாளையம், சந்தைபுதூர், பாப்பான்குளம், வாலியூர், தண்ணீர் பந்தல்பாளையம், முதலிபாளையம், கூட்டப்பள்ளி, புஞ்சைத்தாமரைக்குளம், சாவக்கட்டுப்பாளையம், சாலைப்பாளையம், நடுவச்சேரி, கருக்கன்காட்டுப்புதூர், தளிஞ்சிபாளையம், மாரப்பம்பாளையம், வடுகபாளையம், அய்யம்பாளையம், நஞ்சைத்தாமரைக்குளம், பிச்சாண்டம்பாளையம், ஒட்டப்பாளையம், ஓலப்பாளையம் ஆகிய பகுதிகளில் மின் வினியோகம் தடை செய்யப்படும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • வின்சென்ட்ராஜ் அலங்கார மின்விளக்கு அமைக்கும் பணியில் ஈடுபட்டார்.
    • வின்சென்ட் ராஜை பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினார்.

    சங்கராபுரம் அடுத்த தொண்டநந்தல் கிராமத்தை சேர்ந்த வின்சென்ட்ராஜ் (வயது 23). இவரது அண்ணன்கள் ராபர்ட்நஸ்ரின், பிரவீன்குமார் ஆவார். இவர்கள் சவுண்ட் சர்வீஸ் கடை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் சங்கராபுரம் அடுத்த விரியூர் கிராமத்தில் நடைபெற்ற காதணி விழாவில் வின்சென்ட்ராஜ் அலங்கார மின்விளக்கு அமைக்கும் பணியில் ஈடுபட்டார். அப்போது எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கி வின்சென்ட்ராஜ் தூக்கி வீசப்பட்டார்.

    உடன் அருகில் இருந்தவர்கள், அவரை மீட்டு சங்கராபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு வின்சென்ட் ராஜை பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினார். இது குறித்து சங்கராபுரம் போலீஸ் நிலையத்தில் ராபர்ட்நஸ்ரின் அளித்த புகாரின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் சந்தியா வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    • சென்னையை சேர்ந்த சோலைராஜ் மயிலாடுதுறையில் வேைல பார்த்து வந்தார்.
    • மின் விளக்கை அருகில் வைத்துக்கொண்டு பெயிண்டிங் வேலை செய்தார்.

    மயிலாடுதுறை:

    மயிலாடுதுறை சென்னை அயனாவரம் சோலை நகர் 3-வது தெருவை சேர்ந்தவர் கண்ணதாசன்.

    இவரது மகன் சோலைராஜ் (வயது 32). பெயிண்டர்.

    இவர் தற்போது மயிலாடுதுறை காந்திஜி சாலையில் கட்டப்பட்டு வரும் வணிக வளாக கட்டிடத்தில் பெயிண்டிங் வேலை செய்து வந்தார்.

    நேற்று முன்தினம் வெளிச்சத்திற்காக ஒரு மரத்தில் பொருத்தப்பட்டிருந்த மின் விளக்கை அருகில் வைத்துக்கொண்டு பெயிண்டிங் வேலை செய்தார்.

    அப்போது மின்விளக்கை சற்று நகர்த்தியதில் எதிர்பாராத விதமாக சோலைராஜ் மீது மின்சாரம் பாய்ந்தது.

    இதில் தூக்கி வீசப்பட்ட சோலைராஜ் மயங்கி விழுந்தார்.

    இதனை பார்த்த சக தொழிலாளர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக மயிலாடுதுறை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

    அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள் சோலைராஜ் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இது குறித்து மயிலாடுதுறை போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வம் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    • ஸ்டீல் டேப்பை இழுத்து விட்டு விளையாடி கொண்டிருந்ததாக தெரிகிறது.
    • மேல்புறம் செல்லும் மின் கம்பியில் ஸ்டீல் டேப் பட்டு மின்சாரம் அவர்மேல் பாய்ந்துள்ளது.

    ஊத்துக்குளி:

    திருப்பூர் அருகேயுள்ள உள்ள முதலிபாளையம் அங்காள பரமேஸ்வரி நகரில் ஒடிசா மாநிலத்தை சேர்ந்த பிகாஷ் கவுடா (வயது 17) என்பவர் தனது குடும்பத்துடன் தங்கி கட்டிட வேலை செய்து வருகிறார். சம்பவத்தன்று பிகாஷ் கவுடா கட்டிடத்தில் உள்ள ஜன்னல் பக்கத்தில் அருகே விட்டத்தில் கட்டிட வேலைக்கு பயன்படுத்தும் ஸ்டீல் டேப்பை இழுத்து விட்டு விளையாடி கொண்டிருந்ததாக தெரிகிறது.

    அப்போது வீட்டிற்கு வெளியே மேல்புறம் செல்லும் மின் கம்பியில் ஸ்டீல் டேப் பட்டு மின்சாரம் அவர்மேல் பாய்ந்துள்ளது. இதில் தூக்கி வீசப்பட்ட அவரை அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் விரைந்து வந்து மீட்டு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளித்தனர் . பின்னர் மேல் சிகிச்சைக்காக திருப்பூர் மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்த புகாரின் பேரில் ஊத்துக்குளி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • ஜெயங்கொண்டம் மின்சார துணை மின் நிலையத்தில்புதிய இணைப்புகள் வழங்கப்படவில்லை
    • மீட்டர்கள் 3மாதம் வரவில்லை என மின் அதிகாரிகள் அலட்சிய பதில்

    ஜெயங்கொண்டம், 

    அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் மின்சார வாரிய துணைமின் நிலையத்தில் மூலமாக சுமார் 20க்கும் மேற்பட்ட கிராமங்களில் மின் இணைப்புகள் வழங்கப்பட்டு பல்வேறு விவசாயிகள் சிறு குறு தொழிலாளிகள் சுய தொழில் செய்பவர்கள் உள்ளிட்ட பொதுமக்கள் பல்வேறு மின்சார இணைப்புகள் மூலம் பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் ஜெயங்கொண்டம் சுற்று வட்டார பகுதியில் இருந்து சுமார் 120க்கும் மேற்பட்ட புதிய இணைப்புகளுக்கான விண்ணப்பங்கள் புதிய வீடு கட்டுபவர்கள் தொழில் செய்பவர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் புதிய இணைப்பு ஆன்லைன் மூலம் பதிவு செய்யப்பட்டு ஜெயங்கொண்டம் துணை மின் நிலையத்தில் படிவங்கள் அளிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் சுமார் மூன்று மாதத்திற்கு மேலாக மீட்டர் (மின் அளவி) இதுவரை வழங்கப்படவில்லை இதனால் மூன்று மாதங்களாக புதிய மின் இணைப்பு பெற முடியாமல் சுய தொழில் செய்பவர்கள், பொதுமக்கள் பாதிப்புக்குள்ளாவதாக தெரிவித்தனர். மேலும் புதிய இணைப்பு படிவம் கொடுத்தவர்கள் துணை மின் நிலையத்திற்கு சென்று அலைக்கழிக்கப்பட்டு வருவதாகவும் அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் புதிய மின் இணைப்பு கேட்டுவருபவர்களிடம் அலட்சியப்படுத்தும் விதமாக பதில் அளித்து வருவதாகவும் புதிய மின் நுகர்வோர் வேதனை தெரிவித்துள்ளனர். பொதுமக்களுடைய அவசியத்தை மனதில் கொண்டு மின்சாரத்துறை சார்ந்த அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பல்வேறு சமூக ஆர்வலர்கள் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • மணிகண்டன் காலை 7 மணியளவில் தனக்கு சொந்தமான நிலத்திற்கு சென்றார்.
    • மணிகண்டன் மீது பாய்ந்து தூக்கி வீசப்பட்ட அவர் சம்பவ இடத்திலேயே பலியானார்.

    விழுப்புரம்:

    மரக்காணம் அருகே நடுக்குப்பம் திரவுபதி அம்மன் கோவில் வீதியை சேர்ந்தவர் மணிகண்டன் (வயது 45). விவசாயி. இவர் இன்று காலை 7 மணியளவில் தனக்கு சொந்தமான நிலத்திற்கு சென்றார். அங்கு உயர்மின் அழுத்த கம்பி தாழ்வாக சென்றது. இக்கம்பி நிலத்தில் இருந்த தென்னை மரத்தில் உரசி சென்றது. இந்த மரத்தின் தென்னை ஓலை நிலத்திற்கு செல்லும் வழியில் படர்ந்து இருந்தது.

    அந்த வழியில் நடந்து சென்ற விவசாயி மணிகண்டன், வழியில் படர்ந்திருந்த தென்னை ஓலையை நகர்த்திவிட்டு செல்ல முயற்சித்தார். தென்னை மரத்தில் பாய்ந்த உயர் மின் அழுத்த மின்சாரம், மணிகண்டன் மீது பாய்ந்து தூக்கி வீசப்பட்ட அவர் சம்பவ இடத்திலேயே பலியானார். இதனை பார்த்த பக்கத்து நில உரிமையாளர்கள், இது தொடர்பாக மணிகண்டன் குடும்பத்தாருக்கும், மரக்காணம் போலீசாருக்கும் தகவல் கொடுத்தனர்.

    அங்கு வந்த விவசாயி மணிகண்டன் குடும்பத்தார் கதறி அழுத காட்சி காண்போரின் மனதை கலங்கடித்தது. சம்பவ இடத்திற்கு வந்த மரக்காணம் போலீசார் மணிகண்டன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக புதுவை மாநிலம் கனகசெட்டிக்குளம் தனியார் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சம்பவம் நடந்த பகுதியில் உயர் மின் அழுத்த கம்பிகள் தாழ்வாக செல்கிறது என மின்துறை அலுவலகத்தில் பலமுறை புகார் கொடுத்துள்ளோம். இதனை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சரி செய்தி ருந்தால் மின்சாரம் தாக்கி உயிரிழப்பு ஏற்பட்டிருக்காது அப்பகுதி விவசாயிகள் தெரிவித்தனர்.

    • காட்டுக்கொட்டாயை சேர்ந்த நடராஜன் கட்டிட தொழிலாளி.
    • எதிர்பாராத விதமாக நடராஜன் மீது மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்டார்.

    கள்ளக்குறிச்சி:

    சங்கராபுரம் அருகே நெடுமானூர் கிராமம் காட்டுக்கொட்டாயை சேர்ந்தவர் நடராஜன் (வயது43) கட்டிட தொழிலாளி. இவருடைய மனைவி ராஜாத்தி (38). இவர்களுக்கு 2 மகள்களும், ஒரு மகனும் உள்ளனர். இந்நிலையில் நடராஜன், தனது வீட்டில் பழுதடைந்த மின்விசிறியை சரி செய்யும் பணியில் ஈடுபட்டார். அப்போது எதிர்பாராத விதமாக நடராஜன் மீது மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்டார். இதில் பலத்த காயமடைந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக சங்கராபுரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு நடராஜனை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்த புகாரின்பேரில் சங்கராபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்விநியோகம் இருக்காது.
    • மாதாந்திர பராமரிப்பு பணிக்காக மின்தடை நிறுத்தப்படும்.

    திருப்பூர்:

    திருப்பூர் மின்சார வாரிய செயற்பொறியாளர்எஸ்.ராமச்சந்திரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-

    திருப்பூர் குமார்நகர்,சந்தைப்பேட்டை துணைமின்நிலையங்களில் நாளை (சனிக்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. எனவே நாளை காலை 9 மணிமுதல் மாலை 4 மணிவரை குமார் நகர் துணை மின்நிலையத்திற்குட்பட்ட ராமமூர்த்திநகர்,பி.என். ரோடு, ராமையா காலனி, ரங்கநாதபுரம், ஈ.ஆர்.பி.நகர், கொங்கு நகர்,அப்பாச்சிநகர், கோல்டன் நகர், பவானி நகர், திருநீலகண்டபுரம், எஸ்.வி.காலனி, பண்டிட் நகர், கொங்கு மெயின்ரோடு, வ.உ.சி.நகர், டி.எஸ்.ஆர். லே அவுட், முத்துநகர், பிரிட்ஜ்வே காலனி, குத்தூஸ்புரம், என்.ஆர்.கே.புரம், வெங்கடேசபுரம், குமரானந்தபுரம்,டீச்சர்ஸ் காலனி, 60 அடி ரோடு, இட்டேரி ரோடு, அருள்ஜோதிபுரம், நெசவாளர் காலனி, திருமலைநகர், சந்திராகாலனி, முருகானந்தபுரம், எம்.எஸ்.நகர், புதிய பஸ்நிலையம் மற்றும் லட்சுமிநகர்.

    சந்தைப்பேட்டை துணை மின்நிலையத்திற்குட்பட்ட அரண்மனைப்புதூர்,தட்டான்தோட்டம்,எம்.ஜி.புதூர், கரட்டாங்காடு, அரசு மருத்துவமனை, ெஷரீப் காலனி, தாராபுரம் ரோடு, பல்லடம் ரோடு, தென்னம்பாளையம், கல்லாங்காடு, வெள்ளியங்காடு, கே.எம்.நகர், கே.எம்.ஜி.நகர், பட்டுக்கோட்டையார் நகர்,திரு.வி.க.நகர், கருப்பக்கவுண்டம்பாளையம், கோபால்நகர், பெரிச்சிபாளையம்,கருவம்பாளையம், ஏ.பி.டி.நகர், கே.வி.ஆர்.நகர், பூச்சக்காடு, மங்கலம் ரோடு, பெரியார்காலனி, சபாபதிபுரம், வாலிபாளையம், ஊத்துக்குளி ரோடு, யூனியன் மில்ரோடு, மிஷின் வீதி, காமராஜர் ரோடு, புதுமார்க்கெட் வீதி, ராயபுரம் ஸ்டேட் பாங்க் காலனி, காதர்பேட்டை, செட்டிபாளையம், பழவஞ்சிபாளையம், சந்திராபுரம், புதூர் மெயின்ரோடு, தாராபுரம் ே்ராடு, கரட்டாங்காடு, செரங்காடு, டி.ஏ.பி.நகர், என்.பி.நகர், காளிநாதம்பாளையம், பழவஞ்சிபாளையம் ஆகிய பகுதிகளில் மின் வினியோகம் தடை செய்யப்படும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • ஊராட்சிக்கு உட்பட்ட ஆழ்துளை கிணறு மின் மோட்டார் இயங்கவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது
    • உயர் அழுத்த மின்சார கம்பியை தொட்டதில் தூக்கி வீசப்பட்டு உடல் கருகி பெரியசாமி பரிதாபமாக உயிரிழந்தார்.

    பல்லடம்:

    பல்லடம் அருகே உள்ள பொங்கலூர் நாச்சிபாளையம் ஊராட்சி புள்ளியாண்டம்பாளையத்தை சேர்ந்த சடையப்பன் என்பவரது மகன் பெரியசாமி (வயது 44). இவர் அந்த பகுதியில் எலக்ட்ரீசியனாக வேலை செய்து வந்தார். இந்தநிலையில் நேற்று நாச்சிபாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட ஆழ்துளை கிணறு மின் மோட்டார் இயங்கவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் அங்கு அவருடன் குடிநீர் வினியோகம் செய்யும் பணியாளர் ஒருவரும் உடன் சென்றுள்ளார்.

    இந்தநிலையில் டிரான்ஸ்பார்மரை நிறுத்திவிட்டு எலக்ட்ரீசியன் பெரியசாமி மின் கம்பத்தில் ஏறி உள்ளார். அப்போது அந்த வழியாக சென்ற உயர் அழுத்த மின்சார கம்பியை தொட்டதில் தூக்கி வீசப்பட்டு உடல் கருகி பெரியசாமி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து அவினாசி பாளையம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் பெரியசாமியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். மின்சார வாரிய ஊழியர்கள் கவனத்திற்கு வராமல் தாமாக சென்று பழுதை சரி செய்ய மின்கம்பத்தில் ஏறி உயிரிழந்த சம்பவம் அந்தப் பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    • அன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணிவரை இந்த துணை மின்நிலையங்களில் மின்சாரம் நிறுத்தம் செய்யப்படுகிறது.
    • 11-ந்தேதி மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது

     திருப்பூர்:

    திருப்பூர் மின்சார வாரிய செயற்பொறியாளர் எஸ்.ராமச்சந்திரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-

    முதலிபாளையம், பழவஞ்சிபாளையம், நல்லூர், அலகுமலை துணை மின் நிலையங்களில் வருகிற 11-ந்தேதி மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. எனவே அன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணிவரை இந்த துணை மின்நிலையங்களில் மின்சாரம் நிறுத்தம் செய்யப்படுகிறது.

    முதலிபாளையம் துணை மின்நிலையத்திற்குட்ட சிட்கோ, பொன்னாபுரம், முதலிபாளையம், ராக்கியாபாளையம், நல்லூர், மண்ணரை, பாரப்பாளையம், கோல்டன்நகர், ஆர்.வி.இ. நகர், கூலிப்பாளையம், காசிபாளையம், சர்க்கார் பெரியபாளையம், பெட்டிக்கடை, சென்னிமலைபாளையம், ரெங்காகவுண்டம்பாளையம், விஜயாபுரம், மானூர், செவந்தாம்பாளையம்.

    நல்லூர் துணை மின் நிலையத்திற்குட்பட்ட நல்லூர், காளிபாளையம், சாணார்பாளையம், முத்தணம்பாளையம், மற்றும் ராக்கியாபாளையம் பிரிவு, பழவஞ்சிபாளையம் துணை மின் நிலையத்திற்குட்பட்ட செட்டிபாளையம், பழவஞ்சிபாளையம், பூங்கா நகர், பாலாஜிநகர், அய்யப்பா நகர் மற்றும் அலகுமலை துணை மின்நிலையத்துக்குட்பட்ட பொல்லிகாளிபாளையம், முத்தணம்பாளையம், அலகுமலை, பெருந்தொழுவு, நாச்சிப்பாளையம், கைகாட்டி, தொங்குட்டிபாளையம், கண்டியன்கோவில், மீனாட்சி வலசு, மருதுரையான்வலசு, முதியாநெரிச்சல், மணியாம்பாளையம், கந்தாம்பாளையம், கரியாம்பாளையம், ஆண்டிப்பாளையம், சென்னிமலைபாளையம் பிரிவு, காளிபாளையம், விஜயாபுரம், திருநகர், யாசின்பாபு நகர், காங்கேயம்பாளையம், குப்பாண்டம்பாளையம், வசிவரம்புதூர், கோவில்வழி ஆகிய பகுதிகளில் மின் வினியோகம் தடை செய்யப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெற இருப்பதால் மின்தடை செய்யப்படுகிறது.
    • காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின் விநியோகம் இருக்காது.

    அவிநாசி

    சேவூா், வடுகபாளையம் துணை மின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெற இருப்பதால், கீழ்க்கண்ட பகுதிகளில் நாளை 5 -ந் தேதி (புதன்கிழமை) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின் விநியோகம் இருக்காது என மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.

    மின் தடை ஏற்படும் பகுதிகள்

    சேவூா் துணை மின் நிலையம்: சேவூா், ராமியம்பாளையம், அசநல்லிப்பாளையம், புலிப்பாா், போத்தம்பாளையம், சந்தைப்புதூா், பந்தம்பாளையம், சூரிபாளையம், பாப்பங்குளம், வாலியூா், தண்ணீா்பந்தல்பாளையம், முதலிபாளையம், கூட்டப்பள்ளி, புஞ்சை தாமரைகுளம், சாவக்கட்டுப்பாளையம், நடுவச்சேரி, சாலைப்பாளையம், கருக்கங்காட்டுப்புதூா், தளிஞ்சிப்பளையம் மற்றும் மாரப்பம்பாளையம்.

    வடுகபாளையம் துணை மின் நிலையம்: வடுகபாளையம், அய்யம்பாளையம், நஞ்சை தாமரைகுளம், பிச்சாண்டாம்பாளையம், ஒட்டா்பாளையம் மற்றும் ஓலப்பாளையம்.

    • கிராம மக்களுக்கு தடையின்றி குடிநீர் பெற தண்ணீர் பம்பிங் நிலையம், 24 மணி நேரமும் தடையில்லாமல் மின்சார வசதி, குடிநீர் வசதி ஏற்படுத்தப்பட்டது.
    • குடிநீர், உடல் ஆரோக்கியம் மற்றும் மருத்துவ வசதி உள்ளிட்டவை கிடைப்பதற்கு முழு ஈடுபாட்டுடன் செயல்பட்டு வருகிறது.

     தாராபுரம்:

    திருப்பூர் மாவட்டம் தாராபுரம் பூளவாடி சாலையில் உள்ள மடத்துப்பாளையம் பகுதியில் ஆற்றல் அறக்கட்டளை சார்பில் தொப்பம்பட்டி உள்ளிட்ட 9 கிராம மக்களுக்கு தடையின்றி குடிநீர் பெற தண்ணீர் பம்பிங் நிைலயம், 24 மணி நேரமும் தடையில்லாமல் மின்சார வசதி, குடிநீர் வசதி ஏற்படுத்தப்பட்டது.

    இதையடுத்து தடையில்லா மின்சாரம்- குடிநீர் வினியோகம் தொடக்க விழா நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு ஆற்றல் அறக்கட்டளை அசோக்குமார் தலைமை தாங்கினார். தொப்பம்பட்டி ஊராட்சி தலைவர் மற்றும் பொதுமக்கள் முன்னிலை வகித்தனர்.ஆற்றல் அசோக்குமார் குடிநீர் செல்லும் இணைப்பினை தொடங்கி வைத்து பேசியதாவது:-

    மக்களுக்கு அடிப்படை தேவை குடிநீர். இந்த பகுதியில் அமராவதி ஆற்றுப்பாசனம் இருந்தும் மும்முனை மின்சாரம் பழுதால் குடிநீர் கிடைக்காமல் சுமார் 9 கிராம பஞ்சாயத்துகளில் வசிக்கும் லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் தவிப்பதாக ஊர் தலைவர்கள் மூலமாகவும் கிராம பஞ்சாயத்து நிர்வாகிகள் மூலமாகவும் அறிந்தோம் . உடனடியாக மக்களின் முக்கிய தேவையாக உள்ள குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் சுமார் ரூ.3.50 லட்சம் செலவில் மின் இணைப்பு கருவிகள், உதிரி பாகங்கள் அனைத்தையும் வழங்கி மின்சார பணிகளை முடித்துவிட்டு 24 மணி நேரமும் மும்முனை மின்சாரம் கிடைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    இதன் மூலம் தொப்பம்பட்டி ஊராட்சி பெரிய குமார பாளையம், பெட்டிக்காம்பாளையம், வேலாயுதம்பாளையம், மருதூர் , மோனார்பட்டி உள்ளிட்ட 9கிராம பஞ்சாயத்து மக்களின் குடிநீர் தேவையை ஆற்றல் அறக்கட்டளை பூர்த்தி செய்வதில் மகிழ்கிறோம். ஆற்றல் அறக்கட்டளை சமுதாயத்தில் உள்ள அனைத்து தரப்பு மக்களுக்கும் முக்கிய தேவைகளான குடிநீர், உடல் ஆரோக்கியம் மற்றும் மருத்துவ வசதி உள்ளிட்டவை கிடைப்பதற்கு முழு ஈடுபாட்டுடன் செயல்பட்டு வருகிறது.

    அறக்கட்டளை மூலம் திருக்கோவில்கள் புனரமைப்பு, அரசு பள்ளிகள் மேம்பாடு, சமுதாயக்கூடங்கள் கட்டித் தருதல் போன்ற பணிகளை திருப்பூர் மாவட்டம் தாராபுரம் மட்டுமின்றி, மொடக்குறிச்சி, காங்கேயம் ,வெள்ளகோவில், முத்தூர், குண்டடம் மற்றும் ஈரோடு, நாமக்கல் பகுதிகளில் சிறப்பாக செய்து வருகிறோம். மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை முழுமையாக கிடைக்க தொடர்ந்து ஆற்றல் அறக்கட்டளை பெரும் உதவியாக இருக்கும். இந்த உதவியை பொதுமக்கள் சிறப்பாக பயன்படுத்தி பயனடைய வேண்டும் என்றார்.

    நிகழ்ச்சியில் பங்கேற்ற கிராம பஞ்சாயத்து நிர்வாகிகள், ஊர் தலைவர்கள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கையை நிறைவேற்றி கொடுத்த ஆற்றல் அசோக்குமாருக்கும் அவரது குழுவினர்களுக்கும் நன்றியை தெரிவித்தனர். நிகழ்ச்சியில் கிராம ஊராட்சி தலைவர்கள் லட்சுமி சரண்யா ,சேகர் ,மகேந்திரன், பி. கே. ராஜ், தேவி ,ரத்தின சாமி, முத்து பிரியா மற்றும் ஊர் தலைவர்கள், குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் பங்கேற்றனர்.

    ×