என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    புதிய மின் இணைப்புகள் வழங்க மறுப்பு
    X

    புதிய மின் இணைப்புகள் வழங்க மறுப்பு

    • ஜெயங்கொண்டம் மின்சார துணை மின் நிலையத்தில்புதிய இணைப்புகள் வழங்கப்படவில்லை
    • மீட்டர்கள் 3மாதம் வரவில்லை என மின் அதிகாரிகள் அலட்சிய பதில்

    ஜெயங்கொண்டம்,

    அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் மின்சார வாரிய துணைமின் நிலையத்தில் மூலமாக சுமார் 20க்கும் மேற்பட்ட கிராமங்களில் மின் இணைப்புகள் வழங்கப்பட்டு பல்வேறு விவசாயிகள் சிறு குறு தொழிலாளிகள் சுய தொழில் செய்பவர்கள் உள்ளிட்ட பொதுமக்கள் பல்வேறு மின்சார இணைப்புகள் மூலம் பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் ஜெயங்கொண்டம் சுற்று வட்டார பகுதியில் இருந்து சுமார் 120க்கும் மேற்பட்ட புதிய இணைப்புகளுக்கான விண்ணப்பங்கள் புதிய வீடு கட்டுபவர்கள் தொழில் செய்பவர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் புதிய இணைப்பு ஆன்லைன் மூலம் பதிவு செய்யப்பட்டு ஜெயங்கொண்டம் துணை மின் நிலையத்தில் படிவங்கள் அளிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் சுமார் மூன்று மாதத்திற்கு மேலாக மீட்டர் (மின் அளவி) இதுவரை வழங்கப்படவில்லை இதனால் மூன்று மாதங்களாக புதிய மின் இணைப்பு பெற முடியாமல் சுய தொழில் செய்பவர்கள், பொதுமக்கள் பாதிப்புக்குள்ளாவதாக தெரிவித்தனர். மேலும் புதிய இணைப்பு படிவம் கொடுத்தவர்கள் துணை மின் நிலையத்திற்கு சென்று அலைக்கழிக்கப்பட்டு வருவதாகவும் அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் புதிய மின் இணைப்பு கேட்டுவருபவர்களிடம் அலட்சியப்படுத்தும் விதமாக பதில் அளித்து வருவதாகவும் புதிய மின் நுகர்வோர் வேதனை தெரிவித்துள்ளனர். பொதுமக்களுடைய அவசியத்தை மனதில் கொண்டு மின்சாரத்துறை சார்ந்த அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பல்வேறு சமூக ஆர்வலர்கள் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    Next Story
    ×