search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மாணவி தற்கொலை"

    • நிவேதா வீட்டில் தனியாக இருந்த போது திடீரென்று பூச்சி மருந்து குடித்து மயங்கி கிடந்தார்.
    • சிகிச்சை பலனின்றி நேற்று இரவு பரிதாபமாக நிவேதா உயிரிழந்தார்.

    தருமபுரி,

    தருமபுரி மாவட்டம் கடத்தூர் சில்லாரஅள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் குமார். இவரது மகள் நிவேதா (வயது 18). இவர் அங்குள்ள தனியார் கல்லூரியில் நர்சிங் படித்து வந்தார்.

    இவர் கடந்த 27-ந் தேதி கல்லூரிக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்தார். இதனை அவரது தாய் கண்டித்து திட்டினார். இதனால் மனமுடைந்து காணப்பட்ட நிவேதா வீட்டில் தனியாக இருந்த போது திடீரென்று பூச்சி மருந்து குடித்து மயங்கி கிடந்தார்.

    உடனே அவரை உறவினர்கள் மீட்டு கடத்தூர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக தருமபுரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று இரவு பரிதாபமாக நிவேதா உயிரிழந்தார்.

    இந்த சம்பவம் குறித்து கடத்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கஞ்சா புகைக்கும் பழக்கம் உடைய சின்னா கடந்த வாரம் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.
    • காதலனின் நினைவால் துக்கம் தாங்காத மிசெல்லா மவுனிகா தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தார்.

    புதுச்சேரி:

    புதுச்சேரி மாநிலம் ஏனாம் பிராந்தியம் யு.கே.வி. நகரை சேர்ந்தவர் சிம்காசலம். இவரது மகள் மிசெல்லா மவுனிகா (வயது 22). பெற்றோரை இழந்த இவர் தனது மாமா கோட்டா தருமூர்த்திலு வீட்டில் தங்கியிருந்து பி.எஸ்சி. நர்சிங் 2-வது ஆண்டு படித்து வந்தார்.

    மிசெல்லா மவுனிகா குருசாம்பேட்டையை சேர்ந்த சின்னா என்பவரை காதலித்து வந்தார். கஞ்சா புகைக்கும் பழக்கம் உடைய சின்னா கடந்த வாரம் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.

    இதனால் மவுனிகா வேதனையில் இருந்து வந்தார். காதலனின் நினைவால் துக்கம் தாங்காத மிசெல்லா மவுனிகா தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தார். வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் ஒரு அறையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.

    இதுகுறித்து ஏனாம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • போலீசார் மாணவியை மீட்டு அறிவுரைகள் கூறி பெற்றோருடன் அனுப்பி வைத்தனர்.
    • வீட்டிற்கு சென்ற மாணவி தனது அறையில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    வடமதுரை:

    திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை அருகே உள்ள கம்பிளியம்பட்டியை சேர்ந்த செல்வராஜ்-தங்கம் தம்பதியின் மகள் ஜனனி(16). திண்டுக்கல்லில் உள்ள தனியார் கல்லூரியில் முதலாமாண்டு படித்து வந்தார். கடந்த 4 நாட்களுக்கு முன்பு திடீரென மாயமானார். இதுகுறித்து அவரது பெற்றோர் வடமதுரை போலீசில் புகார் அளித்தனர்.

    போலீசார் மாணவியை மீட்டு அறிவுரைகள் கூறி பெற்றோருடன் அனுப்பி வைத்தனர். வீட்டிற்கு சென்ற மாணவி தனது அறையில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து போலீசார் நடத்திய விசாரணையில் இவர் அதேஊரை சேர்ந்த சிவக்குமார்(19) என்ற வாலிபரை காதலித்து வந்துள்ளார்.

    அவரிடமிருந்து பிரித்து வந்ததால் வேதனையடைந்த மாணவி தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.

    • போலீசார் கீர்த்தனா உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
    • கடிதத்தை வைத்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    ராயபுரம்:

    புது வண்ணாரப்பேட்டை இருசப்பன் முதல் தெருவை சேர்ந்தவர் மேனகா (வயது 40) மாநகராட்சியில் வேலை பார்த்து வருகிறார். வாடகை வீட்டில் ஒரு மகள், மகன், தாத்தா, பாட்டி ஆகியோர் வசித்து வருகிறார்கள். இவரது மகள் கீர்த்தனா (17) தண்டையார்பேட்டையில் உள்ள தனியார் பள்ளியில் 12-ம் வகுப்பு படித்து வந்தார்.

    நேற்று பள்ளி முடிந்து வீட்டிற்கு திரும்பிய கீர்த்தனா அறைக்குச் சென்று வெகு நேரம் வெளியே வராததால் அவரது தம்பி சென்று பார்த்த போது கீர்த்தனா மின்விசிறியில் புடவையால் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரிந்தது. இது குறித்து புதுவண்ணாரப்பேட்டை போலீசார் கீர்த்தனா உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். கீர்த்தனா எழுதி வைத்த கடிதம் சிக்கியது.

    அந்த கடிதத்தில், நான் இந்த முடிவு எடுக்கறதுக்கு காரணம் என்னோட எக்கனாமிக் ஆசிரியர் தான் என்று எழுதி வைத்துள்ளார்.

    அந்த கடிதத்தை வைத்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • திவ்யா பிளஸ்-2 முடித்து விட்டு சங்கரன்கோவிலில் உள்ள ஒரு தனியார் ‘நீட்’ தேர்வு பயிற்சி மையத்தில் சேர்ந்தார்.
    • தற்கொலைக்கான காரணம் குறித்து குருவிகுளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    சங்கரன்கோவில்:

    தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள குருவிகுளத்தை அடுத்த செவல்குளம் தெற்கு தெருவை சேர்ந்தவர் சோமுதுரை. விவசாயி. இவருக்கு திவ்யா(வயது 17) என்ற மகள் உள்பட 3 குழந்தைகள் உள்ளனர்.

    திவ்யா பிளஸ்-2 முடித்து விட்டு சங்கரன்கோவிலில் உள்ள ஒரு தனியார் 'நீட்' தேர்வு பயிற்சி மையத்தில் சேர்ந்தார். சில மாதங்களாக அங்கு தினமும் சென்று அவர் படித்து வந்தார்.

    இந்நிலையில் கடந்த 15-ந்தேதி வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் திவ்யா திடீரென விஷம் குடித்து மயங்கி கிடந்தார்.

    இதனை பார்த்த அவரது பெற்றோர் திவ்யாவை மீட்டு நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், நேற்று மதியம் அவர் பரிதாபமாக இறந்தார்.

    அவரது தற்கொலைக்கான காரணம் குறித்து குருவிகுளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    • மாணவி மீதுள்ள காதலால், அளவுக்கு அதிகமான அன்பையும் கொட்டி பழகி வந்தனர்.
    • சாய்குமார் லாட்ஜ் அறையில் வைத்து மாணவிக்கு தாலி கட்டினார்.

    திருப்பதி:

    ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தை சேர்ந்தவர் சாய்குமார் (வயது 23). இவரது நண்பர் சூரிய பிரகாஷ் (25).

    அதே பகுதியை சேர்ந்த பிளஸ்-2 மாணவி நண்பர்கள் இருவரையும் தனித்தனியாக சந்தித்து வந்தார். நாளடைவில் இருவருக்கும் மாணவி காதல் வலை வீசினார்.

    இதனையெடுத்து சாய்குமார், சூரியபிரகாஷ் இருவரும் மாணவியிடம் தங்களது காதலை வெளிப்படுத்தினர்.

    இவர்கள் இரண்டு பேரையுமே மாணவி காதலித்து வந்தார். ஒருவருக்கு தெரியாமல், இன்னொருவரை காதலித்து வந்துள்ளார். இதனால், அந்த 2 பேருமே, மாணவி தன்னை மட்டுமே உயிருக்குயிராக நேசிப்பதாக நினைத்தனர்.

    மாணவி மீதுள்ள காதலால், அளவுக்கு அதிகமான அன்பையும் கொட்டி பழகி வந்தனர்.

    சாய்குமாரும், சூரியபிரகாஷூம் நண்பர்கள் என்றாலும், மாணவியை காதலிப்பதை ஒருவருக்கொருவர் சொல்லி கொள்ளவில்லை. இதுதான் மாணவிக்கு ரொம்ப வசதியாகிவிட்டது.

    அவர் 2 வாலிபர்களுடனும் உல்லாசமாக சுற்றித்திரிந்தார்.

    இந்நிலையில் சில மாதங்களுக்கு முன்பு, மாணவி சாய்குமார் இருவரும் அந்த பகுதியில் உள்ள லாட்ஜில் அறை எடுத்து தங்கினர்.

    அப்போது சாய்குமார் லாட்ஜ் அறையில் வைத்து மாணவிக்கு தாலி கட்டினார். இதனை செல்போனில் வீடியோ, போட்டோ எடுத்துக் கொண்டனர்.

    இதனை தொடர்ந்து இருவரும் அவரவர் வீடுகளில் வசித்து வந்தனர். இந்த நிலையில் சாய்குமார் மாணவிக்கு தாலி கட்டிய வீடியோவை வெளியிட்டதாக கூறப்படுகிறது.

    தன்னுடைய காதலிக்கு நண்பன் சாய்குமார், தாலி கட்டும் வீடியோக்களை பார்த்து சூரியபிரகாஷ் பெருத்த அதிர்ச்சி அடைந்தார்.

    இதனால், நேரடியாகவே அந்த மாணவியிடம் இது பற்றி கேட்டார் அப்பட்டமாக வீடியோ வந்துவிட்டதால், அந்த மாணவி உண்மையை ஒப்புக்கொண்டார். இதனால் ஆத்திரம் அடைந்த சூரியபிரகாஷ், நேராக சாய்குமாரிடம் சென்றார்.

    சூரியபிரகாஷ் மாணவி தன்னையும் காதலித்து நடித்தது பற்றி புட்டு புட்டு வைத்தார். இதைக்கேட்டு, சாய்குமாருக்கு தலையே கிறுகிறுத்து போய்விட்டது.

    இதற்கு ஒரு முடிவு எடுத்தாக வேண்டும் என இருவரும் முடிவு செய்தனர்.

    உடனடியாக நண்பர்கள் இருவரும் மாணவியின் வீட்டுக்கு போனார்கள். அந்த பெண்ணின் வீட்டில், பெற்றோர்களும், குடும்ப உறுப்பினர்களும் இருந்தனர். அனைவரது முன்னிலையிலும் மாணவியிடம் இதுகுறித்து 2 காதலர்களும் கேள்வி எழுப்பினார்கள்.

    இந்த முக்கோண காதல் விவகாரத்திற்கு, ஒரு முடிவை சொல்லுமாறும் கேட்டார்கள். இப்படி 2 பேருமே திடுதிப்பென்று வீட்டுக்குள் வந்து, கேள்வி எழுப்புவார்கள் என்று மாணவி கொஞ்சமும் நினைக்கவில்லை. இதனால் அதிர்ச்சியும், அவமானமும் கலந்து கூனிக்குறுகி நின்றார்.

    தினம் தினம் அவமானத்தில் தவித்தார். 2 காதலின் குட்டு வெளிப்பட்டதுடன், வீடியோவும் கசிந்துவிட்டதே என்று மனம் கலங்கி போனார். கடைசியில் வீட்டில் யாருமில்லாத நேரத்தில் மாணவி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    இது குறித்து அவரது தந்தை போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

    இந்த நிலையில் சூரியபிரகாஷ் பயந்துவிட்டார். எங்கே தன்னை போலீசார் கைது செய்து விடுவார்களோ? என்று நினைத்து, ஓடும் ரெயிலில் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார்.

    மைனர் பெண்ணுக்கு தாலி கட்டியதாக சாய்குமார் மீது, வழக்கு பதிவு செய்த போலீசார் அவரை கைது செய்து ஜெயிலில் அடைத்தனர்.

    2 பேரை காதலிப்பதாக 12-ம் வகுப்பு மாணவி நடித்து மோசடி செய்ததன் விளைவு, 2 உயிர்கள் பறிபோயிருக்கிறது.

    ஒருவர் ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் ஆந்திராவில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    • வீட்டில் இருந்த தர்ஷினிதா திடீரென தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
    • மாணவி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    திருவள்ளூர்:

    திருவள்ளூர் அடுத்த புதுப்பட்டு புதிய காலனியை சேர்ந்தவர் சபாபதி. இவர் திருவள்ளூர் கலெக்டர் அலுவலகத்தில் பேரூராட்சி உதவி இயக்குனர் அலுவலகத்தில் அலுவலக உதவியாளராக பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி கவியரசி. இவர்களது மகள் தர்ஷினிதா (வயது 15). பண்ணூரில் உள்ள பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார்.

    இந்த நிலையில் ஆடி மாதத்தையொட்டி கூழ் ஊற்ற வேண்டும் என்பதால் வெளியே விளையாட செல்லாமல் வீட்டை சுத்தம் செய்யுமாறு தர்ஷினிதாவை தாய் கண்டித்ததாக தெரிகிறது. இந்த நிலையில் வீட்டில் இருந்த தர்ஷினிதா திடீரென தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து மப்பேடு போலீசார் விசாரித்து வருகிறார்கள்.

    பத்தாம் வகுப்பு மாணவி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    • கவியரசி திடீரென வீட்டின் தனி அறையில் சேலையில் தூக்கிட்டு தற்கொலை செய்ததாக கூறப்படுகிறது.
    • சிறுமி தற்கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    மேட்டூர்:

    மேட்டூர் அடுத்த நங்கவள்ளி பாசக் குட்டையை சேர்ந்தவர் சக்திவேல், கூலித் தொழிலாளி. இவருக்கு ரூபிணி என்ற மனைவியும், கவியரசி (13), பிரபா (9) என்ற 2 குழந்தைகளும் உள்ளனர்.

    நங்கவள்ளி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் கவியரசி 7-ம் வகுப்பும், பிரபா 5-ம் வகுப்பு படித்து வந்தனர். கணவன், மனைவி இருவரும் வேலைக்கு சென்ற நிலையில் பள்ளி விடுமுறை என்பதால் குழந்தைகள் இருவரும் வீட்டில் டி.வி. பார்த்துக் கொண்டு இருந்தனர்.

    அப்போது கவியரசி திடீரென வீட்டின் தனி அறையில் சேலையில் தூக்கிட்டு தற்கொலை செய்ததாக கூறப்படுகிறது. இது குறித்து அப்பகுதியினர் நங்கவள்ளி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

    தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் கவியரசியின் உடலை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் சகோதரிகள் இருவருக்கும் இடையே டி.வி. பார்ப்பதில் ஏற்பட்ட தகராறில கவியரசி டி.வி. ரிமோட்டை உடைத்து விட்டதால் பெற்றோருக்கு பயந்து தற்கொலை செய்து கொண்டதாக போலீசார் தெரிவித்தனர்.

    சிறுமி தற்கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • மது குடித்து விட்டு வீட்டிற்கு வந்த ஜெயசங்கர் தனது மனைவி மோகனாவுடன் தகராறில் ஈடுபட்டார்.
    • போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கெங்கவல்லி:

    சேலம் மாவட்டம் வீரகனூர் அருகே உள்ள கவர்ப்பனை பகுதியை சேர்ந்தவர் ஜெயசங்கர். லாரி டிரைவர். இவரது மனைவி மோகனா. இவர்களது மகள் இலக்கியா (18).

    இவர் திருச்சியில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பி.எஸ்.சி. வேளாண்மை முதலாம் ஆண்டு படித்து வருகிறார். இந்த நிலையில் ஜெயசங்கர் வேலைக்கு சென்று விட்டு இரவு வீட்டுக்கு வரும்போது மது குடித்து விட்டு அடிக்கடி தகராறு செய்து வந்தார்.

    இந்த நிலையில் நேற்று மீண்டும் மது குடித்து விட்டு வீட்டிற்கு வந்த ஜெயசங்கர் தனது மனைவி மோகனாவுடன் தகராறில் ஈடுபட்டார். இதனால் மனமுடைந்த மாணவி இலக்கியா வீட்டிலிருந்த மண்எண்ணையை குடித்து மயங்கி கிடந்தார்.

    இதைப்பார்த்த அவரது தாய் மோகனா அவரை மீட்டு பெரம்பலூர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தார். பின்னர் மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றார். அங்கு சிகிச்சை பலனின்றி இலக்கியா பரிதாபமாக இறந்தார்.

    இது குறித்து வீரகனூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • ஹேமலதா சரியாக படிக்காமல் அடிக்கடி டி.வி பார்த்து வந்ததாக கூறப்படுகிறது.
    • உயிரிழந்த ஹேமலதா தந்தை சம்பத் கொடுத்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரத்தை அடுத்த ஓரிக்கை அண்ணா நகரை சேர்ந்தவர் சம்பத். இவரது மனைவி கற்பகம். இவர்கள் கூலிவேலை செய்து வருகின்றனர். இவர்களது மகள் ஹேமலதா (வயது 17). இவர் அந்த பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார்.

    இந்த நிலையில் ஹேமலதா சரியாக படிக்காமல் அடிக்கடி டி.வி பார்த்து வந்ததாக கூறப்படுகிறது. எனவே, ஹேமலதாவின் பெற்றோர் அவரை ஒழுங்காக படித்து நல்ல மதிப்பெண் எடுக்குமாறு அறிவுரை கூறி கண்டித்ததாக தெரிகிறது.

    இதனால் மனம் உடைந்த ஹேமலதா பெற்றோர்கள் வெளியே சென்றிருந்த நேரத்தில் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். பின்னர் வீட்டுக்கு வந்த பெற்றோர் மகள் ஹேமலதா தூக்கில் தொங்கிய நிலையில் இருந்ததை கண்டு அதிர்ச்சியில் உறைந்தனர். மேலும் இதுகுறித்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த காஞ்சிபுரம் தாலுகா போலீசார், மாணவி ஹேமலதா உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக காஞ்சிபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் இதுகுறித்து உயிரிழந்த ஹேமலதா தந்தை சம்பத் கொடுத்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    படிக்க சொல்லி பெற்றோர் கண்டித்ததால் மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • மாணவியை லோகேஷ் காரில் ஏற்றி சென்றதாக அங்கிருந்த ஒருவர் தெரிவித்தார்.
    • காதலன் மற்றும் அவரது நண்பனால் பலாத்காரம் செய்யப்பட்டதால் மாணவி மனமுடைந்தார்.

    திருப்பதி:

    ஆந்திர மாநிலம், கிருஷ்ணா மாவட்டம், பால் மேரு அருகே உள்ள கிராமத்தை சேர்ந்தவர் 14 வயது சிறுமி. இவர் அங்குள்ள பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்தார்.

    அதே கிராமத்தை சேர்ந்தவர் லோகேஷ். இவரும் சிறுமியும் காதலித்து வந்தனர். அப்போது லோகேஷ் சிறுமியிடம் எங்காவது வெளியில் சென்று வரலாம் என தெரிவித்தார்.

    இதையடுத்து மாணவி கடந்த 20-ந் தேதி பள்ளிக்கு செல்வதாக பெற்றோரிடம் கூறினார். அவர் வகுப்புக்கு செல்லாமல் பள்ளி சுற்று சுவர் அருகே தனது புத்தகப் பையை வைத்துவிட்டு சென்றார்.

    பின்னர் விஜயவாடா மச்சிளிப்பட்டினம் நெடுஞ்சாலைக்குச் சென்று லோகேஷ்-க்கு போன் செய்தார். காரில் வந்த லோகேஷ் மாணவியை ஏற்றிக்கொண்டு உய்யூரில் உள்ள லாட்ஜுக்கு அழைத்துச் சென்றார்.

    அங்கு வைத்து மாணவியை பலாத்காரம் செய்தார். பின்னர் தனது நண்பர் நரேந்திரனுக்கு போன் செய்து லாட்ஜிக்கு வரவழைத்தார். அப்போது வாலிபர்கள் இருவரும் ஒருவர் பின் ஒருவராக சிறுமியை பலாத்காரம் செய்தனர்.

    இதனால் மாணவி மயக்கமடைந்தார். அவருக்கு தண்ணீர் தெளித்து சுயநினைவு வரவழைத்தனர். பின்னர் மாணவியை இரவு வீட்டின் அருகே இறக்கி விட்டனர்.

    காதலன் மற்றும் அவரது நண்பனால் பலாத்காரம் செய்யப்பட்டதால் மாணவி மனமுடைந்தார். அவர் வீட்டுக்கு செல்லாமல் அங்குள்ள விவசாய கிணற்றில் குதித்து தற்கொலை செய்தார்.

    இந்த நிலையில் பள்ளி சுற்றுச்சுவர் அருகே மாணவியின் புத்தகப்பை இருப்பதைக் கண்ட காவலாளி இது குறித்து பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் மாணவியின் பெற்றோருக்கு தகவல் தெரிவித்தார்.

    மாணவியின் பெற்றோர் பதறியடித்துக் கொண்டு பள்ளிக்கு வந்தனர். அங்கிருந்த ஆசிரியர்கள் மாணவி பள்ளிக்கு வரவில்லை என தெரிவித்தனர்.

    மாணவியை லோகேஷ் காரில் ஏற்றி சென்றதாக அங்கிருந்த ஒருவர் தெரிவித்தார்.

    இது குறித்து போலீசில் புகார் செய்தனர். மறுநாள் காலை கிராமத்தின் அருகே உள்ள கிணற்றில் மாணவி பிணமாக மிதந்தார்.

    இது குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து மாணவியின் பிணத்தை மீட்டு பிரத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    போலீசார் சந்தேகத்தின் பேரில் லோகேஷ் மற்றும் நரேந்திரனை போலீஸ் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர். பின்னர் அவர்களை கைது செய்து ஜெயிலில் அடைத்தனர்.

    • முனீஸ்வரி புளியங்குடியில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 11-ம் வகுப்பு படித்து வந்தார்.
    • சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் முனீஸ்வரியின் உடலை கைப்பற்றி புளியங்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    புளியங்குடி:

    தென்காசி மாவட்டம் புளியங்குடி பிச்சாண்டி கீழத்தெருவை சேர்ந்தவர் கருப்பசாமி. இவரது மனைவி மாரியம்மாள். இவர்களுக்கு முனீஸ்வரி என்ற முகிலா(16) என்ற ஒரு மகள் உள்ளார்.

    கருப்பசாமி இறந்து விட்டார். இதனால் மாரியம்மாள் தனது மகளுடன் தனியாக வசித்து வந்தார். முனீஸ்வரி புளியங்குடியில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 11-ம் வகுப்பு படித்து வந்தார். இந்த நிலையில் நேற்று மாலை பள்ளி முடிந்து வீடு திரும்பிய முனீஸ்வரி திடீரென வீட்டில் இருந்த தனது அறைக்குள் சென்று கதவை பூட்டிக்கொண்டார்.

    பின்னர் அவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து அருகில் உள்ளவர்கள் புளியங்குடி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் முனீஸ்வரியின் உடலை கைப்பற்றி புளியங்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து அவர் எதற்காக தற்கொலை செய்து கொண்டார்? என்பது குறித்து விசாரித்தனர். சம்பவத்தன்று மாணவியை பள்ளி ஆசிரியர்கள் திட்டியதாக கூறப்படுகிறது. இதனால் அவர் மனமுடைந்து தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    ×