என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
புளியங்குடியில் பிளஸ்-1 மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: ஆசிரியர் திட்டியதால் விபரீத முடிவு?
- முனீஸ்வரி புளியங்குடியில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 11-ம் வகுப்பு படித்து வந்தார்.
- சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் முனீஸ்வரியின் உடலை கைப்பற்றி புளியங்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
புளியங்குடி:
தென்காசி மாவட்டம் புளியங்குடி பிச்சாண்டி கீழத்தெருவை சேர்ந்தவர் கருப்பசாமி. இவரது மனைவி மாரியம்மாள். இவர்களுக்கு முனீஸ்வரி என்ற முகிலா(16) என்ற ஒரு மகள் உள்ளார்.
கருப்பசாமி இறந்து விட்டார். இதனால் மாரியம்மாள் தனது மகளுடன் தனியாக வசித்து வந்தார். முனீஸ்வரி புளியங்குடியில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 11-ம் வகுப்பு படித்து வந்தார். இந்த நிலையில் நேற்று மாலை பள்ளி முடிந்து வீடு திரும்பிய முனீஸ்வரி திடீரென வீட்டில் இருந்த தனது அறைக்குள் சென்று கதவை பூட்டிக்கொண்டார்.
பின்னர் அவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து அருகில் உள்ளவர்கள் புளியங்குடி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் முனீஸ்வரியின் உடலை கைப்பற்றி புளியங்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து அவர் எதற்காக தற்கொலை செய்து கொண்டார்? என்பது குறித்து விசாரித்தனர். சம்பவத்தன்று மாணவியை பள்ளி ஆசிரியர்கள் திட்டியதாக கூறப்படுகிறது. இதனால் அவர் மனமுடைந்து தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்