search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    பிளஸ்-2 மாணவி தூக்கிட்டு தற்கொலை- உருக்கமான கடிதம் சிக்கியது
    X

    பிளஸ்-2 மாணவி தூக்கிட்டு தற்கொலை- உருக்கமான கடிதம் சிக்கியது

    • போலீசார் கீர்த்தனா உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
    • கடிதத்தை வைத்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    ராயபுரம்:

    புது வண்ணாரப்பேட்டை இருசப்பன் முதல் தெருவை சேர்ந்தவர் மேனகா (வயது 40) மாநகராட்சியில் வேலை பார்த்து வருகிறார். வாடகை வீட்டில் ஒரு மகள், மகன், தாத்தா, பாட்டி ஆகியோர் வசித்து வருகிறார்கள். இவரது மகள் கீர்த்தனா (17) தண்டையார்பேட்டையில் உள்ள தனியார் பள்ளியில் 12-ம் வகுப்பு படித்து வந்தார்.

    நேற்று பள்ளி முடிந்து வீட்டிற்கு திரும்பிய கீர்த்தனா அறைக்குச் சென்று வெகு நேரம் வெளியே வராததால் அவரது தம்பி சென்று பார்த்த போது கீர்த்தனா மின்விசிறியில் புடவையால் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரிந்தது. இது குறித்து புதுவண்ணாரப்பேட்டை போலீசார் கீர்த்தனா உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். கீர்த்தனா எழுதி வைத்த கடிதம் சிக்கியது.

    அந்த கடிதத்தில், நான் இந்த முடிவு எடுக்கறதுக்கு காரணம் என்னோட எக்கனாமிக் ஆசிரியர் தான் என்று எழுதி வைத்துள்ளார்.

    அந்த கடிதத்தை வைத்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    Next Story
    ×