search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மாணவர்கள் சாதனை"

    • தங்கப் பதக்கம் பெற்று ஒட்டு மொத்த சாம்பியன் கோப்பையைக் கைப்பற்றி மாநில அளவில் சாதனை புரிந்துள்ளனர்.
    • ஒட்டு மொத்த சாம்பியன் பட்டத்தையும் வென்று பள்ளிக்குப் பெருமை சேர்த்துள்ளனர்.

    மத்தூர்,

    சென்னையில் நடைபெற்ற இப்போட்டியில் சென்னை, செங்கல்பட்டு, வேலூர், கோவை, சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்கள் உள்பட பல மாவட்டத்தைச் சார்ந்த 650-க்கும் மேற்பட்ட வில்வித்தை விளையாட்டு வீரர், வீராங்கனைகள் பல்வேறு பிரிவுகளில் பங்கேற்றனர்.

    இதில் கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை அதியமான் பப்ளிக் பள்ளியிலிருந்து 45 மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். போட்டியில் பங்கேற்ற மாணவர்கள் பல்வேறு பிரிவுகளில் மொத்தம் 45 தங்கப்பதக்கங்களையும் பெற்று ஒட்டு மொத்த சாம்பியன் பட்டத்தையும் வென்று பள்ளிக்குப் பெருமை சேர்த்துள்ளனர்.

    இதில் ரிக்கர்வ் வில்வித்தை தனிநபர் பிரிவில் கலந்து கொண்ட கேசினி, போமேஷ்வர் ஆகிய இருவரும் தங்க பதக்கங்களைப் பெற்றனர்.

    இந்தியன் வில்வித்தை தனிநபர் 17 வயதுக்குட்பட்டோர் பிரிவில் நவீன் குமார், கனிஷ்கா ஆகிய இருவரும், தனிநபர் 16 வயதுக்குட்பட்டோர் பிரிவில் சந்ரு, சாதனா ஆகிய இருவரும், 12 வயதுக்குட்பட்டோர் பிரிவில் சாய்லேஷ்குமார், ஷாலினி ஆகிய இருவரும், 10 வயதுக்குட்பட்டோர் பிரிவில் இஷானிகா, சம்ரக்ஷன் ஆகிய இருவரும், 8 வயதுக்குட்பட்டோர் பிரிவில் வர்ஷினி பிரியா, தீவேஷ் ஆகிய இருவரும் என அனைவரும் தங்கப் பதக்கம் பெற்றனர்.

    ஆடவர்களுக்கான பேர் வில்வித்தை குழுப் போட்டியில் 14 வயதுக்குட்பட்டோர் பிரிவில் மெகதீஷ், சுந்திரநாதன், ராகவன், சங்கல்ப், இமையவன் ஆகியோரும், 12 வயதுக்குட்பட்டோர் பிரிவில் நித்திஷ்குமார், யஷ்வந்த், லிங்கேஷ், கோகுல், பிரவின் குமார் ஆகியோரும் தங்கப் பதக்கம் பெற்றனர்.

    மகளிருக்கான பேர் வில்வித்தை குழுப் போட்டியில் 10 வயதுக்குட்பட்டோர் பிரிவில் பு. ஹர்சிகா, சு.மு. தருணிகா இருவரும், 12 வயதுக்குட்பட்டோர் பிரிவில் ஆ. ரித்திகா, கருண சாகரிகா, யாஷிகா வெங்கடேஷ், ஹரிணி, ஜனஸ்ரீ ஆகியோரும், 14 வயதுக்குட்பட்டோர் பிரிவில் சரித்திரா, நபிசா பாத்திமா, ஏ. பிரியா, வின்யா மற்றும் விணுஸ்ரீ ஆகியோரும் தங்கப் பதக்கம் பெற்று ஒட்டு மொத்த சாம்பியன் கோப்பையைக் கைப்பற்றி மாநில அளவில் சாதனை புரிந்துள்ளனர்.

    வெற்றி பெற்ற மாணவர்களுக்கும், வெற்றிக்கு உறுதுணையாக இருந்த ஆசிரியப் பெருமக்களுக்கும் சீனிவாசா கல்வி அறக்கட்டளையின் தலைவர் மல்லிகா சீனிவாசன், அதியமான் கல்வி நிறுவனங்களின் நிறுவனர் சீனி. திருமால் முருகன், செயலர் முனைவர் சோபா திருமால் முருகன், நிர்வாக இயக்குநர் சீனி. கணபதி ராமன், அதியமான் பப்ளிக் பள்ளியின் முதல்வர் லீனா ஜோஸ் ஆகியோர் வாழ்த்துகளையும் சான்றிதழ்களையும் அளித்து மாணவர்களை ஊக்குவித்தனர்.

    • அதியமான் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் முதலிடம் பிடித்து சாதனை படைத்தனர்.
    • ஆசிரியர்கள் ஷாவலி மணி, முத்து, சசிகுமார் ஆகியோர் பாராட்டி வாழ்த்து தெரிவித்தனர்.

    தருமபுரி,

    தருமபுரி மாவட்ட அளவிலான கால்பந்து போட்டி தருமபுரியில் உள்ள மாவட்ட விளையாட்டு அரங்கில் நடைபெற்றது.

    இந்த போட்டியில் தருமபுரி அதியமான் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் முதலிடம் பிடித்து சாதனை படைத்தனர்.

    மாவட்ட அளவில் முதலிடம் பிடித்து சாதனை படைத்த அதியமான் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவர்களை பள்ளி தலைமை ஆசிரியர் மணிவண்ணன், உதவி தலைமை ஆசிரியர் முருகன், உடற்கல்வி ஆசிரியர்கள் ஷாவலி மணி, முத்து, சசிகுமார் ஆகியோர் பாராட்டி வாழ்த்து தெரிவித்தனர்.

    • இதில் பிரதீப் மற்றும் பிரனீத் ஆகிய இருவரும் தலா இரண்டு தங்கப் பதக்கங்களை பெற்றனர்.
    • அதியமான் பப்ளிக் பள்ளி ஒட்டு மொத்த சாம்பியன் கோப்பையைக் கைப்பற்றி மாநில அளவில் சாதனை புரிந்தது.

    ஊத்தங்கரை,

    தருமபுரியில் மாவட்டங்களுக்கு இடையே நடைபெற்ற ஸ்கேட்டிங் போட்டியில் ஊத்தங்கரை, அதியமான் பப்ளிக் பள்ளியில் இருந்து 59 மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.

    போட்டியில் பங்கேற்ற மாணவர்கள் பல்வேறு பிரிவுகளில் 83 பதக்கங்களை பெற்றனர். இதில் 24 தங்க பதக்கங்களையும், 26 வெள்ளிப் பதக்கங்களையும், 33 வெண்கலப் பதக்கங்களையும் பெற்று ஒட்டு மொத்த சாம்பியன் பட்டத்தை வென்று பள்ளிக்கு பெருமை சேர்த்துள்ளனர்.

    இதில் பிரதீப் மற்றும் பிரனீத் ஆகிய இருவரும் தலா இரண்டு தங்கப் பதக்கங்களை பெற்றனர். தேவ்சரண், அகஸ்டின், சஞ்சய், அன்பு பாலா மற்றும் கெவின் சக்தி ஆகிய 5 பேரும் தலா ஒரு வெள்ளி மற்றும் ஒரு வெண்கலப் பதக்கம் பெற்றனர். லோகேஷ் மற்றும் அஸ்வின் ஆகிய இருவரும் இரு வேறு பிரிவுகளில் தலா 2 வெண்கலப் பதக்கம் பெற்றனர். சீனிவாஸ் மற்றும் அவினேஷ் ஆகிய இருவரும் இரு வேறு பிரிவுகளில் தலா இரண்டு தங்கப்பதக்கங்களைப் பெற்றனர்.

    நந்தீஸ் மற்றும் பிரசன்ன ராம் ஆகிய இருவரும் தலா 2 வெள்ளிப் பதக்கங்களைப் பெற்றனர். சபேசன் ஒரு வெள்ளி மற்றும் ஒரு வெண்கலப் பதக்கம் பெற்றார். ஹரிகரன் இரண்டு வெண்கலம் பெற்றார்.

    மேலும் நாகேஷ்வரன், மோகித், அஜய், நிரஞ்சன், முத்தழகன், லிரிஷ் ஆகிய 6 மாணவர்களும் ஒரு தங்கப் பதக்கத்தையும், 11 மாணவர்கள் ஒவ்வொரு வெள்ளிப் பதக்கத்தையும் 18 மாணவர்கள் ஒவ்வொரு வெண்கலப் பதக்கத்தையும் பெற்றனர். இரண்டு தங்கப் பதக்கம் பெற்ற மாணவர்களுக்குப் பாராட்டுகள் தெரிவிக்கப்பட்டது.

    இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட 15-க்கு மேற்பட்ட பள்ளிகளில் அதியமான் பப்ளிக் பள்ளி ஒட்டு மொத்த சாம்பியன் கோப்பையைக் கைப்பற்றி மாநில அளவில் சாதனை புரிந்தது.

    வெற்றி பெற்ற மாணவர்களுக்கும், வெற்றிக்கு உறுதுணையாக இருந்த ஆசிரியப் பெருமக்களுக்கும் சீனிவாசா கல்வி அறக்கட்டளையின் தலைவர் மல்லிகா சீனிவாசன், அதியமான் கல்வி நிறுவனங்களின் நிறுவனர் சீனி. திருமால் முருகன், செயலர் சோபா திருமால் முருகன், நிர்வாக இயக்குநர் கணபதி ராமன், அதியமான் பப்ளிக் பள்ளியின் முதல்வர் லீனா ஜோஸ் ஆகியோர் வாழ்த்துகளையும் சான்றிதழ்களையும் அளித்து மாணவர்களை ஊக்குவித்தனர்.

    • ஐஸ் ஹாக்கி விளையாட்டு போட்டியில் ஒன்பது வெள்ளி பதங்களை வென்றுள்ளனர்.
    • சென்னை விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

    தருமபுரி,

    ஜம்மு காஷ்மீரில் நடந்த கேலோ இந்தியா குளிர் கால விளையாட்டு போட்டியில் 14 பதக்கங்கள் பெற்று தமிழ்நாடு இரண்டாம் இடம் பிடித்தது. ஐஸ் ஹாக்கி விளையாட்டு போட்டியில் ஒன்பது வெள்ளி பதங்களை வென்றுள்ளனர்.

    இதில் தருமபுரி மாவட்டத்தில் இருந்து 17 வயதுக்கு உட்பட்ட பிரிவில் நேஷந்த். ரகுராம், டேரன் ஜோஸ், ஓம் உலகநாதன்,கௌதம் ,ஆகியோர் கலந்து கொண்டு விளையாடினர்.

    மேலும் 20 வயதுக்கு மேற்பட்ட பிரிவில் தருமபுரி முகமது அப்ரித், லோகேஷ், சென்னை யை சேர்ந்த வெங்கடேசன், ராம்குமார், யோகேஸ்வரன், ஜீவா ,கோகுல், அபிஷேக் திருச்சியை சேர்ந்த மகேஷ்வரி ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பாக விளையாடி தேசிய அளவில் கேலோ இந்தியாவில் இரண்டாம் இடம் பிடித்து வெள்ளி பதக்கம் பெற்றனர்.

    பரிசுகளை பெற்று கொண்டு வீடு திரும்பிய விளையாட்டு வீரர்களுக்கு சென்னை விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

    இவர்களை மேலும் ஊக்குவித்தால் இமாலய சாதனை படைப்பார்கள். இவர்களை தமிழ்நாடு மாநில செயலாளர் பூஞ்சோலை மற்றும் தருமபுரி மாவட்ட செயலாளர் சந்திரமோகன் மாஸ்டர் சீனிவாசன் ஆகியோரும் வாழ்த்தி பாராட்டினர்.

    • சூளகிரி அகாடமி குங்பூ மாணவர்கள் 71 பேர் மாஸ்டர் பவித்ராமன் தலைமையில் மாணவர்கள் போட்டியில் கலந்துகொண்டனர்.
    • 11 பேர் மூன்றாம் இடத்தையும் பிடித்து வெற்றி பெற்றுள்ளனர்.

    சூளகிரி, 

    பெங்களூருவில் தேசிய அளவிலான கராத்தே மற்றும் குங்பூ போட்டி மாஸ்டர் கண்ணன் தலைமையில் நடைபெற்றது.

    இப் போட்டியின் தலைமை நடுவராக மலேசியாவில் இருந்து வருகை புரிந்த மகா குரு மாஸ்டர்ஆனந்தன் கலந்து கொண்டார்.

    மேலும் 500-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவர்கள் கலந்து கொண்ட போட்டியில் கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி அகாடமி குங்பூ மாணவர்கள் 71 பேர் மாஸ்டர் பவித்ராமன் தலைமையில் மாணவர்கள் போட்டியில் கலந்துகொண்டனர்.

    அதில் 27 பேர் முதலிடத்தையும், 33 பேர் இரண்டாம் இடத்தையும், 11 பேர் மூன்றாம் இடத்தையும் பிடித்து வெற்றி பெற்றுள்ளனர். வெற்றி பெற்ற மாணவர்களுக்கு கேடயங்கள்கோப்பைகள் சான்றிதழ்களும் மாஸ்டர் ஆனந்தன் வழங்கினார். இதை அறிந்த பள்ளி ஆசிரியர்கள் பெற்றோர்கள் பெரிதும் பாராட்டினர்.

    • ஆசிரியர்களின் வழிகாட்டுதலுடன் செயல்பட்டு மாணவர்கள் சாதனையாளர்களாக திகழ வேண்டும் என கலெக்டர் பேசினார்.
    • ஒவ்வொரு மாணவரின் திறமையையும் எளிதாக அறிந்திட முடியும்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்டம், சத்திரக்குடி அரசு மேல்நிலைப்பள்ளியில் பள்ளிக்கல்வித்துறையின் மூலம் மாணவர்களுக்கான கற்றல் ஊக்குவித்தல் மற்றும் திறன் மேம்படுத்துதல் குறித்த குழுக்கள் உருவாக்கும் பணி மாவட்ட கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ் தலைமையில் நடைபெற்றது.

    மாணவ-மாணவிகள் முன்னிலையில் ஊதா, மஞ்சள், சிவப்பு, பச்சை என 4 வண்ணங்கள் கொண்ட குழுக்கள் உருவாக்கி அதில் மாணவ-மாணவிகள் தேர்வு செய்து அவர்களுக்குரிய ஆசிரி யர்களும் தேர்வு செய்து இக்குழு செயல்பட தொடங்கி உள்ளது.

    மேலும் இக்குழு வின் செயல்பாடு குறித்து மாவட்ட கலெக்டர் கூறியதாவது:-

    ராமநாதபுரம் மாவட்டத்தில் 42 அரசு மேல்நிலைப்பள்ளிகள் தேர்ந்தெடுக்கப்பட்டு இப்பள்ளியில் உள்ள மாணவர்களின் கற்றல் ஊக்குவித்தல், விளை யாட்டு ஊக்குவித்தல் மற்றும் தனித்திறன் மேம்படுத்துதல் போன்ற பணிகளை மேற்கொண்டு அவர்களின் திறமையை வெளிக்கொண்டு வருவதற்காக திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது.

    மேலும் ஒவ்வொரு குழுவாக பிரித்து அவர்க ளுக்கான வழிகாட்டுதல் பணியை கையாளும் பொழுது ஒவ்வொரு மாணவரின் திறமையையும் எளிதாக அறிந்திட முடியும். அதே போல் ஒரு குழு என்பது குறைந்த எண்ணிக்கை கொண்ட நபர்களாக இருப்பதால் அவர்களை ஊக்குப்படுத்தும் பணியும் எளிதாக இருக்கும்.

    அதேபோல் சக மாண வர்கள், சக மாணவிகள் வெவ்வேறு குழுவில் இருக்கும் பொழுது எந்த குழு முதலில் வருகிறது என்ற நிலைப்பாட்டுடனும் ஒவ்வொரு குழுவும் ஆரோக்கியமான இந்த போட்டியில் பங்கேற்று ஆசிரியர்கள் வழிகாட்டும் பயிற்சியை கையாளுவதுடன் தங்கள் திறமையையும், ஆர்வத்தையும் செயல்ப டுத்தும் பொழுது அங்கு தனக்கென ஒரு வெற்றி கிடைக்கும் வகையில் ஒரு மகிழ்ச்சி தோன்றும்.

    அந்த மகிழ்ச்சியின் விளைவு தான் ஒவ்வொரு வரின் திறமைக்கும் வழி காட்டியாக அமையும். அவ்வாறு தன் திறமையை வெளிப்படுத்தி கல்வி யிலும், விளையாட்டிலும் தனி திறனிலும் சாதனை படைக்கும் பொழுது அந்த சாதனையானது தனக்கு மட்டுமின்றி, தனக்கு வழிகாட்டி ய ஆசிரியர்களுக்கும், தான் படித்த பள்ளிக்கும் என பாராட்டுக்கள் கிடைப்பதுடன் அதன் மூலம் மாவட்டத்திற்கு பெருமையை தேடித்தரும் நிலை உருவாகும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்நிகழ்ச்சியில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பாலுமுத்து, மாவட்ட கல்வி அலுவலர் சுதாகர், சத்திரக்குடி அரசு மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் ரவி மற்றும் ஆசிரியர்கள், மாணவ- மாணவிகள் கலந்து கொண்டனர்.

    • குத்துச்சண்டை போட்டியில் கீழக்கரை இஸ்லாமியா பள்ளி மாணவர்கள் சாதனை படைத்தனர்.
    • கீழக்கரை இஸ்லாமியா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் சாதனை படைத்து உள்ளனர்.

    கீழக்கரை

    ராமநாதபுரத்தில் 20 பள்ளிகளை சேர்ந்த 180 மாண வர்கள் பங்கேற்ற மாவட்ட அளவிலான குத்துச்சண்டை போட்டி நடந்தது. இதில் கீழக்கரை இஸ்லாமியா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் சாதனை படைத்து உள்ளனர்.

    14 வயதுக்கு உட்பட்ட பிரிவில் 7-ம் வகுப்பு மாணவன் அனீக் ரசீத், 17 வயதுக்கு உட்பட்ட பிரிவில் 8-ம் வகுப்பு மாணவன் அப்துல் ரஹ்மான் ஆகியோர் மாவட்ட அளவிலான குத்துச்சண்டைப் போட்டி யில் முதலிடம் பெற்று மாநில அளவிலான போட்டிக்குத் தேர்வு செய்யப்பட்டனர்.

    14 வயதுக்குட்பட்ட பிரிவில் 6-ம் வகுப்பு மாணவன் செய்யது அப்துல் ஹசன், 17 வயதுக்குட்பட்ட பிரிவில் 8-ம் வகுப்பு மாணவன் முகமது ஜாசிர் ஆகியோர் மாவட்ட அளவி லான போட்டியில் 2-ம் இடத்தைப் பிடித்துள்ளனர்.

    வெற்றி பெற்ற மாண வர்கள் மற்றும் பயிற்சி யாளர் ரபீக் உசேன் ராஜா ஆகியோரை பள்ளி தாளாளர் எம்.எம்.கே. முகைதீன் இப்ராகிம், பள்ளி தலைமை ஆசிரி யர் மேபல் ஜஸ்டஸ் மற்றும் ஆசிரியர்கள், கல்விக்குழு உறுப்பினர்கள் பாராட்டினர்.

    • கிருஷ்ணகிரி, நாமக்கல் மாவட்டங்களைச் சேர்ந்த 26 அணிகள் இப்போட்டிகளில் பங்குபெற்றன.
    • தருமபுரி, தொன் போஸ்கோ கல்லூரி அணி வெற்றிப் பெற்று இறுதிச்சுற்றுக்கு முன்னேறியது.

    தருமபுரி, 

    பெரியார் பல்கலைக்க ழகக் கல்லூரிகளுக்கு இடையேயான கால்பந்துப் போட்டிகள் ஓசூர், எம்.ஜி.ஆர். கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடைபெற்றன. சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, நாமக்கல் மாவட்டங்களைச் சேர்ந்த 26 அணிகள் இப்போட்டிகளில் பங்குபெற்றன.

    இதன் அரை இறுதிச்சுற்றில் தருமபுரி, தொன் போஸ்கோ கல்லூரி அணியும், சேலம் அரசு கலைக் கல்லூரி அணியினரும் விளையாடினர். இப்போட்டியில் 3-0 என்ற கோல்கணக்கில் தருமபுரி, தொன் போஸ்கோ கல்லூரி அணி வெற்றிப் பெற்று இறுதிச்சுற்றுக்கு முன்னேறியது.

    தொடர்ந்து நடைபெற்ற இறுதிச்சுற்றில் தருமபுரி தொன் போஸ்கோ கல்லூரி அணியுடன், சேலம் ஏ.வி.எஸ். கல்லூரி அணியினர் விளையாடினர். இப்போட்டியில் 3-1 என்ற கோல்கணக்கில் தருமபுரி, தொன் போஸ்கோ கல்லூரி அணி முதல் இடம் பிடித்து சாம்பியன்ஷிப் பட்டம் பெற்றது.

    இதனையொட்டி கல்லூரியில் நடைபெற்ற பாராட்டு விழாவிற்குச் சென்னை சலேசிய மாநிலத் தலைவர் கே.எம். ஜோஸ் தலைமை வகித்து, வெற்றி பெற்ற மாணவர்களுக்கு தனிநபர் கோப்பை மற்றும் சான்றிதழ்களை வழங்கினார்.

    வெற்றி பெற்ற மாணவர்கள் மற்றும் உடற்கல்வி இயக்குனர் பேராசிரியர் சேவியர் டெனிஸ் ஆகியோரைக் கல்லூரிச் செயலர் எட்வின் ஜார்ஜ், முதல்வர் ஆஞ்சலோ ஜோசப், துணை முதல்வர் பாரதி பெர்னாட்ஷா, பொருளாளர் ஜான், சமூகப்பணித்துறைப் பேராசிரியர் ஆண்டனி கிஷோர் மற்றும் பேராசிரியர்கள் பாராட்டினர்.

    • ஐதராபாத்தில் மாநிலங் களுக்கு இடையேயான குங்பூ ஜூனியர் போட்டி நடைபெற்றது.
    • தேசிய அளவில் நடைபெறும் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளனர்.

    கிருஷ்ணகிரி,

    ஐதராபாத்தில் மாநிலங் களுக்கு இடையேயான குங்பூ ஜூனியர் போட்டி நடைபெற்றது.

    இதில் கிருஷ்ணகிரி பாரத் இன்டர்நேஷனல் பள்ளி மாணவ, மாணவிகள் நவதர்ஷினி, தன்யாஸ்ரீ, தேவிபிரியா, சோபன் சுந்தர் ஆகியோர் வெற்றி பெற்று பதக்கங்களை வென்று தேசிய அளவில் நடைபெறும் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளனர்.

    ஜூடோ பிரிவில் ஆதித்யா ராஜ் வெற்றி பெற்று தென்னிந்திய அளவில் நடைபெறும் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார். ஸ்கேட்டிங் சப்ஜூனியர் பிரிவில் ஹரிஷ், ஜெயக்குமார், இளையக்கனி ஆகியோர் வெற்றி பெற்று தேசிய அளவில் நடைபெறும் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளனர்.

    பஞ்சாபில் நடைபெற்ற வில்வித்தை போட்டியில் சோபன் சுந்தர், தேவிப்பிரியா ஆகியோர் வெற்றி பெற்று பதக்கங்கள் வென்று தேசிய அளவில் நடைபெறும் வில்வித்தை போட்டிக்கு தகுதி பெற்றுள்ளனர்.

    போட்டியில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகள் பள்ளியின் நிறுவனர் மணி, தாளாளர் கிருஷ்ணவேணி மணி, செயலாளர் டாக்டர் சந்தோஷ், முதல்வர் ஹரிநாத், போட்டியின் பயிற்சியாளர் ரஹமத் மற்றும் ஆசிரிய, ஆசிரியைகள் பாராட்டினார்கள்.

    • ஐந்து மாநிலங்களில் இருந்து 4585 மாணவர்கள் கலந்து கொண்டனர்.
    • ஊத்தங்கரை அதியமான் பப்ளிக் பள்ளியிலிருந்து 13 மாணவர்கள் போட்டியில் பங்கேற்றனர்.

    மத்தூர்,

    சி.பி.எஸ்.சி பள்ளிகளுக்கிடையிலான தென்மண்டல அளவிலான செஸ் போட்டி சென்னையில் கடந்த 29 முதல் 2-ந்தேதி வரை நடைபெற்றது.

    இப்போட்டியில் தமிழ்நாடு, தெலுங்கானா, ஆந்திர பிரதேசம், பாண்டிச்சேரி மற்றும் அந்தமான் நிக்கோபர் தீவுகள் உட்பட ஐந்து மாநிலங்களில் இருந்து 4585 மாணவர்கள் கலந்து கொண்டனர். ஊத்தங்கரை அதியமான் பப்ளிக் பள்ளியிலிருந்து 13 மாணவர்கள் போட்டியில் பங்கேற்றனர்.

    5 சுற்றுகள் கொண்ட இப்போட்டியில் ஊத்தங்கரை அதியமான் பப்ளிக் பள்ளி மாணவர்கள் 11 வயதுக்குட்பட்டோர் பிரிவில் சித்தார்த் மற்றும் ஹரிஷ்வா 17 வயதுக்குட்பட்டோர் பிரிவில் சரவண பாலாஜி ஆகியோர் மூன்றாம் இடம் பெற்றனர். 11 வயதுக்குட்பட்டோர் பிரிவில் மோகித் இரண்டாம் இடம் பெற்று சாதனை புரிந்தார்.

    போட்டியில் பங்கேற்று சிறப்பாக விளையாடிய, இரண்டாம் இடம் மற்றும் மூன்றாம் இடம் பெற்ற மாணவர்களுக்கான பாராட்டு விழா அதியமான் பப்ளிக் பள்ளியில் சீனிவாசா கல்வி அறக்கட்டளையின் தலைவர் மல்லிகா சீனிவாசன் தலைமையில் நடைபெற்றது.

    அதில் அதியமான் கல்வி நிறுவனங்களிள் நிறுவனர் சீனி. திருமால் முருகன், செயலர் சோபா திருமால் முருகன், நிர்வாக இயக்குநர் சீனி. கணபதி ராமன், முதல்வர் லீனா ஜோஸ் ஆகியோர் கலந்து கொண்டு போட்டியில் பங்கேற்று சிறப்பாக விளையாடிய அனைத்து மாணவர்கள், பயிற்சி அளித்த ஆசிரியர் ஆகியோரை பாராட்டினர்.

    மேலும் கூடுதலாக பயிற்சியும், தொடர் முயற்சியும் மேற்கொண்டு வரும் ஆண்டில் முதலிடம் பிடித்து தேசிய அளவிலும் பின் நம் தாய் நாட்டிற்காக விளையாடும் அரிய வாய்ப்பினை பெற அயராது முனைப்புடன் பயிற்சி பெற வேண்டும் என உற்சாக மூட்டினார்கள். போட்டியில் பங்கேற்ற, சிறப்பிடம் பெற்ற அனைத்து மாணவர்களுக்கும் சான்றிதழ்கள் மற்றும் பரிசுகள் வழங்கப்பட்டன.

    • ஸ்ரீவில்லி. லயன்ஸ் பள்ளி மாணவர்கள் சாதனை படைத்துள்ளனர்.
    • ஆசிரியர்கள் பாராட்டுகளை தெரிவித்தனர்.

    ஸ்ரீவில்லிபுத்துர்

    தமிழ்நாடு ரோடு சைக்கிளிங் சாம்பியன்ஷிப் போட்டி தேனி மாவட்டம் கம்பத்தில் நடைபெற்றது. போட்டிகளில் ஸ்ரீவில்லி புத்தூர் லயன்ஸ் பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டு சாதனை படைத்தனர்.

    சைக்கிளிங் போட்டியில் 12 வயதுக்குட்பட்ட மாணவர்க

    ளுக்கான பிரிவில் லயன்ஸ் பள்ளி 6-ம் வகுப்பு மாணவன் அறிவுப்புகழேந்தி முதல் பரிசும், கிருஷ்ணசாமி 3-ம் பரிசும் பெற்றனர். மாணவி களுக்கான போட்டியில் லயன்ஸ் பள்ளி 6-ம் வகுப்பு மாணவி தீபிகா 2-ம் இடம் பெற்றார்.

    14-வயதுக்குட்பட்ட போட்டியில் 9-ம் வகுப்பு மாணவன் சுஜன் 2-ம் இடம் பெற்றார். 16-வயதுக்குட்ட போட்டியில் மாணவி சுவாதிகா முதல் பரிசு பெற்றார். 18-வயதுக்குட்ட போட்டியில் 11-ம் வகுப்பு மாணவன் ஆனந்த் 3-ம் இடம் பெற்று பள்ளிக்குப் பெருமை சேர்த்தார்.

    ஸ்ரீவில்லிபுத்தூர் லயன்ஸ் பள்ளிக்குப் பெருமையைத் தேடித் தந்த மாணவர்களையும், உடற்கல்வி ஆசிரியர் தர்மராஜ், சக்திவேல், பள்ளித் தாளாளர் வெங்கடாசலபதி லயன்ஸ் சங்க உறுப்பினர்கள், லயன்ஸ் பள்ளி நிர்வாகத்தினர், பள்ளி முதல்வர் முருகன், துணை முதல்வர் ஜெயராம கிருஷ்ணன், பெற்றோர் மற்றும் ஆசிரியர்கள் பாராட்டு களைத் தெரிவித்தனர்.

    • 1,330 திருக்குறள்களை 66 நிமிடங்களில் ஒப்புவித்தனர்
    • மாணவர்களுக்கு சாதனைக்கான சான்றிதழ் வழங்கப்பட்டது

    குடியாத்தம்:

    குடியாத்தம் அடுத்த பாக்கம் கிராமத்தில் உள்ள ஆசிர்வாத் இன்டர்நேஷனல் சி.பி.எஸ்.இ. பள்ளியில் ஒன்றாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்கள் 133 பேர் தலா 10 திருக்குறள்கள் என 133 அதிகாரங்களைக் கொண்ட 1,330 திருக்குறள்களை 66 நிமிடங்களில் ஒப்புவித்தனர்.

    இது உலக சாதனையாகும். இந்த திருக்குறள் ஒப்புவித்தல் சாத னையை லிங்கன் புக் ஆப் ரெக்கார்ட்ஸ் நிறுவனம் பதிவு செய்தது. இந்த நிலையில் லிங்கன் புக் ஆப் ரெக்கார்ட்ஸ் நிறுவனம்சார்பில் திருக்குறள் ஒப்புவித்தல் போட்டியில் சாதனை படைத்த 133 மாணவர்களுக்கு சாதனைக்கான சான்றிதழ் மற்றும் பதக்கங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

    நிகழ்ச்சிக்கு பள்ளி தாளாளர் எஸ்.மஞ்சுநாத் தலைமை தாங்கினார். பள்ளி முதல்வர் பிரமிளா கண்ணன் வரவேற் றார். சிறப்பு விருந்தினராக டி.வி. புகழ் ஈரோடு மகேஷ், திரைப்பட இசையமைப்பாளர் சி.அரவிந்த்பாபு ஆகியோர் கலந்து கொண்டு மாணவர்களுக்கும், மாணவர்களின் சாத னைக்கு உதவியாக இருந்த ஆசிரியர்களுக்கும் சான்றிதழ்கள் மற்றும் பதக்கங்களை வழங்கி கவுரவித்தனர். சாதனை நிகழ்ச் சிக்கான ஏற்பாடுகளை லிங்கன் புக் ஆப் ரெக்கார்ட்ஸ் நிறுவனர் ஜோசப் இளந்தென்றல், தலைமை நிர்வாக அலுவலர் எஸ்.கார்த்திக் குமார் ஆகியோர் செய்து இருந்தனர். நிகழ்ச்சியில் பெற்றோர்கள், ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.

    முடிவில் பள்ளியின் கணக்கு அலுவலர் கே.செல்வகுமார் நன்றி கூறினார்.

    ×