என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
ஊத்தங்கரை அதியமான் பப்ளிக் பள்ளி மாணவர்கள் சாதனை
- இதில் பிரதீப் மற்றும் பிரனீத் ஆகிய இருவரும் தலா இரண்டு தங்கப் பதக்கங்களை பெற்றனர்.
- அதியமான் பப்ளிக் பள்ளி ஒட்டு மொத்த சாம்பியன் கோப்பையைக் கைப்பற்றி மாநில அளவில் சாதனை புரிந்தது.
ஊத்தங்கரை,
தருமபுரியில் மாவட்டங்களுக்கு இடையே நடைபெற்ற ஸ்கேட்டிங் போட்டியில் ஊத்தங்கரை, அதியமான் பப்ளிக் பள்ளியில் இருந்து 59 மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.
போட்டியில் பங்கேற்ற மாணவர்கள் பல்வேறு பிரிவுகளில் 83 பதக்கங்களை பெற்றனர். இதில் 24 தங்க பதக்கங்களையும், 26 வெள்ளிப் பதக்கங்களையும், 33 வெண்கலப் பதக்கங்களையும் பெற்று ஒட்டு மொத்த சாம்பியன் பட்டத்தை வென்று பள்ளிக்கு பெருமை சேர்த்துள்ளனர்.
இதில் பிரதீப் மற்றும் பிரனீத் ஆகிய இருவரும் தலா இரண்டு தங்கப் பதக்கங்களை பெற்றனர். தேவ்சரண், அகஸ்டின், சஞ்சய், அன்பு பாலா மற்றும் கெவின் சக்தி ஆகிய 5 பேரும் தலா ஒரு வெள்ளி மற்றும் ஒரு வெண்கலப் பதக்கம் பெற்றனர். லோகேஷ் மற்றும் அஸ்வின் ஆகிய இருவரும் இரு வேறு பிரிவுகளில் தலா 2 வெண்கலப் பதக்கம் பெற்றனர். சீனிவாஸ் மற்றும் அவினேஷ் ஆகிய இருவரும் இரு வேறு பிரிவுகளில் தலா இரண்டு தங்கப்பதக்கங்களைப் பெற்றனர்.
நந்தீஸ் மற்றும் பிரசன்ன ராம் ஆகிய இருவரும் தலா 2 வெள்ளிப் பதக்கங்களைப் பெற்றனர். சபேசன் ஒரு வெள்ளி மற்றும் ஒரு வெண்கலப் பதக்கம் பெற்றார். ஹரிகரன் இரண்டு வெண்கலம் பெற்றார்.
மேலும் நாகேஷ்வரன், மோகித், அஜய், நிரஞ்சன், முத்தழகன், லிரிஷ் ஆகிய 6 மாணவர்களும் ஒரு தங்கப் பதக்கத்தையும், 11 மாணவர்கள் ஒவ்வொரு வெள்ளிப் பதக்கத்தையும் 18 மாணவர்கள் ஒவ்வொரு வெண்கலப் பதக்கத்தையும் பெற்றனர். இரண்டு தங்கப் பதக்கம் பெற்ற மாணவர்களுக்குப் பாராட்டுகள் தெரிவிக்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட 15-க்கு மேற்பட்ட பள்ளிகளில் அதியமான் பப்ளிக் பள்ளி ஒட்டு மொத்த சாம்பியன் கோப்பையைக் கைப்பற்றி மாநில அளவில் சாதனை புரிந்தது.
வெற்றி பெற்ற மாணவர்களுக்கும், வெற்றிக்கு உறுதுணையாக இருந்த ஆசிரியப் பெருமக்களுக்கும் சீனிவாசா கல்வி அறக்கட்டளையின் தலைவர் மல்லிகா சீனிவாசன், அதியமான் கல்வி நிறுவனங்களின் நிறுவனர் சீனி. திருமால் முருகன், செயலர் சோபா திருமால் முருகன், நிர்வாக இயக்குநர் கணபதி ராமன், அதியமான் பப்ளிக் பள்ளியின் முதல்வர் லீனா ஜோஸ் ஆகியோர் வாழ்த்துகளையும் சான்றிதழ்களையும் அளித்து மாணவர்களை ஊக்குவித்தனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்