search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கராத்தே குங்பூ போட்டியில் சூளகிரி மாணவர்கள் சாதனை
    X

    கராத்தே குங்பூ போட்டியில் சூளகிரி மாணவர்கள் சாதனை

    • சூளகிரி அகாடமி குங்பூ மாணவர்கள் 71 பேர் மாஸ்டர் பவித்ராமன் தலைமையில் மாணவர்கள் போட்டியில் கலந்துகொண்டனர்.
    • 11 பேர் மூன்றாம் இடத்தையும் பிடித்து வெற்றி பெற்றுள்ளனர்.

    சூளகிரி,

    பெங்களூருவில் தேசிய அளவிலான கராத்தே மற்றும் குங்பூ போட்டி மாஸ்டர் கண்ணன் தலைமையில் நடைபெற்றது.

    இப் போட்டியின் தலைமை நடுவராக மலேசியாவில் இருந்து வருகை புரிந்த மகா குரு மாஸ்டர்ஆனந்தன் கலந்து கொண்டார்.

    மேலும் 500-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவர்கள் கலந்து கொண்ட போட்டியில் கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி அகாடமி குங்பூ மாணவர்கள் 71 பேர் மாஸ்டர் பவித்ராமன் தலைமையில் மாணவர்கள் போட்டியில் கலந்துகொண்டனர்.

    அதில் 27 பேர் முதலிடத்தையும், 33 பேர் இரண்டாம் இடத்தையும், 11 பேர் மூன்றாம் இடத்தையும் பிடித்து வெற்றி பெற்றுள்ளனர். வெற்றி பெற்ற மாணவர்களுக்கு கேடயங்கள்கோப்பைகள் சான்றிதழ்களும் மாஸ்டர் ஆனந்தன் வழங்கினார். இதை அறிந்த பள்ளி ஆசிரியர்கள் பெற்றோர்கள் பெரிதும் பாராட்டினர்.

    Next Story
    ×