search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மரியாதை"

    • அனைத்து கட்சி தலைவர்கள் மாலை அனைவித்தும் மலர்தூவியும் மரியாதை செலுத்தினார்கள்.
    • காமராஜரின் 48-வது நினைவு நாள் இன்று அனுஷ்டிக்கப்படுகிறது

    கன்னியாகுமரி :

    மகாத்மா காந்தியடி களின் 155-வது பிறந்த நாள் விழா இன்று கொண்டாடப்படுகிறது. அதேபோல மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் காமராஜரின் 48-வது நினைவு நாள் இன்று அனுஷ்டிக்கப்படுகிறது. இதையொட்டி கன்னியாகுமரி கடற்கரை சாலையில் அமைந்துள்ள காந்தி நினைவு மண்டபத்தில்உள்ள காந்தி அஸ்தி கட்டம் (நினைவிடம்) மற்றும் காமராஜர் மணி மண்டபத்தில் உள்ள காமராஜரின் மார்பளவு வெண்கல சிலைக்கு அனைத்து கட்சி தலைவர்கள் மாலை அனைவித்தும் மலர்தூவியும்மரியாதை செலுத்தினார்கள்.

    அரசு சார்பில் தமிழக பால்வளத் துறை அமைச்சர் மனோ தங்கராஜ், குமரி மாவட்ட கலெக்டர்ஸ்ரீதர், ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இந்த நிகழ்ச்சியில் மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் ஜான்ஜெகத்பிரைட், அகஸ்தீஸ்வரம்தெற்கு ஒன்றிய தி.மு.க.செயலாளர் பாபு, தி.மு.க. வர்த்தகர் அணி மாநில இணை செயலாளர் தாமரை பாரதி, கன்னியாகுமரி சிறப்பு நிலை பேரூராட்சி தலைவர் குமரி ஸ்டீபன், பேரூராட்சி செயல் அலுவலர் ஜீவநாதன், அகஸ்தீஸ்வரம் தாசில்தார் ராஜேஷ், மாவட்ட சுற்றுலா அலுவலர் சதீஷ்குமார், வைகுண்ட பெருமாள், பேரூராட்சி சுகாதார அதிகாரி முருகன், சுகாதாரம் மேற்பார்வையாளர் பிரதீஸ் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

    காங்கிரஸ் கட்சி சார்பில் விஜய்வசந்த்எம்.பி. தலைமையில் அகஸ்தீஸ்வரம் மேற்கு வட்டார காங்கிரஸ் தலைவர் முருகேசன், தெற்கு வட்டார தலைவர் சாம்சுரேஷ்குமார் உள்பட பலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

    பாரதிய ஜனதா சார்பில் முன்னாள் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் தலைமையில் நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

    • நடிகர் சிவாஜி கணேசனின் பிறந்த நாள் விழா இன்று கொண்டாடப்பட்டது
    • அவரது உருவப்படத்திற்கு காமராஜர் நற்பணி மன்ற மாநில தலைவர் ராதாகிருஷ்ணன் மாலை அணிவித்து மரியாதை

    நாகர்கோவில் :

    நடிகர் சிவாஜி கணேசனின் பிறந்த நாள் விழா இன்று கொண்டாடப்பட்டது. இதையடுத்து நாகர்கோவில் வேப்பமூட்டில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த அவரது உருவப்படத்திற்கு காமராஜர் நற்பணி மன்ற மாநில தலைவர் ராதாகிருஷ்ணன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் நலத்திட்ட உதவிகளையும் வழங்கினார். நிகழ்ச்சியில் காங்கிரஸ் மாநகர் மாவட்ட தலைவர் நவீன்குமார், பிரபு மன்ற தலைவர் ஜெயபாலன், துணை தலைவர் செல்வின் ராம்குமார் மற்றும் அலெக்ஸ், கண்ணன், ஜேசுபெப்ற்றீஸ், குமரேசன், செல்லத்துரை, பலவேசம், தியாகி தவசிமுத்து, சரலூர் சேகர் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

    • 'தினத்தந்தி' குழும தலைவர் சி.பாலசுப்பிரமணியன் ஆதித்தன் அங்குள்ள நினைவு பீடத்தில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
    • பல்வேறு கட்சியினரும் பிறந்தநாளுக்கு மரியாதை செலுத்தினர்.

    சென்னை:

    பத்திரிகை உலகில் வியத்தகு சாதனைகள் படைத்து முத்திரை பதித்தவர் பத்மஸ்ரீ டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார். அவரது 88-வது பிறந்தநாள் விழா இன்று (ஞாயிற்றுக்கிழமை) கொண்டாடப்பட்டது.

    இதையொட்டி சென்னை போயஸ் கார்டனில் உள்ள டாக்டர் பா. சிவந்தி ஆதித்தனாரின் நினைவு இல்லத்தில் அவரது உருவப் படத்துக்கு மலர்தூவி மரியாதை செலுத்தப்பட்டது.

    'தினத்தந்தி' குழும தலைவர் சி.பாலசுப்பிரமணியன் ஆதித்தன் அங்குள்ள நினைவு பீடத்தில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். 'தினத்தந்தி' குழும இயக்குனர் பா. சிவந்தி ஆதித்தன் மலர் தூவி மரியாதை செலுத்தினார். மாலதி சிவந்தி ஆதித்தன், அனிதா குமரன் ஆகியோரும் மரியாதை செலுத்தினார்கள்.

    அதைத் தொடர்ந்து தினத்தந்தி, டி.டி. நெக்ஸ்ட், மாலைமலர், ராணி, ராணி முத்து, ராணி பிரிண்டர்ஸ், ஹலோ எப்.எம்., தந்தி டி.வி., சுபஸ்ரீ, இந்தியா கேப்ஸ், ஏ.எம்.என். டி.வி., கோகுலம் கதிர், பாரோஸ் ஓட்டல் ஆகியவற்றின் நிர்வாகிகளும், ஊழியர்களும் மரியாதை செலுத்தினார்கள்.

    மேலும் மரியாதை செலுத்தியவர்கள் விவரம் வருமாறு:-

    முன்னாள் மத்திய மந்திரி ஜெயந்தி நடராஜன், தொழில் அதிபர்கள் வி.ஜி.சந்தோசம், தண்டுபத்து ஜெயராமன், நடிகர் எஸ்.வி.சேகர், தி.மு.க. மகளிர் அணி ஆலோசனை குழு சிம்லா முத்துசோழன், மாநில இளைஞர் அணி துணை செயலாளர் தூத்துக்குடி ஜோயல், மாநில வர்த்தகர் அணி தலைவர் கவிஞர் காசிமுத்து மாணிக்கம், நிர்வாகிகள் சீனிவாசன், மதியழகன், கனிமொழி, மீனா, கருணாநிதி, நந்தகுமார், சரவணன், பாஸ்கர், சக்திவேல், விஜி, ஆர்.எஸ்.மனோகரன், கோவிந்தன், விச்சு சிங், மதுரை, கணேஷ், குமார், ஜெகதீஷ், செந்தில், விஸ்வநாதன், கோபிநாத், தளபதி பேரவை தலைவர் அருள்காந்த், நிர்வாகிகள் தண்டபாணி, அறிவுமணி, தாமோதரன், அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர்கள் கடம்பூர் ராஜு, விஜயபாஸ்கர் மற்றும் இ.சி.சேகர், 170-வது வார்டு நிர்வாகி கோட்டூர் கே.குரு. காங்கிரஸ் நிர்வாகி ஜெயம் கக்கன்.

    பாரதிய ஜனதா மாநில செயலாளர் கராத்தே தியாகராஜன், மாநில துணைத் தலைவர் வழக்கறிஞர் ஆர்.சி.பால் கனகராஜ், மாநில சிறுபான்மையினர் அணி துணைத் தலைவர் யமஹா கே.சுரேஷ், புயல் ராஜாமணி.

    விடுதலை சிறுத்தைகள் கட்சி எம்.எல்.ஏ. பாலாஜி, மாவட்ட செயலாளர்கள் சாரநாத், வேலுமணி, அப்புனு, சேத்துப்பட்டு இளங்கோ, முன்னாள் மாவட்ட செயலாளர் செல்லத்துரை, வெங்கடேசன், பகலவன், பார்த்திபன்.

    தே.மு.தி.க. துணை செயலாளர் பார்த்தசாரதி, பிரபாகரன், மாறன், கருப்பையா, பிரபு, எம்.ஆர்.வெங்கடேசன், குமாரி, மேரி.

    த.மா.கா. செயற்குழு உறுப்பினர் டி.சிவபால்.

    பெருந்தலைவர் மக்கள் கட்சித் தலைவர் என்.ஆர்.தனபாலன், மாநில செயலாளர் எம்.வி.எம்.ரமேஷ்குமார், தலைமை நிலைய செயலாளர் ஆர்.சிவகுமார், மாநில செய்தி தொடர்பாளர் ஜி.சந்தானம், உயர்மட்டக்குழு உறுப்பினர் டி.உதயகுமார், மாநில மகளிர் அணித் தலைவி நளினி மகேந்திரன், செயலா ளர் ஆரோக்கிய ராணி, சென்னை மேற்கு மாவட்டத் தலைவர் எம்.வைகுண்ட ராஜா, பொருளாளர் விருகை கே.மணிராஜ், தென் சென்னை மேற்கு மாவட்ட செயலாளர் எம்.சுப்பிரமணியன், பொருளாளர் டி.ராஜ் நாடார், தென் சென்னை தெற்கு மாவட்ட செயலாளர் வி.எஸ்.கே.செந்தில்குமார்.

    தென் சென்னை வடக்கு மாவட்ட நிர்வாகிகள் அன்பு, காந்திமதி, மத்திய சென்னை மாவட்ட அமைப்பாளர் வி.பி. ஐயர், மத்திய சென்னை கிழக்கு மாவட்ட தலைவர் புரசை சி.நாகராஜ், செயலாளர் எல்.சுந்தரலிங்கம், வடசென்னை மாவட்ட செயலாளர் ஜி.ராபர்ட், மகளிர் அணி தலைவி சுமதி, வடசென்னை மேற்கு மாவட்டத் தலைவர் என்.வேலப்பன், செயலாளர் நீலகண்ணன், காஞ்சிபுரம் மாவட்ட பொருளாளர் ஏ.முருகேச பாண்டி, தி.நகர் தொகுதி தலைவர் எம்.எம்.டி.ஏ. பாலமுருகன், குன்றத்தூர் ஒன்றியத் தலைவர் ஏ.சி.தர்மராஜ், அயனாவரம் வினோத் குமார், அய்யாவைகுண்டர்

    மக்கள் கட்சி ஒருங்கிணைப்பாளர் சசிகுமார் நாடார், பொதுச் செயலாளர் சுரேஷ் மாறன், பொருளாளர் சிவா, கொள்கை பரப்பு செய லாளர் பேச்சிராஜன், அண்ணா எம்.ஜி.ஆர். திராவிட மக்கள் கழக பொதுச்செயலாளர் முத்து ராமன், சிங்கப்பெருமாள், பொருளாளர் அருண் குமார், மாநில செயலாளர் தேவேந்திரன், துணைத் தலைவர் விஜயகுமார், துணைச் செயலாளர் சுரேஷ், இளைஞர் அணி செயலாளர் பலவேசம், சாந்தி முத்துராமன், விஜய் மக்கள் இயக்க மாநில பொதுச் செயலாளர் புஸ்சி ஆனந்த், மாவட்ட தலைவர்கள் அப்புனு, பாலமுருகன், நிர்வாகிகள் பூக்கடை குமார், இ.சி.ஆர்.சரவணன், ஆர்.கே.நகர் மணி, நவீன், ஓ.எம்.ஆர்.லோகு, சந்திரகுமார், குரு, ஸ்டீபன், தினேஷ், வனிதா, முத்துலட்சுமி, மாலதி, கஜலட்சுமி, விக்கி, ஓ.எம்.ஆர்.ரவி, சகாயமேரி, ஜெய், சரத், எழில், கவியரசன், நரேஷ்குமார், முத்து, ஆனந்த், ராஜேஷ், தரணி, கருணாகரன், கதிர், பிரபா, பிரசாந்த், விஜி, அமர்நாத், கார்த்திக், பிரவீன், அப்பு, மணிபாரதி.

    • ராமநாதபுரத்தில் 21 தியாகிகளுக்கு பா.ம.க.வினர் மரியாதை செலுத்தினர்.
    • மாவட்ட சிறுபான்மை பிரிவு தலைவர் இப்ராகிம் நன்றி கூறினார்.

    ராமநாதபுரம்

    கடந்த 1987-ம் ஆண்டு செப்.17 அன்று மிகவும் பிற்படுத்தப் பட்டோர் இட ஒதுக்கீடு கேட்டு போராட்டத்தில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த 21 தியாகிகளுக்கு ராமநாதபுரம் கிழக்கு மாவட்ட பா.ம.க. சார்பில் மாலை அணிவித்து மலர் தூவி வீர வணக்கம் செலுத்தப்பட்டது. மாவட்ட செயலாளர் தேனிசை அக்கீம் தலைமை வகித்தார். சிறப்பு அழைப்பாளராக மாநில சிறுபான்மை பிரிவு தலைவர் முனைவர் ஷேக் மொகைதீன் கலந்து கொண்டார்.

    மாவட்ட தலைவர் சந்தன தாஸ் முன்னிலை வகித்தார். மாவட்ட அமைப்பு செயலாளர் சதாம் ராஜா, மாவட்டத் துணைச் செயலாளர் தொண்டி ராசிக், மாவட்ட தொழிற்சங்க செயலாளர் லட்சுமணன்,மாவட்ட இளைஞர் சங்கத் தலைவர் ஸ்டாலின், மாவட்ட இளைஞர் சங்க செயலாளர் துல்கர், நகரச் செயலாளர் ராமநாதபுரம் பாலா, மண்டபம் ஒன்றிய செய லாளர் வெங்கடேசன்.

    ராமநாதபுரம் ஒன்றிய செயலாளர் பொறியாளர் சரிப், திருப்புல்லாணி ஒன்றிய செயலாளர் மக்தும் கான், மாணவர் சங்க செயலாளர் சந்தோஷ், நகர அமைப்பாளர் கார்த்திக் மற்றும் நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர். மாவட்ட சிறுபான்மை பிரிவு தலைவர் இப்ராகிம் நன்றி கூறினார்.

    • பெரியார் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.
    • பின்னர் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது.

    திருமங்கலம்

    மதுரை தெற்கு மாவட்ட தி.மு.க. சார்பில் திருமங்கலம் அருகே உள்ள முத்தப் பன்பட்டியில் பெரியாரின் 145-வது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. பெரியாரின் உருவப் படத்திற்கு மதுரை தெற்கு மாவட்ட செயலாளர் சேடப்பட்டி மணிமாறன் மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தி னார்.

    இதனை தொடர்ந்து நிர்வாகிகள் மற்றும் மகளிர் அணி, பொதுமக்கள் பெரி யாரின் படத்திற்கு மரியாதை செலுத்தினர். பின்னர் இனிப்பு வழங்கப்பட்டது.

    நிகழ்ச்சியில் மாநில விவ சாய அணி இணை செயலா ளர் முன்னாள் எம்.எல்.ஏ. முத்துராமலிங்கம், மாவட்ட அவைத் தலைவர் நாகராஜ், பொதுக்குழு உறுப்பினர் சிவமுருகன், சரவணன், ஒன்றிய செயலாளர்கள் பாண்டியன், தனசேகரன், பேரூர் செயலாளர் வருசை முகமது, மாவட்ட அணி அமைப்பாளர்கள் வில்லூர் ஞானசேகரன், பரமசிவம், வழக்கறிஞர் அணி அமைப் பாளர் ஆனந்த், கீழக்குயில் குடி செல்வேந்திரன், திரு மங்கலம் நகரசபை தலைவர் ரம்யா முத்துக்குமார், நகர செயலாளர் ஸ்ரீதர், நகராட்சி கவுன்சிலர்கள் சின்னச்சாமி, திருக்குமார், வீரக்குமார், ஜஸ்டின் திரவியம், மாவட்ட பிரதிநிதி ராதாகிருஷ்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • அண்ணா பிறந்தநாள் விழாவை முன்னிட்டு அவரது படத்திற்கு மானாமதுரை-திருப்புவனத்தில் தி.மு.க.வினர் மரியாதை செலுத்தினர்.
    • பேரூராட்சி தலைவர் நஜூமுதீன் கலந்து கொண்டார்.

    மானாமதுரை

    சிவகங்கை மாவட்டம், திருப்புவனம், இளையான்குடி, மானாமதுரை ஆகிய பகுதிகளில் தி.மு.க. சார்பில் அண்ணா பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.

    திருப்புவனத்தில் பேரூராட்சித் தலைவர் சேங்கை மாறன் தலைமையில் தி.மு.க.வினர் அண்ணா படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி, பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினர். இதில் தி.மு.க. ஒன்றியச் செயலர்கள் கடம்பசாமி, வசந்தி சேங்கைமாறன், மீனவரணி மாவட்ட நிர்வாகி அண் ணாமலை கலந்து கொண்டனர்.

    இளையான்குடியில் முன்னாள் எம்.எல்.ஏ. மதியரசன் தலைமையில் தி.மு.க.வினர் அவரது படத்திற்கு மாலை அணிவித்தனர். இதில் பேரூராட்சித் தலைவர் நஜூமுதீன் கலந்து கொண்டார்.

    மானாமதுரையில் பழைய பஸ் நிலையத்தில் இருந்து தி.மு.க.வினர் ஊர்வலமாக வந்து அண்ணா சிலைக்கு மாலை அணிவித்தனர். நகர் மன்றத் தலைவர் எஸ்.மாரியப்பன் கென்னடி, துணைத்தலைவர் பாலசுந்தரம்,ஒன்றியச் செயலர்கள் ராஜாமணி, அண்ணாதுரை, அண்ணா சிலைக்கு மாலை ஊராட்சி ஒன்றியத் தலை வர் லதா அண்ணாதுரை, துணைத் தலைவர் முத்துச் சாமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    • அண்ணா சிலைக்கு ஓ.பி.எஸ்.அணி-அ.ம.மு.க.வினர் மரியாதை செலுத்தினர்.
    • ஓ.பி.எஸ் அணி மாவட்ட செயலாளர் அசோகன், அ.ம.மு.க மாவட்ட செயலாளர் தேர்போகி பாண்டி தலைமை தாங்கினர்.

    காரைக்குடி

    அண்ணாவின் பிறந்த நாளை முன்னிட்டு காரைக்குடியில் உள்ள அவரது சிலைக்கு

    ஓ.பன்னீர்செல்வம் அணியினர், கூட்டணி கட்சியான அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தினர் இணைந்து மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். ஓ.பி.எஸ் அணி மாவட்ட செயலா ளர் அசோகன், அ.ம.மு.க மாவட்ட செயலாளர் தேர்போகி பாண்டி தலைமை தாங்கினர். இதில் அ.ம.மு.க. மாநில பொறி யாளர் அணி துணை தலைவர் சரவணன், தெற்கு நகர செயலாளர் கார்த்திக், வடக்கு நகர செயலாளர் அஸ்வின் குமார், பொதுக் குழு உறுப்பினர் பழனி பெரியசாமி, மாவட்ட ஓட்டுநர் அணி மங்கலம் பூமி, சிறுபான்மை அணி மாவட்ட துணை செயலா ளர் மாலிக்கான், எம்.ஜி.ஆர் மன்ற இணை செயலாளர் பாரதி, நகர இணை செயலாளர் ராஜா, இலக்கிய அணி முத்துக்குமார், நகர அம்மா பேரவை செயலாளர் கல்கீஸ்வரன். இளைஞரணி செயலா ளர் கணேசன், எம்.ஜி.ஆர் மன்றம் தர்மராஜ், மாணவர் அணி முருகேசன், பாசறை சஞ்சய், நகர தலைவர் மைக்கேல், வட்ட செய லாளர்கள் சேகர், சக்திவேல், சையது, ராஜா, பாண்டியன் மற்றும் ஓ.பி.எஸ் அணி மாநில இளை ஞரணி இணை செயலாளர் திரு ஞானம், சாக்கோட்டை ஒன்றிய செயலாளர் மாத்தூர் பாண்டி, மாவட்ட பேரவை செயலாளர் அங்குராஜ், நகர பேரவை செயலாளர் ரவி உள்பட இரு கட்சியின் நிர்வாகிகள், தொண்டர்கல் திரளாக கலந்து கொண்டு அண்ணா சிலைக்கு மரியாதை செலுத்தினர்.

    • திருஞானசம்பந்தருக்கு உமையம்மை ஞானப்பால் வழங்கிய வரலாற்று நிகழ்வு.
    • சிவாச்சாரியார்கள் பூர்ண கும்பமரியாதை அளித்து வரவேற்றனர்.

    சீர்காழி:

    மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் தருமபுரம் ஆதீனத்திற்கு உட்பட்ட சட்டைநாதர் சுவாமி கோயில் உள்ளது. திருநிலைநாயகி அம்மன் உடனாகிய பிரம்மபுரீஸ்வரர் சுவாமி அருள் பாலிக்கிறார்.

    இக்கோயிலில் அமைந்துள்ள மலை மீது தோனியப்பர் உமா மகேஸ்வரி அம்மன், சட்டநாதர் ஆகிய சுவாமிகள் காட்சி தருகின்றனர். திருஞானசம்பந்தருக்கு உமையம்மை ஞானப்பால் வழங்கிய வரலாற்று நிகழ்வு நடைபெற்ற ஸ்தலம் ஆகும்.

    பிரசித்திப் பெற்ற இக்கோயிலுக்கு நகர்புற வளர்ச்சி துறை அமைச்சர் கே. என். நேரு, உழவர் நலத்துறை அமைச்சர் எம். ஆர். கே .பன்னீர்செல்வம் ஆகியோர் வந்தனர்.

    கோயில் நிர்வாகம் சார்பில் குமர கட்டளை தம்பிரான் சுவாமிகள் முன்னிலையில் சிவாச்சாரியார்கள் பூர்ண கும்ப மரியாதை அளித்து வரவேற்றனர்.

    தொடர்ந்து அமைச்சர்கள் கே.என்.நேரு, எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் ஆகியோர் சட்டை நாதர் சுவாமி, பிரம்மபுரீஸ்வரர், திருநிலை நாயகி அம்மன், மலை மீது அருள்பாளிக்கும் சட்டைநாதர் சுவாமி ,தோணியப்பர் ஆகிய சுவாமி சந்நிதிகளில் அர்ச்சனைகள் செய்து வழிபாடு செய்தனர்.

    பின்னர் கோயில் நிர்வாகம் சார்பில் சுவாமி படங்கள் மற்றும் பிரசா தங்கள் வழங்கப்பட்டது. திருச்சி மேயர் அன்பழகன், மாவட்ட கலெக்டர் ஏ.பி.மகாபாரதி, மயிலாடுதுறை தி.மு.க. மாவட்ட செயலாளர் நிவேதா முருகன் எம்.எல்.ஏ., சீர்காழி எம்.எல்.ஏ எம்.பன்னீர்செல்வம், திமுக பிரமுகர்கள் நம்பி, வழக்குரைஞர் இராம.சேயோன், மாவட்ட பொருளாளர் மகா அலெக்சாண்டர் ஒன்றிய செயலாளர் பிரபாகரன் திமுக நகர செயலாளர் சுப்பராயன், நகர்மன்ற தலைவர் துர்காராஜ சேகரன், நகர்மன்ற உறுப்பினர்கள் பாஸ்கரன், வள்ளிமுத்து மாவட்ட பொறியாளர் அணி தலைவர் ராஜேஷ் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.

    • பேரறிஞர் அண்ணாவின் 114 -வது பிறந்தநாள் விழா இன்று கொண்டாடப்பட்டது.
    • அண்ணாவின் உருவப்படத்துக்கு தி.மு.க.வினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி நடந்தது.

    கன்னியாகுமரி:

    கொட்டாரம் பேரூர் தி.மு.க. சார்பில் மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் பேரறிஞர் அண்ணாவின் 114 -வது பிறந்தநாள் விழா இன்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி கொட்டாரம் சந்திப்பில் அண்ணாவின் உருவப்படம் மலர்களால் அலங்கரித்து பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு இருந்தது. இதைத்தொடர்ந்து அண்ணாவின் உருவப்படத்துக்கு தி.மு.க.வினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி நடந்தது.

    கொட்டாரம் பேரூர் தி.மு க. செயலாளர் வைகுண்ட பெருமாள் தலைமை தாங்கி அண்ணாவின் உருவப்படத்துக்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினார். இந்த நிகழ்ச்சியில் அகஸ்தீஸ்வரம் ஒன்றிய தி.மு.க. முன்னாள் அவைத்தலைவர் ராஜகோபால், கொட்டாரம் பேரூர் தி.மு.க. அவைத்தலைவர் சுப்பையாபிள்ளை, ஒன்றிய பிரதிநிதி சந்திரசேகர், கிளை செயலாளர்கள் தி.மு.க. நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • மதுரை-வாடிப்பட்டியில் அண்ணா சிலைக்கு மாலை அணிவிக்க அ.தி.மு.க.வினர் திரண்டு வர வேண்டும் என செல்லூர்ராஜூ-ஆர்.பி.உதயகுமார் அறிக்கை விடுத்துள்ளனர்.
    • காலை 9.30 மணி அளவில் மாலை அணிவித்து மரியாதை செய்யப்படுகிறது.

    மதுரை

    மதுரை மாநகர் மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ இன்று வெளியிட்டுள்ள அறிக்கை யில் கூறியிருப்பதாவது-

    அ.தி.மு.க. பொதுச் செயலாளர் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் மேலான ஆணைக்கிணங்க பகுத்தறிவு பகலவன், காஞ்சி தந்த தங்கம் பேரறிஞர் அண்ணா வின் 115-வது பிறந்த நாளை முன்னிட்டு மதுரை மாநகர் மாவட்ட அ.தி.மு.க. சார்பில் மதுரை நெல்பேட்டையில் உள்ள பேரறிஞர் அண்ணாவின் சிலைக்கு மாலை அணி வித்து மரியாதை செலுத்தப் படுகிறது.

    நாளை காலை 10 மணி அளவில் நடைபெறும் இந்த நிகழ்ச்சிக்கு இன்னாள், முன்னாள், சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பி னர்கள், மாவட்ட நிர்வாகி கள், பகுதி, வட்ட நிர்வாகி கள், சார்பு அணி நிர்வாகி கள், முன்னாள், இன்னாள் கூட்டுறவு, உள்ளாட்சி பிரதி நிதிகள், முன்னோடிகள் அனைவரும் திரளாக பங்கேற்று பேரறிஞர் பெருந்தகைக்கு மரியாதை செலுத்திட வேண்டுகிறேன்.

    இவ்வாறு அவர் அவர் கூறியுள்ளார்.

    வாடிப்பட்டி

    மதுரை புறநகர் மேற்கு மாவட்ட அ.தி.மு.க. செயலா ளர் முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் வெளி யிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:-

    அ.தி.மு.க. பொதுச் செய லாளர் எடப்பாடி பழனி சாமியின் ஆணைக்கிணங்க பேரறிஞர் அண்ணாவின் 115-வது பிறந்த நாளை முன்னிட்டு மதுரை புறநகர் மேற்கு மாவட்டம் சார்பில் வாடிப்பட்டியில் உள்ள பேறிஞர் அண்ணாவின் சிலைக்கு நாளை (வெள்ளிக் கிழமை)காலை 9.30 மணி அளவில் மாலை அணிவித்து மரியாதை செய்யப்படுகிறது.

    ஆகவே இந்த நிகழ்ச்சிக்கு முன்னாள் சட்டமன்ற உறுப் பினர்கள், மாநில நிர்வாகி கள், மாவட்ட, ஒன்றிய நகர, பேரூர், கிளை, வட்ட நிர்வாகிகளும், சார்பு அணி நிர்வாகிகளும், உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகளும், கூட்டுறவு அமைப்பு நிர்வாகிகளும் மற்றும் செயல்வீரர்களும், செயல்வீராங்கனைகள் அனைவரும் திரளாக கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறி யுள்ளார்.

    • வ.உ.சி. சிலைக்கு அரசியல் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
    • கிராம பொது மக்களுக்கு இலவச மருத்துவ முகாம் மற்றும் அன்னதானமும் நடைபெற்றது.

    அலங்காநல்லூர்

    கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரம் பிள்ளை 152-வது பிறந்தநாளை யொட்டி மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே பெரிய ஊர்சேரியில் உள்ள அவரது சிலைக்கு சோழவந் தான் சட்டமன்ற உறுப்பினர் வெங்கடேசன் மாலை அனைவித்து மரியாதை செலுத்தினார்.

    ஒன்றிய செயலாளர் தன் ராஜ், பொதுக்குழு உறுப்பி னர் முத்தையன், அவைத் தலைவர் நடராஜன், நகர செயலாளர் ரகுபதி, பேரூ ராட்சி தலைவர் ரேணுகா ஈஸ்வரி கோவிந்தராஜ், துணை தலைவர் சுவாமி நாதன், ஊராட்சி மன்ற தலைவர் செந்தில்குமார், அணி அமைப்பாளர்கள் பிரதாப், சந்தனகருப்பு, ராகுல், சதிஷ், உள்ளிட்ட தி.மு.க. நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    இதேபோல் அ.தி.மு.க. சார்பில் ஒன்றிய செயலாளர் கல்லணை ரவிச்சந்திரன் தலைமையில் மாலை அனைத்து மரியாதை செலுத்தினர்.

    ஊராட்சி மன்ற தலைவர் தீபா நந்தினி மயில்வீரன், பெரியஊர்சேரி செந்தில் குமார், கவுன்சிலர் ரேவதி, சுந்தர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    நாம் தமிழர் கட்சி சார்பில் தொகுதி செயலா ளர் சக்கரபாணி தலைமை யில் தொகுதி தலைவர் சங் கிலி முருகன் மற்றும் நிர் வாகிகள் மாலை அணி வித்தனர். பாரதிய ஜனதா கட்சி சார்பில் மாவட்டத் துணைத் தலைவர் கோவிந்த மூர்த்தி, மண்டல் தலைவர் தங்கதுரை, பொதுசெய லாளர்கள் செல்லப்பாண்டி, முத்துக்குமரன், ஒன்றிய பொருளாளர் மறவபட்டி மாரிச்செல்வம் உள்பட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

    அ.தி.மு.க. (ஓ.பி.எஸ். அணி) சார்பில் மாவட்ட செயலாளர் முருகேசன், ஒன்றிய செயலாளர்கள் சேது சீனிவாசன், முத்து கிருஷ்ணன் மற்றும் நிர்வாகி கள் மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.

    அகில இந்திய காங்கிரஸ் சார்பில் வட்டாரத் தலைவர் கள் சுப்பாராயலூ, காந்திஜி, பொதுக்குழு உறுப்பினர் ஜெயமணி, மனித உரிமை மாவட்ட தலைவர் முத்து, பாண்டியராஜன் ஆகியோர் மரியாதை செய்தனர். முக் குலத்தோர் சமுதாயம் சார்பில் எஸ்.டி.எம் செந்தில் குமார் மற்றும் நிர்வாகிகள் மரியாதை செய்தனர். முன்னதாக விழா குழுவி னர்கள் சதீஷ், கார்த்திக், முத்துராஜா, மற்றும் பிள்ளைமார் உறவின்முறை சங்கத்தின் சார்பில் பாலா பிஷேகம் செய்து மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.

    தொடர்ந்து கிராம பொது மக்களுக்கு இலவச மருத்துவ முகாம் மற்றும் அன்னதான மும் நடைபெற்றது.

    • வ.உ.சிதம்பரனார் சிலைக்கு முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
    • தொடர்ந்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினார்.

    சிவகாசி

    சுதந்திர போராட்ட தியாகி வ.உ.சிதம்பரம் பிள் ளையின் 152-வது பிறந்த தினத்தை முன்னிட்டு சிவ காசியில் திருத்தங்கல் வ.உ.சி. சிலைக்கு விருதுநகர் மேற்கு மாவட்ட அ.தி.மு.க. சார்பாக அமைப்பு செயலா ளரும், விருதுநகர் மேற்கு மாவட்ட செயலாளரும் முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி வ.உ.சி. சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். தொடர்ந்து பொதுமக்களுக்கு இனிப்பு கள் வழங்கினார்.

    இந்த நிகழ்ச்சியில் சாத்தூர் முன்னாள் சட்ட மன்ற உறுப்பினர் ராஜவர் மன், மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற செயலாளர் எஸ்.என்.பாபு ராஜ், எம்.ஜி.ஆர். மன்ற துணை செயலாளர் வேண் டுராயபுரம் சுப்பிர மணியன், சிவகாசி மாநகர பகுதி செயலாளர்கள் கிருஷ்ணமூர்த்தி, சரவண குமார், கருப்பசாமி பாண்டி யன், ஷாம் என்ற ராஜ அபினேஸ்வரன், சிவகாசி ஒன்றிய செயலாளர்கள் வெங்கடேஷ்.

    கருப்பசாமி, லட்சுமிநாராயணன், ஆரோக்கியம், மாவட்ட இலக்கிய அணி தலைவர் என்.ஜி.ஓ.காலனி மாரி முத்து, கூட்டுறவு வங்கி தலைவர் ரமணா, ஒன்றிய கவுன்சிலர் ஜெகத்சிங்பிரபு மாநகர கவுன்சிலர் கரை முருகன், மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு செய லாளர் பாண்டிய ராஜன், தலைவர் செல்வம், மாநகர இளைஞரணி கார்த்திக் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    ×