search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மரியாதை"

    • மதுரையில் மருது பாண்டியர்கள் சிலைக்கு இந்திய ஜனநாயக கட்சியினர் மரியாதை செலுத்தப்பட்டது.
    • இதில் 50-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

    மதுரை

    மருதுபாண்டியர்களின் குருபூஜையை முன்னிட்டு மதுரையில் உள்ள அவர்களது சிலைகளுக்கு இந்திய ஜனநாயக கட்சி சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப் பட்டது.

    மாநில அமைப்பு செயலாளரும், மதுரை மாவட்ட செயலாளருமான அன்னை இருதயராஜ் தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர்கள் ஞானசேகரன் (வடக்கு), செந்தில் (கிழக்கு) ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில துணை தலைவர் நெல்லை ஜீவா மருது பாண்டியர்கள் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

    இதில் இந்திய ஜனநாயக கட்சியின் மதுரை மாநகர் மாவட்ட செயலாளர் செந்தூர் பாண்டியன், கிழக்கு மாவட்ட செயலாளர் நீலமேகம்,வடக்கு மாவட்ட செயலாளர் ராபின்சன்,

    மாநில மகளிரணி அணி துணை செயலாளர் சகிலாபோஸ்,

    மாவட்ட பொருளாளர் முத்துராஜா,அமைப்பு செயலாளர் அமிர்த கிருஷ்ணன்,வேந்தர் பேரவை செயலாளர் கதிரவன், மாநகர் மாவட்ட மகளிரணி இணை செயலாளர் அன்னபூரணி, மாவட்ட துணை செயலாளர் ஞானசுந்தர், இளைஞரணி செயலாளர் ராஜேஷ், பொருளாளர் ரஞ்சித், வர்த்தக அணி செயலாளர் செந்தில்குமார், உள்பட 50-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

    • நரிக்குடி அருகே உள்ள மறையூர் கிராமத்தில் மருதுபாண்டியர்கள் குருபூஜை விழா நடந்தது.
    • முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

    திருச்சுழி

    விருதுநகர் மாவட்டம் நரிக்குடி அருகே உள்ள மறையூர் கிராமத்தில் மருதுபாண்டியர்கள் குருபூஜை விழா நடந்தது. இதையொட்டி அங்குள்ள சிலைக்கு முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

    தொடர்ந்து அன்ன தானத்தை தொடங்கி வைத்த அவர் நரிக்குடி அருகே உள்ள என்.முக்குளம் கிராமத்தில் நடந்த நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டு மருது பாண்டியர்கள் படத்துக்கு மாலை அணிவித்தார். அப்போது கே.டி.ராஜேந்திர பாலாஜி கூறுகையில், எடப் பாடி பழனிசாமி ஆட்சியில் தான் தியாகிகளுக்கு மரி யாதை செலுத்தப்பட்டது.

    அவர் மீண்டும் ஆட்சி பொறுப்பேற்றவுடன் தியாகிகள் தொடர்பான அனைத்து கோரிக்கைகளும் நிறை வேற்றப்படும். மேலும் மருதுசகோதரர்கள் பிறந்த என்.முக்குளம் கிராமத்தில் மணி மண்டபம் கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

    இதேபோல் விருதுநகர் கிழக்கு மாவட்ட அ.தி.மு.க. சார்பாக அதன் கிழக்கு மாவட்ட செயலாளர் ஆர்.கே. ரவிச்சந்திரன் மற்றும் நரிக்குடி கிழக்கு ஒன்றிய அ.தி.மு.க. செயலாளரும், நரிக்குடி ஒன்றிய துணை சேர்மனுமான அம்மன்பட்டி ரவிச்சந்திரன ஆகியோர் தலைமையில் மருதுபாண்டி யர்கள் சிலைக ளுக்கு மாலையணிவித்து மரியா தை செலுத்தப்பட்டது. அப்போது வாரிசு தாரர்க ளின் நீண்ட கால கோரிக்கை நிறைவேற்றப்படு மென அவர்கள் தெரி வித்தனர்.

    இந்த குருபூஜை விழாவில் முன்னாள் நரிக்குடி ஒன்றிய சேர்மன் பஞ்சவர்ணம், அண்ணா தொழிற்சங்க மாநில போக்குவரத்து பிரிவு துணை செயலாளர் பி.வி.வீரேசன்,நரிக்குடி ஒன்றிய கவுன்சிலர் சரளா தேவி போஸ்,முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் பள்ளப் பட்டி முருகன்,கூட்டுறவு சங்க தலைவர்களான நாயனேந்தல் மனோகரன், பனைக்குடி ராஜா மற்றும் நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் உள்பட ஏராளமானோர் இந்த விழாவில் திரளாக கலந்து கொண்டனர்.

    • மருதுபாண்டியர் நினைவிடத்தில் முன்னாள் எம்.எல்.ஏ. கருணாஸ் மரியாதை செலுத்தினர்.
    • வீரவணக்க உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.

    பரமக்குடி

    சிவகங்கை மாவட்டம் காளையார்கோவிலில் உள்ள மருது சகோதரர்கள் நினைவிடத்தில் 222-வது குருபூஜையையொட்டி முக்குலத்தோர் புலிப்படை சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. அந்த கட்சியின் தலைவரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான கருணாஸ் தலைமையில் நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

    பின்னர் அவர்கள் வீரவணக்க உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். இதில் முக்குலத்தோர் புலிப்படைக் கட்சியின் மேற்கு மாவட்ட ஒருங்கி ணைப்பாளர் கார்த்தி, கிழக்கு மாவட்ட ஒருங்கிணைப்பாளர் பசும்பொன் பாலாஜி, மேற்கு மாவட்ட செயலாளர் சுந்தர பாண்டியன், துணைச் செயலாளர் பசும்பொன் சௌந்தர், விருதுநகர் மாவட்ட செயலாளர் எஸ்.பி.ராமு உட்பட சிவகங்கை மாவட்ட நிர்வாகிகள், மாநில நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

    • மருதுபாண்டியர்கள் நினைவிடத்தில் அ.தி.மு.க.வினர் மரியாதை செலுத்தினர்.
    • மாவட்ட செயலாளர் செந்தில்நாதன் தலைமையில் அமைப்பு செயலாளர் முன்னாள் அமைச்சர் பாஸ்கரன் முன்னிலையில் கட்சியினர் மருதுபாண்டியர் நினைவிடத்தில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

    சிவகங்கை

    மருதுபாண்டியர்கள் குருபூஜையை முன்னிட்டு காளையார் கோவிலில் உள்ள அவர்களது நினைவிடத்தில் அ.தி.மு.க. சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. மாவட்ட செயலாளர் செந்தில்நாதன் தலைமையில் அமைப்பு செயலாளர் முன்னாள் அமைச்சர் பாஸ்கரன் முன்னிலையில் கட்சியினர் மருதுபாண்டியர் நினைவிடத்தில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

    இதில் சிவகங்கை முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் நாகராஜன், மாவட்ட அம்மா பேரவை செயலாளர் இளங்கோவன், நகர் செயலாளர் ராஜா, ஒன்றிய செயலாளர்கள் கருணாகரன், சேவியர்தாஸ், பழனிச்சாமி, சிவாஜி, கோபி, அருள்ஸ்டிபன், செல்வமணி, இலக்கிய அணி மாவட்ட செயலாளர் ராஜேந்திரன், கலைப்பிரிவு மாவட்ட செயலாளர் செந்தில்முருகன், மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற செயலாளர் சிவதேவ்குமார், காளையார் கோவில் ஒன்றிய பெருந்தலைவர் ராஜேஸ்வரி கோவிந்தராஜ், ஓட்டுநர் அணி மாவட்ட செயலாளர் சரவணன்.

    தகவல் தொழில்நுட்ப பிரிவு தமிழ்செல்வன் மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு இணை செயலாளர் சங்கர்ராமநாதன், மற்றும் மறவமங்கலம் ஊராட்சி மன்ற தலைவர் அன்பழகன், வழக்கறிஞர் பிரிவு இணை செயலாளர் நவநீதன்.

    மாவட்ட பாசறை இணை செயலாளர் பிரபு அம்மா பேரவை ஒன்றிய செயலாளர் கண்ணப்பன் மாவட்ட பாசறை இணை செயலாளர் மோசஸ், சக்கந்தி ஊராட்சி மன்ற தலைவர் மணிமுத்து, தகவல் தொழில்நுட்ப பிரிவு இணை செயலாளர் குழந்தை உள்ளிட்ட ஏராள மான அ.தி.முக. நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    • அ.தி.மு.க. சார்பில் சுதந்திர போராளி குயிலிக்கு மரியாதை செலுத்தப்பட்டது.
    • சிவகங்கை நகர செயலாளர் ராஜா முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் நாகராஜன், குணசேகரன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    சிவகங்கை

    சுதந்திர போராட்ட பெண் போராளி குயிலியின் வீரத்தை போற்றும் வகையில் சிவகங்கை பையூர் பழமலை பகுதியில் வேலு நாச்சியார் நினைவிடத்தில் குயிலி நினைவு ஸ்தூபிக்கு பல்வேறு அரசியல் கட்சியினர், அமைப்பினர் மரியாதை செலுத்தினர்.

    அ.தி.மு.க. சார்பில் மாவட்ட செயலாளர் செந்தில்நாதன் தலைமை யில் அமைப்பு செயலாளர் முன்னாள் அமைச்சர் பாஸ்கரன் முன்னிலையில் குயிலி நினைவிட ஸ்தூபி யில் மாலை அணிவித்து மரி யாதை செலுத்தப் பட்டது. இதில் சிவகங்கை நகர செயலாளர் ராஜா முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் நாகராஜன், குணசேகரன், மாவட்ட அம்மா பேரவை செயலாளர் இளங்கோவன் ஒன்றிய செயலாளர்கள் கருணாகரன், சேவியர்தாஸ், பழனிச்சாமி, சிவாஜி, கோபி, அருள்ஸ்டிபன், செல்வமணி, சிவசிவஸ்ரீதர், ஜெயபிரகாஷ் சோனைரவி, கல்லல் செந்தில்குமார், இலக்கிய அணி மாவட்ட செயலாளர் ராஜேந்திரன், கலைப்பிரிவு மாவட்ட செயலாளர் செந்தில் முருகன், காளையார் கோவில் ஒன்றிய தலைவர் ராஜேஸ்வரி கோவிந்தராஜ், ஓட்டுநர் அணி மாவட்ட செயலாளர் சரவணன், தகவல் தொழில்நுட்ப பிரிவு தமிழ்செல்வன் மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு இணை செயலாளர் சங்கர்ராமநாதன், மற்றும் மாவட்ட கவுன்சிலர் மாரிமுத்து,தேவராஜ், பில்லூர் ராமசாமி, நகர் துணை செயலாளர் மோகன்,மாவட்ட பாசறை இணை செயலாளர் மோசஸ், மாவட்ட பாசறை பொருளாளர் சரவணன், அமைப்பு சார அணி மாவட்ட இணை செயலாளர் அழகர்பாண்டி, மாண வரணி அன்பு,சக்கந்தி ஊராட்சி மன்ற துணை தலைவர் செந்தில்குமார் என ஏராளமான நிர்வா கிகள் கலந்து கொண்டனர்.

    • பெரம்பலூரில் காவலர் வீர வணக்க நாள் அனுசரிக்கப்பட்டது
    • துப்பாக்கி குண்டுகள் முழங்க மரியாதை செலுத்தப்பட்டது

    பெரம்பலூர்,

    கடந்த 1959-ம் ஆண்டு அக்டோபர் 21-ந் தேதி லடாக் பகுதியில் ஹாட் பிரிங்ஸ் என்ற இடத்தில் சீன ராணுவத்தினர் நடத்திய திடீர் தாக்குதலில் 10 மத்திய பாதுகாப்பு படை காவலர்கள் உயிரிழந்தனர். கடல் மட்டத்திலிருந்து 16 ஆயிரம் அடி உயரத்தில் வீரமரணம் அடைந்த அந்த காவலர்களின் தியாகத்தை நினைவுக்கூரும் வகையிலும் மற்றும் பணியின் போது வீர மரணம் அடைந்த போலீசாருக்கு அஞ்சலி செலுத்தும் விதமாகவும் ஆண்டுதோறும் அக்டோபர் 21-ந்தேதி காவலர் வீர வணக்க நாள் அனுசரிக்கப்பட்டு வருகிறது. அதன்படி நேற்று காலை சென்னை- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் பெரம்பலூர் அருகே தண்ணீர்பந்தலில் உள்ள மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் காவலர் வீர வணக்கம் நாள் போலீசார் சார்பில் அனுசரிக்கப்பட்டது. அப்போது மைதானத்தில் உள்ள காவலர் நினைவு தூணில் பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் கற்பகம், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஷ்யாம்ளா தேவி, மாவட்ட வருவாய் அலுவலர் வடிவேல் பிரபு, கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு மதியழகன், மண்டல ஊர்க்காவல் படை தளபதி அரவிந்தன் உள்ளிட்டோர் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். அதனை தொடர்ந்து துணை போலீஸ் சூப்பிரண்டுகள், இன்ஸ்பெக்டர்கள், சப்-இன்ஸ்பெக்டர்கள் மற்றும் போலீசார் அஞ்சலி செலுத்தினர். பின்னர் பணியின் போது வீர மரணம் அடைந்த போலீசாருக்கு 63 குண்டுகள் முழங்க மரியாதை செலுத்தப்பட்டது.

    • அ.தி.மு.க. 52-வது ஆண்டு தொடக்க விழா

    தென்தாமரைகுளம் :

    அ.தி.மு.க 52-வது ஆண்டு தொடக்க விழாவினை கொண்டாடும் விதமாக நேற்று தென்தாமரைகுளத்தில் பேரூர் அ.தி.மு.க. சார்பில் பேரூர் செயலாளர் டேனியல் தேவசுதன் தலைமையில் அகஸ்தீஸ்வரம் ஒன்றிய அவைத்தலைவர் தம்பிதங்கம், வடக்கு தாமரைக்குளம் கூட்டுறவு கடன் சங்க முன்னாள் தலைவர் பார்த்தசாரதி ஆகியோர் முன்னிலையில் அகஸ்தீஸ்வரம் (தெ) ஒன்றிய செயலாளர் தாமரை தினேஷ், எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா உருவப்படங்களுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி இனிப்பு வழங்கினார். நிகழ்ச்சியில் தென்தாமரை குளம் பேரூர் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    இதேபோல் சாமிதோப்பு குழந்தைகள் காப்பகத்தில் உள்ள குழந்தைகளுக்கு மதிய உணவு வழங்கப்பட்டது. அ.தி.மு.க. மாவட்ட மாணவரணி தலைவர் பார்த்தசாரதி தலைமை வகித்தார். சாமிதோப்பு பஞ்சாயத்து தலைவர் மதிவாணன், ஒன்றிய அவைத்தலைவர் தம்பி தங்கம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு விருந்தினராக அகஸ்தீஸ்வரம் தெற்கு ஒன்றிய செயலாளர் தாமரை தினேஷ் கலந்து கொண்டு குழந்தைகளுக்கு மதிய உணவினை வழங்கினார்.

    இதில் அ.தி.மு.க. கிளைச் செயலாளர்கள் வைகுண்ட பிரபு, செல்வராணி, சீதாலட்சுமி, தனுஜா, நிர்வாகிகள் வக்கீல் பாலன், முகுந்தன், செந்தில்குமார், பாலன் உட்பட பலர் கலந்து கொண்டனர். எம்.ஜி.ஆர், ஜெயலலிதா உருவப்படங்களுக்கு மலர் தூவி மரியாதையும் செலுத்தப்பட்டது.

    • எம்.ஜி.ஆர். சிலைக்கு ஓ.பி.எஸ். அணியினர் மரியாதை செலுத்தினர்.
    • முன்னாள் எம்.பி. கோபாலகிருஷ்ணன் பங்கேற்றார்.

    மதுரை

    அ.தி.மு.க. 52-வது ஆண்டு விழாவை முன்னிட்டு மதுரை மாவட்ட நீதிமன்றம் அருகே உள்ள அ.தி.மு.க. நிறுவனர், முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர்., முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ஆகியோரின் சிலைகளுக்கு ஓ.பி.எஸ். அணி சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

    ஓ.பி.எஸ்.அணி மதுரை மாநகர் மாவட்ட செயலாளர் முன்னாள் எம்.பி. கோபால கிருஷ்ணன் தலைமையில் தொண்டர்கள் ஊர்வலமாக வந்தனர். பின்னர் பொது மக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது.

    இந்த நிகழ்ச்சியில் கண்ணன், அம்மா பேரவை மாவட்ட செயலாளர் சுந்தரா, இளைஞர் அணி மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் சரவணன், மாவட்ட துணைச் செய லாளர் சுசிலா பாண்டி, லதாபாண்டி, தொகுதி செயலாளர் ரகுராமன், அமைப்புசாரா ஓட்டுனர் அணி மாவட்ட செயலாளர் சரவணன், ஐ.டி.விங் திருப்பதி, பகுதி, வட்ட நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • டி.குன்னத்தூர் அம்மா கோவிலில் எம்.ஜி.ஆர்.-ஜெயலலிதா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்படுகிறது.
    • பின்னர் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்படு கிறது.

    மதுரை

    அ.தி.மு.க. சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவரும், அம்மா பேரவை செயலாளரும், மதுரை புறநகர் மேற்கு மாவட்ட செயலாளருமான ஆர்.பி. உதயகுமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்ப தாவது:-

    அ.தி.மு.க. பொதுச் செயலாளர், வருங்கால முதலமைச்சர், புரட்சித் தமிழர் எடப்பாடியாரின் ஆணைக்கிணங்க, கழகத்தின் 52-வது ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு அம்மா பேரவையின் சார்பிலும், மதுரை புறநகர் மேற்கு மாவட்ட கழகத்தின் சார்பில் நாளை (17-ந் தேதி) காலை 9 மணிக்கு டி.குன்னத்தூர் உள்ள அம்மாகோவில் மணிமண்டபத்தில் உள்ள புரட்சித்தலைவர் மற்றும் புரட்சித்தலைவி அம்மா ஆகியோரின் திருவுரு சிலைக்கு மாலை அணி வித்து மரியாதை செலுத்தப் படுகிறது. பின்னர் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்படு கிறது.

    அதனை தொடர்ந்து கழகப் பொதுச் செயலாளர் எடப்பாடியார் ஆணைக்கி ணங்க சோழவந்தான் குமாரத்தில் மாபெரும் பொதுக்கூட்டமும், திருமங்கலம் தொகுதியில் வருகிற 18-ந் தேதி கள்ளிக்குடியில் மாபெரும் பொதுக்கூட்டமும், அதனை தொடர்ந்து உசிலம்பட்டியில் 28-ந் தேதி மாபெரும் பொதுக்கூட்டங்கள் நடைபெறுகிறது.

    மேற்கண்ட நிகழ்ச்சி களுக்கு முன்னாள் சட்ட மன்ற உறுப்பினர்கள், கழகம் மற்றும் சார்பு அணி நிர்வாகிகளும், ஒன்றிய, நகர, பேரூர், கிளை, வட்ட நிர்வாகிகளும், உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகளும் மற்றும் செயல்வீர்கள், செயல்வீராங்கனைகள் அனைவரும் பங்கேற்கு மாறு கேட்டுக் கொள்கிறேன்.

    இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

    • தமிழ்செல்வன் கடலூரில் இருந்து ஆட்டோவில் சென்ற போது ஆட்டோ கவிழ்ந்து சாலை விபத்தில் உயிரிழந்துவிட்டார்.
    • அன்னை வேளாங்கண்ணி பாலிடெக்னிக் எதிரில் இன்று சாலை மறியல் செய்தனர்.

    கடலூர்:

    பண்ருட்டி அடுத்த மணப்பாக்கத்தை சேர்ந்தவர் தமிழ்செல்வன் (20)கடலூர் அரசு பெரியார் கலைக்கல்லூரி மாணவர். இவர் கடலூரில் இருந்து ஆட்டோவில் சென்ற போது ஆட்டோ கவிழ்ந்து சாலை விபத்தில் உயிரிழந்துவிட்டார். அவரது உடல் சொந்த ஊரான பண்ருட்டி உட்கோட்டம் புதுப்பேட்டை போலீஸ் சரகம் மணப்பாக்கம் ஊராட்சியில் அவரது இல்லத்தில் வைக்கப்பட்டிருந்த போது மரியாதை செலுத்த வந்த பெரியார் கலை கல்லூரி மாணவர்கள், உறவினர்கள், கிராமத்தினர், அதே ஊராட்சியை சேர்ந்த சுரேந்தர், மாவட்ட தலைவர், தமிழக வாழ்வுரிமை கட்சி சியாமளா சுரேந்தர், மணப்பாக்கம் ஊராட்சி மன்ற தலைவரின் கணவர் அரசு அறிவித்த 2 லட்சம் இழப்பீடு போதாது என்றும் கூடுதலாக 10 லட்சம் ரூபாய் இழப்பீடு, குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை அளிக்க வேண்டும் என அனைவரையும் திரட்டி கடலூர் - மடப்பட்டு சாலை அன்னை வேளாங்கண்ணி பாலிடெக்னிக் எதிரில் இன்று சாலை மறியல் செய்தனர். பண்ருட்டி டி.எஸ்.பி.சபியுல்லா, அரசு அதிகாரிகளிடம் பேசி உரிய நிவாரணம் பெற்று தரப்படும் என்று பேச்சுவார்த்தை நடத்தியதன் பேரில் அனைவரும் கலைந்து சென்றனர்.

    • நிலதரகர்கள் நல சங்கம் சார்பில் காந்திசிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
    • மாவட்ட பொருளாளர் முப்பிடாதி, மாவட்ட துணைச் செயலாளர் ஜான் கென்னடி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    ராஜபாளையம்

    மகாத்மா காந்தி 155-வது ஜெயந்தி தினத்தை முன்னிட்டு இந்திய தேசிய ரியல் எஸ்டேட் பில்டர்ஸ் லேண்ட் டெவலப்பர்ஸ் நிலத்தரகர்கள் நலச்சங்கம் சார்பில் ராஜபாளையம் தொகுதி தலைவர் லட்சுமணன் தலைமையில் நகர செயலாளர் ராசு, பொருளாளர் ஆறுமுகம் முன்னிலையில் மாநில தலைவர் டாக்டர் கண்ணன், ராஜபாளையம் அரசு மகப்பேறு மருத்துவமனை முன்பு உள்ள காந்தி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினர்.

    இதில் மாநில துணைத்தலைவர் அய்யப்பன், மாவட்டத் தலைவர் ராஜ்குமார், மாவட்ட செயலாளர் செல்வராஜ், மாவட்ட பொருளாளர் முப்பிடாதி, மாவட்ட துணைச் செயலாளர் ஜான் கென்னடி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • இம்மாவட்டத்திற்கு ரூ.1.55 கோடி விற்பனைக் குறியீடு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
    • நெசவாளர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தி தீபாவளியை மகிழ்ச்சியுடன் கொண்டாட வேண்டும்.

    விழுப்புரம்:

    விழுப்புரம் மாவட்டம் தமிழ்நாடு கதர் கிராமத் தொழில் வாரியத்தில் தீபாவளி சிறப்பு விற்பனையை விழுப்புரம் கலெக்டர் பழனி இன்று தொடங்கி வைத்தார். பின்னர் அவர் கூறியதாவது:-

    கடந்த ஆண்டு விழு ப்புரம் மாவட்டத்திற்கு கதர் விற்பனை குறியீடு ரூ.1.50 கோடி முழுமையாக எட்டப்பட்டது. நடப்பாண்டு இம்மாவட்டத்திற்கு ரூ.1.55 கோடி விற்பனைக் குறியீடு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த குறியீட்டை முழுமையாக எய்திட வேண்டும். காதி கிராப்டில் இவ்வாண்டும் சிறப்பு விற்பனையாக கதர் பாலியஸ்டர் மற்றும் பட்டு ஆகிய ரகங்களுகு்கு 30 சதவீதம் சிறப்பு தள்ளுபடி வழங்கப்படுகிறது. அரசு ஊழியர்களும், பொதுமக்களும் கதர் ஆடைகளை வாங்கி கிராம நெசவாளர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தி தீபாவளியை மகிழ்ச்சியுடன் கொண்டாட வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். முன்னதாக காந்தியடிகளின் 155-வது பிறந்தநாளை முன்னிட்டு அவரது திருவுருவப் படத்திற்கு கலெக்டர் பழனி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதில் கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) ஹரிதாஸ், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் (பொ) கலைமாமணி, கதர் ஆய்வாளர் ஜெயகுமார், விழுப்புரம் தாசில்தார் வேல்முருகன் மற்றும் கதர் கிராமத் தொழில் வாரிய ஊழியர்கள் உடனிருந்தனர்.

    ×