search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    டி.குன்னத்தூர் அம்மா கோவிலில் எம்.ஜி.ஆர்.-ஜெயலலிதா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை
    X

    டி.குன்னத்தூர் அம்மா கோவிலில் எம்.ஜி.ஆர்.-ஜெயலலிதா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை

    • டி.குன்னத்தூர் அம்மா கோவிலில் எம்.ஜி.ஆர்.-ஜெயலலிதா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்படுகிறது.
    • பின்னர் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்படு கிறது.

    மதுரை

    அ.தி.மு.க. சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவரும், அம்மா பேரவை செயலாளரும், மதுரை புறநகர் மேற்கு மாவட்ட செயலாளருமான ஆர்.பி. உதயகுமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்ப தாவது:-

    அ.தி.மு.க. பொதுச் செயலாளர், வருங்கால முதலமைச்சர், புரட்சித் தமிழர் எடப்பாடியாரின் ஆணைக்கிணங்க, கழகத்தின் 52-வது ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு அம்மா பேரவையின் சார்பிலும், மதுரை புறநகர் மேற்கு மாவட்ட கழகத்தின் சார்பில் நாளை (17-ந் தேதி) காலை 9 மணிக்கு டி.குன்னத்தூர் உள்ள அம்மாகோவில் மணிமண்டபத்தில் உள்ள புரட்சித்தலைவர் மற்றும் புரட்சித்தலைவி அம்மா ஆகியோரின் திருவுரு சிலைக்கு மாலை அணி வித்து மரியாதை செலுத்தப் படுகிறது. பின்னர் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்படு கிறது.

    அதனை தொடர்ந்து கழகப் பொதுச் செயலாளர் எடப்பாடியார் ஆணைக்கி ணங்க சோழவந்தான் குமாரத்தில் மாபெரும் பொதுக்கூட்டமும், திருமங்கலம் தொகுதியில் வருகிற 18-ந் தேதி கள்ளிக்குடியில் மாபெரும் பொதுக்கூட்டமும், அதனை தொடர்ந்து உசிலம்பட்டியில் 28-ந் தேதி மாபெரும் பொதுக்கூட்டங்கள் நடைபெறுகிறது.

    மேற்கண்ட நிகழ்ச்சி களுக்கு முன்னாள் சட்ட மன்ற உறுப்பினர்கள், கழகம் மற்றும் சார்பு அணி நிர்வாகிகளும், ஒன்றிய, நகர, பேரூர், கிளை, வட்ட நிர்வாகிகளும், உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகளும் மற்றும் செயல்வீர்கள், செயல்வீராங்கனைகள் அனைவரும் பங்கேற்கு மாறு கேட்டுக் கொள்கிறேன்.

    இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

    Next Story
    ×