search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மருதுபாண்டியர்கள் சிலைக்கு அ.தி.மு.க.வினர் மரியாதை

    • நரிக்குடி அருகே உள்ள மறையூர் கிராமத்தில் மருதுபாண்டியர்கள் குருபூஜை விழா நடந்தது.
    • முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

    திருச்சுழி

    விருதுநகர் மாவட்டம் நரிக்குடி அருகே உள்ள மறையூர் கிராமத்தில் மருதுபாண்டியர்கள் குருபூஜை விழா நடந்தது. இதையொட்டி அங்குள்ள சிலைக்கு முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

    தொடர்ந்து அன்ன தானத்தை தொடங்கி வைத்த அவர் நரிக்குடி அருகே உள்ள என்.முக்குளம் கிராமத்தில் நடந்த நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டு மருது பாண்டியர்கள் படத்துக்கு மாலை அணிவித்தார். அப்போது கே.டி.ராஜேந்திர பாலாஜி கூறுகையில், எடப் பாடி பழனிசாமி ஆட்சியில் தான் தியாகிகளுக்கு மரி யாதை செலுத்தப்பட்டது.

    அவர் மீண்டும் ஆட்சி பொறுப்பேற்றவுடன் தியாகிகள் தொடர்பான அனைத்து கோரிக்கைகளும் நிறை வேற்றப்படும். மேலும் மருதுசகோதரர்கள் பிறந்த என்.முக்குளம் கிராமத்தில் மணி மண்டபம் கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

    இதேபோல் விருதுநகர் கிழக்கு மாவட்ட அ.தி.மு.க. சார்பாக அதன் கிழக்கு மாவட்ட செயலாளர் ஆர்.கே. ரவிச்சந்திரன் மற்றும் நரிக்குடி கிழக்கு ஒன்றிய அ.தி.மு.க. செயலாளரும், நரிக்குடி ஒன்றிய துணை சேர்மனுமான அம்மன்பட்டி ரவிச்சந்திரன ஆகியோர் தலைமையில் மருதுபாண்டி யர்கள் சிலைக ளுக்கு மாலையணிவித்து மரியா தை செலுத்தப்பட்டது. அப்போது வாரிசு தாரர்க ளின் நீண்ட கால கோரிக்கை நிறைவேற்றப்படு மென அவர்கள் தெரி வித்தனர்.

    இந்த குருபூஜை விழாவில் முன்னாள் நரிக்குடி ஒன்றிய சேர்மன் பஞ்சவர்ணம், அண்ணா தொழிற்சங்க மாநில போக்குவரத்து பிரிவு துணை செயலாளர் பி.வி.வீரேசன்,நரிக்குடி ஒன்றிய கவுன்சிலர் சரளா தேவி போஸ்,முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் பள்ளப் பட்டி முருகன்,கூட்டுறவு சங்க தலைவர்களான நாயனேந்தல் மனோகரன், பனைக்குடி ராஜா மற்றும் நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் உள்பட ஏராளமானோர் இந்த விழாவில் திரளாக கலந்து கொண்டனர்.

    Next Story
    ×