search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மன அழுத்தம் குறையும்"

    • மூட்டுப் பகுதிகளை ஒன்றிணைக்கவும் பிசியோதெரபி அவசியம்.
    • எலும்பு முறிவு காயங்களுக்கு பிசியோதெரபிதான் பரிந்துரைக்கப்படுகிறது.

    விபத்தில் சிக்கியோ, நிலைதடுமாறி கீழே விழுந்தோ உள் உறுப்புகளில் ஏற்படும் வலியை போக்குவதற்கு `பிசியோதெரபி' சிகிச்சை முறை உதவுகிறது. கடுமையான காயம் அல்லது நாள்பட்ட நோய் பாதிப்புக்குள்ளாகுபவர்கள் மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்புவதிலும் பிசியோதெரபிக்கு முக்கிய பங்குண்டு. பிசியோதெரபி சிகிச்சை மூலம் கிடைக்கும் 6 முக்கியமான நன்மைகள் குறித்து பார்ப்போம்.

    1. வலி குறையும்:

    கை மற்றும் கால் மூட்டு பகுதிகள் மற்றும் மென்மையான திசு பகுதிகளில் ஏற்படும் வலியை போக்குவதற்கு பிசியோதெரபி உதவும். விபத்தில் சிக்கி காயமடைந்திருக்கும் மூட்டுப் பகுதிகளை ஒன்றிணைக்கவும் பிசியோதெரபி அவசியம் தேவைப்படும். மற்ற காயங்களால் ஏற்படும் வலியை போக்கவும் மருத்துவர்களின் ஆலோசனை படி பிசியோதெரபி சிகிச்சை முறையை பின்பற்றலாம். கடுமையான மற்றும் நாள்பட்ட வலியால் சிரமப்பட்டாலோ அல்லது மீண்டும் மீண்டும் வலியை அனுபவித்தாலோ பிசியோதெரபி சிகிச்சை தான் சரியான தீர்வாக அமையும்

    2. கடுமையான காயம்:

    எலும்பு முறிவு போன்ற கடுமையான காயங்களுக்கு பிசியோதெரபிதான் பரிந்துரைக்கப்படுகிறது. அது கால்களையும், மூட்டு பகுதிகளையும் ஒருங்கிணைத்து இயல்பு நிலைக்கு திரும்புவதற்கு வழிவகுக்கிறது. உடலின் உள் பகுதியில் இருக்கும் வலியை கூட படிப்படியாக குணப்படுத்திவிடும் வல்லமை இதற்கு உண்டு.

    3. தலைவலி:

    தலைவலியால் அடிக்கடி அவதிப்படுபவர்கள் பிசியோதெரபி சிகிச்சை முறையை தேர்ந்தெடுக்கலாம். குறிப்பாக ஒற்றை தலைவலியை நிரந்தரமாக போக்குவதற்கு துணை புரியும். உடலில் ரத்த ஓட்டம் சீராக செல்வதற்கும், மன அழுத்தத்தை குறைப்பதற்கும் உதவி செய்யும். இந்த இயற்கையான முறை ஹார்மோன்கள் சீராக செயல்படவும் துணைபுரியும்.

    4. அறுவை சிகிச்சை:

    முதியோர்கள் உள்பட அறுவை சிகிச்சை மேற்கொள்ள முடியாதவர்கள் மாற்று முறை சிகிச்சையாக பிசியோதெரபியை முயற்சிக்கலாம். இது அறுவை சிகிச்சையை போல் வேகமாக குணப்படுத்தாது. ஆனாலும் இயல்பு நிலைக்கு திரும்புவதற்கு ஏற்றதாக அமைந்திருக்கும். சிலருக்கு அறுவை சிகிச்சையும், பிசியோதெரபி சிகிச்சையும் தேவைப்படலாம். எந்த வகை சிகிச்சை செய்தாலும் முழுமையாக குணமடைந்த பிறகு பிசியோதெரபி செய்வது உடல் நலனுக்கு நல்லது.

    5. விளையாட்டு:

    பொதுவாக விளையாட்டு வீரர்கள் பயிற்சியின்போதோ, போட்டியின்போதோ காயங்கள் ஏற்பட்டு அவதிப்படுவதுண்டு. குறிப்பாக முழங்கை, விலா எலும்புகள், மூட்டு பகுதிகள் காயம் அடைவதற்கு அதிக வாய்ப்புகள் உண்டு. அவர்களுக்கு பிசியோதெரபிதான் காயங்களை குணப்படுத்தி நிரந்தர தீர்வை அளிக்கும்.

    6. நீரிழிவு:

    நீரிழிவு நோயாளிகள் சில சமயங்களில் முழங்கால்கள், தோள்பட்டை, கழுத்து, முதுகு வலியால் அவதிப்பட நேரிடும். ரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரிக்கும்போது இந்த பிரச்சினை ஏற்படும். இத்தகைய வலியை கட்டுப்படுத்த சில பிசியோதெரபி பயிற்சிகள் உதவும்.

    • ஆள்காட்டி விரலுக்கும் நடுவே அழுத்தம் கொடுத்தால், காது பிரச்சினைகள் சரியாகும்.
    • கால் விரல்களை தரையில் ஊன்றியபடி நடந்தால் மூளையின் செயல்பாடு அதிகரிக்கும்.

    `ரெஃப்லெக்சாலஜி' வகை அழுத்த சிகிச்சையை செய்துகொள்வதன் மூலம் மனம் அமைதி ஆவதுடன், உடலும் ரிலாக்ஸ் ஆகும். உறங்கப்போவதற்கு முன்னர் சுண்டு விரலுக்குக் கீழே உள்ள பகுதியில் இதமான அழுத்தம் கொடுப்பதன் மூலம் உடலும் மனமும் அமைதியாகும்.

    மன அழுத்தம், உடல் சோர்வு போன்ற பிரச்சினைகளை நீக்குவதற்கும், நம் உடலில் புத்துணர்ச்சியையும், உற்சாகத்தையும் தக்க வைத்துக்கொள்வதற்கும் பாடி மசாஜ், அரோமாதெரபி போன்ற சிகிச்சைகள் எடுத்துக்கொள்வது வழக்கம்.

    இதேபோல, உடலில் குறிப்பிட்ட சில பகுதியில் இருக்கும் புள்ளிகளுக்கு அழுத்தம் கொடுத்து, உடல் பிரச்சினைகளைக் குணப்படுத்தும் `ரெஃப்லெக்சாலஜி' சிகிச்சை முறையை பற்றி பார்க்கலாம்.

     `ரெஃப்லெக்சாலஜி' அக்குபஞ்சர் போன்ற ஒரு சிகிச்சை முறையைக் கொண்டிருந்தாலும், இதில் ஊசிகளின் பயன்பாட்டிற்கு இடமில்லை. கை, கால், காது, கழுத்து போன்ற பகுதிகளில் இருக்கும் புள்ளிகளைத் தூண்டுவதன் மூலம் ரத்த ஓட்டம் சீராகி, உடலின் ஆற்றல் அதிகரிக்கும்.

    நீண்ட நேரம் வேலை செய்வது, நின்றுகொண்டே வேலை செய்வது, அதிக தூரம் ஓடுவது போன்ற செயல்பாடுகளால் உடல் சோர்வடையும், அத்துடன் மன அழுத்தமும் அதிகரிக்கும். `ரெஃப்லெக்சாலஜி' வகை அழுத்த சிகிச்சையைச் செய்துகொள்வதன் மூலம் மனம் அமைதி ஆவதுடன், உடலும் தளர்வடையும். உறங்கப்போவதற்கு முன்னர் சுண்டு விரலுக்குக் கீழே உள்ள பகுதியில் இதமான அழுத்தம் கொடுப்பதன் மூலம் உடலும் மனமும் ரிலாக்ஸ் ஆகும்.

    தலை, முதுகு, கை - கால் மூட்டுகளில் ஏற்படும் வலியில் இருந்து விடுபடுவதற்கும் `ரெஃப்லெக்சாலஜி' வகை அழுத்த சிகிச்சை செய்து கொள்ளப்படுகிறது. தலை மற்றும் கழுத்து பகுதியுடன் தொடர்புடைய ரிஃப்ளெக்ஸ் புள்ளிகளில் அழுத்தம் கொடுப்பதன் மூலம், அப்பகுதியில் ஏற்பட்டிருக்கும் இறுக்கத்தை குறைத்து, அடிக்கடி தலைவலி வருவதில் இருந்து நிவாரணம் தருகிறது.

    மாதவிடாய்க் காலங்களில் பெண்களுக்கு இயல்பாய் வரக்கூடிய வயிற்று வலியைக் கூட ரெஃப்லெக்சாலஜி சிகிச்சையின் மூலம் குறைத்துக்கொள்ள முடியும் என்கிறார்கள் மருத்துவ வல்லுநர்கள்.

    ரெஃப்லெக்சாலஜி சிகிச்சை செய்து கொண்டவர்களில் பல பேர் அவர்களின் தூக்க நிலை சீரானதாகக் கூறுகிறார்கள். மன அழுத்தம் குறைந்து, உடல் தளர்வாவதன் பயன் நிறைவான தூக்கத்திற்கு வழிவகுக்கும். ரெஃப்லெக்சாலஜி சிகிச்சை மூலம் அஜீரணம், மலச்சிக்கல் போன்ற வயிற்று பிரச்சினைகளுக்கும் தீர்வு காணலாம். அதேபோன்று, நோய் எதிர்ப்பு மண்டலத்தையும் வலுப்படுத்த உதவுகிறது இந்த சிகிச்சை.

    * நடு விரலுக்கும் ஆள்காட்டி விரலுக்கும் நடுவே உள்ள பகுதியில் அழுத்தம் கொடுத்தால், காது பிரச்சினைகள் சரியாகும்.

    * கால் விரல்களை மட்டும் தரையில் ஊன்றியபடி நடந்தால் மூளையின் செயல்பாடு அதிகரிக்கும்.

    * வளையல் அணிந்தால், மணிக்கட்டுப் பகுதியில் இருக்கும் புள்ளிகளில் அழுத்தம் ஏற்பட்டு, கர்ப்பப்பையின் செயல்பாடுகள்

    தூண்டப்பட்டு, மாதவிடாய் பிரச்சினைகள் சீராகும்.

    * விரல்களை மடக்கும்போது சுண்டு விரலுக்கு கீழ்ப்பகுதியில் ஏற்படும் மடிப்புப் பகுதியில் அழுத்தம் கொடுப்பதன் மூலம் தோள்பட்டை வலி நீங்கும்.

    ஒருகாலத்தில் பள்ளிக்கூடங்களில் தோப்புக்கரணம் போடுவதைத் தண்டனையாகக் கொடுப்பார்கள். ஆனால், தோப்புக்கரணம் ஒருவித அழுத்த சிகிச்சை என்பது நம்மில் பலருக்கும் தெரியாத உண்மை. தோப்புக்கரணம் போடுவதால் மூளையின் செயல்பாடு அதிகரிக்கும்.

    அதேபோன்று, தவறு செய்யும் குழந்தைகளின் காதைத் திருகுவது ஒரு தண்டனையாகவே பின்பற்றப்படுகிறது. காதைத் திருகுவதால், ஒட்டுமொத்த உடல் உறுப்புகளின் செயல்பாடுகளும் தூண்டப்படும்.

    மோதிர விரல் மற்றும் நடுவிரலுக்கு நடுவே உள்ள பகுதியில் அழுத்தம் கொடுத்தால், கண் பார்வை சீராகும்.

    கொலுசு அணிந்தால் கணுக்கால் பகுதியிலுள்ள புள்ளிகள் தூண்டப்பட்டு மாதவிடாய் பிரச்சினைகளுக்கு நல்ல தீர்வு கிடைக்கும். இதுபோல பல பிரச்சினைகளுக்கு அழுத்த சிகிச்சையில் தீர்வு உண்டு!

    ரெஃப்லெக்சாலஜி, மசாஜ் போன்ற உடல்-அழுத்தம் நிறைந்த சிகிச்சைகளை மேற்கொள்ளும் போது முதலில் அதைச் செய்யும் இடம், செய்யும் நபர், அவரது அனுபவம் உள்ளிட்ட விவரங்களைக் கேட்டுத் தெரிந்து நம்பகமானதாக இருந்தால் செய்துகொள்ளுங்கள்.

    பிறகென்ன, மொபைல் போன்கள், லேப்டாப்களை சிறிது நேரம் ஓரமாக வைத்து விட்டு ஜாலியோ ஜிம்கானாவென இந்த சிகிச்சையை மேற்கொள்ளுங்கள்… சிறிது நேரம் கவலைகளுக்கும், கடமைகளுக்கும் குட்பை சொல்லிவிட்டு தியான நிலையில் லயித்து இருப்போமே. என்ன சொல்கிறீர்கள்?!

    • நிதானமாக நடந்தாலே போதுமானது.
    • நன்மைகளில் ஒன்று செரிமானம் மேம்படுத்துவதுதான்.

    காலை வேளையில் நடைப்பயிற்சி செய்யும் வழக்கத்தை பலரும் பின்பற்றுகிறார்கள். அதேபோல் இரவு உணவு உட்கொண்ட பிறகு நடைப்பயிற்சி செய்வதும் எண்ணற்ற ஆரோக்கிய நன்மைகளை அளிக்கும். இரவு உணவுக்கு பிறகு 20 முதல் 30 நிமிடங்கள் நடைப்பயிற்சி செய்து வந்தாலே போதுமானது. காலை நேர பயிற்சியை போல் விறுவிறுப்பாக மேற்கொள்ள வேண்டியதில்லை. நிதானமாக நடந்தாலே போதுமானது. அப்படி இரவு உணவுக்கு பிறகு நிதானமாக நடைப்பயிற்சி மேற்கொள்வதால் கிடைக்கும் நன்மைகள் என்னென்ன தெரியுமா?

    செரிமானம் மேம்படும்:

    இரவு உணவு உட்கொண்ட பிறகு நடைப்பயிற்சி செய்தால் கிடைக்கும் உடனடி நன்மைகளில் ஒன்று செரிமானம் மேம்படுத்துவதுதான். செரிமான பாதை வழியாக உணவை சுமுகமாக நகர்த்த உதவும். வீக்கம், அஜீரணத்தை தடுக்கும். உணவு உட்கொண்ட பிறகு அடிக்கடி நெஞ்செரிச்சல், அசிடிட்டி பிரச்சினையை அனுபவிப்பவர்களுக்கு இரவு நேர நடைப்பயிற்சி பயனுள்ளதாக இருக்கும்.

    எடையை நிர்வகிக்கும்:

    இரவு உணவிற்குப் பிறகு நடைப்பயிற்சி செய்வது கூடுதல் கலோரிகளை எரிக்கவும், உடல் எடையை சீராக நிர்வகிக்கவும் உதவி புரியும். குறிப்பாக அதிகப்படியான கலோரிகளை கொழுப்பாக சேமித்து வைப்பதை தடுத்து ஆரோக்கியமான உடல் எடையை பராமரிக்க உதவும்.

    மனநிலையில் மாற்றம் ஏற்படுத்தும்:

    இரவில் மனநிலையை மேம்படுத்துவதோடு, உடலில் எண்டோர்பின் ஹார்மோன்களின் செயல்பாட்டை அதிகரிக்க செய்யும். இந்த ஹார்மோன் மனச்சோர்வை எதிர்த்துப் போராடவும், ஒட்டுமொத்த உணர்ச்சிகளை கட்டுப்படுத்தி மன, உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் உதவும்.

    சிறந்த தூக்கத்திற்குவித்திடும்:

    இரவு உணவிற்கு பிந்தைய நடைப்பயிற்சி தூக்கத்திற்கு இன்றியமையாதது. ஆழ்ந்த, நிம்மதியான தூக்கத்தை அனுபவிக்கவும் உதவும். ஏனெனில் இந்த உடல் செயல்பாடு தூக்கமின்மை பிரச்சினையை போக்க உதவும்.

    உறவு வலுப்படும்:

    குடும்பம் மற்றும் நண்பர்களுடன் இணைவதற்கு இரவு நேர நடைப்பயிற்சி வாய்ப்பை ஏற்படுத்திக்கொடுக்கும். அவர்களுடன் சேர்ந்து நடக்கலாம். அன்றைய நாளில் நடந்த விஷயங்களை ஒருவருக்கொருவர் பகிர்ந்தபடியே நடைப்பயிற்சியை தொடரலாம். அதன் மூலம் உறவை வலுப்படுத்தலாம்.

    சோர்வை தடுக்கும்:

    உணவு உட்கொண்ட பிறகு சிலருக்கு ஒருவித அயற்சி, சோர்வு எட்டிப்பார்க்கும். அதிகம் உணவு உட்கொள்பவர்கள் இத்தகைய பிரச்சினைக்கு ஆளாவார்கள். இரவு நேர நடைப்பயிற்சி செய்வது இத்தகைய உடல் சோர்வை போக்கும்.

    அறிவாற்றல் செயல்பாடுக்கு வித்திடும்:

    இரவு உணவிற்கு பிந்தைய நடைப்பயிற்சி அறிவாற்றல் செயல்பாடுகளை மேம்படுத்துவதற்கு உதவும். நினைவாற்றலை அதிகரிக்கச் செய்யும். மனத் தெளிவை மேம்படுத்தும்.

    மன அழுத்தத்தை குறைக்கும்:

    இரவு நேர நடைப்பயிற்சி மனதை ரிலாக்ஸாக்கும். மன அழுத்தத்தைக் குறைக்கும் வாய்ப்பையும் வழங்கும். இரவு நேரத்தில் நடைப்பயிற்சி செல்லும் போது வெளிப்புற காற்றை ஆசுவாசமாக சுவாசிப்பது மனதை அமைதிப்படுத்தவும், பதற்றத்தைக் குறைக்கவும், ஒட்டுமொத்த மன நலனை மேம்படுத்தவும் உதவும்.

    ×