search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "reduce stress"

    • நிதானமாக நடந்தாலே போதுமானது.
    • நன்மைகளில் ஒன்று செரிமானம் மேம்படுத்துவதுதான்.

    காலை வேளையில் நடைப்பயிற்சி செய்யும் வழக்கத்தை பலரும் பின்பற்றுகிறார்கள். அதேபோல் இரவு உணவு உட்கொண்ட பிறகு நடைப்பயிற்சி செய்வதும் எண்ணற்ற ஆரோக்கிய நன்மைகளை அளிக்கும். இரவு உணவுக்கு பிறகு 20 முதல் 30 நிமிடங்கள் நடைப்பயிற்சி செய்து வந்தாலே போதுமானது. காலை நேர பயிற்சியை போல் விறுவிறுப்பாக மேற்கொள்ள வேண்டியதில்லை. நிதானமாக நடந்தாலே போதுமானது. அப்படி இரவு உணவுக்கு பிறகு நிதானமாக நடைப்பயிற்சி மேற்கொள்வதால் கிடைக்கும் நன்மைகள் என்னென்ன தெரியுமா?

    செரிமானம் மேம்படும்:

    இரவு உணவு உட்கொண்ட பிறகு நடைப்பயிற்சி செய்தால் கிடைக்கும் உடனடி நன்மைகளில் ஒன்று செரிமானம் மேம்படுத்துவதுதான். செரிமான பாதை வழியாக உணவை சுமுகமாக நகர்த்த உதவும். வீக்கம், அஜீரணத்தை தடுக்கும். உணவு உட்கொண்ட பிறகு அடிக்கடி நெஞ்செரிச்சல், அசிடிட்டி பிரச்சினையை அனுபவிப்பவர்களுக்கு இரவு நேர நடைப்பயிற்சி பயனுள்ளதாக இருக்கும்.

    எடையை நிர்வகிக்கும்:

    இரவு உணவிற்குப் பிறகு நடைப்பயிற்சி செய்வது கூடுதல் கலோரிகளை எரிக்கவும், உடல் எடையை சீராக நிர்வகிக்கவும் உதவி புரியும். குறிப்பாக அதிகப்படியான கலோரிகளை கொழுப்பாக சேமித்து வைப்பதை தடுத்து ஆரோக்கியமான உடல் எடையை பராமரிக்க உதவும்.

    மனநிலையில் மாற்றம் ஏற்படுத்தும்:

    இரவில் மனநிலையை மேம்படுத்துவதோடு, உடலில் எண்டோர்பின் ஹார்மோன்களின் செயல்பாட்டை அதிகரிக்க செய்யும். இந்த ஹார்மோன் மனச்சோர்வை எதிர்த்துப் போராடவும், ஒட்டுமொத்த உணர்ச்சிகளை கட்டுப்படுத்தி மன, உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் உதவும்.

    சிறந்த தூக்கத்திற்குவித்திடும்:

    இரவு உணவிற்கு பிந்தைய நடைப்பயிற்சி தூக்கத்திற்கு இன்றியமையாதது. ஆழ்ந்த, நிம்மதியான தூக்கத்தை அனுபவிக்கவும் உதவும். ஏனெனில் இந்த உடல் செயல்பாடு தூக்கமின்மை பிரச்சினையை போக்க உதவும்.

    உறவு வலுப்படும்:

    குடும்பம் மற்றும் நண்பர்களுடன் இணைவதற்கு இரவு நேர நடைப்பயிற்சி வாய்ப்பை ஏற்படுத்திக்கொடுக்கும். அவர்களுடன் சேர்ந்து நடக்கலாம். அன்றைய நாளில் நடந்த விஷயங்களை ஒருவருக்கொருவர் பகிர்ந்தபடியே நடைப்பயிற்சியை தொடரலாம். அதன் மூலம் உறவை வலுப்படுத்தலாம்.

    சோர்வை தடுக்கும்:

    உணவு உட்கொண்ட பிறகு சிலருக்கு ஒருவித அயற்சி, சோர்வு எட்டிப்பார்க்கும். அதிகம் உணவு உட்கொள்பவர்கள் இத்தகைய பிரச்சினைக்கு ஆளாவார்கள். இரவு நேர நடைப்பயிற்சி செய்வது இத்தகைய உடல் சோர்வை போக்கும்.

    அறிவாற்றல் செயல்பாடுக்கு வித்திடும்:

    இரவு உணவிற்கு பிந்தைய நடைப்பயிற்சி அறிவாற்றல் செயல்பாடுகளை மேம்படுத்துவதற்கு உதவும். நினைவாற்றலை அதிகரிக்கச் செய்யும். மனத் தெளிவை மேம்படுத்தும்.

    மன அழுத்தத்தை குறைக்கும்:

    இரவு நேர நடைப்பயிற்சி மனதை ரிலாக்ஸாக்கும். மன அழுத்தத்தைக் குறைக்கும் வாய்ப்பையும் வழங்கும். இரவு நேரத்தில் நடைப்பயிற்சி செல்லும் போது வெளிப்புற காற்றை ஆசுவாசமாக சுவாசிப்பது மனதை அமைதிப்படுத்தவும், பதற்றத்தைக் குறைக்கவும், ஒட்டுமொத்த மன நலனை மேம்படுத்தவும் உதவும்.

    ஊட்டியில் போலீசாரின் மனஅழுத்தத்தை குறைக்க நிறைவாழ்வு பயிற்சி தொடங்கியது. இதனை கோவை சரக போலீஸ் டி.ஐ.ஜி. கார்த்திகேயன் தொடங்கி வைத்தார்.
    ஊட்டி:

    தமிழ்நாடு காவல்துறை சார்பில் பணியின் போது போலீசாருக்கு ஏற்படும் மனஅழுத்தத்தை குறைப்பதற்கு ஆலோசனை மற்றும் நிறைவாழ்வு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. நீலகிரி மாவட்ட காவல்துறை மூலம் முதல் கட்டமாக போலீஸ் இன்ஸ்பெக்டர், சப்-இன்ஸ்பெக்டர் உள்பட 40 போலீசாருக்கு மனஅழுத்தத்தை குறைப்பதற்கான நிறைவாழ்வு பயிற்சி தொடக்க நிகழ்ச்சி ஊட்டி ஜெ.எஸ்.எஸ். கல்லூரி அரங்கில் நேற்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சியை கோவை சரக போலீஸ் டி.ஐ.ஜி. கார்த்திகேயன் குத்து விளக்கேற்றி தொடங்கி வைத்து பேசியதாவது:-

    தமிழகத்தில் பணிபுரியும் காவல்துறை அதிகாரிகள், போலீசார் தங்களது பணிகளை சிறப்பாக மேற்கொள்ள முழு முயற்சிகளை எடுக்கும் போது, அவர்களுக்கு குடும்பம் மற்றும் அதை சார்ந்த சில நேரங்களில் மனஅழுத்தம் ஏற்படுகிறது. இந்த மனஅழுத்தத்தை குறைக்க நாட்டிலேயே தமிழகத்தில் தான் முதல் முறையாக நிறைவாழ்வு பயிற்சி அளிக்கப்படுகிறது. பயிற்சியில் பங்கேற்கும் அதிகாரிகள், போலீசாருக்கு வேலைப்பளு, பாதுகாப்பு பணியில் ஏற்படும் அழுத்தம் காரணமாக சரியான முறையில் கவனம் செலுத்த முடியாத நிலை ஏற்படக்கூடும். இதனால் இதுபோன்ற பயிற்சி அவசியமானது ஆகும்.

    போலீசாருக்கான மருத்துவ முகாம், அவர்களது குடும்பத்தினருக்கான மருத்துவ முகாம் நடத்தப்படும் போது, முழு அளவில் முகாமில் பங்கேற்க முடியாத நிலை உள்ளது. மது பழக்கம் உள்ள போலீசார், அதில் இருந்து வெளியே வராத நிலைமையும் இருக்கிறது. தங்களுக்கு உள்ள பிரச்சினைகளை உணர்ந்து ஒப்புக்கொள்ள வேண்டும். அப்போது தான் அதில் இருந்து விடுபட முடியும். மனதில் எதிர்பார்ப்பும், உண்மையும் கிடைக்காமல் இருக்கும் போது மனஅழுத்தம் ஏற்படும்.

    மாநகர காவல்துறைகளில் போலீசாருக்கு யோகா பயிற்சி அளிக்கப்படுகிறது. இந்த பயிற்சியில் பங்கேற்ற பலர் மன அழுத்தத்தில் இருந்தும், உடல் பெலவீனத்தில் இருந்தும் விடுபட்டு உள்ளனர். இதுபோன்ற மனஅழுத்தத்தில் இருந்து விடுபடக்கூடிய பயிற்சிகள், ஆலோசனைகள், சிந்தனைகளை வளர்த்துக்கொண்டால் நம்மாலும் சிறப்பாக பணிபுரிய முடியும். போலீசார் தங்களது குடும்பத்திலும் மகிழ்ச்சியாக வாழலாம். நீலகிரி மாவட்டத்தில் காவல்துறையில் அதிகாரிகள் அனைவருக்கும் பயிற்சி அளிக்கப்பட உள்ளது.

    கர்நாடகா மாநிலம் பெங்களூருவில் மனஅழுத்தத்தை குறைப்பதற்கு பயிற்சி பெற்ற ஆலோசகர்கள் போலீசாருக்கு மூன்று நாட்கள் பயிற்சி அளிக்கிறார்கள். முதல் இரண்டு நாட்கள் போலீசாருக்கு பயிற்சி அளிக்கப்படும். 3-வது நாள் அவர்களது குடும்பத்தினருக்கும் சேர்த்து எந்த சூழ்நிலையில் பணிபுரிகிறார்கள், வேலைப்பளு குறித்து பயிற்சியுடன் ஆலோசனை வழங்கப்படும். வார இறுதி நாட்களில் தொடர்ந்து ஓராண்டு பயிற்சி அளிக்கப்பட இருக்கிறது. இவ்வாறு அவர் பேசினார். நேற்று தொடங்கிய நிறைவாழ்வு பயிற்சி இன்று (சனிக்கிழமை), நாளை (ஞாயிற்றுக்கிழமை) நடக்கிறது. இந்நிகழ்ச்சியில் நீலகிரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சண்முகப்பிரியா, கூடுதல் போலீஸ் சூப்பிரண்டுகள் கோபி, தம்பிதுரை, துணை போலீஸ் சூப்பிரண்டு திருமேனி, கல்லூரி முதல்வர் தனபால் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
    ×