search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மனநிலையில் மாற்றம்"

    • நிறங்களுக்கும், நமது உணர்வுகளுக்கும் நெருங்கிய தொடர்பு இருக்கிறது.
    • உடல் மற்றும் மன நிலையில் மாற்றங்களை ஏற்படுத்தக் கூடியவை.

    சில வகை நிறங்கள் உங்களுக்குள் பதற்றத்தையும், பயத்தையும் உண்டாக்குவதை உணர்ந்து இருக்கிறீர்களா? சில நிறங்கள் உங்களை சூழ்ந்து இருக்கும்போது உங்கள் மனம் அமைதியில் மூழ்குவதை அறிந்திருக்கிறீர்களா? நிறங்களுக்கும், நமது உணர்வுகளுக்கும் நெருங்கிய தொடர்பு இருக்கிறது. நிறங்கள் நமது உடல் மற்றும் மன நிலையில் மாற்றங்களை ஏற்படுத்தக் கூடியவை.

    வண்ண உளவியலின்படி, நிறங்களை இரண்டு வகையாகப் பிரிக்கலாம். ஒன்று சூடானது, மற்றொன்று குளுமையானது. அந்த வகையில் நிறங்களும், அவை ஏற்படுத்தும் மாற்றங்களும் குறித்த தகவல்களை இங்கே அறிவோம்.

     சிவப்பு:

    கவனத்தை ஈர்க்கும் நிறம் சிவப்பு. இது உங்களை உற்சாகமாகவும், புத்துணர்வாகவும் உணர வைக்கும். கூச்ச சுபாவம் உள்ளவர்கள், பய உணர்வுடன் இருப்பவர்களுக்கு சிவப்பு நிறம் நம்பிக்கையை அளிக்கும்.

     மஞ்சள்:

    பிரகாசமாகத் தெரியும் மஞ்சள் நிறம் மகிழ்ச்சி, நட்பு ஆகியவற்றுடன் தொடர்புடையது. மஞ்சள் நிறத்தை பார்க்கும்போது தன்னம்பிக்கை அதிகரிக்கும். நேர்மறை எண்ணங்கள் மற்றும் நம்பிக்கை ஆகியவை இந்த நிறத்தால் ஈர்க்கப்பட்ட மனித பண்புகள்.

     நீலம்:

    நீல நிறம் அமைதியைக் குறிக்கும். இது மன வலிமை மற்றும் சிந்தனையில் தெளிவை உண்டாக்கும். வெளிர்நீல நிறம், ஒருவருக்குள் நேர்மறை எண்ணத்தை விதைக்கும் ஆற்றல் கொண்டது. அதேசமயம், அடர்நீல நிறம் ஒருவருக்கு தனித்து விடப்பட்டது போன்ற எண்ணத்தை உருவாக்கும்.

     பச்சை:

    பச்சை நிறம் இயற்கை மற்றும் பணத்துடன் அதிக தொடர்பு கொண்டதாகும். வளர்ச்சி, கருவுறுதல், ஆரோக்கியம் ஆகியவற்றுக்கு இந்த நிறம் அடிப்படையாகும். மனதில் இருக்கும் பதற்றம், கவலையை போக்கி அமைதியை தரும் ஆற்றல் பச்சை நிறத்துக்கு உண்டு. அதேசமயம், அடர் பச்சை நிறத்தை பார்க்கும்போது, மனதில் பொறாமை குணம் தோன்ற வாய்ப்புள்ளது.

     ஊதா:

    ஊதா நிறம் செல்வ செழிப்பின் அடையாளமாக பார்க்கப்படுகிறது. கற்பனைத் திறனைத் தூண்டி, படைப்பாற்றலை மேம்படுத்தும் சக்தி இதற்கு உண்டு.

     வெள்ளை:

    வெள்ளை, மன அமைதியின் நிறம். இது கருணை, அன்பு, காதல் உள்ளிட்ட உணர்வுகளை அதிகரிக்கும்.

    • நிதானமாக நடந்தாலே போதுமானது.
    • நன்மைகளில் ஒன்று செரிமானம் மேம்படுத்துவதுதான்.

    காலை வேளையில் நடைப்பயிற்சி செய்யும் வழக்கத்தை பலரும் பின்பற்றுகிறார்கள். அதேபோல் இரவு உணவு உட்கொண்ட பிறகு நடைப்பயிற்சி செய்வதும் எண்ணற்ற ஆரோக்கிய நன்மைகளை அளிக்கும். இரவு உணவுக்கு பிறகு 20 முதல் 30 நிமிடங்கள் நடைப்பயிற்சி செய்து வந்தாலே போதுமானது. காலை நேர பயிற்சியை போல் விறுவிறுப்பாக மேற்கொள்ள வேண்டியதில்லை. நிதானமாக நடந்தாலே போதுமானது. அப்படி இரவு உணவுக்கு பிறகு நிதானமாக நடைப்பயிற்சி மேற்கொள்வதால் கிடைக்கும் நன்மைகள் என்னென்ன தெரியுமா?

    செரிமானம் மேம்படும்:

    இரவு உணவு உட்கொண்ட பிறகு நடைப்பயிற்சி செய்தால் கிடைக்கும் உடனடி நன்மைகளில் ஒன்று செரிமானம் மேம்படுத்துவதுதான். செரிமான பாதை வழியாக உணவை சுமுகமாக நகர்த்த உதவும். வீக்கம், அஜீரணத்தை தடுக்கும். உணவு உட்கொண்ட பிறகு அடிக்கடி நெஞ்செரிச்சல், அசிடிட்டி பிரச்சினையை அனுபவிப்பவர்களுக்கு இரவு நேர நடைப்பயிற்சி பயனுள்ளதாக இருக்கும்.

    எடையை நிர்வகிக்கும்:

    இரவு உணவிற்குப் பிறகு நடைப்பயிற்சி செய்வது கூடுதல் கலோரிகளை எரிக்கவும், உடல் எடையை சீராக நிர்வகிக்கவும் உதவி புரியும். குறிப்பாக அதிகப்படியான கலோரிகளை கொழுப்பாக சேமித்து வைப்பதை தடுத்து ஆரோக்கியமான உடல் எடையை பராமரிக்க உதவும்.

    மனநிலையில் மாற்றம் ஏற்படுத்தும்:

    இரவில் மனநிலையை மேம்படுத்துவதோடு, உடலில் எண்டோர்பின் ஹார்மோன்களின் செயல்பாட்டை அதிகரிக்க செய்யும். இந்த ஹார்மோன் மனச்சோர்வை எதிர்த்துப் போராடவும், ஒட்டுமொத்த உணர்ச்சிகளை கட்டுப்படுத்தி மன, உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் உதவும்.

    சிறந்த தூக்கத்திற்குவித்திடும்:

    இரவு உணவிற்கு பிந்தைய நடைப்பயிற்சி தூக்கத்திற்கு இன்றியமையாதது. ஆழ்ந்த, நிம்மதியான தூக்கத்தை அனுபவிக்கவும் உதவும். ஏனெனில் இந்த உடல் செயல்பாடு தூக்கமின்மை பிரச்சினையை போக்க உதவும்.

    உறவு வலுப்படும்:

    குடும்பம் மற்றும் நண்பர்களுடன் இணைவதற்கு இரவு நேர நடைப்பயிற்சி வாய்ப்பை ஏற்படுத்திக்கொடுக்கும். அவர்களுடன் சேர்ந்து நடக்கலாம். அன்றைய நாளில் நடந்த விஷயங்களை ஒருவருக்கொருவர் பகிர்ந்தபடியே நடைப்பயிற்சியை தொடரலாம். அதன் மூலம் உறவை வலுப்படுத்தலாம்.

    சோர்வை தடுக்கும்:

    உணவு உட்கொண்ட பிறகு சிலருக்கு ஒருவித அயற்சி, சோர்வு எட்டிப்பார்க்கும். அதிகம் உணவு உட்கொள்பவர்கள் இத்தகைய பிரச்சினைக்கு ஆளாவார்கள். இரவு நேர நடைப்பயிற்சி செய்வது இத்தகைய உடல் சோர்வை போக்கும்.

    அறிவாற்றல் செயல்பாடுக்கு வித்திடும்:

    இரவு உணவிற்கு பிந்தைய நடைப்பயிற்சி அறிவாற்றல் செயல்பாடுகளை மேம்படுத்துவதற்கு உதவும். நினைவாற்றலை அதிகரிக்கச் செய்யும். மனத் தெளிவை மேம்படுத்தும்.

    மன அழுத்தத்தை குறைக்கும்:

    இரவு நேர நடைப்பயிற்சி மனதை ரிலாக்ஸாக்கும். மன அழுத்தத்தைக் குறைக்கும் வாய்ப்பையும் வழங்கும். இரவு நேரத்தில் நடைப்பயிற்சி செல்லும் போது வெளிப்புற காற்றை ஆசுவாசமாக சுவாசிப்பது மனதை அமைதிப்படுத்தவும், பதற்றத்தைக் குறைக்கவும், ஒட்டுமொத்த மன நலனை மேம்படுத்தவும் உதவும்.

    • உள் அறை தாவரங்கள் காற்றை சுத்திகரிக்கும் பணியை செய்கின்றன.
    • அமைதியான மனநிலைக்கு இட்டு செல்லும் ஆற்றல் கொண்டது.

    வீட்டின் அறைகளை அழகுபடுத்தும் அம்சங்களில் ஒன்றாக உள் அலங்காரச் செடிகளும் இடம் பிடித்திருக்கின்றன. அவை அழகியல் நோக்கங்களுக்காக வளர்க்கப்பட்டாலும் பல்வேறு நன்மைகளை வழங்குகின்றன. சில உள் அறை தாவரங்கள் காற்றை சுத்திகரிக்கும் பணியைச் செய்கின்றன. அந்த வகையில் மன நிலையில் நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும் தன்மை சில உள் அலங்காரச் செடிகளுக்கு இருக்கிறது. அமைதிக்கும், மகிழ்ச்சியான மன நிலைக்கும் வித்திடும் அம்சங்களை கொண்ட உள் அலங்காரச் செடிகள் உங்கள் பார்வைக்கு...

    பீஸ் லில்லி

    இதன் பெயருக்கேற்பவே அமைதியான மனநிலைக்கு இட்டு செல்லும் ஆற்றல் கொண்டது. இதில் மலரும் வெள்ளை நிற பூக்கள் மனதை வசீகரிக்கும். உணர்வுகளை சாந்தப்படுத்தும். காற்றின் தரத்தை மேம்படுத்தும் தன்மையும் இதற்கு உண்டு.

    மணி பிளாண்ட்

    `டெவில்ஸ் ஐவி' என்று அழைக்கப்படும் இதுஅதிர்ஷ்டத்துடன் தொடர்புடையது. இதனை எளிதாக பராமரிக்கலாம். குறைந்த வெளிச்சத்திலும் செழித்து வளரக்கூடியது.

     ஸ்பைடர் பிளாண்ட்

    காற்று மூலம் வீட்டுக்குள் சூழ்ந்திருக்கும் மாசுக்களை நீக்கும் தன்மை இந்தச் செடிக்கு உண்டு. இதனை சிறந்த காற்று சுத்திகரிப்பானாக கருதுகிறார்கள். இது வீட்டிற்கு அழகும் சேர்ப்பதோடு சுற்றுச்சூழலிலும், மன நிலையிலும் மாற்றத்தை ஏற்படுத்தக்கூடியது.

    கோல்டன் பொத்தோஸ்

    காற்றை சுத்தப்படுத்தும் தாவரங்களில் சிறந்ததாக கருதப்படும் இது, காற்றில் கலந்திருக்கும் கார்பன் மோனாக்ஸைடு வாயுவை உறிஞ்சி ஆக்சிஜன் அளவை அதிகரிக்கச் செய்யும் தன்மை கொண்டது. எத்தகைய கால நிலையிலும் செழித்து வளரும் திறனுடையது. இதனை வளர்த்தால் நேர்மறை ஆற்றலையும், செழிப்பையும் கொடுக்கும் என்று நம்பப்படுகிறது.

    ஸ்நேக் பிளாண்ட்

    இந்த செடி காற்று சுத்திகரிப்பு பண்புகளை கொண்டது. குறைந்த வெளிச்சத்திலும் செழித்து வளரும் திறன் கொண்டது. அதனால் இது சிறந்த உள் அலங்கார தாவரமாக அறியப்படுகிறது. இதனை வீட்டில் வளர்ப்பது அமைதி மற்றும் நேர்மறை உணர்வை கொடுக்கும் என்று நம்பப்படுகிறது.

     கற்றாழை

    பெரும்பாலான வீடுகளில் வீட்டின் வெளிப்பகுதியில் இவை வளர்க்கப்படுகிறது. இதுவும் உள் அலங்காரச் செடிகளுடன் இணைந்துவிட்டது. காற்றை சுத்தப்படுத்துவதோடு பல்வேறு சரும பிரச்சினைகளுக்கு தீர்வு அளிக்கக் கூடியது. மேலும் கற்றாழையை வீட்டிற்குள் வைத்திருப்பது நேர்மறை ஆற்றலையும், அதிர்ஷ்டத்தையும் தரும் என்று நம்பப்படுகிறது.

    லாவெண்டர்

    இது பாரம்பரிய வீட்டு தாவரமாக இல்லாவிட்டாலும் அலங்காரச் செடிகள் வரிசையில் இடம் பிடித்துவிட்டது. மற்ற உள் அலங்காரச் செடிகளை போலவே வீட்டிற்குள் செழித்து வளரும். அதன் பூக்கள் வெளியிடும் அமைதியான வாசனை மன அழுத்தத்தைக் குறைக்கும். மனதை தளர்வடையச் செய்து இதமான உணர்வை ஏற்படுத்தும்.

    ×