search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மகளிர் கிரிக்கெட்"

    • ஆஸ்திரேலியா தரப்பில் ஃபோப் லிட்ச்ஃபீல்ட் மற்றும் எல்லிஸ் பெர்ரி ஆகியோர் அரை சதம் அடித்து அசத்தினார்.
    • இந்திய தரப்பில் தீப்தி சர்மா 5 விக்கெட்டுகளை சாய்த்தார்.

    ஆஸ்திரேலிய பெண்கள் கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. மும்பையில் நடந்த ஒரே டெஸ்டில் இந்தியா 8 விக்கெட் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவை முதல்முறையாக தோற்கடித்து வரலாறு படைத்தது. தொடர்ந்து இரு அணிகளுக்கும் இடையிலான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் நடைபெற்று வருகிறது.

    இதில் முதலாவது ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலியா அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, இந்த நிலையில் இரு அணிகளுக்கும் இடையிலான 2-வது ஒருநாள் போட்டி இன்று தொடங்கியது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய பெண்கள் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.

    அதன்படி ஆஸ்திரேலிய அணியின் வீராங்கனைகளான ஃபோப் லிட்ச்ஃபீல்ட் மற்றும் எல்லிஸ் பெர்ரி ஆகியோர் அரை சதம் அடித்து அசத்தினார். மற்ற வீராங்கனைகள் தீப்தி சர்மா பந்து வீச்சில் சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்தனர்.

    இறுதியில் ஆஸ்திரேலிய அணி 50 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 258 ரன்கள் எடுத்தது. இந்திய தரப்பில் தீப்தி சர்மா 5 விக்கெட்டுகளை சாய்த்தார்.

    • இந்திய அணி 347 ரன்கள் வித்தியாசத்தில் வென்று அசத்தியது.
    • இந்தியாவின் தீப்தி சர்மா இரு இன்னிங்சிலும் சேர்த்து 9 விக்கெட்டுகள் கைப்பற்றினார்.

    மும்பை:

    பெண்கள் கிரிக்கெட்டில் இங்கிலாந்து- இந்தியா அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி நேற்று முன்தினம் தொடங்கியது. டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் ஆடிய இந்தியா 104.3 ஓவரில் 428 ரன்களில் ஆல் அவுட்டானது. சுபா சதீஷ், ஜெமிமா ரோட்ரிக்ஸ், யாஸ்திகா பாட்டியா மற்றும் தீப்தி ஷர்மா ஆகிய 4 வீராங்கனைகள் அரைசதமடித்து அசத்தினர். கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர் 49 ரன்களில் ஆட்டமிழந்தார்.

    இங்கிலாந்து சார்பில் லாரன் பெல், எக்லெஸ்டோன் தலா 3 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.

    இதையடுத்து தொடர்ந்து ஆடிய இங்கிலாந்து முதல் இன்னிங்சில் 35.3 ஓவரில் 136 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. நாட் ஸ்கிவர்-ப்ரண்ட் பொறுப்புடன் ஆடி அரை சதம் அடித்தார்.

    இந்திய அணி சார்பில் தீப்தி சர்மா 5 விக்கெட்டும், ஸ்நே ரானா 2 விக்கெட்டும் கைப்பற்றினர்.

    298 ரன்கள் முன்னிலை வகித்த நிலையில், இந்திய அணி 2வது இன்னிங்சை தொடர்ந்தது. இந்திய அணி 2வது இன்னிங்சில் 6 விக்கெட்டுக்கு 186 ரன்கள் எடுத்த நிலையில் டிக்ளேர் செய்தது. கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர் 44 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளார்.

    இங்கிலாந்து சார்பில் சார்லி தீன் 4 விக்கெட் வீழ்த்தினார்.

    இதையடுத்து, 479 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இங்கிலாந்து 2வது இன்னிங்சில் களமிறங்கியது. இதிலும் இந்திய பந்துவீச்சாளர்கள் அபாரமாக பந்து வீசினர். சீரான இடைவெளியில் விக்கெட்டுகள் வீழ்ந்தன.

    இறுதியில், இங்கிலாந்து 2வது இன்னிங்சில் 131 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதன்மூலம் இந்திய அணி 347 ரன்கள் வித்தியாசத்தில் வென்று அசத்தியது.

    இந்தியாவின் தீப்தி சர்மா 4 விக்கெட்டும், பூஜா 3 விக்கெட்டும், கெய்க்வாட் 2 விக்கெட்டும் வீழ்த்தினர். 

    • இங்கிலாந்து வீராங்கனையான நாட் ஸ்கிவர்-ப்ரண்ட் மட்டும் சிறப்பாக ஆடி அரை சதம் விளாசினார்.
    • இந்திய அணி தரப்பில் தீப்தி சர்மா 5 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

    பெண்கள் கிரிக்கெட்டில் இங்கிலாந்து- இந்தியா அணிகளுக்கு இடையேயான 4 நாட்கள் கொண்ட முதல் டெஸ்ட் போட்டி நேற்று தொடங்கியது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த இந்திய அணியின் வீராங்கனைகள் சிறப்பாக விளையாடி ரன்களை சேர்த்தனர்.

    முதல் நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி 94 ஓவர்களில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 410 ரன்கள் குவித்திருந்தது. இந்திய அணி தரப்பில் சுபா சதீஷ், ஜெமிமா ரோட்ரிக்ஸ், யாஸ்திகா பாட்டியா மற்றும் தீப்தி ஷர்மா ஆகிய 4 வீராங்கனைகள் அரைசதம் அடித்து அசத்தினர். கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர் 49 ரன்களில் ஆட்டமிழந்தார்.

    இதையடுத்து 2-ம் நாள் ஆட்டம் இன்று தொடங்கியது. தொடர்ந்து பேட்டிங் ஆடிய இந்திய அணியில் தீப்தி ஷர்மா 67 ரன்களில் அவுட் ஆனார். இதையடுத்து களம் இறங்கிய ரேனுகா சிங் 1 ரன்னிலும், கயக்வாட் ரன் எடுக்காமலும் அவுட் ஆகினர். இறுதியில் இந்திய அணி 104.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 428 ரன்களில் ஆல் அவுட் ஆனது. இங்கிலாந்து தரப்பில் லாரன் பெல், எக்லெஸ்டோன் தலா 3 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.

    இதையடுத்து இங்கிலாந்து அணி தனது முதல் இன்னிங்சை தொடங்கியது. இந்திய அணியின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் தொடக்கம் முதலே இங்கிலாந்து அணி தடுமாறியது. இங்கிலாந்து வீராங்கனையான நாட் ஸ்கிவர்-ப்ரண்ட் மட்டும் சிறப்பாக ஆடி அரை சதம் விளாசினார். அடுத்து வந்த வீராங்கனைகள் சீரான இடைவேளியில் விக்கெட்டுகளை இழந்தது.

    இறுதியில் இங்கிலாந்து அணி 35.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 136 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் இங்கிலாந்து அணி 292 ரன்கள் பின்தங்கி உள்ளது. இந்திய அணி தரப்பில் தீப்தி சர்மா 5 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

    • இங்கிலாந்து அணி 19 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 116 ரன்கள் மட்டும் எடுத்தது.
    • இலங்கை அணி தரப்பில் கேப்டன் சமாரி அத்தபத்து 3 விக்கெட்டுகள் வீழ்த்தி அசத்தினார்.

    இலங்கை மகளிர் கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயனம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. அங்கு 3 போட்டிகள் கொண்ட டி20 மற்றும் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது.

    அதன்படி இவ்விரு அணிகளுக்கு இடையே முதலில் டி20 தொடர் நடைபெற்றது. இதில் நடந்த முதல் 2 போட்டிகளில் இங்கிலாந்து மற்றும் இலங்கை அணிகள் வெற்றி பெற்று தொடரில் 1-1 என்ற கணக்கில் சமநிலையில் இருந்தன.

    இந்நிலையில் இவ்விரு அணிகளுக்கு இடையேயான 3-வது மற்றும் கடைசி டி20 போட்டி நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற இலங்கை அணி கேப்டன் சமாரி அத்தபத்து முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார்.

    அதன்படி முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து வீராங்கனைகள் இலங்கை அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து ஆட்டம் இழந்தனர். இதனால் இங்கிலாந்து அணி 19 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 116 ரன்கள் மட்டும் எடுத்தது. இலங்கை அணி தரப்பில் கேப்டன் சமாரி அத்தபத்து 3 விக்கெட்டுகள் வீழ்த்தி அசத்தினார்.

    பின்னர் 117 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய இலங்கை அணியினர் 17 ஓவர்களில் 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 117 ரன்கள் அடித்து 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    இந்த வெற்றியின் மூலம் இலங்கை அணி 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரை 2-1 என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தியது. மகளிர் கிரிக்கெட் வரலாற்றில் இங்கிலாந்து அணிக்கு எதிராக இலங்கை அணி தொடரை வெல்வது இதுவே முதல் முறையாகும். இந்த தொடர் முழுவதும் சிறப்பாக செயல்பட்ட இலங்கை அணி கேப்டன் அத்தபத்து இந்த போட்டியில் ஆட்டநாயகி விருது மற்றும் தொடர்நாயகி விருதை வென்று அசத்தியுள்ளார்.

    அடுத்ததாக இவ்விரு அணிகளுக்கு இடையிலான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் நடைபெற உள்ளது.

    • முதலில் பேட்டிங் செய்த வங்காளதேச அணி 4 விக்கெட் இழப்புக்கு 225 ரன்கள் எடுத்தது.
    • நேர்த்தியான ஆட்டத்தை வேளிப்படுத்திய இந்திய வீராங்கனை ஹர்லீன் தியோல் 77 ரன்கள் குவித்தார்.

    இந்திய மகளிர் கிரிக்கெட் அணி வங்காளதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடியது. முதலில் 3 டி20 போட்டிகளில் இந்திய மகளிர் அணி 2-1 என தொரை கைப்பற்றியது. இதையடுத்து நடைபெற்ற ஒருநாள் தொடரில் 2 போட்டிகள் நிறைவடைந்த நிலையில் 1-1 என ஒருநாள் தொடர் சமனில் இருந்தது.

    தொடர் யாருக்கு என்பதை தீர்மானிக்கும் 3வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி இன்று நடைபெற்றது. முதலில் பேட்டிங் செய்த வங்காளதேச அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 225 ரன்கள் எடுத்தது. வங்காளதேச அணி தரப்பில் பர்கானா 105 ரன்கள் எடுத்தார்.

    இதையடுத்து 226 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய மகளிர் அணியின் தொடக்க வீராங்கனை ஷாபாலி வர்மா 4 ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த யாஷ்டிகா 5 ரன்களில் வெளியேறினார்.

    தொடர்ந்து ஸ்மிருதி மந்தனா, ஹர்லீன் தியோல் இணைந்து சிறப்பாக விளையாடினார். அரை சதம் அடித்த மந்தனா 59 ரன்களில் வெளியேறினார். அவரைத் தொடர்ந்து களமிறங்கிய ஹர்மான்ப்ரீத் கவுர் 14 ரன்களில் ஆட்டமிழந்தார். மறுமுனையில் நேர்த்தியான ஆட்டத்தை வேளிப்படுத்திய ஹர்லீன் தியோல் 77 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார்.

    அதன்பின் களமிறங்கிய வீராங்கனைகள் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். கடைசி ஓவரில் இந்திய அணியின் வெற்றிக்கு 3 ரன்கள் தேவைப்பட்டது. 1 விக்கெட் கைவசம் இருந்தது. ஆனால் அந்த ஓவரில் மருபா அக்டர் வீசிய முதல் 2 பந்தில் 2 ரன்கள் எடுத்த நிலையில், மேக்னா சிங் அவுட் ஆனார். இதனால் இந்திய அணி 49.3 ஓவரில் 225 ரன்களில் ஆல் அவுட் ஆனது. இதனால் போட்டி டையில் முடிந்தது. அத்துடன், இந்தியா - வங்காளதேச அணிகளுக்கு இடையேயான மகளிர் ஒருநாள் தொடர் 1-1 என சமனில் முடிந்தது.

    • பேட்டிங் மற்று பந்து வீச்சில் அசத்திய ஜெமிமா ரோட்ரிக்ஸ் ஆட்ட நாயகியாக தேர்வு செய்யப்பட்டார்.
    • இந்த வெற்றியின் மூலம் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை இந்திய அணி 1-1 என்ற கணக்கில் சமன் செய்தது.

    வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வரும் இந்திய பெண்கள் கிரிக்கெட் அணி அங்கு 3 போட்டிகள் கொண்ட டி20, 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்று ஆடி வருகிறது. இதில் முதலாவதாக நடைபெற்ற டி20 தொடரை 2-1 என்ற கணக்கில் இந்தியா கைப்பற்றியது.

    இதையடுத்து நடைபெற்ற முதலாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணிக்கு அதிர்ச்சி அளித்து வங்கதேசம் அபார வெற்றி பெற்று தொடரில் 1-0 என முன்னிலையில் உள்ளது.

    இந்நிலையில் இவ்விரு அணிகள் இடையிலான 2வது ஒருநாள் போட்டி இன்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற வங்கதேசம் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. இதையடுத்து இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ஸ்மிருதி மந்தனா மற்றும் பிரியா புனியா ஆகியோர் களம் இறங்கினர்.

    இதில் பிரியா புனியா 7 ரன்னிலும், ஸ்மிருதி மந்தனா 36 ரன்னிலும் அடுத்து களம் இறங்கிய யாஷ்டிகா பாதியா 15 ரன்னிலும் அவுட் ஆகினர். இதையடுத்து கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர், ஜெமிமா ரோட்ரிக்ஸ் ஆகியோர் களம் இறங்கி அணியை சரிவில் இருந்து மீட்டனர். இருவரும் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.

    இருவரும் அரைசதம் அடித்து அசத்தினர். இதில் ஹர்மன்ப்ரீத் கவுர் 52 ரன்னும், ரோட்ரிக்ஸ் 86 ரன்னும் எடுத்து அவுட் ஆகினர். இதையடுத்து களம் இறங்கிய ஹார்லீன் தியோல் 25 ரன், தீப்தி சர்மா 0 ரன் எடுத்து அவுட் ஆகினர்.

    இறுதியில் இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 228 ரன்கள் எடுத்தது. இதையடுத்து 229 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் வங்காளதேசம் அணி களமிறங்கியது.

    தொடக்க வீராங்கனைகளான முர்ஷிதா காதுன்12, ஷர்மின் அக்தர் 2, லதா மோண்டல் 9 ரன்கள் எடுத்து வெளியேறினர். இதனால் 38 ரன்கள் எடுப்பதற்குள் வங்காளதேசம் அணி 38 ரன்களுக்குள் 3 விக்கெட்டுகளை இழந்தது. இதனையடுத்து ஃபர்கானா ஹோக் - ரிது மோனி ஜோடி நிதானமாக விளையாடி ரன்களை சேர்த்தனர்.

    சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த ஃபர்கானா ஹோக் 47 ரன்னில் அவுட் ஆனார். அவர் அவுட் ஆன அடுத்த ஓவரிலேயே ரிது மோனியும் அவுட் ஆனார். இதனையடுத்து வந்த வீராங்கனைகள் சொற்ப ரன்னில் வெளியேற 35.1 ஓவரில் வங்காளதேசம் அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 120 ரன்கள் எடுத்தது. இதனால் இந்திய அணி 108 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    இதன்மூலம் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை இந்திய அணி 1-1 என்ற கணக்கில் சமன் செய்தது. இரு அணிகளுக்கும் இடையேயான கடைசி ஒருநாள் போட்டி வருகிற 22-ந் தேதி நடைபெறுகிறது. இந்திய தரப்பில் ஜெமிமா ரோட்ரிக்ஸ் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். பேட்டிங் மற்று பந்து வீச்சில் அசத்திய ஜெமிமா ரோட்ரிக்ஸ் ஆட்ட நாயகியாக தேர்வு செய்யப்பட்டார்.

    • வங்காளதேசம் தரப்பில் சுல்தானா காதுன், நஹிதா அக்டர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
    • காயத்தில் இருந்து மீண்டு வந்த கவூர் அரை சதம் விளாசி 52 ரன்னில் ஆட்டமிழந்தார்.

    இந்திய மகளிர் கிரிக்கெட் அணி, வங்காளதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இந்த இரண்டு அணிகளுக்கும் இடையே நடைபெற்ற டி20 கிரிக்கெட தொடரை இந்திய வீராங்கனைகள் 2-1 எனக் கைப்பற்றினர். தற்போது ஒருநாள் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. ஏற்கனவே முடிவடைந்த முதலாவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி தோல்வியடைந்தது.

    இந்நிலையில், இந்தியா- வங்காளதேசம் மோதும் 2-வது ஒருநாள் போட்டி இன்று தொடங்கியது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி தொடக்க வீராங்கனைகளாக மந்தனா- பிரியா களமிறங்கினர்.

    பிரியா புனியா 7, யாஷிகா 15, மந்தனா 36 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். இதனையடுத்து கவுர் - ஜெமிமா ரோட்ரிக்ஸ் ஜோடி நிதானமாக விளையாடி ரன்களை சேர்த்தனர். கவுர் 48 ரன்னில் காயம் காரணமாக வெளியேறினார். சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த ஜெமிமா ரோட்ரிக்ஸ் அரை சதம் விளாசி அசத்தினார்.

    அவர் 86 ரன்களில் ஆட்டமிழந்தார். காயத்தில் இருந்து மீண்டு வந்த கவூர் அரை சதம் விளாசி 52 ரன்னில் வெளியேறினார். இறுதியில் இந்திய அணி 50 ஓவர் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 228 ரன்கள் எடுத்தது. வங்காளதேசம் தரப்பில் சுல்தானா காதுன், நஹிதா அக்டர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர். 

    • இந்திய வீராங்கனைகளான புனியா 7, யாஷிகா 15, ஸ்மிருதி மந்தனா 36 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தனர்.
    • கவூர் 80 பந்துகளில் 48 ரன்கள் எடுத்திருந்த போது காயம் காரணமாக வெளியேறினார்.

    மிர்புர்:

    ஹர்மன்பிரீத் கவுர் தலைமையிலான இந்திய பெண்கள் கிரிக்கெட் அணி, வங்காளதேசத்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இவ்விரு அணிகள் இடையிலான 20 ஓவர் தொடரில் முதல் இரண்டு ஆட்டங்களில் வெற்றி பெற்று தொடரை வசப்படுத்திய இந்திய அணி கடைசி ஆட்டத்தில் தோல்வியை தழுவியது.

    இதைத்தொடர்ந்து இவ்விரு அணிகள் இடையே மிர்புரில் நடந்த முதலாவது ஒருநாள் போட்டியில் வங்காளதேச அணி 40 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியாவை சாய்த்தது.

    இந்த நிலையில் இந்தியா - வங்காளதேசம் மோதும் 2-வது ஒருநாள் போட்டி மிர்புரில் இன்று காலை தொடங்கியது. இதில் டாஸ் வென்ற இந்திய பெண்கள் அணியின் கேப்டன் பேட்டிங்கை தேர்வு செய்தார். அதன்படி இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது.

    தொடக்க வீராங்கனைகளாக புனியா 7, யாஷிகா 15, ஸ்மிருதி மந்தனா 36 என ஆட்டமிழந்தனர். இதனையடுத்து கேப்டன் கவுர் மற்றும் ஜெமிமா ரோட்ரிக்ஸ் ஜோடி நிதானமாக விளையாடி ரன்களை சேர்த்தனர்.


    கேப்டன் கவுர் 48 ரன்கள் எடுத்த நிலையில் 1 ரன் எடுக்க முயற்சித்த போது பேட் ஸ்லிப்பாகி கீழே விழுந்தார். இதனால் வலியால் துடித்த அவர் சிறிது நேரத்தில் களத்தில் இருந்து வெளியேறினார். அவர் 80 பந்துகளில் 48 ரன்கள் எடுத்திருந்தார். காயத்தை பொறுத்து அவர் மீண்டும் களத்தில் இருங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

    டி20 மகளிர் உலக கோப்பை நாக் அவுட் சுற்றில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக சிறப்பாக விளையாடி அவர் 2 ரன்கள் எடுக்க கிரிசை நோக்கி பேட்டை ஊன்றிய போது எதிர்பாரதவிதமாக பேட் தரையில் சிக்கி கொண்டது. அதனால் அவர் ரன் அவுட் முறையில் வெளியேறினார். அதேபோல இந்த முறையும் நடந்துள்ளது.

    • அதிரடியாக விளையாடி இலங்கை பெண்கள் அணியின் கேப்டன் சாமரி அத்தபத்து 80 ரன்கள் குவித்தார்.
    • டி20 தொடரை நியூசிலாந்து பெண்கள் அணி கைப்பற்றியது.

    நியூசிலாந்து மகளிர் அணி 3 ஒருநாள் போட்டி 3 டி20 போட்டிகளில் விளையாடுவதற்காக இலங்கை சென்றது. முதலில் நடந்த ஒருநாள் தொடரை 2-1 என்ற கணக்கில் இலங்கை அணி கைப்பற்றியது. இதனையடுத்து டி20 தொடர் நடைபெற்றது. முதல் இரண்டு போட்டிகளில் நியூசிலாந்து அணி வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது.

    இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி டி20 போட்டி இன்று தொடங்கியது. இதில் டாஸ் வென்ற இலங்கை அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி 20 ஓவர் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 140 ரன்கள் எடுத்தது.

    இதனையடுத்து 141 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற களமிறங்கிய இலங்கை பெண்கள் அணி 14.3 ஓவரில் 143 ரன்கள் எடுத்து 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன்மூலம் டி20 போட்டிகளில் முதன் முறையாக நியூசிலாந்து அணியை வீழ்த்தி வரலாற்று வெற்றியை இலங்கை அணி பதிவு செய்துள்ளது. அதிரடியாக விளையாடி இலங்கை பெண்கள் அணியின் கேப்டன் சாமரி அத்தபத்து 80 ரன்கள் எடுத்து ஆட்டநாயகி விருதை தட்டிச்சென்றார்.

    • இந்திய பெண்கள் அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 95 ரன்களே எடுத்தது.
    • வங்காளதேச அணி 20 ஓவர் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 87 ரன்கள் எடுத்தது.

    மிர்புர்:

    இந்தியா - வங்காளதேச அணிகளுக்கு இடையிலான 3 ஆட்டங்கள் கொண்ட 20 ஓவர் போட்டி தொடரில் முதலாவது ஆட்டத்தில் வங்காளதேசத்தை 7 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா வீழ்த்தியது.

    இந்நிலையில் இவ்விரு அணிகள் இடையிலான 2-வது டி20 போட்டி இன்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற இந்திய பெண்கள் அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. இதையடுத்து இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ஸ்மிருதி மந்தனா மற்றும் ஷபாலி வர்மா ஆகியோர் களம் இறங்கினர்.

    இதில் மந்தனா 13 ரன், ஷபாலி வர்மா 19 ரன், அடுத்து களம் இறங்கிய ஜெமிமா ரோட்ரிக்ஸ் 8 ரன், ஹர்மன்ப்ரீத் கவுர் 0 ரன், யாஷ்டிகா பாடியா 11 ரன், ஹார்லீன் தியோல் 6 ரன், தீப்தி சர்மா 10 ரன் எடுத்து அடுத்தடுத்து அவுட் ஆகினர்.

    இறுதியில் இந்திய பெண்கள் அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 95 ரன்களே எடுத்தது. இதையடுத்து 96 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் வங்காளதேச பெண்கள் அணி ஆடியது.

    இந்திய அணியின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை பறிகொடுத்தது. அந்த அணியின் கேப்டன் மட்டுமே இரண்டு இலக்க ரன்னை எட்டினார். மற்ற வீராங்கனை சொற்ப ரன்னில் வெளியேறினார். இதனால் வங்காளதேச அணி 20 ஓவர் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 87 ரன்கள் எடுத்தது. இதன் மூலம் இந்திய அணி 8 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரையும் கைப்பற்றியது.

    • இந்திய அணி 20 ஓவர் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 95 ரன்கள் எடுத்துள்ளது.
    • வங்காளதேசம் தரப்பில் சுல்தானா காதுன் 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

    மிர்புர்:

    ஹர்மன்பிரீத் கவுர் தலைமையிலான இந்திய பெண்கள் கிரிக்கெட் அணி, வங்காளதேசத்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையிலான 3 ஆட்டங்கள் கொண்ட 20 ஓவர் போட்டி தொடரில் முதலாவது ஆட்டத்தில் இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    இந்த நிலையில் இந்தியா-வங்காளதேசம் பெண்கள் அணிகள் இடையிலான 2-வது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி மிர்புரில் இன்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.

    அதன்படி மந்தனா -ஷஃபாலி வர்மா ஜோடி களமிறங்கினர். அதிரடியாக தொடங்கிய இந்திய அணி 33 ரன்னில் முதல் விக்கெட்டை இழந்தது. மந்தனா 13 ரன் எடுத்து ஆட்டமிழந்தார். அவரை தொடர்ந்து ஷஃபாலி வர்மா 19 ரன்னிலும் அடுத்து வந்த கேப்டன் கவூர் முதல் பந்திலேயே ஆட்டமிழந்தனர்.

    33 ரன்னில் முதல் விக்கெட்டை இழந்த இந்தியா அடுத்த ஒரு ரன் எடுப்பதற்க்குள் 3 விக்கெட்டுகளை இழந்து திணறியது. சிறிது நேரம் தாக்குபிடித்த இந்திய அணி 48 ரன்னில் (யாஸ்திகா பாட்டியா 11 ரன்) 4-வது விக்கெட்டையும் 58 ரன்னில் (ஜெமிமா ரோட்ரிக்ஸ் 8 ரன்) 5-வது விக்கெட்டையும் இழந்தது. 61 ரன்னில் 6-வது விக்கெட்டையும் (ஹர்லீன் தியோல் 6) இந்திய அணி இழந்தது.

    இறுதியில் இந்திய அணி 20 ஓவர் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 95 ரன்கள் எடுத்துள்ளது. வங்காளதேசம் தரப்பில் சுல்தானா காதுன் 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

    • முதலில் ஆடிய ஆஸ்திரேலியா 196 ரன்களை குவித்தது.
    • அடுத்து ஆடிய இந்தியா 142 ரன்களில் சுருண்டது.

    மும்பை:

    இந்தியா-ஆஸ்திரேலியா பெண்கள் அணிகள் இடையிலான 5-வது மற்றும் கடைசி டி20 கிரிக்கெட் போட்டி மும்பை பிரபோர்ன் ஸ்டேடியத்தில் நேற்று நடந்தது. டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா பெண்கள் அணி நிர்ணயிக்கப்பட்ட20 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 196 ரன்கள் குவித்தது. கார்ட்னர் 32 பந்தில் 66 ரன்னும், கிரேஸ் ஹாரிஸ் 35 பந்தில் 64 ரன்னும் குவித்தனர். இந்த ஜோடி 5வது விக்கெட்டுக்கு 129 ரன்கள் சேர்த்து அசத்தியது.

    இதையடுத்து, 197 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய பெண்கள் அணி களமிறங்கியது. தீப்தி ஷர்மா மட்டும் ஓரளவு தாக்குப் பிடித்து 53 ரன்கள் எடுத்தார். மற்றவர்கள் நிலைத்து நிற்கவில்லை.

    இறுதியில், இந்திய அணி 20 ஓவரில் 142 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. இதன்மூலம் ஆஸ்திரேலியா 54 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. மேலும் டி20 தொடரை 4-1 என கைப்பற்றியது.

    ஆஸ்திரேலியாவின் ஹீதர் கிரஹாம் ஹாட்ரிக் உள்பட 4 விக்கெட் வீழ்த்தினார். ஆட்ட நாயகி மற்றும் தொடர் நாயகி விருது அஷீக் கார்ட்னருக்கு வழங்கப்பட்டது.

    ×