search icon
என் மலர்tooltip icon

    கிரிக்கெட்

    5 விக்கெட்டுகள் வீழ்த்திய தீப்தி சர்மா- இந்தியாவுக்கு 259 ரன்கள் இலக்கு நிர்ணயித்த ஆஸ்திரேலியா
    X

    5 விக்கெட்டுகள் வீழ்த்திய தீப்தி சர்மா- இந்தியாவுக்கு 259 ரன்கள் இலக்கு நிர்ணயித்த ஆஸ்திரேலியா

    • ஆஸ்திரேலியா தரப்பில் ஃபோப் லிட்ச்ஃபீல்ட் மற்றும் எல்லிஸ் பெர்ரி ஆகியோர் அரை சதம் அடித்து அசத்தினார்.
    • இந்திய தரப்பில் தீப்தி சர்மா 5 விக்கெட்டுகளை சாய்த்தார்.

    ஆஸ்திரேலிய பெண்கள் கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. மும்பையில் நடந்த ஒரே டெஸ்டில் இந்தியா 8 விக்கெட் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவை முதல்முறையாக தோற்கடித்து வரலாறு படைத்தது. தொடர்ந்து இரு அணிகளுக்கும் இடையிலான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் நடைபெற்று வருகிறது.

    இதில் முதலாவது ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலியா அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, இந்த நிலையில் இரு அணிகளுக்கும் இடையிலான 2-வது ஒருநாள் போட்டி இன்று தொடங்கியது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய பெண்கள் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.

    அதன்படி ஆஸ்திரேலிய அணியின் வீராங்கனைகளான ஃபோப் லிட்ச்ஃபீல்ட் மற்றும் எல்லிஸ் பெர்ரி ஆகியோர் அரை சதம் அடித்து அசத்தினார். மற்ற வீராங்கனைகள் தீப்தி சர்மா பந்து வீச்சில் சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்தனர்.

    இறுதியில் ஆஸ்திரேலிய அணி 50 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 258 ரன்கள் எடுத்தது. இந்திய தரப்பில் தீப்தி சர்மா 5 விக்கெட்டுகளை சாய்த்தார்.

    Next Story
    ×