search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "BANvsIND"

    • முதலில் பேட்டிங் செய்த வங்காளதேச அணி 4 விக்கெட் இழப்புக்கு 225 ரன்கள் எடுத்தது.
    • நேர்த்தியான ஆட்டத்தை வேளிப்படுத்திய இந்திய வீராங்கனை ஹர்லீன் தியோல் 77 ரன்கள் குவித்தார்.

    இந்திய மகளிர் கிரிக்கெட் அணி வங்காளதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடியது. முதலில் 3 டி20 போட்டிகளில் இந்திய மகளிர் அணி 2-1 என தொரை கைப்பற்றியது. இதையடுத்து நடைபெற்ற ஒருநாள் தொடரில் 2 போட்டிகள் நிறைவடைந்த நிலையில் 1-1 என ஒருநாள் தொடர் சமனில் இருந்தது.

    தொடர் யாருக்கு என்பதை தீர்மானிக்கும் 3வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி இன்று நடைபெற்றது. முதலில் பேட்டிங் செய்த வங்காளதேச அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 225 ரன்கள் எடுத்தது. வங்காளதேச அணி தரப்பில் பர்கானா 105 ரன்கள் எடுத்தார்.

    இதையடுத்து 226 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய மகளிர் அணியின் தொடக்க வீராங்கனை ஷாபாலி வர்மா 4 ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த யாஷ்டிகா 5 ரன்களில் வெளியேறினார்.

    தொடர்ந்து ஸ்மிருதி மந்தனா, ஹர்லீன் தியோல் இணைந்து சிறப்பாக விளையாடினார். அரை சதம் அடித்த மந்தனா 59 ரன்களில் வெளியேறினார். அவரைத் தொடர்ந்து களமிறங்கிய ஹர்மான்ப்ரீத் கவுர் 14 ரன்களில் ஆட்டமிழந்தார். மறுமுனையில் நேர்த்தியான ஆட்டத்தை வேளிப்படுத்திய ஹர்லீன் தியோல் 77 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார்.

    அதன்பின் களமிறங்கிய வீராங்கனைகள் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். கடைசி ஓவரில் இந்திய அணியின் வெற்றிக்கு 3 ரன்கள் தேவைப்பட்டது. 1 விக்கெட் கைவசம் இருந்தது. ஆனால் அந்த ஓவரில் மருபா அக்டர் வீசிய முதல் 2 பந்தில் 2 ரன்கள் எடுத்த நிலையில், மேக்னா சிங் அவுட் ஆனார். இதனால் இந்திய அணி 49.3 ஓவரில் 225 ரன்களில் ஆல் அவுட் ஆனது. இதனால் போட்டி டையில் முடிந்தது. அத்துடன், இந்தியா - வங்காளதேச அணிகளுக்கு இடையேயான மகளிர் ஒருநாள் தொடர் 1-1 என சமனில் முடிந்தது.

    • முதல் போட்டியில் இந்தியா தோல்வியடைந்தது
    • இன்றைய போட்டியில் தோல்வியடைந்தால் தொடரை இழக்கும்

    இந்திய மகளிர் கிரிக்கெட் அணி, வங்காளதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இந்த இரண்டு அணிகளுக்கும் இடையே நடைபெற்ற டி20  கிரிக்கெட தொடரை இந்திய வீராங்கனைகள் 2-1 எனக் கைப்பற்றினர்.

    தற்போது ஒருநாள் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. ஏற்கனவே முடிவடைந்த முதலாவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி தோல்வியடைந்தது. இந்நிலையில், இந்தியா- வங்காளதேசம் மோதும் 2வது ஒருநாள் போட்டி இன்று காலை 9 மணிக்கு நடைபெற உள்ளது.

    இந்த போட்டியில் வங்காளதேசத்திற்கு இந்திய அணி தகுந்த பதிலடி கொடுக்குமா? என்ற எதிர்பார்ப்பில் ரசிகர்கள் உள்ளனர்.

    • ஸ்மிரிதி மந்தனா 11 ரன்களும், பிரியா புனியா 10 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர்.
    • 35.5 ஓவரில் 10 விக்கெட் இழப்பிற்கு 113 ரன்கள் எடுத்து இந்திய மகளிர் அணி தோல்வி அடைந்தனர்.

    இந்திய மகளிர் கிரிக்கெட் அணி, வங்காளதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது.

    இரு அணிகளும் மோதும் முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி மிர்புரில் இன்று நடைபெற்றது.

    இதற்கான டாஸ் சுண்டப்பட்டது. டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் பந்துவீச்சை தேர்வு செய்தார்.

    இதனால், முதலில் வங்காளதேச அணி பேட்டிங் செய்தது. இதில், முதலாவதாக முர்ஷிதா கதூன் மற்றும் ஷர்மின் அக்தர் களமிறங்கினர், ஆனால், ஷர்மின் அக்தர் ஒரு ரன் கூட எடுக்காமல் அவுட்டானார். முர்ஷிதா கதூன் 13 ரன்களில் ஆட்டமிழந்தார்.

    தொடர்ந்து, பர்கானா ஹக் 27 ரன்களும், நிகர் சுல்தானா 39 ரன்களும், ரித்து மோனி 8 ரன்களும், ரபேயா கான் 10 ரன்களும், நஹிடா அக்தர் 2 ரன்களும் எடுத்து அவுட்டாகினர்.

    ஃபஹிமா கதூன் 12 ரன்களும், சுல்தானா கதூன் 16 ரன்களும், மருஃபா அக்தர் 6 ரன்களும் எடுத்தனர். ஷோர்னா அக்தர் ரன்கள் எதுவும் எடுக்காமல் ஆட்டமிழந்தார்.

    இதன்மூலம், வங்காளதேச அணி 43 ஓவரில் 10 விக்கெட் இழப்பிற்கு 152 ரன்கள் எடுத்தது. இதைதொடர்ந்து, வெற்றி இலக்கை நோக்கி இந்திய அணி விளையாடியது.

    இதில் முதலில் களமிறங்கிய ஸ்மிரிதி மந்தனா 11 ரன்களும், பிரியா புனியா 10 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர்.

    தொடர்ந்து, ஹர்மன்ப்ரீத் கவுர் 5 ரன்களும், யாஸ்திகா பாட்டியா 15 ரன்களும் எடுத்து அவுட்டாகினர். ஜெம்மியா ரோட்ரிகியுஸ் 10 ரன்கள், அமன்ஜோத் கவுர் 15 ரன்கள், தீப்தி சர்மா 20 ரன்கள், பூஜா வஸ்த்ரகர் 7 ரன்கள், பாரெட்டி அனுஷா 2 ரன்களும் எடுத்தனர்.

    ஸ்னேஹ் ரானா ரன்கள் எடுக்காமல் ஆட்டமிழந்தார்.

    இந்த ஆட்டத்தின் முடிவில், 35.5 ஓவரில் 10 விக்கெட் இழப்பிற்கு 113 ரன்கள் எடுத்து இந்திய மகளிர் அணி தோல்வி அடைந்தனர்.

    இதன்மூலம், 40 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா மகளிர் அணியை வீழ்த்தி வங்காளதேச மகளிர் அணி வெற்றிப்பெற்றது.

    • டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் பந்துவீச்சை தேர்வு செய்தார்.
    • வங்காளதேச அணி 43 ஓவரில் 10 விக்கெட் இழப்பிற்கு 152 ரன்கள் எடுத்தது.

    இந்திய மகளிர் கிரிக்கெட் அணி, வங்காளதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது.

    இரு அணிகளும் மோதும் முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி மிர்புரில் இன்று நடைபெறுகிறது. இதற்கான டாஸ் சுண்டப்பட்டது. டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் பந்துவீச்சை தேர்வு செய்தார்.

    இதனால், முதலில் வங்காளதேச அணி பேட்டிங் செய்தது. இதில், முதலாவதாக முர்ஷிதா கதூன் மற்றும் ஷர்மின் அக்தர் களமிறங்கினர், ஆனால், ஷர்மின் அக்தர் ஒரு ரன் கூட எடுக்காமல் அவுட்டானார். முர்ஷிதா கதூன் 13 ரன்களில் ஆட்டமிழந்தார்.

    தொடர்ந்து, பர்கானா ஹக் 27 ரன்களும், நிகர் சுல்தானா 39 ரன்களும், ரித்து மோனி 8 ரன்களும், ரபேயா கான் 10 ரன்களும், நஹிடா அக்தர் 2 ரன்களும் எடுத்து அவுட்டாகினர்.

    ஃபஹிமா கதூன் 12 ரன்களும், சுல்தானா கதூன் 16 ரன்களும், மருஃபா அக்தர் 6 ரன்களும் எடுத்தனர். ஷோர்னா அக்தர் ரன்கள் எதுவும் எடுக்காமல் ஆட்டமிழந்தார்.

    இதன்மூலம், வங்காளதேச அணி 43 ஓவரில் 10 விக்கெட் இழப்பிற்கு 152 ரன்கள் எடுத்தது.

    இதைதொடர்ந்து, வெற்றி இலக்கை நோக்கி இந்திய அணி விளையாடி வருகிறது.

    • இந்திய அணியில் அமன்ஜேத் கவுர், அனுஷா ஆகியோர் ஒருநாள் போட்டிகளில் அறிமுகமாகி உள்ளனர்.
    • டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் பந்துவீச்சை தேர்வு செய்தார்.

    இந்திய மகளிர் கிரிக்கெட் அணி, வங்காளதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இரு அணிகளும் மோதும் முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி மிர்புரில் இன்று நடைபெறுகிறது.

    இதற்கான டாஸ் சுண்டப்பட்டது. டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் பந்துவீச்சை தேர்வு செய்தார். இந்திய அணியில் அமன்ஜோத் கவுர், அனுஷா ஆகியோர் ஒருநாள் போட்டிகளில் அறிமுகமாகி உள்ளனர்.

    இந்திய அணி: ஸ்மிருதி மந்தனா, பிரியா புனியா, ஜேமிமா ரோட்ரிக்ஸ், ஹர்மன்பிரீத் கவுர் (கேப்டன்), யஷ்திகா பாட்டியா, தீப்தி சர்மா, அமன்ஜோத் கவுர், பூஜா வஸ்த்ராகர், ஸ்னே ராணா, தேவிகா வைத்யா, அனுஷா.

    வங்காளதேச அணி: ஷர்மின் அக்டர், முர்ஷிதா காதுன், ஷோர்னா அக்டர், நிகர் சுல்தானா (கேப்டன்), பர்கானா ஹோக், நஹிதா அக்டர், ரிது மோனி, பஹிமா காதுன், நஹிதா அக்டர், ரபேயா கான், மருபா அக்டர்.

    • மிர்பூரில் நடந்த முதல் ஆட்டத்தில் வங்காளதேசம் ஒரு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
    • நாளைய போட்டிக்கான இந்திய அணியில் மாற்றம் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    மிர்பூர்:

    ரோகித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி வங்காளதேசத்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது.

    இரு அணிகள் இடையேயான 3 போட்டி கொண்ட ஒருநாள் தொடரில் மிர்பூரில் நடந்த முதல் ஆட்டத்தில் வங்காளதேசம் ஒரு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன்மூலம் இந்தியா 0-1 என்ற கணக்கில் பின்தங்கியுள்ளது.

    இந்தியா-வங்காளதேச அணிகள் மேலும் 2-வது ஒரு நாள் போட்டி மிர்பூரில் நாளை (7-ந்தேதி) நடக்கிறது. இந்திய நேரப்படி காலை 11.30 மணிக்கு ஆட்டம் தொடங்குகிறது.

    இந்த ஆட்டம் இந்திய அணிக்கு மிகவும் முக்கியமானது. வெற்றிபெற வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது. தோற்றால் ஒரு நாள் தொடரை இழந்துவிடும். இதனால் இந்திய அணி வங்காளதேசத்துக்கு பதிலடி கொடுத்து தொடரை சமன் செய்யும் என்று ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது.

    முதல் போட்டியில் பேட்டிங் மிகவும் மோசமாக இருந்தது. லோகேஷ் ராகுல் ஒருவரே நிலைத்து நின்று ஆடினார். அதுவும் கடைசிகட்ட வீரர்கள் ஒற்றை இலக்கத்திலேயே வெளியேறினார்கள். இதனால் பேட்டிங்கில் கூடுதல் கவனம் செலுத்துவது அவசியமாகும்.

    இதேபோல பீல்டிங் மிகவும் மோசமாக இருந்தது. லோகேஷ் ராகுல், வாஷிங்டன் சுந்தர் முக்கியமான கட்டத்தில் கேட்ச்சுகளை தவறவிட்டனர். இது அணியின் வெற்றியை பாதித்தது. நாளைய போட்டிக்கான அணியில் மாற்றம் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    லிட்டன் தாஸ் தலைமையிலான வங்காளதேச அணி இந்த ஆட்டத்திலும் வெற்றிபெற்று ஒருநாள் தொடரை வெல்லும் ஆர்வத்தில் உள்ளது. முதல் போட்டியில் பெற்ற வெற்றி அந்த அணிக்கு நம்பிக் கையை அதிகரித்துள்ளது.

    கேப்டன் லிட்டன் தாஸ், சகீப்-அல்-ஹசன், முஸ்பிகுர் ரகீம், ஹசன் மிராஸ், எபொதத் உசேன் போன்ற சிறந்த வீரர்கள் அந்த அணியில் உள்ளனர்.

    வெற்றி நெருக்கடியான இந்த ஆட்டத்தில் இந்திய வீரர்கள் முழு திறமையை வெளிப்படுத்த வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர்.

    ×