search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "போக்சோவில் கைது"

    • சில தினங்களுக்கு முன்பு இருவரும் காணாமல் போனார்கள்.
    • கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    பல்லடம் :

    மதுரையைச் சேர்ந்த நாகராஜ் என்பவரது மகன் கோபாலகிருஷ்ணன்(வயது 24). இவர் பல்லடம் பனப்பாளையத்தில் தனியார் பனியன் நிறுவனத்தில் தங்கி வேலைப் பார்த்து வருகிறார். இந்த நிலையில் அவருடன் பணியாற்றும் 17 வயது சிறுமியை காதலித்துள்ளார். இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு இருவரும் காணாமல் போனார்கள்.

    இந்த நிலையில் சிறுமியை காணவில்லை என அவரது பெற்றோர் பல்லடம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். போலீசார் இதுகுறித்து விசாரணை செய்து வந்தனர். இந்த நிலையில், இருவரும் மதுரையில் இருப்பதாக கிடைத்த தகவலையடுத்து, அங்கு சென்ற போலீசார் இருவரையும் விசாரணைக்காக பல்லடம் போலீஸ் நிலையம் அழைத்து வந்தனர்.

    விசாரணையின் போது சிறுமியை கோபாலகிருஷ்ணன் திருமணம் செய்து கொண்டது தெரிய வந்தது. இதையடுத்து அந்த வழக்கு பல்லடம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்திற்கு மாற்றப்பட்டது. சிறுமியை திருமணம் செய்ததால் கோபாலகிருஷ்ணன் மீது போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்த போலீசார் அவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    • சிறுமியிடம் ஸ்ரீதர் ஆசை வார்த்தைகளை கூறி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.
    • போலீசார் விசாரணை நடத்தி ஸ்ரீதர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சியை சேர்ந்தவர் ஸ்ரீதர் (24). இவர் மொடக்குறிச்சியை சேர்ந்த 16 வயது சிறுமியிடம் நட்பாக பழகினார்.

    இந்த பழக்கம் நாள டைவில் காதலாக மாறியது. இதன்பேரில் சிறுமியிடம் ஸ்ரீதர் ஆசை வார்த்தைகளை கூறி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.

    இந்நிலையில் சிறுமியின் நடவடிக்கையில் மாற்றத்தை அறிந்த பெற்றோர் அவரிடம் விசாரிக்க அவர் நடந்ததை தெரிவித்து ள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த அவர்கள் ஈரோடு மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர்.

    போலீசார் விசாரணை நடத்தி ஸ்ரீதர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். பின்னர் அவர் நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைத்தனர்.

    • சிறுமி வேலைக்கு செல்லாமல் தனது காதலனுடன் சென்றார்.
    • கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.

    பொள்ளாச்சி,

    கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள கோவில்பாளையத்தை சேர்ந்தவர் 17 வயது சிறுமி. இவர் அந்த பகுதியில் உள்ள ஒரு துணிக்கடையில் வேலை பார்த்து வந்தார்.

    இந்தநிலையில் சிறுமிக்கு நெகமத்தை சேர்ந்த கூலித் தொழிலாளியான 17 வயது சிறுவனுடன் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் இந்த பழக்கம் காதலாக மாறியது. 2 பேரும் அடிக்கடி நேரில் சந்தித்து தங்களது காதலை வளர்த்து வந்தனர்.

    இந்த காதல் விவகாரம் 2 பேருடைய பெற்றோருக்கு தெரிய வரவே அவர்கள் வயதை காரணம் காட்டி காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் காதலர்கள் கடந்த சில நாட்களாக மிகுந்த மனவேதனை அடைந்து காணப்பட்டனர்.

    சம்பவத்தன்று சிறுமி தனது பெற்றோரிடம் வேலைக்கு செல்வதாக கூறி விட்டு சென்றார். ஆனால் சிறுமி வேலைக்கு செல்லாமல் தனது காதலனுடன் சென்றார். பின்னர் 2 பேரும் அந்த பகுதியில் உள்ள ஒரு கோவிலில் வைத்து திருமணம் செய்து கொண்டனர். அதன் பின்னர் சிறுவன், சிறுமியை அவரது வீட்டிற்கு அழைத்து சென்றார்.

    வேலைக்கு சென்ற சிறுமி நீண்ட நேரமாக வீட்டிற்கு திரும்பி வராததால் அவரை அவரது பெற்றோர் பல்வேறு இடங்களில் தேடினர். அப்போது சிறுவன் அவரை திருமணம் செய்தது தெரிய வந்தது.

    இதனையடுத்து சிறுமியின் பெற்றோர் இது குறித்து பொள்ளாச்சி அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தனர். புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தினர். பின்னர் போலீசார் திருமணம் செய்து கொண்ட சிறுவன், சிறுமியை அழைத்து விசாரணை நடத்தினர். இதனை தொடர்ந்து சிறுமியை போலீசார் அவரது பெற்றோருடன் அனுப்பி வைத்தனர். சிறுமியை திருமணம் செய்த சிறுவன் மீது போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.   

    • 8 வயது சிறுமி சம்பவத்தன்று தனது வீட்டின் முன்பு விளையாடி கொண்டிருந்தார்.
    • சிறுமிக்கு சாக்லெட் வாங்கி கொடுத்து விட்டு, தனது வீட்டிற்கு அழைத்து சென்றார்.

    ஊட்டி,

    ஊட்டி அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்தவர் 8 வயது சிறுமி. சிறுமி சம்பவத்தன்று தனது வீட்டின் முன்பு விளையாடி கொண்டிருந்தார்.

    அப்போது சிறுமி வீட்டின் அருகே வசிக்கும் அஜித்குமார்(21) என்ற வாலிபர், சிறுமியிடம் சென்று நைசாக பேச்சு கொடுத்தார்.

    சிறுமியிடம், சாக்லெட் வாங்கி தருவதாக கூறி அருகே உள்ள கடைக்கு அழைத்து சென்றார். அங்கு சிறுமிக்கு சாக்லெட் வாங்கி கொடுத்து விட்டு, தனது வீட்டிற்கு அழைத்து சென்றார்.

    அங்கு வீட்டில் யாரும் இல்லாததால் சிறுமிக்கு, அஜித்குமார் பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். மேலும் இந்த விஷயத்தை வெளியில் கூறினால் உன்னை கொன்று விடுவேன் என மிரட்டலும் விடுத்தார்.

    இதனால் அதிர்ச்சியான சிறுமி அவரிடம் இருந்து தப்பித்து தனது வீட்டிற்கு அழுது கொண்டே சென்றார். சிறுமியிடம் அவர் தாயார் விசாரித்தார்.

    அப்போது சிறுமி தனக்கு நடந்தசம்பவங்களை பெற்றோரிடம் தெரிவித்தார்.

    இதுகுறித்து அவர்கள் ஊட்டி புதுமந்து போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில் அஜித்குமார் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தது உறுதியானது.

    இதையடுத்து போலீசார் அஜித்குமார் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து, அவரை கைது செய்தனர். பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    • கடந்த 2 வருடங்களுக்கு முன்பு இவருக்கு அதே பகுதியை சேர்ந்த 15 வயது சிறுமி ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டது.
    • அவரை வாலிபர் பரிசோதனைக்காக மேட்டுப்பாளையம் அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றார்.

    அன்னூர்,

    கோவை மாவட்டம் அன்னூர் அருகே உள்ள குப்பம் பாளையத்தை சேர்ந்தவர் 21 வயது வாலிபர்.

    கடந்த 2 வருடங்களுக்கு முன்பு இவருக்கு அதே பகுதியை சேர்ந்த 15 வயது சிறுமி ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது. 2 பேரும் ஒருவரை ஒருவர் தீவிரமாக காதலித்து வந்தனர். இந்தநிலையில் சிறுமியின் பெற்றோர் காதலுக்கு எதிப்பு தெரிவித்தனர். அவர்களது எதிர்ப்பை மீறி கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 22-ந் தேதி சிறுமியை வாலிபர் திருமணம் செய்தார். பின்னர் தனது வீட்டிற்கு அழைத்து சென்று அவருடன் குடும்பம் நடத்தி வந்தார்.

    தற்போது சிறுமிக்கு 17 வயது ஆகிறது. இந்த நிலையில் சிறுமி கர்ப்பமானார். அவரை வாலிபர் பரிசோதனைக்காக மேட்டுப்பாளையம் அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றார். அப்போது டாக்டர்கள் சிறுமியை பரிசோதனை செய்த போது அவர் 4 மாத கர்ப்பமாக இருப்பது தெரிய வந்தது. சிறுமியின் வயதை டாக்டர்கள் ஆய்வு செய்த போது அவர் 17 வயதில் கர்ப்பமானது தெரிய வந்தது.

    இது குறித்து அவர்கள் அன்னூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக போலீசார் சம்பவஇடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில் வாலிபர் சிறுமியை திருமணம் செய்து கர்ப்பமாக்கியது தெரிய வந்தது. இதனையடுத்து போலீசார் வாலிபரை போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.  

    • 16 வயது சிறுமி பள்ளி படிப்பை பாதியில் நிறுத்தி விட்டு வீட்டில் இருந்து வந்தார்.
    • சிறுமி கூடலூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.

    ஊட்டி,

    நீலகிரி மாவட்டம் கூடலூரை சேர்ந்தவர் 16 வயது சிறுமி. இவர் பள்ளி படிப்பை பாதியில் நிறுத்தி விட்டு வீட்டில் இருந்து வந்தார்.

    அப்போது அதே பகுதியை சேர்ந்த கூலி வேலை செய்து வரும் பிரியதர்ஷன் (25) என்பவருடன் சிறுமிக்கு பழக்கம் ஏற்பட்டது. இருவரும் நட்பாக பழகி வந்தனர்.

    இது நாளடைவில் காதலாக மாறியது. ஒருவரை ஒருவர் தீவிரமாக காதலித்து வந்தனர். இந்த நிலையில் கடந்த ஏப்ரல் மாதம் பிரியதர்ஷன் சிறுமியிடம் நாம் திருமணம் செய்து கொள்ளலாம் என ஆசைவார்த்தை கூறி பாலியல் பலத்காரம் செய்தார்.

    இதனால் அந்த சிறுமி 5 மாதம் கர்ப்பமானார். இது நாளடைவில் சிறுமியின் குடும்பத்திற்கு தெரியவந்தது. இதில் அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர் சிறுமியிடம் விசாரித்தனர். அப்போது சிறுமி நடந்தவற்றை கூறினார்.பின்னர் இதுகுறித்து சிறுமி கூடலூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.

    புகாரின் பேரில் போலீசார் போக்சோ வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி பிரியதர்ஷனை கைது செய்தனர். பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    • 9-ம் வகுப்பு வரை படித்துவிட்டு வீட்டில் இருந்து வருகிறார்.
    • கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.

    மேட்டுப்பாளையம்,

    மேட்டுப்பாளையத்தை அடுத்த சிறுமுகை ரோடு பகுதியை சேர்ந்தவர் 17 வயது சிறுமி. இவர் 9-ம் வகுப்பு வரை படித்துவிட்டு வீட்டில் இருந்து வருகிறார்.

    இவருக்கு உடல் நிலை சரியில்லாததால் படிப்பை தொடராமல் வீட்டில் இருந்து வருவதாக தெரிகிறது. இந்த நிலையில் சிறுமியின் வீட்டின் அருகே அவரது தாயாரின் அக்கா வசித்து வருகிறார். அவரின் கணவர் அடிக்கடி சிறுமியின் வீட்டுக்கு சென்று வந்துள்ளார்.

    பெரியப்பா என்பதால் யாருக்கும் சந்தேகம் ஏற்படவில்லை. இதனை பயன்படுத்தி கொண்ட அவர் சிறுமியின் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் வந்து சிறுமியை கடந்த 5 மாதங்களாக பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.

    மேலும் இதுகுறித்து வெளியில் சொன்னால் கொன்றுவிடுவதாக சிறுமியை மிரட்டி உள்ளார். இதனால் பயந்து போன சிறுமி யாரிடமும் சொல்லாமல் இருந்து வந்துள்ளார். இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு சிறுமிக்கு வயிற்று வலி ஏற்பட்டது.

    இதனால் சிறுமியின் பெற்றோர் அவரை ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்று பரிசோதனை செய்தனர். அப்போது சிறுமி 4 மாதம் கர்ப்பமாக இருந்தது தெரியவந்தது. இதைகேட்டு அதிர்ச்சி அடைந்த சிறுமியின் பெற்றோர் அவரிடம் விசாரித்தனர். அப்போது அவர் பெரியப்பா பாலியல் பலாத்காரம் செய்ததை கூறினார்.

    இதுகுறித்து சிறுமியின் தாயார் மேட்டுப்பாளையம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் சிறுமியின் பெரியப்பா மீது போக்சோ வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். பின்னர் அவரை ேகார்ட்டில் ஆஜர்படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.

    • மாணவன்(வயது12) ஒருவரை, தனியாக அழைத்துசென்று, பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்ததார்.
    • பெற்றோர்கள் காரைக்கால் கோட்டுச்சேரி காவல்நிலையத்தில் புகார் கொடுத்தனர்.

    காரைக்கால், நவ.16-

    காரைக்கால் கோட்டுச்சேரி அருகே உள்ள இராயன்பாளையத்தில், மத்திய அரசின் நவோதயா பள்ளி இயங்கி வருகிறது. இப்பள்ளியில் மாணவர்கள் பலர் அங்கேயே தங்கி படித்து வருகின்றனர். பள்ளி காவலாளியாக, நாகை மாவட்டம் தரங்கம்பாடியைச்சேர்ந்த முகம்மது அலி(வயது54) என்பவர் கடந்த 10 ஆண்டுகளாக வேலை செய்து வருகிறார்.

    நேற்று முன்தினம் மாலை, பள்ளி விடுதியில் இருந்த 8-ம் வகுப்பு மாணவன்(வயது12) ஒருவரை, தனியாக அழைத்துசென்று, பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்ததார். இது குறித்து, மாணவன் தன் பெற்றோரிடம் போன் மூலம் தெரிவித்துள்ளார். பெற்றோர்கள் காரைக்கால் கோட்டுச்சேரி காவல்நிலையத்தில் புகார் கொடுத்தனர். அதன்பேரில், போலீசார், முகம்மது அலி மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.

    • விக்னேஷ் பள்ளி மாணவியை திருமணம் செய்தது தெரியவந்தது.
    • விக்னேஷை கைது செய்து கோர்ட்டில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.

    காரிமங்கலம்,

    தருமபுரி மாவட்டம் காரிமங்கலம் பகுதியை சேர்ந்த 17 வயது மாணவி காரிமங்கலம் அரசு பெண்கள் பள்ளியில் பிளஸ் 1 படித்து வந்தார். கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் எம்.ஜி.ஆர். நகரை சேர்ந்த அண்ணாதுரை என்பவரின் மகன் விக்னேஷ் (வயது 23). இவர் காரிமங்கலத்தில் பானி பூரி கடை நடத்தி வந்துள்ளார். இவருக்கும் பள்ளி மாணவிக்கும் இடையே பழக்க வழக்கம் இருந்து வந்துள்ளது.

    இந்நிலையில் கடந்த மாதம் 8-ம் தேதி பள்ளிக்கு சென்ற மாணவி வீடு திரும்பாத நிலையில் அவரது குடும்பத்தினர் கொடுத்த புகாரின் பேரில் காரிமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில் தேனி மாவட்டத்தில் இருவரையும் போலீசார் கண்டுபிடித்து அழைத்து வந்து விசாரணை நடத்தியதில் விக்னேஷ் பள்ளி மாணவியை திருமணம் செய்தது தெரியவந்தது.

    இதை அடுத்து பாலக்கோடு மகளிர் ஸ்டேஷன் இன்ஸ்பெக்டர் கவிதா மற்றும் போலீசார் பள்ளி மாணவியை கடத்தி திருமணம் செய்த தாக விக்னேஷை கைது செய்து கோர்ட்டில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர். மாணவிக்கு மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு காப்பகத்தில் ஒப்படைக்க போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

    • 18 வயதுக்குட்பட்ட பெண் மற்றும் 21 வயதுக்குட்பட்ட ஆண், குழந்தைகளாகக் கருதப்படுவார்கள். இவர்களுக்குத் திருமணம் செய்தால், அது சட்டப்படி குற்றம்;
    • சிறுமியை கடத்தி தாய் ஒருவர் தனது மகனுக்கு திருமணம் செய்து வைக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    காடையாம்பட்டி:

    குழந்தைத் திருமணத்தைத் தடுக்க, குழந்தைத் திருமணத் தடைச் சட்டம் 2006-ல் இயற்றப்பட்டது. இச்சட்டத்தின்படி 18 வயதுக்குட்பட்ட பெண் மற்றும் 21 வயதுக்குட்பட்ட ஆண், குழந்தைகளாகக் கருதப்படுவார்கள். இவர்களுக்குத் திருமணம் செய்தால், அது சட்டப்படி குற்றம்; இத்திருமணத்தில் ஈடுபட்டுள்ள அனைவருக்கும் 2 ஆண்டு சிறைத் தண்டனை மற்றும் ஒரு லட்சம் ரூபாய் வரை அபராதம் விதிக்க இந்த சட்டம் வழிவகை செய்கிறது.

    பழக்கம்

    இந்த நிலையில் சேலம் அருேக சிறுமியை கடத்தி தாய் ஒருவர் தனது மகனுக்கு திருமணம் செய்து வைக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    தருமபுரி மாவட்டம் பொம்மிடி பகுதியை சேர்ந்தவர் லட்சுமி (வயது 47). இவருடைய உறவினர் ஒருவர் சேலம் மாவட்டம் காடையாம்பட்டி தாலுகா டேனீஷ்பேட்டை பகுதியில் வசித்து வருகிறார்.

    இந்த உறவினர் வீட்டுக்கு லட்சுமியின் மகன் ரமேஷ்குமார் அடிக்கடி சென்று வருவது வழக்கம். அப்போது பக்கத்து வீட்டை சேர்ந்த 17 வயது சிறுமியுடன் ரமேஷ்குமாருக்கு பழக்கம் ஏற்பட்டது. இதற்கிடையே ரமேஷ்குமாரின் தாய் லட்சுமி, தனது மகனுக்கு பல்வேறு இடங்களில் வரன் பார்த்து வந்தார். ஆனால் பெண் வீட்டார் திருமணத்திற்கு சம்மதிக்கவில்லை. இதனால் மகனுக்கு அந்த சிறுமியை திருமணம் செய்து வைக்க லட்சுமி முடிவு செய்தார்.

    சிறுமியின் வீட்டுக்கு சென்று பெண் கேட்டால் கொடுக்கமாட்டார்கள் என்பதை அறிந்த அவர், நைசாக பேசி சிறுமியை தனது மகனுக்கு திருமணம் செய்து வைக்க திட்டம் தீட்டினார்.

    புகார்

    கடந்த 22-ந்தேதி லட்சுமி, டேனீஷ்பேட்டைக்கு வந்தார். அங்கு வீட்டில் இருந்த சிறுமியிடம் ஆசைவார்த்தைகள் கூறி பெற்றோருக்கு தெரியாமல் நைசாக சிறுமியை தனது வீட்டுக்கு அழைத்துச் சென்றார். அங்கு வீட்டின் ஒரு அறையில் அடைத்து வைத்து திருமண ஏற்பாடுகள் மும்முரமாக நடைபெறுவதை பார்த்த சிறுமி அதிர்ச்சி அடைந்தார். ரமேஷ்குமாருக்கு தன்னை திருமணம் செய்து வைக்க இருப்பது தெரியவந்தது.

    இதற்கிடையே மகளை பல்வேறு இடங்களில் தேடியும் பெற்றோரால் கண்டுபிடிக்க முடியவில்லை. அக்கம், பக்கத்தில் விசாரித்தபோதும், மகள் குறித்து எதுவும் தெரியவில்லை. இதனால் மகள் எங்கு சென்றார்? என்ன ஆனார்? என தெரியாததால் கவலை அடைந்த பெற்றோர் இது பற்றி தீவட்டிப்பட்டி போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தனர்.

    பத்திரமாக மீட்பு

    அதன்பேரில் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டதில், சிறுமியை லட்சுமி கடத்தி சென்றிருப்பதை கண்டுபிடித்தனர். இதையடுத்து போலீசார், சிறுமியை மீட்கும் நடவடிக்கையை துரிதமாக எடுத்தனர். பொம்மிடிக்கு சென்று சிறுமியை பத்திரமாக மீட்ட போலீசார், லட்சுமி மீது குழந்தை திருமணத்திற்கு ஏற்பாடு செய்த குற்றத்திற்காக போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து, சேலம் அஸ்தம்பட்டியில் உள்ள பெண்கள் சிறையில் அவரை அடைத்தனர். மேலும் தலைமறைவாக இருந்த ரமேஷ்குமாரை பிடித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • பிளஸ்-2 மாணவியை காதலிப்பதாக ஆசை வார்த்தை கூறி வாலிபர் கடத்திச்சென்றார்.
    • போக்சோ சட்டத்தின்கீழ் வாலிபர் மீது வழக்குபதிவு செய்து கைது செய்தனர்.

    வடமதுரை:

    திண்டுக்கல் மாவட்டம் குஜிலியம்பாறை அருகில் உள்ள சாலம்பட்டியை சேர்ந்தவர் நிவின்குமார்(21). இவர் தென்னம்பட்டியில் உள்ள ஒரு வெல்டிங் பட்டறையில் வேலை பார்த்து வந்தார். அப்போது அதேபகுதியை சேர்ந்த பிளஸ்-2 மாணவியை காதலிப்பதாக கூறி பழகி வந்தார்.

    பின்னர் அவரை ஆசைவார்த்தை கூறி கடத்திச்சென்றார். தனது மகளை காணாமல் அவரது பெற்றோர் வடமதுரை போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர். நிவின்குமாரின் செல்போன் எண்ணை வைத்து அவர் உறவினர் வீட்டில் பதுங்கி இருந்தது தெரியவரவே போலீசார் அங்கு சென்று அவர்களை மீட்டு வந்தனர்.

    மாணவியை காப்பகத்தில் ஒப்படைத்தனர். வடமதுரை இன்ஸ்பெக்டர் ஜோதிமுருகன், மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயராணி ஆகியோர் போக்சோ சட்டத்தின்கீழ் நிவின்குமார் மீது வழக்குபதிவு செய்து கைது செய்தனர்.

    • போக்சோ மற்றும் குழந்தை திருமணம் தடுப்பு சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.
    • கோவிலில் வைத்து திருமணம் செய்து கொண்டனர்.

    கோவை,

    பொள்ளாச்சியை சேர்ந்தவர் 17 வயது சிறுமி.

    இவரது உறவினர் வீடு கோவை சூலூர் செஞ்சேரிபுதூரில் உள்ளது. இதனால் அந்த சிறுமி அடிக்கடி கோவையில் உள்ள தனது உறவினர் வீட்டுக்கு வந்தார்.

    அப்போது அதே பகுதியை சேர்ந்த கார்பென்டர் நவீன்குமார் (19) என்பவருடன் சிறுமிக்கு பழக்கம் ஏற்பட்டது.

    இருவரும் நட்பாக பழகி வந்தனர். அது நாளடையில் காதலாக மாறியது. இருவரும் ஒருவரை ஒருவர் தீவிரமாக காதலித்து வந்தனர்.

    அப்போது நவீன்குமார் அந்த சிறுமியிடம் திருமணம் செய்து கொள்ளலாம் என ஆசை வார்த்தை கூறியுள்ளார். இதையடுத்து இருவரம் வீட்டை விட்டு வெளியேறி செஞ்சேரிபுதூர் பகுதியில் உள்ள பெருமாள் கோவிலில் வைத்து திருமணம் செய்து கொண்டனர்.

    பின்னர் நவீன்குமார் சிறுமியை அழைத்து கொண்டு தனது வீட்டுக்கு சென்றார். அங்கு தனது பெற்றோரிடம் சிறுமி மேஜர் என கூறியுள்ளார். பின்னர் சிறுமியை பொள்ளாச்சி அழைத்து சென்று அங்கு குடும்பம் நடத்தினார்.

    அப்போது பல முறை சிறுமியை நவீன்குமார் பலாத்காரம் செய்துள்ளார்.இந்த நிலையில் கடந்த 4 மாதங்களுக்கு முன்பு இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.

    இதனால் இருவரும் பிரிந்தனர். சிறுமி தனது தாய் வீட்டுக்கு வந்தார்.

    இதனால் சிறுமியின் தாயார் போலீசில் புகார் அளிக்க சிறுமியிடம் கூறினார். இதையடுத்து அவர் பொள்ளாச்சி அனைத்து மகளிர் போலீஸ் நிலையம் சென்று புகார் அளித்தார்.

    போலீசார் போக்சோ மற்றும் குழந்தை திருமணம் தடுப்பு சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து நவின்குமாரை கைது செய்தனர். அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    ×