search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "போக்சோவில் கைது"

    • ஜெயிலில் அடைத்தனர்
    • மாணவியை மீட்டு வேலூர் பெண்கள் காப்பகத்தில் சேர்த்தனர்

    ஆம்பூர்:

    திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் அடுத்த சின்னவரிகம் பகுதியைச் சேர்ந்தவர் முகேஷ் (வயது 22).

    இவர் கடந்த 10 நாட்களுக்கு முன்பு 14 வயது சிறுமியை கடத்தி சென்று திருமணம் செய்து கொண்டார்.

    இது குறித்து புகாரின் பேரில் உமராபாத் போலீசார் முகேஷ் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து, அவரை தேடி வந்தனர்.

    இந்த நிலையில் நேற்று போலீசார் முகேஷை கைது செய்து, ஜெயிலில் அடைத்தனர். மேலும் பள்ளி மாணவியை மீட்டு வேலூர் பெண்கள் காப்பகத்தில் சேர்த்தனர்.

    • சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வாலிபர் போக்சோவில் கைது செய்யப்பட்டார்.
    • தலைக்கு தேய்க்கும் எண்ணையை குடித்து தற்கொலைக்கு முயன்றார்.

    மதுரை

    மதுரை சிந்தாமணிரோடு ராஜமான் நகரை சேர்ந்தவர் முனியாண்டி. மகன் மணிகண்டன் (வயது28). இவர் அதே பகுதியை சேர்ந்த 16 வயது சிறுமி ஒருவருக்கு அடிக்கடி பாலி யல் தொல்லை கொடுத்து வந்துள்ளார்.

    இந்தநிலையில் சம்பவத் தன்று சிறுமி வீட்டில் தனியாக இருந்துள்ளார். அப்போது அவரது வீட்டுக் குள் அத்துமீறி நுழைந்த மணிகண்டன் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுக்க முயன்றுள்ளார். அப்போது சிறுமி சத்தமாக கூச்சலிட்டார். அவரது கூச்சல் சத்தத்தை கேட்டு அக்கம் பக்கத்தினர் திரண்ட னர். இதனால் அச்சமடைந்த மணிகண்டன் சிறுமிக்கு கொலை மிரட்டல் விடுத்து விட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.

    இதனால் மன உளைச் சலுக்கு ஆளான சிறுமி வீட்டில் யாரும் இல்லாத போது தலைக்கு தேய்க்கும் எண்ணையை குடித்து தற்கொலைக்கு முயன்றார். உறவினர்கள் அவரை மீட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

    இது குறித்து அந்த டவுன் அனைத்து மகளிர் ேபாலீஸ் நிலையத்தில் சிறுமி புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து மணிகண்டனை போக்சோ சட்டத்தில் கைது செய்தனர்.

    • இளம்பெண்ணை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்த உறவினர் போக்சோவில் கைது செய்யப்பட்டார்.
    • அந்த பெண்ணுக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டது.

    மேலூர்

    மதுரை மாவட்டம் கொட்டாம்பட்டி அருகே பள்ளப்பட்டியை அடுத்து உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த 17 வயது இளம்பெண் 10-ம் படித்து விட்டு வீட்டில் இருந்து வந்தார். இவரது வீட்டுக்கு அதே பகுதியை சேர்ந்த அண்ணன் உறவு முறையை கொண்ட காட்டு ராஜா (வயது 36). அடிக்கடி வந்து செல்வார்.

    சம்பவத்தன்று பெண் ணின் பெற்றோர் வேலை நிமித்தமாக வெளியே சென்று விட்டனர். அப்போது அங்கு வந்த காட்டுராஜா இளம்பெண் தனியாக இருப்பதை அறிந்து அவரிடம் தவறாக நடக்க முயன்றார். இதற்கு அந்த பெண் எதிர்ப்பு தெரிவிக் கவே மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. இதுபோன்று பலமுறை நிகழ்ந்ததாக தெரி கிறது.

    இந்த நிலையில் அந்த பெண்ணுக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டது. இதை யடுத்து அவரது தாயார் மதுரை அரசு ஆஸ்பத்திரியில் மகளை அழைத்து சென்றார். அங்கு டாக்டர்கள் பரிசோ தனை செய்தபோது, அந்த பெண் 11 வார கர்ப்பிணியாக இருந்ததை தெரியவந்தது.

    இதனால் அதிர்ச்சி அடைந்த தாயார் மகளிடம் நடந்த விவரம் குறித்து கேட்டறிந்தார். இதுகுறித்து அவர் மேலூர் மகளிர் போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் சாந்தி பாலாஜி விசாரணை நடத்தி இளம்பெண்ணை மிரட்டி பலாத்காரம் செய்த காட்டு ராஜாைவ போக்சோ சட்டத் தின் கீழ் கைது செய்தனர்.

    • 10-ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த காதலன் போக்சோவில் கைது செய்யப்பட்டார்.
    • 2 பேரும் கடந்த சில மாதங்களாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.

    ராஜபாளையம்

    விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே சமுசிகாபுரத்தில் உள்ள நூற்பாலையில் கேரள மாநிலம் கேனல் இடுக்கி பகுதியைச் சேர்ந்த கிருஷ்ண மூர்த்தி (வயது 25) என்பவர் பணியாற்றி வருகிறார்.

    இவரும் தென்கரை கிராமத்தைச் சேர்ந்த 15 வயதுடைய பத்தாம் வகுப்பு மாணவியும் கடந்த சில மாதங்களாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இதையறிந்த பெற்றோர் மாணவியை கண்டித்துள்ளனர்.

    ஆனாலும் இருவரும் தொடர்ந்து பழகி வந்துள்ளனர். சம்பவத்தன்று பெற்றோர் வெளியே சென்று விட வீட்டில் தனியாக இருந்த மாணவி கிருஷ்ணமூர்த்தியை பார்க்க சென்றதாக கூறப்படுகிறது.

    அதன்பின் 2 பேரும் சங்கரன்கோவில் ரோட்டில் உள்ள ஒரு தியேட்டருக்கு படம் பார்க்க சென்றனர். அப்போது மாணவிக்கு கிருஷ்ணமூர்த்தி பாலியல் தொல்லை கொடுத்ததாக தெரிகிறது.

    இதுகுறித்து அந்த மாணவி தனது பெற்றோரிடம் தெரிவித்துள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த அவர்கள் விருதுநகர் அனைத்து மகளிர் போலீசில் புகார் கொடுத்தனர். சப்-இன்ஸ்பெக்டர் அமுதா போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து கிருஷ்ணமூர்த்தியை கைது செய்தார்.

    • ஆடைகளை அவிழ்க்காவிட்டால் கொலை செய்து விடுவேன் என்று மிரட்டல் விடுத்துள்ளார்.
    • பயந்து போன மாணவி ஆடைகளை அவிழ்த்துள்ளார்.

    அரூர்,

    தருமபுரி மாவட்டம், அரூர் பகுதியைச் சேர்ந்த 15 வயது மாணவி 10-ம் வகுப்பு படித்து வந்தார். அதே பகுதியை சேர்ந்தவர் தமிழ்ச்செல்வன் (வயது27). இவருடைய மனைவி தெய்வானை (20). இவர்கள் அந்த மாணவியிடம் நட்புடன் பழகி வந்தனர்.

    இந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு தெய்வானை அந்த மாணவியை தனது வீட்டிற்கு அழைத்துச் சென்றார். பின்னர் மாணவியை வீட்டிலேயே இருக்கும்படி கூறிவிட்டு கடைக்கு சென்று உள்ளார்.

    அப்போது வீட்டில் தனியாக இருந்த தமிழ்ச்செல்வன் வீட்டின் கதவை சாத்திவிட்டு மாணவியை ஆடைகளை அவிழ்க்கும்படி மிரட்டி உள்ளார். ஆனால் அந்த மாணவி மறுப்பு தெரிவித்துள்ளார்.

    இதனால் ஆத்திரமடைந்த தமிழ்ச்செல்வன் ஆடைகளை அவிழ்க்காவிட்டால் கொலை செய்து விடுவேன் என்று மிரட்டல் விடுத்துள்ளார்.

    இதனால் பயந்து போன மாணவி ஆடைகளை அவிழ்த்துள்ளார். இதையடுத்து அவர் தனது செல்போனில் மாணவியை ஆபாசமாக படம் எடுத்து உள்ளார். இது பற்றி யாரிடமும் கூறக்கூடாது என்று மிரட்டி உள்ளார்.

    சில நாட்கள் கழித்து மாணவியிடம் தமிழ்ச்செல்வன் எனக்கு நீ பணம் கொடுக்க வேண்டும். இல்லாவிட்டால் ஆபாச போட்டோக்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு விடுவேன் என்று மிரட்டியுள்ளார்.

    இதனால் பயந்து போன மாணவி தனது வீட்டில் இருந்து 6 பவுன் நகைகளை பெற்றோருக்கு தெரியாமல் எடுத்து வந்து தமிழ்செல்வனிடம் கொடுத்துள்ளார்.

    அதன்பின் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் ஆடைகள் இல்லாமல் தன்னிடம் வீடியோ காலில் பேச வேண்டும் என்று மாணவியை மிரட்டி தமிழ்ச்செல்வன் அவ்வாறு பேச வைத்துள்ளார்.

    இந்த நிலையில் மாணவியின் பெற்றோர் ஒரு திருமணத்திற்கு செல்வதற்காக வீட்டில் இருந்த நகைகளை சரி பார்த்தனர். அப்போது நகைகள் குறைந்திருப்பது தெரிய வந்தது. இதுகுறித்து மாணவி மற்றும் குடும்ப உறுப்பினர்களிடம் விசாரித்துள்ளனர்.

    அப்போது மாணவி நடந்த சம்பவம் குறித்து பெற்றோரிடம் தெரிவித்துள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் இது குறித்து அரூர் போலீசில் புகார் அளித்தனர். அதன் பேரில் போலீசார் விசாரணை நடத்தினர்.

    தொடர்ந்து போக்சோ உள்ளிட்ட சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து தமிழ்ச்செல்வன், அவருடைய மனைவி தெய்வானை ஆகிய 2 பேரையும் கைது செய்தனர். பின்னர் கைதான அவர்களை கோர்ட்டில் ஆஜர்படுத்தி தமிழ்செல்வனை அரூர் சிறையிலும், தெய்வானையை சேலம் பெண்கள் சிறையிலும் அடைத்தனர். 

    • 12 வயது சிறுமிக்கு பூங்காவனம் பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படு கிறது.
    • பயந்த போன சிறுமி, வீட்டிற்கு ஓடி வந்து தாயிடம் அழுது கொண்டு நடந்த சம்பவத்தை கூறியுள்ளார்.

    சங்ககிரி:

    சேலம் மாவட்டம் சங்ககிரி பகுதியைச் சேர்ந்த பூங்காவனம் (வயது 50), கூலி தொழிலாளி. இவர் 12 வயது சிறுமிக்கு பூங்காவனம் பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படு கிறது. இதனால் பயந்த போன சிறுமி, வீட்டிற்கு ஓடி வந்து தாயிடம் அழுது கொண்டு நடந்த சம்பவத்தை கூறியுள்ளார்.

    இதனால் அதிர்ச்சி யடைந்த சிறுமியின் தாய், இதுகுறித்து சங்ககிரி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில், எடப்பாடி போலீஸ் இன்ஸ்பெக்டர் சந்திரலேகா (பொறுப்பு), எஸ்.ஐ சாரதா ஆகியோர் பூங்காவனத்தின் மீது போக்சோ வழக்கு பதிந்து, தலைமறைவான அவரை தேடி வந்தனர்.

    இந்த நிலையில் நேற்று பூங்காவனம் கைது செய்யப்பட்டார். அவரிடம் போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.

    • சக்தி (வயது 23), சித்தையன் (26) ஆகியோர், கடந்த 7-ந் தேதி கடத்திச் சென்று பாலியல் தொந்தரவு செய்ததாக கூறப்படுகிறது.
    • தட்டிக்கேட்ட அந்தப் சிறுமியின் தந்தையை, சக்தி அரிவாளால் வெட்டியதில், அவர் பலத்த காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார்.

    ஏற்காடு:

    சேலம் மாவட்டம் ஏற்காட்டை சேர்ந்த 14 வயது சிறுமியை, கொளகூர் மலை கிராமத்தை சேர்ந்த சக்தி (வயது 23), சித்தையன் (26) ஆகியோர், கடந்த 7-ந் தேதி கடத்திச் சென்று பாலியல் தொந்தரவு செய்ததாக கூறப்படுகிறது.

    இதை தட்டிக்கேட்ட அந்தப் சிறுமியின் தந்தையை, சக்தி அரிவாளால் வெட்டியதில், அவர் பலத்த காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார். இதை தொடர்ந்து சிறுமியின் தாயார், இதுபற்றி கொண்டலாம்பட்டி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.

    அதன்பேரில், சக்தி மற்றும் சித்தையன் ஆகியோர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இதில் சக்தியை கடந்த 8-ந் தேதி போலீசார் கைது செய்த நிலையில், மற்றொரு குற்றவாளியான சித்தையன் தலைமறைவானார். அவரை போலீசார் தேடி வந்தனர்.

    இந்தநிலையில் நேற்று சித்தையன் அவரது வீட்டிற்கு வந்தார். இதுகுறித்து தகவல் அறிந்து வந்த கொண்டலாம்பட்டி போலீசார், கரடியூர் கிராமம், பஸ் நிறுத்தத்திற்கு அருகில் நின்று கொண்டிருந்த சித்தையனை மடக்கி பிடித்து கைது செய்தனர். பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    • போக்சோவில் கைது
    • போலீசார் விசாரணை

    போளூர்:

    கலசபாக்கம் தொப்பானந்தல் கிராமத்தைச் சேர்ந்தவர் அன் பரசன் (வயது 29), கட்டிட மேஸ்திரி. இவர் அதே ஊரை சேர்ந்த 16 வயது பெண்ணை காதலித்து வந்தார்.

    மேலும் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் கிடாம்பாளையம் கிராமத்தில் உள்ள திரவுபதி அம்மன் கோவிலுக்கு வெளியே யாருக்கும்.

    தெரியாமல் திருமணம் செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இவர்களை இருவீட்டாரும் சேர்க்கவில்லை. இதனால் அன்பரசன் இளம்பெண்ணுடன் உறவினர் வீட்டில் தங்கினார்.

    இந்த நிலையில் இளம்பெண் உடல்நிலை சரியில்லை என்று தனது தாயாருக்கு தெரிவித்தார். அவர் வந்து ஆதமங்கலம் புதூரில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அழைத்து சென்றார்.

    அவர்கள் திருவண்ணாமலை அரசு மருத்துவம னைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு டாக்டர்கள் பரிசோ தனை செய்ததில் இளம்பெண் 7 மாதம் கர்ப்பமாக இருப்பதை உறுதி செய்தனர். பின்னர் உள்நோயாளியாக சேர்த்து சிகிச்சை அளித்து வருகின்றனர்.

    இதுகுறித்து மருத்துவமனை நிர்வாகம் போளூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.

    அதன் பேரில் இன்ஸ்பெக்டர் ஜெயபிரகாஷ், சப்-இன்ஸ்பெக்டர் மீனாட்சி ஆகியோர் மருத்துவமனைக்கு சென்று பெண்ணிடம் வாக்குமூலம் பெற்றனர். இதையடுத்து இளம்பெண்ணை கர்ப்பமாக்கிய அன்பரசனை போக்சோ சட்டத்தில் போலீசார் கைது செய்தனர்.

    • 15 வயது சிறுமி நேற்று முன்தினம் காலை வயிற்று வலியால் துடித்தார்.
    • இதையடுத்து அவரை பெற்றோர், சேலம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

    சேலம்:

    சேலம் கந்தம்பட்டி பைபாஸ் பகுதியை சேர்ந்த 15 வயது சிறுமி நேற்று முன்தினம் காலை வயிற்று வலியால் துடித்தார். இதையடுத்து அவரை பெற்றோர், சேலம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். டாக்டர்கள், சிறுமியை பரிசோதித்து பார்த்தபோது, சிறுமி 7 மாத கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது.

    இதை கேட்டு அதிர்ச்சி அடைந்த பெற்றோர், சிறுமியிடம் விசாரித்த போது, அதே பகுதியை சேர்ந்த உறவின ரான வேன் டிரைவர் குருநாதன் (வயது 49) என்பவர் ஆசைவார்த்தை கூறி தன்னை பாலியல் பலாத்காரம் செய்தார் எனவும், கர்ப்பத்துக்கு அவர் தான் காரணம் என்றும் கண்ணீர் மல்க தெரிவித்தார்.

    இதையடுத்து பெற்றோர், சூரமங்கலம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தனர். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து குருநாதனை நேற்று கைது செய்தனர்.

    • 17 வயது மாணவி கோவையில் உள்ள தனியார் கல்லூரியில் படித்து வருகிறார்.
    • ஞானபிரகாசம் மீது போக்சோவில் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர்.

    சரவணம்பட்டி,

    சேலத்தை சேர்ந்தவர் 17 வயது மாணவி. இவர் கோவையில் உள்ள தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் விடுதியில் தங்கி படித்து வருகிறார். கடந்த 4 நாட்களுக்கு முன்பு கல்லூரியில் இருந்து வெளியே சென்ற மாணவி கல்லூரிக்கு திரும்பவில்லை.

    இது குறித்து கல்லூரி நிர்வாகம் அவரது பெற்றோ ருக்கு தகவல் கொடுத்தனர். அவர்கள் உடனடியாக கோவை வந்து கோவி ல்பாளையம் போலீசில் புகார் கொடுத்தனர்.

    போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தினர். மேலும் அவரது செல்போன் எண்ணில் யாரை எல்லாம் தொடர்பு கொண்டு பேசினார் என்பது குறித்தும் விசாரணை நடத்தினர்.

    விசாரணையில், மாணவி சாத்தூரை சேர்ந்த டிரைவரான ஞானபிர காசம் (27) என்பவரிடம் அடிக்கடி போனில் பேசிய–து தெரியவந்தது.

    தொடர்ந்து நடத்தப்பட்ட விசார–ணையில் ஞானபிரகாசம் மாணவியை காதலிப்ப தாக ஆசை வார்த்தை கூறி கடத்தி சென்றது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் ஞா னபிரகாசத்தின் செல்போ ன் டவரை வைத்து தேடினர். அப்போது அவர் ராமேஸ்வரத்தில் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அங்கு விரைந்து சென்று மாணவியை மீட்டனர். மேலும் ஞானபிரகாசம் மீது போக்சோவில் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர்.

    • பண்ருட்டி அருகே 10 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த சிறுவன் போக்சோவில் கைது செய்யப்பட்டார்.
    • தனது வீட்டு பிரிட்ஜில் உள்ள மீனை எடுத்து வரச்சொல்லி சிறுமியிடம் கூறி உள்ளார்.

    கடலூர்:

    பண்ருட்டி அருகே உள்ள கிராமத்தை சேர்ந்த 10 வயதுசிறுமி இவர்அதேபகுதியி ல்உள்ளதொடக்க பள்ளியில் 5-ம் வகுப்பு படித்து வருகிறார். இவர் கடந்த 22-ந் தேதி வீட்டு வாசலில் விளையாடி கொண்டிருந்தார்.அப்போது அங்கு வந்த சிறுமியின் பக்கத்து வீட்டில் உள்ள ஒருவர் தனது வீட்டு பிரிட்ஜில் உள்ள மீனை எடுத்து வரச்சொல்லி சிறுமியிடம் கூறி உள்ளார். வீட்டுக்குள் மீன் எடுக்கச் சென்ற சிறுமியை 17 வயது சிறுவன், பின் தொடர்ந்து சென்று சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுக்க முயன்றுள்ளார் உடனே சிறுமி சத்தம் போட்டார்.இந்த சத்தம் கேட்டு சிறுமியின் தாய் அங்கு ஓடி வந்தார். அவரை பார்த்ததும் சிறுவன் தப்பி ஒடி விட்டான்.

    இது குறித்து பண்ருட்டி மகளிர் போலீசில் புகார் செய்யப்பட்டது. இன்ஸ்பெக்டர் வள்ளி போக்சோ பிரிவில் வழக்கு பதிவு செய்து சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற சிறுவனை கைது செய்தார். பின்னர் சிறுவர் சீர் திருத்த பள்ளிக்கு அனுப்பி வைக்கப்பட்டான்.

    • 17 வயது சிறுவன் ஒருவன் காதலிக்க சொல்லி வற்புறுத்தியதாக கூறப்படுகிறது.
    • சிறுவன் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு, சேலம் கூர்நோக்கு இல்லத்தில் அடைக்கப்பட்டான்.

    பாலக்கோடு,

    தருமபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த 15 வயது சிறுமி அரசு பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வருகிறார்.

    இந்த மாணவி பள்ளிக்கு செல்லும் போது, பக்கத்து கிராமத்தை சேர்ந்த 17 வயது சிறுவன் ஒருவன் காதலிக்க சொல்லி வற்புறுத்தியதாக கூறப்படுகிறது.

    இதுகுறித்து மாணவி தனது பெற்றோரிடம் தெரிவித்தார். இதையடுத்து அவர்கள் பாலக்கோடு போலீசில் புகார் அளித்தனர்.

    அதன்பேரில் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து, சிறுவனை கைது செய்தனர்.

    பின்னர் அந்த சிறுவன் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு, சேலம் கூர்நோக்கு இல்லத்தில் அடைக்கப்பட்டான்.

    ×