search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஓட்டல் தொழிலாளி"

    • திட்டக்குடி பஸ் நிறுத்தத்தில். ஓட்டல் தொழிலாளியை கத்திரிக்கோலால் குத்தியவர் கைது செய்யப்பட்டார்.
    • நேற்று இரவு 8 மணி அளவில் சண்முகம் திட்டக்குடி பஸ் நிறுத்தம் அருகில் நின்று கொண்டிருந்தபோது அங்கு செல்வம் வந்தார்.

    கடலூர்:

    கடலூர் மாவட்டம் திட்டக்குடி நகராட்சியில் விருத்தாச்சலம் - ராமநத்தம் மாநில சாலையோரம் உள்ள தனியார் ஓட்டலில் பட்டம்மாள் நகரைச் சேர்ந்த சண்முகம் (வயது 38), அசனாம்பிகை அம்மன் கோவில் தெருவை சேர்ந்த செல்வம் (39) ஆகிய இருவரும் பணிபுரிந்தனர். கடந்த ஒரு வருடத்திற்கு முன்பே செல்வம் என்பவர் வேலை விட்டு நின்று விட்ட தாகவும், கடந்து ஒரு வரு டத்திற்கு முன்பு செல்வ த்தை சண்முகம் திட்டி அடித்த தாகவும் கூறப்படு கிறது.

    இதனால் நேற்று இரவு 8 மணி அளவில் சண்முகம் திட்டக்குடி பஸ் நிறுத்தம் அருகில் நின்று கொண்டிருந்தபோது அங்கு செல்வம் வந்தார். அப்போது செல்வம் மறைத்து வைத்திருந்த கத்திரக்கோலை எடுத்து திடீரென சண்முகத்தில் முதுகில் குத்தினார். இதில் நிலை தடுமாறிய சண்முகம் கீழே விழுந்தார். இது குறித்து தகவல் அறிந்த திட்டக்குடி போலீ சார் சம்பவ இடத்திற்கு வந்து சண்முகத்தை மீட்டு திட்டக்குடி அரசு மருத்துவ மனையில் அனுமதித்த னர். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். மேலும், திட்டக்குடி போலீசார் வழக்கு பதிவு செய்து செல்வத்தை கைது செய்தனர்.

    • விருதுநகர் அருகே ஓட்டல் தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
    • அவர் எதற்காக தற்கொலை செய்து கொண்டார்? என போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    விருதுநகர்

    சிவகாசி தளவாய்புரம் தெற்கு தெருவை சேர்ந்தவர் மணிமாலா. இவரது மகன் அவினாஷ்(வயது 21). கேட்டரிங் படித்துள்ள இவர் சிவகாசியில் ராதா கிருஷ்ணன் என்பவரின் ஓட்டலில் பணியாற்றி வந்தார். பெரும்பாலும் இவர் வீட்டுக்கு செல்லாமல் ஓட்டல் மாடி அறையில் தங்கியிருந்ததாக தெரிகிறது. இந்த நிலையில் சம்பவத் தன்று மாடியில் இருந்த அவினாஷ் நீண்ட நேரமாகியும் ஓட்டலுக்கு வரவில்லை.

    இதையடுத்து ராதாகி ருஷ்ணன் அங்கு சென்று பார்த்தபோது கதவு உள்பக்கமாக தாழிடப்பட்டிருந்தது. இதனால் சந்தேகமடைந்த ஓட்டல் ஊழியர்கள் கதவை உடைத்து பார்த்தனர். அப்போது அவினாஷ் தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாக கிடந்தார்.

    இதுகுறித்து தகவல் அறிந்த சிவகாசி கிழக்கு போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோத னைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அவினாஷ் எதற்காக தற்கொலை செய்து கொண்டார்? என போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • விடிய விடிய சோதனை நடத்தினர்.ஆனால் இளம்பெண்களை காரில் கடத்தி செல்லும் எந்த சம்பவங்களும் நடைபெறவில்லை.
    • போலீசார் கட்டுப்பாட்டு அறையைத் தொடா்பு கொண்ட மா்ம நபரின் செல்போன் சிக்னலை ஆய்வு செய்தனர்.

    திருப்பூா்:

    திருப்பூா் மாநகர காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தொலைபேசி அழைப்பு வந்தது. அதில் பேசிய நபா் அவிநாசி சாலை, அனுப்பர்பாளையம் பகுதியில் காரில் 2 இளம்பெண்களை கடத்திச் செல்வதாக கூறிவிட்டு அழைப்பை துண்டித்துவிட்டார்.

    இதனால் அதிர்ச்சியடைந்த போலீசார் அவிநாசி சாலையில் வாகன சோதனையை தீவிரப்படுத்தினா். விடிய விடிய சோதனை நடத்தினர்.ஆனால் இளம்பெண்களை காரில் கடத்தி செல்லும் எந்த சம்பவங்களும் நடைபெறவில்லை. இதனால் வதந்தி என தெரியவந்தது.

    இதையடுத்து போலீசார், கட்டுப்பாட்டு அறையைத் தொடா்பு கொண்ட மா்ம நபரின் செல்போன் சிக்னலை ஆய்வு செய்தபோது திருப்பூா் மத்திய பேருந்து நிலையம் பகுதியை காட்டியுள்ளது.

    இதைத்தொடா்ந்து, போலீசார் அங்கு சென்று நடத்திய விசாரணையில், மதுபோதையில் இருந்த ஓட்டல் தொழிலாளி செந்தில்முருகன் (வயது 42) என்பவா் வதந்தி பரப்பியது தெரியவந்தது. இதையடுத்து, அவரை பிடித்து விசாரணைக்காக அனுப்பா்பாளையம் போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்றனா். இதன் பின்னா் அவரை எச்சரித்து அனுப்பி வைத்தனா். இந்த சம்பவத்தால் திருப்பூரில் பரபரப்பு ஏற்பட்டது.

    • ரவீன்குமார் கடந்த ஒரு ஆண்டாக ஈரோடு மரப்பாலத்தில் உள்ள ஓட்டலில் வேலை பார்த்து வந்தார்.
    • இச்சம்பவம் குறித்து ஈரோடு டவுன் போலீசார் வழக்கு பதிவு செய்து, பிரவீன்குமார் தற்கொலை க்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வரு கின்றனர்.

    ஈரோடு:

    கிருஷ்ணகிரி மாவட்டம் அயிலம்பட்டியை சேர்ந்தவர் பிரவீன்குமார்(35). திருமணம் ஆனவர். ஒரு குழந்தை உள்ளது. பிரவீன்குமாருக்கும், அவரது மனைவிக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் இருவரும் பிரிந்து விட்டனர்.

    பிரவீன்குமார் கடந்த ஒரு ஆண்டாக ஈரோடு மரப்பாலத்தில் உள்ள ஓட்டலில் வேலை பார்த்து வந்தார். இதற்காக ஓட்டல் அருகே மாடி வீட்டில் தங்கியிருந்தார். நேற்று இரவு பிரவீன்குமார் வேலை முடிந்து வீட்டிற்கு சென்றவர் மீண்டும் இன்று காலை வேலைக்கு வர வில்லை.

    இதையடுத்து ஓட்டலில் அவருடன் வேலை பார்க்கும் ஒருவர் பிரவீன்குமார் வீட்டிற்கு சென்று பார்த்த போது ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்தார்.

    கழுத்தை அறுத்து தற்கொலை

    இதுகுறித்து தகவல் அறிந்த ஈரோடு டவுன் போலீசார் சம்பவ இடத்தி ற்கு விரைந்து சென்று பிரவீன்குமார் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர். இதில் பிரவீன்கு மார் தனக்கு தானே கத்தியால் கழுத்தை அறுத்து தற்கொ லை செய்து கொண்டது முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்தது.

    இதையடுத்து பிரவீன்கு மாரின் உடலை மீட்டு பிரேத பரிசோத னைக்காக ஈரோடு அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்த னர். இச்சம்பவம் குறித்து ஈரோடு டவுன் போலீசார் வழக்கு பதிவு செய்து, பிரவீன்குமார் தற்கொலை க்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வரு கின்றனர்.

    • சிறுமியிடம் ஸ்ரீதர் ஆசை வார்த்தைகளை கூறி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.
    • போலீசார் விசாரணை நடத்தி ஸ்ரீதர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சியை சேர்ந்தவர் ஸ்ரீதர் (24). இவர் மொடக்குறிச்சியை சேர்ந்த 16 வயது சிறுமியிடம் நட்பாக பழகினார்.

    இந்த பழக்கம் நாள டைவில் காதலாக மாறியது. இதன்பேரில் சிறுமியிடம் ஸ்ரீதர் ஆசை வார்த்தைகளை கூறி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.

    இந்நிலையில் சிறுமியின் நடவடிக்கையில் மாற்றத்தை அறிந்த பெற்றோர் அவரிடம் விசாரிக்க அவர் நடந்ததை தெரிவித்து ள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த அவர்கள் ஈரோடு மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர்.

    போலீசார் விசாரணை நடத்தி ஸ்ரீதர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். பின்னர் அவர் நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைத்தனர்.

    ×